Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா. :D எனக்கு மிகப்பிடித்தமான பாடல்களுள் ஒன்று.. கவிஞர் போல வேகமான வரிகளைக் கொடுக்காவிட்டாலும் சத்தான பாடல்களைத் தருவதில் வல்லவர் புலமைப்பித்த அவர்கள்தான்..

 

கதைன்படி எம்ஜிஆர் கால் ஊனமான அந்தப் பெண்ணுக்கு அண்ணன்.. ஆனால் ஊர்வலம் போகும் மணப்பெண்னைத் தங்கையாக நினைத்துப் பாடுவார்.. அதில் எனக்குப் பிடித்த பகுதி என்றால்..

 

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட

நான்கண்ட பொருள்கூறவா..

 

என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது

என்றாடும் விதமல்லவா.. :D

 

அதாவது அந்தப் பொன்மாலை அவள் கழுத்தில் அங்கும் இங்கும் அசைந்தாடுவது என் அண்ணனை ஒரு நாளும் மறக்கமாட்டேன் என்று கூறுவதுபோல் இருக்கிறதாம்.. :D ஆனால் அதற்குள் அறிஞர் அண்ணாவை ஒரு நாளும் மறக்கமாட்டேன் என்று எம்ஜிஆர் பாடுவது போன்ற ஒரு அரசியல் கருத்தையும் செருகியிருப்பார்.. :rolleyes:  சமயோசிதம் மற்றும் கவிநயம் இரண்டும் ஒருங்கே இணைந்த வரிகள்..

 

இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்குத் தங்கச்சி இல்லையே என்று வருந்தியதுண்டு.. :unsure::(  ஆனாலும் யாழ்களத் தங்கச்சிமார் தமிழினி, துளசி போன்றவர்களை நினைத்து ஆறுதல் அடைவதுண்டு.. :D:lol:

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது சரணத்தை பாடலில் இருந்து வெட்டிவிட்டார்கள் புங்கை.. :unsure: "கால்பட்ட இடமெல்லாம்.." என்று தொடங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்குக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, இசை, உடையார், சுமே, வந்தி ஆகியோருக்கு, அளவில்லாத நன்றியுடன், இன்றைய பாடலாக, மதனமாளிகை படத்திலிருந்து,எம்.பி.சிறினிவாசின் இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் குரலில், ஒலிக்கும் பாடல்..... ஒரு சின்னப்பறவை அன்னையைத் தேடி.....

நடிகர்-  சிவகுமார்.

 

http://www.youtube.com/watch?v=o1oeRJ3PBL4

நல்ல கருத்துள்ள பாடல் புங்கை, நன்றி பகிர்வுக்கு

 

 

 sxej53.jpg

 

புகைப்படத்தில் இடது பக்கத்திலிருந்து - பாலு, கண்டசாலா, தயாரிப்பாளர் மூர்த்தி, இசையமைப்பாளர் M.B. சீனிவாசன் -

 

ஒரு சின்னப் பறவைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ...

லல்லலலல்ல லல்லலலல்ல லல்லலலல்லா

ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி
வானில் பறக்கிறது
ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி
வானில் பறக்கிறது

அதன் சிந்தனை எல்லாம் தாயவள்
அன்புத் தேனில் குளிக்கிறது

(ஒரு)

காலைப் பொழுதில் பனித்துளி எங்கும்
பன்னீர் தெளிக்கிறது
மென் காற்று குளிர்ந்து வீசிடும் போது
உள்ளம் சிலிர்க்கிறது
அஹஹா எஹேஹே அஹஹா ஹாங்...ஆ

(ஒரு)

அன்னை என்பது மானுடம் அல்ல
அதுதான் உலகதில் தெய்வீகம்
அன்றவள் சொன்னது தாலாட்டல்ல

அன்றவள் சொன்னது தாலாட்டல்ல
ஆன்மா பாடிய சங்கீதம்
ஆன்மா பாடிய சங்கீதம்

வேதம் என்பது வேறெதும் அல்ல
தாயவள் கூறிய உபதேசம்

விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல
அதுதான் அன்னையின் மலர்ப் பாதம்
அதுதான் அன்னையின் மலர்ப் பாதம்

 


 

http://myspb.blogspot.com.au/2006/04/blog-post_03.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. சும்மா அசத்திறீங்களே புங்கை.. :D பட இணைப்புக்கு நன்றி வந்தி..

 

M.B. ஸ்ரீநிவாசn மிகத்திறமையான ஒரு இசையமைப்பாளர்.. இதே படத்தில் வரும் "ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா" என்கிற பாடலும் மிகப்பிரபலமானது..

 

ஒரு சின்னப்பறவை என்கிற இந்தப் பாடலைக் கேட்கும்போது கிடைக்கும் உற்சாகம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதது. அதனால் அடிக்கடி கேட்பதுண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் புங்கை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலை... இணைக்கும் புங்கையூரானுக்கும்,
அதனை, ரசிக்கும்... உறவுகளுக்கும். மனமார்ந்த நன்றி.
எனக்கு, சிறிது கால இடைவெளி தேவைப்படுவதால்...
பாடலை... தேர்வு செய்ய, மனம் இடம் கொடுக்கவில்லை.
தொடர்ந்து... இந்தப் பகுதியை, கொண்டு செல்லும், புங்கையூரானுக்கும்...
உங்களுக்கும்.... மனமார்ந்த நன்றிகள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த, வந்திக்கும், இசைக்கும், உடையாருக்கும் மிக்க நன்றிகள்! நீங்கள் எழுதும் கருத்துக்கள் மூலம், நிறைய விடையங்களைப் புதிதாக அறிந்து கொள்ளுகின்றேன்!

 

தமிழ் சிறி, எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள்! உங்களுக்குத் தேவை என, நீங்கள் கருதும் இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்! :D

 

இன்று 'உழைப்போர் தினம்" ! உழைப்பவர்களின் உரிமைகளைக் கோரும்   ஒரு புனித நாள்!

 

இந்நாளை, நினைவு கூரும் விதத்தில், கவிஞர் கண்ணதாசனின், அழகிய வரிகளிலும், விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோரின், அருமையான இசையமைப்பிலும், எம்,ஜி.ஆரின், கம்பீரமான நடிப்பிலும், ஜெயலலிதாவின் அழகிய நடனத்திலும், உருவாகிய பாடல்,

 

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்......  (படம்: ஆயிரத்தில் ஒருவன்)

 

https://www.youtube.com/watch?v=12W01YmPf7I

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான.... பாடல் புங்கையூரான்.
கலர் படத்தில்... எம்.ஜீ.ஆரை.. பார்க்கும் போது...
அவரின் சொக்கையில், கிள்ள வேணும் போல இருக்குது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் புங்கை

 

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிப்பார்த்த தமிழ் சிறிக்கும், உடையாருக்கும் நன்றிகள்!

இன்றைய பாடலாக ஒலிப்பது, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், டி எம் .எஸ் மற்றும் சுசீலா ஆகியோரின் தேன்குரலில், 'பார் மகளே பார்' படத்திலிருந்து,

மதுராநகரில் தமிழ்ச்சங்கம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நடிகர்கள்- முத்துராமன்/ விஜயகுமாரி 

 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நான்கு நாட்களாக யாழுக்கு வரவே நேரம் கிடைக்கவில்லை. இன்றுதான் எல்லாப் பாடல்களையும் ஒன்றாகக் கேட்டேன். நன்றி புங்கை பாடல்களுக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உடையாருக்கும், சுமேக்கும்,வந்திக்கும் நன்றிகள்!

இன்றைய பாடலாக, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், டி.எம்.எஸ், பி.சுசீலா, ஆகியோரின் குரல்வளத்தில், ஊட்டி வரை உறவு என்னும் படத்திலிருந்து,
பூமாலையில் ஓர் மல்லிகை..... என்னும் பாடல்.
நடிகர்கள்- சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா

 

 

https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

நல்ல பாடல் புங்கை

 

நேர்காணல்; வே. மதிமாறன்

msv1.jpg?w=287&h=490&h=490

* உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா?

notes.jpg?w=625

அதான் மெலடி. காதல்ல, லவ் சாங்ல கச்சா முச்சான்னு கூத்தடிச்சிக்கிட்டு பாடமுடியாது. அப்படி மென்மையாதான் பாட முடியும். அதுல ஒரு சோகம் இருக்கும். அதான் மெலாடியோட இனிமை. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து… பார்த்த ஞாபகம் இல்லையோ… இந்தப் பாடல்களில் கூட அந்த உணர்வு இருக்கும். சோகத்துக்குள்ளே இனிமை இருக்கும். இனிமை உள்ளார சின்ன சோகம் இருக்கும். அதுதான் அந்தப் பாட்டின் சோக உணர்வுக்குக் காரணம்.

 

http://mathimaran.wordpress.com/2009/03/26/article-180/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இசையுடன் அமைந்த, அருமையான பாடல்.
இணைப்பிற்கு... நன்றி புங்கையூரான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை பாடலும் காட்சியும் நடிகர்களும். நன்றி புங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலாக, இளைய ராஜாவின் இசையமைப்பில், மலேசியா வாசுதேவனின் குரலில், கோழிகூவுது திரைப்படத்திலிருந்து, 'பூவே, இளைய பூவே..... எனும் பாடலாகும்.

 

நடிகர்கள், பிரபுவும், சிலுக்கு சிமிதாவும்!

 

சிலுக்கு எத்தனை தடவைகள் தான், தனது உதட்டைத் தானே கடித்துக் கொள்ளுகின்றார்? :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலுக்கு நின்றாலும் வயிறில் அழகு...
திண்ணையில்... குந்தியிருந்தாலும் அழகு....
அய்யோ.... ஏனய்யா... என்னை, இமயமலைக்கு போக வைக்கிறீங்கள்.
பாடலுக்கு, நன்றி புங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உடையாருக்கும், சுமேக்கும்,வந்திக்கும் நன்றிகள்!

இன்றைய பாடலாக, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், டி.எம்.எஸ், பி.சுசீலா, ஆகியோரின் குரல்வளத்தில், ஊட்டி வரை உறவு என்னும் படத்திலிருந்து,

பூமாலையில் ஓர் மல்லிகை..... என்னும் பாடல்.

நடிகர்கள்- சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா

 

 

https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

 

டி.எம்.எஸ், பி.சுசீலா, ஆகியோரின் முத்தான பாடல்களில், இன்றும் முணுமுணுக்க வைக்கும் அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி, புங்கை. :rolleyes:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலாக ஒலிப்பது, 'கன்னிப் பருவத்திலே' திரைப்படத்தில், புலவர் புதுமைப்பித்தனின், வரிகளில், சங்கர்- கணேஸ் இசையமைப்பில், மலேசியா வாசுதேவனின் குரலில், 'பட்டுவண்ண ரோசாவா' எனும் பாடல்.

 

நடிகர்கள், ராஜசேகர், வடிவுக்கரசி...............

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் புங்கை

 

எட்டிப்பார்த்த தமிழ் சிறிக்கும், உடையாருக்கும் நன்றிகள்!

இன்றைய பாடலாக ஒலிப்பது, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், டி எம் .எஸ் மற்றும் சுசீலா ஆகியோரின் தேன்குரலில், 'பார் மகளே பார்' படத்திலிருந்து,

மதுராநகரில் தமிழ்ச்சங்கம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நடிகர்கள்- முத்துராமன்/ விஜயகுமாரி 

 

இந்த பாடலை பாடியது எனது அபிமானத்திற்குறிய  அமரர் பி சிறிநிவாஸ் ஆகும் .மிக இனிமையான பாடல் .எத்தனை தரம் வெலிங்டனில் பார்த்தபடம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலை பாடியது எனது அபிமானத்திற்குறிய  அமரர் பி சிறிநிவாஸ் ஆகும் .மிக இனிமையான பாடல் .எத்தனை தரம் வெலிங்டனில் பார்த்தபடம் .

 

வணக்கம், அர்ஜுன்!

சில வேளைகளில், பிழையான தகவல்களை, இணையத் தளங்களில் பதிந்துவிடுகின்றார்கள்! கண்ணுக்குள் எண்ணையை விட்டுக் கவனமாகத் தேடினாலும், சில வேளைகளில், தவறான தகவல்கள் பதியப்பட்டு விடுகின்றன! வரவுக்கு நன்றிகள்!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.