Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் - உலக அழிவு சிறப்புச் சிறுகதை

Featured Replies

அவள் கண்களில் மிரட்சியோடு என்னை பார்த்துக் கொண்டு அந்தப் படகில் கிடந்தாள். அவள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. என்னோடு வருவதை அவள் விரும்பியும் இருக்கலாம். ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளின் கைகளை கட்டிப் போட்டிருந்தேன்.

அன்றைக்கு கடல் அமைதியாக இருந்தது. அவளையும் தூக்கி படகில் போட்டுக் கொண்டு வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன்.

......

என்னுடைய மனைவியின் வருகைக்காக நானும் என்னுடைய சிறுவயது மகளும் காத்துக் கொண்டிருந்தோம். இன்று பகல் முழுவதும் காத்திருந்து விட்டு வந்தாலும் வராவிட்டாலும் இரவில் பயணத்தை தொடர வேண்டும்.

பகலில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. யாராவது மனிதர்களின் கண்களில் பட்டு விடலாம்

சில வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்தேன். அந்த அழகான சிவப்பு நிறக் குழந்தை இறந்தே பிறந்திருந்தானது எனக்கு நிம்மதியை கொடுத்தது. குழந்தையை கொல்வதற்கு நான் இன்னும் பழக்கப்பட்டிருக்கவில்லை.

பல மாதப் பயணங்களில் நேற்று மீண்டும் மனிதர்களுடன் எதிர்ப்பட நேரிட்டது. வைத்திருந்த இறைச்சியையும் பழங்களையும் பறித்துக் கொணடு என்னுடைய மனைவியையும் இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

கடந்த முறை நடந்தது போல் சில நாட்களில் மனைவியை விட்டு விடுவார்கள் என்று நம்பி ஒரு மறைவான இடத்தில் காத்துக் கொண்டு நின்றோம்.

......

இன்னும் சில நூறு மைல்கள் இலக்கை அடைவதற்கு இருக்கின்றன. இப்பொழுது தனித்துப் பயணிப்பதால் என்னுடைய ஓட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது.

என்னுடைய மகளை ஓநாய்களிடம் விட்டு விட்டு ஓடிய பொழுது இருந்து வேகம் அப்படியே இப்பொழுதும் இருந்தது.

மனைவி திரும்பி வராமலேயே போனதன் பிற்பாடு மகளை மிகவும் கவனமாக பாதுகாத்தபடிதான் பயணித்துக் கொண்டிருந்தேன். மனைவி இல்லை என்றாலும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மகள் உதவுவாள் என்கின்ற நம்பிக்கையும் இருந்தது.

நீண்ட பயணம் மகளை பலவீனப்படுத்தியது. நோய் வந்து நடக்கவே துன்பப்பட்டாள். ஓநாய்கள் வந்த பொழுது அவளால் ஓட முடியவில்லை. ஓநாய்கள் மகள் மீது கவனமாக இருந்ததை பயன்படுத்தி நான் மட்டும் ஓடி வந்து விட்டேன்.

ஓநாய்கள் தின்றிருக்காது விட்டாலும் அவளுடைய நோய் அவளை நிச்சயமாக தின்றிருக்கும் என்பதே எனக்கு இருந்து சமாதானம்.

......

இப்பொழுது சில பத்து மைல்கள்தான் இருக்கின்றன. என்னுடைய ஓட்டம் நின்றிருந்தது. தேடல் ஆரம்பமானது. மனிதர்களின் கண்ணில் படாமல் ஓடிக் கொண்டிருந்தவன் இப்பொழுது எங்காவது மனித நடமாட்டம் இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தேன்.

நீண்ட நாட்கள் தேடிய பின்பு ஒருநாள் அவர்களைக் கண்டேன். ஒரு கிழவனும் இளம் பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் பேசுகின்ற அதே மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மெதுவாக அவர்களிடம் போனேன்.

என்னைக் கண்டதும் கிழவன் கத்தியை தூக்கினான். நான் பேசிப் பார்த்தேன். வந்த நோக்கத்தை சொன்னேன். அதைக் கேட்டதும் இன்னும் ஆக்ரோசமாகி என் மீது பாய்ந்தான்.

எனக்கு வேறு வழி இருக்கவில்லை.

......

அந்த இளம்பெண் கண்களில் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்க நான் படகை வேகமாக வலி;த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் கரை தெரிந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. என்னுடைய வேகம் அதிகரித்தது.

கரையில் என்னுடைய கால்கள் பட்டன. அவளுடைய கால்களும்தான்.

கரையில் இறங்கி அங்கும் இங்கும் ஓடினேன். ஒரு நீளமான தடி ஒன்று கிடந்தது. அதுவரை பத்திரமாக ஒளித்து வைத்திருந்த அந்தக் கொடியை தடியில் கொழுவி மண் மீது நாட்டினேன்.

அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டேன்.

Edited by சபேசன்

நான் இதை வாசிக்கும்பொழுது ஒருவித உலர்நிலையை உணர்ந்தேன் . அதாவது ஈரலிப்பைக் காணவில்லை . பல இடங்களில் சம்பவங்கள் தொங்குபறியில் இருக்கின்றது . இன்னும் கொஞ்சம் விளக்கங்களைத் தந்திருக்கலாம் என நினைக்கின்றேன் . வித்தியாசமாகச் சிந்தித்த சபேசனுக்கு எனது பாராட்டுக்கள் :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாற்றத்தோடு சபேசன் கதையை எழுதியுள்ளார.

  • தொடங்கியவர்

விளக்கங்களை வாசிப்பவர்களிடம் விடக் கூடிய படிதான் கதையை எழுதினேன். மனைவி திரும்பி வரவில்லை என்கின்ற செய்தியை கூட சொல்லாமலேயே முதலில் கதையை கொண்டு போனேன். பின்பு அதை மாற்றி அடுத்த பந்தியில் சேர்த்தேன். சில தடுமாற்றங்கள் இருந்தது உண்மைதான்.

  • தொடங்கியவர்

கோமகனின் வார்த்தையில் சொல்வது என்றால் கதையின் முடிவை நெருங்கும் வரை நான் ஈரலிப்பு பற்றி சிந்திக்கவில்லை. உலகம் அழிந்த பின மனிதன் உணர்வுகள் உலர்ந்த நிலையிலேயே இருப்பான் என்கின்ற அடிப்படையில்தான் இதை எழுதினேன். அவன் தன்னை காத்துக் கொள்ள எதையும் செய்வான். சொந்த மண்ணை பார்த்த பின்பு "கண்ணீர்", "முத்தம்" என்று கொஞ்சம் ஈரலிப்பை கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

சுய()நலம்  இழப்பின் வேஷம் மறப்பதுக்கு  சந்தோசம் தொடர்ந்து தேடல் ஆரம்பிக்கும்.

 

கோமகனின் வார்த்தையில் சொல்வது என்றால் கதையின் முடிவை நெருங்கும் வரை நான் ஈரலிப்பு பற்றி சிந்திக்கவில்லை. உலகம் அழிந்த பின மனிதன் உணர்வுகள் உலர்ந்த நிலையிலேயே இருப்பான் என்கின்ற அடிப்படையில்தான் இதை எழுதினேன். அவன் தன்னை காத்துக் கொள்ள எதையும் செய்வான். சொந்த மண்ணை பார்த்த பின்பு "கண்ணீர்", "முத்தம்" என்று கொஞ்சம் ஈரலிப்பை கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

 

ஓ...........  இதுக்கு இப்படியும் ஒரு பார்வை உள்ளதா ?? நான்தான் கவனிக்கத் தவறிவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் .  ஆனால் கடைசியிலை ஈரலிப்பு காணாது எண்டிறது மட்டும் உண்மை :lol: :lol: :D :D .

அந்த இளம்பெண் கண்களில் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்க நான் படகை வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் கரை தெரிந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. என்னுடைய வேகம் அதிகரித்தது.

கரையில் என்னுடைய கால்கள் பட்டன. அவளுடைய கால்களும்தான்.

கரையில் இறங்கி அங்கும் இங்கும் ஓடினேன். ஒரு நீளமான தடி ஒன்று கிடந்தது. அதுவரை பத்திரமாக ஒளித்து வைத்திருந்த அந்தக் கொடியை தடியில் கொழுவி மண் மீது நாட்டினேன்.

 

அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டேன்.

 

உங்கள் கதையை மீண்டும் ஒருமுறை வாசித்தேன் . என்மனதில் சில சந்தேகங்கள் எழுகின்றன .  உங்கள் படகு தரை தட்டிய இடம் ஈழமா ?? கொடி நாட்டுவது பற்றி எழுதியிருக்கின்றீர்கள் . ஆக ஒரு ஆதாம் ஏவாளாக ஈழத்தில் புதிய உலகத்தை உருவாக்க முயன்றீர்கள் என்று எடுக்கலாமா ??  விடை தந்தால் நல்லது . மேலும் ,  இந்தக்கருத்துக்களம் எழுதுபவரைப் பார்த்துக் கருத்து எழுதாமல் விடும் போக்கையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில்  மௌனமாக இருக்க

அமைதியாக இருக்கக்கூட சுதந்திரம் இல்லாததை மிகவும் தாழ்மையுடன் கண்டிக்கின்றேன்........... :(

  • தொடங்கியவர்

ஒரு தமிழனாக இந்தக் கதையை வாசிக்கின்ற போது, பயணத்தின் இலக்கும் படகு கரை சேர்ந்த இடமும் ஈழம்தான். உலக அழிவில் தப்பிப் பிழைத்த புலம்பெயர்வாசி ஒருவன் தன்னுடைய குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு தாயகத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்கின்ற கதை இது. மனைவியும் மகளும் இறந்து போக, தன் மொழி பேசுகின்ற ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய் புதிய நாட்டை உருவாக்குகிறான்.

அவன் ஏன் புலம்பெயர் நாட்டை விட்டு ஓடுகிறான் என்பதும், "தூய்மையான" இனத்தை உருவாக்க முனைகிறான் என்பதும் இந்தக் கதையின் எழுதப்படாத முதலாவது பந்தியில் இருக்கிறது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழிந்து மீண்டும் புதுப்பிக்கும்போது மனிதன் பழையபடி மிருகத்தனத்திலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். கதையில் சில இடங்களில் மனிதத்தன்மை இருப்பதால் அதிர்வுகள் ஏற்படவில்லை.

 

ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" மனிதர்களின் குரூரத்தைக் கொப்பளிக்கும் நாவல். படித்துப் பாருங்கள் சபேசன்.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

கிருபன்! "ஏழாம் உலகம்" படிக்கவில்லை. பாலாவின் "நான் கடவுள்" படம் இந்தக் கதையைக் கொண்டே உருவாக்கப்பட்டதாக வாசித்த நினைவு இருக்கிறது.

என்னுடைய கதையில் மிருகத்தனம் குறைவாக இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள். இந்த மிருகத்தனத்தை எழுதுவதற்கே நான் மிகவும் தயங்கினேன். அதனாலேயே சொற்களுக்கு இடையில் படிக்கும்படி பல இடங்களை அமைத்தேன்.

உலகம் அழிந்த பின்....

மனைவியின் கற்பு என்பது இருக்காது. தன்னை காத்துக் கொள்ள அவளை பலியிடவும் வேண்டியிருக்கும்.

அவளை தூக்கி கொண்டு போகின்றவர்கள் அவளை கொல்லலாம். அல்லது அனுபவித்து விட்டு துரத்தி விடலாம். வைத்து சாப்பாடு எல்லாம் போட மாட்டார்கள்.

பிறக்கின்ற குழந்தை என்னுடையதாக இருக்காது. அதை காவித் திரிவதும் ஒரு சுமையாக மாறும். குழந்தையை கொல்ல வேண்டியும் வரலாம்.

சொந்த மகளை ஓநாய்க்கு தின்ன கொடுத்து விட்டு ஓடலாம். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் அவள் மீதும் வெறி வரலாம்.

வலிமையான மனிதர்களிடம் இருந்து தப்பி ஓடுகின்ற நான் என்னை விட வலிமை குறைந்த மனிதர்களை தேவைப்படின் கொலையும் செய்வேன். பெண்களை கடத்திக் கொண்டும் போவேன்.

இதற்கு மேல் மிருகத்தனமாக சிந்திக்க என்னால் முடியவில்லை.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் தொகுத்தவை எல்லாம் கதையில் இருந்தாலும், இழைக்கும்போது மனிதம் கொஞ்சம் இருந்தது மாதிரித் தெரிந்தது. சிலவேளை Quentin Tarantino போன்றவர்களின் வன்முறைகள், பயங்கரங்கள் நிறைந்த படங்களைப் பார்த்து ஊழிக்காலத்தில் மனிதத் தன்மையே இருக்கக்கூடாது என்ற எண்ணம் அடிமனதில் ஆழமாக எனக்குப் பதிந்திருக்கலாம்!

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

கிருபன்! நல்ல வேளையாக இதை சொன்னீர்கள். ஊழிக்காலத்தில் உங்களை தூரத்தில் கண்டாலே போதும், வந்த வழியில் திரும்பி ஓடி விடுவேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.