Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது அவன் தான்....

Featured Replies

கணவரை இழந்த அந்த அம்மாவின் சொந்தமாக இப்போ அந்த வீட்டில் இருப்பது அவளின் கடைசி மகளும், கடைசி மகனை நம்பி ஓடிவந்த மருமகளும் தான்.
 
இராணுவ கட்டுப்பாடு பகுதியில், இரவு நேரத்தில் ஆண்கள் வீட்டில் இருந்தாலும் தங்க பயப்படும் காலத்தில், அவர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் இருந்தமைக்கு அந்த அம்மாவின் கடைசி மகன் தான் காரணம்.
 
தங்களுக்கு ஏதும் நடக்க அவன் விடமாட்டான். 
 
மூத்த மகன், கொழும்பில் நடந்த காட்டி கொடுப்பில் சிறைபட்டு ஆறுமாதம். இரண்டாவது மகன் புலிசேனையில் அண்ணனுக்கு பக்கபலமாக, ஒரு வருடத்துக்கு இரு முறை தான் பேசுவான்.
இருந்த ஒரே ஆறுதல் அவவின் கடைசி மகன்,  கொள்ளி  போட கூடவே வைத்திருந்தாள் அந்த அம்மா.
 
அவனோ அண்ணன்கள் வழியில், புலிகளின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக யாழ் மாவட்டத்திலே பல தாக்குதல்களை வழி நடத்துவது கூட தெரியாமல், அன்னை மடியில் படுத்திருந்து சோறு உண்பது கூட அந்த தாய்க்கு அவன் சாகுமட்டும், ஏன் இன்று மட்டும் தெரியாது.
 
திடீர் என்று வீட்டை விட்டு போவான், எப்படியும் வருவான் என்று அம்மா காத்திருப்பா, நிச்சயமாக இரவுக்குள் வீடுக்கு வருவான். இது கொஞ்ச காலமாக மாறி போயிருந்தது. சில நாட்கள் வாராமலே இருந்தான்.
 
நாட்கள் வாரங்களாக மாதங்களாக அவன் எப்போ வரு வான் என்று அம்மாவுக்கும் தெரியாத காலமானது.
 
அவனது மனைவி அப்போ 8 மாத கர்ப்பம். ஒரு முறையாவது தந்து மனைவியை பார்த்திட வேண்டி அனுமதிக்காக காத்திருந்ததை அவனுடைய ஆசை மனைவியோ, அம்மாவோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
அவன் இரண்டு கைகளாலும் துப்பாக்கி சுடும் வல்லமை உள்ளவன். நேருக்கு நேராக அவனை யாருமே எதிர் கொள்ளமுடியாது என்று அவனது பயிற்சி ஆசிரியர் சங்கீதன் 19 முகாமில் அடிக்கடி கூறுவார்.
 
புதுவருடம் பிறந்து சில நாட்களில் அவன் வீடுக்கு வந்திருந்தான். மாலை மங்கும் நேரத்தில். ஒரு மணி நேரத்தில் போய்விடுவேன் என்று கூறி தாயின் கையால் சோற்றை உண்டு, தங்கை கூட செல்ல சண்டை போட்டு, மனைவி வயிற்றை தடவி என் புலிக்குட்டி என்ன சொல்லுகிறான் என்று நேரம் போவதே தெரியாமல் விளையாடி கொண்டிருந்தான். தன்னை சுற்றி நடக்கும் சதிவேலை கூட அன்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
பள்ளி நாட்களில் இருந்தே வீட்டை விட்டு வெளியில் போகும்போது தாயின் கால்களை தொட்டு வணங்கும் பழக்கமுடைய அவன், அன்றும் அவன் குனிந்து வணங்கும் போது கயவர்களின் முதலாவது சூடு கழுத்தை பதம்பார்த்தது. பீறின  இரத்தம் தாயின் பாதங்களை கழுவும் பொது இரண்டாவது அவன் மக்களை தாயை நேசித்த நெஞ்சிலே வீழ்ந்தது.  இன்று வரை அவன் புலி என்றே தெரியாத அந்த வீர தாயின் மடியில் தன் உயிரை விட்டான்.
 
பின்னொரு நாளில் ஒரு மறைமுக இடத்தில் நடந்த வீர வணக்க உரையில், அவன் தாயை குனித்து வணங்காவிட்டால் எதிரியை அவன்தான் சுட்டிருப்பான் என்று.
 
இன்று அவனது குழந்தை, அவனது அம்மாவை அம்மா என்று தான் கூப்பிடுகிறது. பேத்தியை அம்மா என்று கூப்பிடும் அதிசயம் என்று ஊரே நம்ப முடியாமல் தவிக்க, அவனது மனைவி  மட்டும் உறுதியாக நம்புகிறாள்.
 
இது அவன் தான். 
 
(இந்த உண்மை கதை வாழும் புலம் பகுதியில் எழுதிய இப்படியும் ஒரு தாய் என்ற கதையை வாசித்த போது  எனக்கு தெரிந்த அம்மாவின் ஞாபகமாக எழுதிய உண்மை கதை ) 
  • கருத்துக்கள உறவுகள்
நீண்ட‌ நாட்களுக்கு பிறகு எழுத்தினூடாக அபிராமை காண்பதையிட்டு மகிழ்ச்சி
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான, எமது வாழ்நாளில், எண்ணி முடிக்கக முடியாத, உண்மைக்கதைகள் நிரம்ப உண்டு!

கதையைக் கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றிகள், அபிராம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி எத்தனை பெயர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார்கள்.
 
பகிர்விற்கு நன்றி அபிராம். 
 
  • தொடங்கியவர்
நீண்ட‌ நாட்களுக்கு பிறகு எழுத்தினூடாக அபிராமை காண்பதையிட்டு மகிழ்ச்சி
 

 

ஒரு நோயின் தாக்கமும், மன உளைச்சலும் தான் மீண்டும் எழுதும் படி தூண்டியது. 

 

இப்படியான, எமது வாழ்நாளில், எண்ணி முடிக்கக முடியாத, உண்மைக்கதைகள் நிரம்ப உண்டு!

கதையைக் கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றிகள், அபிராம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

 

இந்த கதைக்கும் என் சொந்த வாழ்க்கைக்கும் நிறைய தொடர்புண்டு புங்கையூரான். நன்றி உங்கள் பகிர்வுக்கு.

 

இப்படி எத்தனை பெயர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார்கள்.
 
பகிர்விற்கு நன்றி அபிராம். 
 

 

அவர்களின் கனவு நிச்சயம் நனவாகும். நன்றி தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்டியும் இருக்கு அப்படியும் இருக்குது. நன்றி இணைப்பிற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.