Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓலைப் பெட்டிகளை தெரியுமா உங்களுக்கு ...

Featured Replies

உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம்.
 
images+(10).jpg

பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.
 
இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.
 
images+(6).jpg
மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.

பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.

 

Untitled.png

 

குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.
 
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.
 
images+(9).jpg

முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.
 
திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.

நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
 
images+(8).jpg
 
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.

ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.

மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை.  இந்த பனம் பொருட்களை வாங்கி விற்கும் வெளிநாட்டு முகவர்கள் உள்ளார்களா?

கலை நயமான இந்த பொருட்கள் வீட்டை அலங்கரிக்கவும் உதவும்.

நல்ல கட்டுரை.  இந்த பனம் பொருட்களை வாங்கி விற்கும் வெளிநாட்டு முகவர்கள் உள்ளார்களா?

கலை நயமான இந்த பொருட்கள் வீட்டை அலங்கரிக்கவும் உதவும்.

உள்ளி, வெங்காயம், உருளை கிழங்கு போன்றவற்றை காற்றோட்டதுடன் கூட காலம் வைத்து பாவிக்கலாம்.

 

இருந்தால் எனக்கும் அறியத்தரவும். .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பதிவு..நன்றிகோமகன் பகிர்விற்கு..எங்களது பாரம்பரியங்கள் தொலைந்துபோக்கக்குடாது..அதற்கு புலம்பெயர்ந்த நாம்தான் இப்படியான பொருட்களை உற்பத்திசெய்பவர்களை ஊக்குவிக்கவேண்டும்...நன்றி சகிவன் அண்ணா;விக்கி..உங்கள் செயற்படுத்த நினைக்கும் ஆரவத்திற்கு..தொடர்ந்து ஊக்குவியுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்,  கட்டாயம் தெரியபடுத்துகிறேன்.

என்னுடைய முகநூலில் உள்ள அலங்கார நிறுவன நண்பர்களை ஆக்கினை படுத்த உத்தேசம்.

எங்களுக்கு நிறைய இயற்கை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.   அவர்களுக்கு பிளாஸ்டிக் பிடிக்காது.

இகோ பெட்டி என்று இந்த பெட்டி முடையும் படங்களையும் வைத்தால் போதும்.

ஊர் ஆச்சிகளின் வியாபாரத்தையும் உயர்த்தலாம். :)

 

இங்கு சீனா, மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் உணவுப் பொருட்கள்... ஓலை, மரங்களின் நார் போன்றவற்றால்... பொதி செய்து வரும்போது... மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. நல்லதொரு இணைப்பிற்கு நன்றி கோமகன்.

 

விவசாயி விக். ஊரிலிள்ள ஆச்சிகள் இப்போ... தொலைக்காட்சி பார்ப்பதை விட்டுவிட்டு, பெட்டி முடைவார்கள் என்று, நம்புகிறீர்களா.... :D

  • தொடங்கியவர்

நல்ல கட்டுரை.  இந்த பனம் பொருட்களை வாங்கி விற்கும் வெளிநாட்டு முகவர்கள் உள்ளார்களா?

கலை நயமான இந்த பொருட்கள் வீட்டை அலங்கரிக்கவும் உதவும்.

நல்ல கட்டுரை.  இந்த பனம் பொருட்களை வாங்கி விற்கும் வெளிநாட்டு முகவர்கள் உள்ளார்களா?

கலை நயமான இந்த பொருட்கள் வீட்டை அலங்கரிக்கவும் உதவும்.

உள்ளி, வெங்காயம், உருளை கிழங்கு போன்றவற்றை காற்றோட்டதுடன் கூட காலம் வைத்து பாவிக்கலாம்.

 

 

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கும் வருகைக்கும் . நான் அறிந்து இங்கு முகவர்கள் உள்ளார்களா தெரியவில்லை . சிலவேளைகளில் பனம்பொருள் அபிவிருத்திச் சபையிடம் கேட்டால் செய்வார்களோ தெரியாது . மேலும் கருப்பட்டி நீண்டகாலத்திற்கு கெடாமல் இருப்பதற்கு அதன் வெளியில் உள்ள பனை ஒலையிலான பைக்கிங்கும் ஒரு காரணமாகும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிர்வு 

  • தொடங்கியவர்
நல்ல ஒரு பதிவு..நன்றிகோமகன் பகிர்விற்கு..எங்களது பாரம்பரியங்கள் தொலைந்துபோக்கக்குடாது..அதற்கு புலம்பெயர்ந்த நாம்தான் இப்படியான பொருட்களை உற்பத்திசெய்பவர்களை ஊக்குவிக்கவேண்டும்...நன்றி சகிவன் அண்ணா;விக்கி..உங்கள் செயற்படுத்த நினைக்கும் ஆரவத்திற்கு..தொடர்ந்து ஊக்குவியுங்கள்...

 

மிக்க நன்றி சுபேஸ் உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் .

நல்ல ஒரு பதிவு..நன்றிகோமகன் பகிர்விற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.