Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் குண்டுவீச்சு

Featured Replies

கிளிநொச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு சிறிலாங்க இராணுவத்தின் கிபிர் விமானங்கள் மூன்று மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ஐந்து தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன சேத விபரங்கள் உடன் தெரியவில்லை

நன்றி

தகவல்

வெற்றி

  • தொடங்கியவர்

இராண்டாவது தரமும் 6.45 ற்கு ஒரு தரம் கிபிர் போர் விமான் தாக்குதல் நடத்தியுள்ளது கிளிநொச்சியில்

6.53 ற்கும் கிபிர் தாக்குதல் நடந்தவண்ணம் உள்ளது

நன்றி

வெற்றி

;

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலும் சிங்கள வான்படை குண்டுவீச்சு

சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் குண்டு வீச்சு வானு}ர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது இன்று பிற்பகல் 3.15 மணியளவில் குண்டு வீச்சை நடத்தியுள்ளன. அதேவேளை காலை 8.00 மணிமுதல் நண்பகல் வரை வவுணதீவு படைத்தளதித்திலருந்து எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

தரவை மற்றும் புலி பாய்ந்தகல் பகுதிகள் மீதே கிபிர் வானு}ர்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

குறித்த பகுதிகள் மீது நான்கு தடவைக்கு மேல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சங்கதி-

அவர்கள் முதலே குண்டு எல்லம் போடுறதுகு தரார நிண்டு கொண்டு தான் கிளைமோர் வைச்சவர்கள் :twisted:

முதல்ல உந்த கிபிர் எல்லாத்தையும் புடுங்கவேண்டும்.

ஏற்கனவே புடுங்கினதை சமாதான காலத்தை வைத்து வாங்கிப் போட்டாங்கள்.

எல்லா கண்துடைப்பு குழுக்களும் பார்த்துக்கொண்டு இருப்பினம். எல்லாம் முடிந்த பிறகு சேதமதிப்பீடு செய்ய வருவினம்.

அன்றைக்கு கப்பலை மறித்த உடனே அறிக்கை விட்டவையள் இப்ப என்ன செய்யினமாம்.

:twisted: :twisted:

5 ஆம் இணைப்பு) முல்லைத்தீவுஇ கிளிநொச்சிஇ மட்டக்களப்பில் விமானக் குண்டுவீச்சு- ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை மாலை சிறிலங்கா விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது.

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபீர் விமானங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அடங்கிய வன்னி வான்பரப்பில் இன்று மாலை 6.25 மணிக்கு மீண்டும் நுழைந்தன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மாலை 6.25 மணி முதல் 6.35 வரை நான்கு தடவை நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன. இக்குண்டு வீச்சுத் தாக்குதலை 10 நிமிட நேரம் தொடர்ச்சியாக நடத்தினர்.

அதன் பின்னர் மீண்டும் 6.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன.

அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் மீளவும் குண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு குண்டை வீசின.

வானில் மிக உயரத்தில் பறந்தவாறு ஏவுகணை எதிர்ப்பு சாதனத்தை இயக்கியபடியே விமானங்கள் குண்டுகளை வீசின என்று கிளிநொச்சியிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அதேபோல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான தரவை மற்றும் புலிப்பாய்ந்தகல் பகுதிகளில் மாலை 3.15 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார்.

மேலும் வவுணதீவு சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மோர்ட்டார் எறிகணைகள் மூலம் இன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

முன்னதாக இன்று காலையில் முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளையும் ஆழிப்பேரலை அகதிகள் முகாமையும் இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின.

இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புக்கள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மீண்டும் முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

இந்தத் தாக்குதலில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. இதையடுத்து அங்கிருந்து ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேறியுள்ளனர்.

கடற்பரப்பிலிருந்து மூன்ற கடல்மைல் தொலைவில் சிறிலங்காவின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் விமானக் குண்டு வீச்சை அவதானித்துள்ளன.

ஆழிப்பேரலை அகதிகள் முகாம் அருகே ஆறு குண்டுகள் விழுந்துள்ளன. இரு குண்டுகள் வெடிக்க்கவில்லை. இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 10 நிமிட இடைவேளையில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் தற்போதும் திடீரென தொடர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தி வருகிறது.

puthinam.

:twisted: :twisted: :twisted: :twisted:

என்ன செய்யப் போகிறாய் என்ன செய்யப்போகிறாய்? :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் மீண்டும் இன்று விமானக் குண்டுவீச்சு

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வன்னிப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சிறிலங்கா இராணுவம் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வருகிறது.

வன்னிப்பகுதியில் இன்று காலை 6.28 முதல் கிபீர் விமானங்கள் குண்டுத்தாக்குதலை நடத்துகின்றன.

மேலும் சிறிலங்கா விமானப்படையின் தொலை இயக்கி வேவு விமானம் ஒன்றும் வன்னி வான்பரப்பில் வட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக இன்று காலை 6.28 முதல் காலை 6.35 வரை இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

அதன் பின் இரண்டாம் முறையாக 2 கிபீர் விமானங்கள் மீண்டும் குண்டுகளை வீசின.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் விமானங்கள் குண்டுவீச்சு; பல்குழல் ரொக்கட் தாக்குதல்

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நேற்று வியாழக்கிழமை காலையும் மாலையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விமானப் படையினர் விமானக் குண்டு வீச்சுகளை நடத்திய அதேநேரம், திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மூதூர் கிழக்குப் பகுதி மீது ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொலாவ பகுதியில் நேற்றுக் காலை பயணிகள் பஸ் ஒன்றினுள் பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து மூதூர் கிழக்கிலும் முல்லைத்தீவிலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

நேற்றுக்காலை பத்து மணி முதல் திருகோணமலை மங்கிபிறிட்ஜ் இராணுவ முகாமிலிருந்தும் கடற்படைத் தளத்திலிருந்தும் ஆட்லறி ஷெல்களும், பல்குழல் ரொக்கட்களும், ஷெல்களும் மூதூர் கிழக்கை நோக்கி சரமாரியாக ஏவப்பட்டன.

இந்த ஷெல்களும் ரொக்கட்டுகளும், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சம்பூர், சூடைக்குடா, கூனித்தீவு, இலக்கந்தை மற்றும் பள்ளிக்குடியிருப்பு பகுதிகளை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளன.

அண்மைக் காலங்களில் இப் பகுதிகள் மீது முப்படையினரும் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களையடுத்து மக்கள் இப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து விட்டதால் நேற்றைய இந்தத் தாக்குதல்களில் உயிர்ச் சேதமெதுவும் ஏற்படவில்லை. இருவர் மட்டுமே காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதல்களினால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகச் சேதமடைந்ததுடன் பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

பள்ளிக்குடியிருப்பு மக்களே நேற்றைய தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். காலை பத்து மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஷெல்களும் ரொக்கட்டுகளும் ஏவப்பட்டு கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

திருகோணமலையிலுள்ள படைமுகாம்களிலிருந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் திருகோணமலையிலும் பெரும் பதற்றம் நிலவியது. நேற்று முழு நாளும் திருகோணமலை நகரும் புறநகர்ப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன.

விமானத் தாக்குதல்கள்

இதேநேரம், நேற்றுக் காலை முல்லைத்தீவில் விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரு கிபீர் விமானங்கள் நண்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான் பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளையும் ஆழிப்பேரலை அகதிகள் முகாமையும் இலக்கு வைத்து இரு குண்டுகளை வீசின.

இதில் ஐவர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புகள் சேதமாகின. மேலும், கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மீண்டும் நண்பகல் 12 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

இந்தத் தாக்குதலில், 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. இதையடுத்து, அங்கிருந்து ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேறியுள்ளனர்.

கடற்பரப்பிலிருந்து மூன்று மைல் தொலைவில் கடற்படையின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் விமானக் குண்டு வீச்சை அவதானித்துள்ளன.

ஆழிப்பேரலை அகதிகள் முகாம் அருகே ஆறு குண்டுகள் விழுந்துள்ளன. இரு குண்டுகள் வெடிக்கவில்லை.

இதேவேளை, விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபீர் விமானங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட்ட வன்னி வான் பரப்பில் நேற்று மாலை 6.25 மணிக்கு மீண்டும் நுழைந்தன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மாலை 6.25 மணி முதல் 6.35 வரை நான்கு தடவை நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன. இதன் பின்னர் மீண்டும் 6.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன.

இதைத் தொடர்ந்து 6.55 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு குண்டை வீசின.

இதேபோல், மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான தரவை மற்றும் புலிபாய்ந்தகல் பகுதிகளில் மாலை 3.15 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயோமோகன் தெரிவித்தார்.

மேலும், வவுணதீவு இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மோட்டார் ஷெல்கள் மூலம் நேற்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணிவரை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

-தினக்குரல்

  • தொடங்கியவர்

இனறு மாலை 5.20 மணிக்கு சிறிலாங்கா இராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள் கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கின்றன

நன்றி

வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

கிபிர்இ மிக் விமானங்களை நோக்கி விடுதலைப் புலிகளால் விமான எதிர்ப்பு தாக்குதல்.

வன்னியில் இன்று இரண்டாவது தடைவையாகவும் சிறீலங்கா படையினரின் மிக் - 29 ரக விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு தாக்குதலைத் தொடுத்துள்ளது.

ஆறுதடவைகள் குண்டுகளை வீசியாதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இன்று காலையும் மாலையும் கிபிர் மற்றும் மிக் ரக வீமானங்கள் குண்டு வீச்சி ஈடுபட்ட போது விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்புப் பிரிவினரால் விமானங்கள் நோக்கி விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் சிறிலங்கா வான்படையினர் உயரப் பறப்புக்களை மேற்கொண்டதோடு வட்டமிட்டுச் சென்றுள்ளன.

-பதிவு-

துள்ளுகின்ற மாட்டிற்குச் சூடு போட்டால் தான் அடங்குமாம்.

என்னப்பா இக்பால் அத்தாஸ் லொக் பண்ணுது மணியடிக்குது லைற்று பத்து எண்டு கொஞ்சக்காலத்துக்கு முதல் துள்ளிக்குதிச்சார்.

உயரத்திலை நிண்டு குண்டு போடுறாங்கள் எண்றதை பாத்தா இப்பவும் 50 90 கலிபர்களோடை போலை :cry:

50 தோ 90 றோ... இப்போதைக்கு சமாளிச்சிட்டு உக்கிர யுத்தம் தொடங்கும் போது எதிரி நிலைகுலைய அடிக்கிறதுதான் நல்லது. இல்ல எதிரி உசார் ஆகி..உள்ளவனட்ட அதுதா இதுதா என்று அழுதிட்டு இருப்பான். அவங்களும் அள்ளிக் கொடுக்க...அப்புறம் பிரச்சனை நமக்கு பிசகாகிடும்..!

****************

*****நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் வான்வெளித் தாக்குதல் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்.

தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்காப் படையினரால் நடத்தபடும் வான் தாக்குதல்களை சர்வதேச மன்னிப்புச் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் மன்னிப்புச் சபை கெப்பிற்கொல்லாவ பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு ஆபத்தாக அமையலாம் என எச்சரித்துள்ளது.

கண்மூடித்தனமான வகைதொகையின்றி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக அமையும் தாக்குதல்கள் அனைத்துலக மனித நேய சட்டங்களுக்கு முரணானது என அனைத்துலக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏற்றல் மாதம் சரத்பொன்சேகா மீதான தாக்குதலில் பின்னர் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள வான்வெளித் தாக்குதல்கள் பலர் கொல்லப்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் இடப் பெயர்வுக்கு உள்ளாகியமையும் அனைத்துல மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நீண்ட நாட்களாக நடைபெறும் மென்தீவிர யுத்தம் எந்த நேரமும் முழு அளவிலான யுத்தமாக வெடித்து மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதற்கு வழிகோலலாம் என்றும் அனைத்துலகச் மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

-பதிவு-

;

சிறீலங்காவின் வான்வெளித் தாக்குதல் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்.

தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்காப் படையினரால் நடத்தபடும் வான் தாக்குதல்களை சர்வதேச மன்னிப்புச் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் மன்னிப்புச் சபை கெப்பிற்கொல்லாவ பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு ஆபத்தாக அமையலாம் என எச்சரித்துள்ளது.

கண்மூடித்தனமான வகைதொகையின்றி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக அமையும் தாக்குதல்கள் அனைத்துலக மனித நேய சட்டங்களுக்கு முரணானது என அனைத்துலக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏற்றல் மாதம் சரத்பொன்சேகா மீதான தாக்குதலில் பின்னர் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள வான்வெளித் தாக்குதல்கள் பலர் கொல்லப்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் இடப் பெயர்வுக்கு உள்ளாகியமையும் அனைத்துல மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நீண்ட நாட்களாக நடைபெறும் மென்தீவிர யுத்தம் எந்த நேரமும் முழு அளவிலான யுத்தமாக வெடித்து மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதற்கு வழிகோலலாம் என்றும் அனைத்துலகச் மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

-பதிவு-

;

அவர்களுக்கெண்டாலும் மனச்சாட்சி இருக்குதே

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கெண்டாலும் மனச்சாட்சி இருக்குதே

அதொண்டுமில்லை, நாய் வேசம் போட்டால் குரைச்சுத் தானே ஆக வேண்டும்! :wink:

அதொண்டுமில்லை, நாய் வேசம் போட்டால் குரைச்சுத் தானே ஆக வேண்டும்! :wink:

அதுக்காக லேட்டா குரைச்ச லேட்டசா இராதே. :P :P :P

இருக்கிற குண்டெல்லாம் காட்டுக்கையும்,மாட்டுக்கையு

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக லேட்டா குரைச்ச லேட்டசா இராதே. :P  :P  :P

போன முறை அப்படி லேட்டாகக் குரைச்சுத் தான் பலரிடம் பிடிபட்டவை. அது தான் இந்த முறை முந்திக் கொண்டினமாம். :wink: :P

  • தொடங்கியவர்

யார் எப்படி முந்தி என்னத்தை சொன்னாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லையே நாங்களாக தேடி பொற்றுக்கொள்வதைத்தவிர வேறு வளியில்லை

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலையும் மாலையும் கிளிநொச்சியில் வீசுறான் வீசுறான் என்று செய்திகளை போடுகிறீர்கள்... எங்கே எங்கே எல்லாம் படுகிது என்ற செய்திகளையும் உடனுக்குடன் இங்கு இணைதீர்கள் என்றால் புண்ணியமாய் போகும்.

கிளிநொச்சியில் உறவுகள் உளர் ஒன்றும் அறியமுடியவில்லை.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.