Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பில் பலர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறுகிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பாகிஸ்தானின் உள்துறைச் செயலர் அக்பர் துரானி கூறுகிறார். அந்நகரில் ஜனசந்தடி நிறைந்த ஒரு ஸ்னூக்கர் விளையாட்டு விடுதியில் முதலில் ஒரு குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அது நடந்து வந்த ஒரு தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புவதாக ஹமீத் ஷகீல் எனும் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அதில் தமது பல அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளனர். முதல் தாக்குதல் நடைபெற்று சில நிமிடங்கள் கழித்து, அந்த கிளப்புக்கு வெளியே வாகனங்கள் நிற்கும் இடத்தில் ஒரு குண்டு வெடித்ததில், அந்த ஸ்னூக்கர் கிளப் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. ஒரு வாகனத்தின் கீழ் இரண்டாவது குண்டு வைக்கப்பட்டிருந்தது, அந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் துணை இராணுவத்தினரை குறி வைத்தே எனவும் ஹமீது ஷக்கீல் கூறுகிறார். இந்தத் தாக்குதல்களில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம்கள் என்று நம்பப்படுகிறது. குண்டு வெடிப்பின் தாக்கம் வியாழக்கிழமை(10.1.13) காலை குவெட்டாவிலுள்ள ஒரு அங்காடிப் பகுதியில் மற்றொரு குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஒருங்கிணைந்த பலூச் இராணும் எனும் ஆயுதக் குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதன் பேச்சாளர் கூறியுள்ளார். ஷியா மற்றும் சுன்னிப் பிரிவு முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் இனமோதல் மற்றும் பிரிவினைவாத போராட்டத்தினால் பலூச்சிஸ்தான் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130110_pakistan_quettablast.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று இந்தியரை கொன்றதற்கு, தகுந்த பதிலடியை... இந்தியா கொடுத்து விட்டது.

இனி... பாகிஸ்தான் வாலாட்ட, மாட்டுது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்சிறி! சராசரி இந்தியர்கள் நினைப்பதுபோல நீங்களும் கருத்தெழுதுறியள். இக்கொண்டு வெடிப்புக்கு உரிமைகோரியிருப்பது பளூச்சிஸ்தான் பிரிவினைவாதப் போராளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அமைபிற்கு இந்தியா தான் ஆதரவளித்து வருவதாக Pakistan பலதடவைகள் குற்றம் சாட்டி இருக்கு எழுக ஞாயிறு அண்ணா. ஆனாலும் அந்த அமைப்பிற்கு ஆதரவளிப்பத்தை இந்தியா மறுத்தே வந்திருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தானில் 4 பயங்கர குண்டுவெடிப்புகள் - 115 பேர் பலி, 200 பேர் காயம்

11-pak-blasts-300.jpg

 

குவெட்டா: பாகிஸ்தானில் நேற்று நான்கு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. குண்டுவெடிப்புகளில் 115 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

 

தீவிரவாதிகளின் தாயகமாக கருதப்படும் குவெட்டாவில் மட்டும் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குவெட்டா நகரில் உள்ள ஷியா சமூகத்தினரின் பில்லியர்ட்ஸ் அரங்கில் குண்டுவெடித்ததில் இவர்கள் கொல்லப்பட்டனர்.

ஷியா முஸ்லீம்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சன்னி பிரிவு அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் இது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும், முதல் தாக்குதலுக்குப் பின்னர் ஒரு கார் வெடிகுண்டையும் அந்தத் தீவிரவாத அமைப்பு வெடிக்க் செய்துள்ளது.

 

சமீப காலத்தில் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரவாத தாக்குதல் இது என்று வர்ணிக்கப்படுகிறது.குவெட்டாவைத் தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன. இங்குதான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால் தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குண்டுவெடிப்பு நடந்த பகுதிகள் போர்க்களம் போலக் காணப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.

 

குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

 

http://tamil.oneindia.in/news/2013/01/11/world-115-killed-over-200-injured-four-blasts-167781.html

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனாக இதைப்பார்க்க  நினைக்கின்றேன்

ஆனாலும் இது எனக்கு வலிக்குதில்லை :( 

பாலுஸ்தானிய பயங்கரவாதமா விடுதலை போரா...??    எங்கட பொழுது போக்கு செம்மல் அர்சுணை தான் கேக்க வேணும்...

 

 



பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்கிறது எண்டு பாக்கிஸ்தான் கோத்தாட்ட பாயிற்ச்சி எடுக்கணும்..

அமெரிக்க செனட் ஒத்திப் போட்ட பாலுஸ்த்தான் சுதந்திரய பிரேரணை ஒன்றுடன் இருப்பதாக கேள்வி. ஓபாமா இந்த நாலு வருடமும் முடிய முதல் எந்த நேரமும் வெளியே விடலாம். அவர் பாகிஸ்தான் ரோன் தாக்குதலுக்கு வாயைப்பொத்திக்கொண்டு இருக்கும் வரையும் பழுதாக்காமல் பார்த்துகொள்ளும் சந்தர்பம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இருக்கும் நேரம் பாகிஸ்தான் பிரிவது நேட்டோ போராளிகளுக்கு தேவையில்லாத ஆபத்து.  ஈரானுக்குள் நேட்டோ இறங்கினால் அந்த பக்கம் பாகிஸ்தானுக்கு முதல் சரி வந்துவிடும். காலம் நேரம் வர எல்லா தானே நடக்கும். 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.