Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை

Featured Replies

அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை

b1b9f9b3c4bd9866549a95654a187e1d.jpg

அமெரிக்கர்களுக்கு இLogoutலங்கைக்கு வருவதற்கு  தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட முற்பட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையான சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்தநாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி விஜேநாயக்க கூறுகையில்,

இலங்கையை அழிப்பதே அமெரிக்காவின் திட்டம். இதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

கடந்த பல வருட காலமாக விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் இணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைளையே அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்தது. அதனையடுத்தும் குறிப்பாக ஐ.நாவிலும் இலங்கையைத் தலைகுனிய வைக்கவே அமெரிக்கா செயற்பட்டது.

அதன்படி இனிமேலும் இலங்கையை அடிமைப்படுத்தவோ நெருக்கடிகளைக் கொடுக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்.

எமக்கும் சீனாவுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது.

எனவே அமெரிக்காவின் சவால்களை சீனாவுடன் இணைந்து இலங்கை முறியடிக்கும். அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ள மூன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்களும் உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது. மீறிச் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=769301783622233915#

 

எமக்கும் சீனாவுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது.

 

 

அமெரிக்காவுக்கு இது தெரிய வேண்டுமென்பத்தில்லை. ஆனால் சோனியா முசோலினியிற்கு இது தெரியுமா? அவவிடம் ஒருதடவை இதை போட்டுவையுங்க.

அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது; அரசாங்கம் குற்றஞ்சாட்டு

1ebf6f35b72c4288ff8d453dba598907.jpg

பிரதம நீதியரசரின் குற்றவியல் பிரேரணை தொடர்பில் அமெரக்காவின் செயற்பாடு இரட்டை வேடம் போடுவதாக அமைந்துள்ளதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டமே காணப்படுகிறது, உயர் அதிகாரிக்கு ஒரு சட்டம், விவசாயிகளுக்கு ஒரு சட்டம் என்று இல்லை என பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிரத நீதியரசருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட போது அமெரிக்கா அதனை விமர்த்தித்தது. 

ஆனால் 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் அதேபோல் ஒரு சம்பம் ஒன்று இடம்பெற்றது என்பதை அவர்கள் மறந்து விட்டார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலி - ஹக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=511871782322880401

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின்ரை பொறுப்பிலை திருகோணமலையை குடுங்கோ.....ஒருபிரச்சனையும் வராது.......கொக்கோகோலா பைப்பிலை வரும் :D

சீனா தான் தமிழின அழிப்பின் துரும்பு.

சீனாவை வைத்துத்தான் அமெரிக்காவும் இந்தியாவும் கூட சிங்களத்திற்கு உதவி வருகின்றன.

 

எம்மால் சீனாவையும் வழிக்கு கொண்டுவர முடியாத நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா என்றாலே....சிங்களவ(ன்)ர் ...என்று இப்ப பொருள்......

  • கருத்துக்கள உறவுகள்

 

பிச்சை எடுத்தாலும் திமிரு போகல...

  • கருத்துக்கள உறவுகள்


அநீதி படுகொலையான நாட்டில் ஷிரானி ஒரு தொடர்கதை: - பனங்காட்டான் 
 
Mahinda-shirani-150-article.jpg

கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பமான ஷிரானி பண்டாரநாயக்க விவகாரம், ஐம்பது நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்று சொல்லலாம். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது என்றும் சில தரப்புகளில் சொல்லப்படுகின்றது. அப்படியென்றால், 'ஷிரானி ஒரு தொடர்கதை' என்று சொல்லலாம்போல தெரிகின்றது. ஷிரானி பண்டாரநாயக்க என்று குறிப்பிடும்போது அவரை முன்னாள் பிரதம நீதியரசர் என்று சொல்வதா, அல்லது இன்றும் சட்டப்படி அவர்தான் பிரதம நீதியரசர் என்று சொல்வதா என்ற பிரச்சினையும் எழுந்துள்ளது.


  

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், மேன்முறையிட்டு நீதிமன்றமும் ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்த பின்னர், அதனை நிராகரித்த சபாநாயகரின் முடிவை மகிந்த ராஜபக்ச ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது சட்டத்துக்கு முரணானதால், தாமே இப்போதும் பிரதம நீதியரசர் என்று ஷிரானி பண்டாரநாயக்க கூறி வருகின்றார். ஆனால், தமக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு அவர் வெளியேறி விட்டார்.

 

இதனைச் செய்யத் தவறியிருந்தால், ராஜபக்ச சகோதரர்கள் தம்மை எவ்வாறு அவமானப்படுத்தியிருப்பர் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

 

அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்படுமிடத்து, பொலிசாரும் இராணுவத்தினரும் நடத்தும் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தாம் வெளியேறியதாக ஊடக அறிக்கையொன்றில் ஷிரானி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமக்கென ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடைமைகளை எடுத்துச் செல்ல நாட்களைப் பின்னகர்த்தியபோது, அவைகளை இராணுவத்தினர் மூலம் கோதபாய ராஜபக்ச எவ்வாறு வெளியே தூக்கி வீசச் செய்தார் என்பதை எவரும் இலகுவாக மறந்துவிட முடியாது.

 

தமது சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ள ஷிரானி, தாம் இன்றும் தமது பிரதம நீதியரசர் பதவியிலேயே இருப்பதாக அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.

 

தனது தாயாரை பின்கதவால் வெளியேற்றி விட்டார்கள் என்று கூறி அதனைக் கண்டித்துள்ள ஷிரானியின் மகன் ஷவீன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமது தாயாரே இப்போதும் பிரதம நீதியரசராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது நிச்சயமாக மகிந்தவுக்கும் அவரது மந்திரிமாருக்கும் பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கும்.

 

தமக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி, முன்னாள் சட்ட மாஅதிபரான (அட்டர்னி ஜெனரல்) மொகான் பீரிஸை புதிய பிரதம நீதியரசராக மகிந்த நியமித்துள்ளார்.

 

17ஆவது அரசியற் சட்டத்தை நீக்கி, புதிய 18ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற கவுன்சில், மகிந்தவின் கைப்பொம்மையாகச் செயற்பட்டிருப்பதை மொகான் பீரிஸ் நியமனத்தால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

தாம் விரும்பும் ஒருவரை � தமது கையாளான ஒருவரை, புதிய பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு 18ஆவது திருத்தம் விரும்பியவாறு கைகொடுத்துள்ளது.

 

இந்த நியமனம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, நாடாளுமன்ற கவுன்சிலின் அரச தரப்புப் பிரதிநிதியான ஏ.எச்.எம்.அஸ்வர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், புதிய பிரதம நீதியரசராக மொகான் பீரிஸ் நியமனமாவாரென்று பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். இதனூடாக இந்த நியமனத்தில் இடம்பெற்றிருந்த அரசியல் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

 

இதனை இன்னொரு வகையாகச் சொல்வதானால், மொகான் பீரிஸை பின்கதவால் கொண்டுசென்று ஷிரானியின் கதிரையில் மகிந்த இருத்தியுள்ளார் என்பதே யதார்த்தம்.

 

மொகான் பீரிஸ் தமது கதிரையில் ஏறுவதற்கு முன்னதாக அவரது நியமனத்தை எதிர்த்து ஒரு வழக்குத் தாக்கலானது. இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தப் பிரதம நீதியரசருக்கும் எதிராக நியமனத்துக்கு முன்னர் வழங்குத் தாக்கலாகவில்லை.

 

இவர் சட்ட மாஅதிபராக இருந்த காலத்தில் நேர்மையற்றவராகவும், ஊழலில் சம்பந்தப்பட்டவராகவும், அரசியல் மயமாக்கப்பட்ட உயர் பதவி அதிகாரியாகவும் இருந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி இவரைப் பிரதம நீதியரசராக நியமிக்க முடியாது என்பது தாக்கலான மனுவின் சாரம்.

 

கே.கமலசபேசன் என்ற தமிழர் சட்ட மாஅதிபராக இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அந்த இடத்துக்கு மொகான் பீரிஸை மகிந்த நியமனம் செய்தார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவரால் சட்ட மாஅதிபராக இருக்க முடிந்தது.

 

இப்பதவியை இவர் வகித்த 2011ஆம் ஆண்டில் இவரது பெயர் சில விடயங்களில் பிரபல்யமாகியிருந்தது. அவ்வேளையில், அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த சந்தன கதிரியாராய்ச்சி மீது கொலைக்குற்றச்சாட்டு வழக்கொன்று இருந்தது. மற்றொரு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா பாலியல் வல்லுறவு வழக்கொன்றில் எதிரியாகவிருந்தார்.

 

இந்த இரு வழக்குகளையும் இரத்துச் செய்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காப்பாற்றியவர் மொகான் பீரிஸ். மகிந்த ராஜபக்சவின் விருப்பத்தின் பேரிலேயே மொகான் பீரிஸ் என்ற சட்ட மாஅதிபர் இவ்வாறு சட்டத்தை ஏறி மிதித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம்.

 

முன்னாள் பிரதம நீதியரசர்களான அசோக டி சில்வா, சரத் என். சில்வா ஆகியோர் மேற்சொன்ன விடயங்களையிட்டு கடும் விசனம் தெரிவித்திருந்தனர். இது தவிர, பல மில்லியன் ரூபாய்கள் சம்பந்தப்பட்ட புகார் ஒன்று இவருக்கு எதிராக விசாரணைகளின்றி அகதி நிலையில் நிற்கிறது.

 

கடந்த வருட மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் அரச பிரதிநிதியாக கலந்துகொண்ட மொகான் பீரிஸ் தெரிவித்த ஒரு கருத்து சர்வதேச ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

2010 ஜனவரி 24ஆம் திகதி இலங்கையில் காணாமற் போன பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பற்றிய கேள்வி கூட்டத்தில் எழுந்தபோது, இது ஒரு நாடகம். அவர் வெளிநாடொன்றில் இருக்கிறார். இலங்கை அரசின் மீது அபாண்டம் சுமத்தவே அவர் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது என்று கூறி மகிந்தவுக்கு வக்காலத்து வாங்கினார்.

 

இந்தக் கூற்றுத் தொடர்பாக பிரதீப்பின் மனைவி சந்தியா, ஹோமகம நீதிபதி முன்னால் மனுவொன்றைத் தாக்கல் செய்து, மொகான் பீரிஸை விசாரணைக்கு அழைக்கக் கோரியிருந்தார்.

 

இதனை எதிர்பார்த்திராத மொகான் பீரிஸ் மிகவும் நெருக்கடியாக சூழ்நிலையில், அரசாங்கத்துக்கும் புலனாய்வுத்துறைக்கும் இப்படியொரு தகவல் கிடைத்தது. இது காற்றில் வந்த ஒரு செய்தி. மேலதிகமாக இதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி ஒரு குத்துக்கரணம் அடித்து விட்டார்.

 

இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் வாழும் இந்த �நீதியான� மனிதனை, தமது அரசுக்கான சட்ட ஆலோசகராக கடந்த வருடம் மகிந்த நியமித்திருந்தார்.

 

இப்போது அவரே பிரதம நீதியரசர் ஆக்கப்பட்டுள்ளார்.

குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படாத ஷிரானியைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, குற்றங்களைச் சரியாக விசாரிக்காது தம் பாதுகாப்பில் இருக்கும் குற்றவாளி ஒருவரை பிரதம நீதியரசராக ஆக்கியுள்ளார் மகிந்த.

 

மொகான் பீரிஸின் குற்றங்கள் பற்றி ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு மூன்று மந்திரிகள் அசாதாரண மௌனம் சாதித்தனர்.

 

இவர்களில் எவராவது மௌனம் கலைத்திருந்தால் அவர்களுக்கும் சிரானியின் நிலையே ஏற்பட்டிருக்கும்.

இலங்கையின் வழுவழுப்பான அரசியற் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவுக்குச் சவாலாக நிற்பதற்குப் பொருத்தமானவர் சிரானி பண்டாரநாயக்கதான் என்ற கருத்து இலங்கையில் மேலோங்கி வருகின்றது.

 

அதுவரை ஷிரானி பண்டாரநாயக்க தாமே பிரதம நீதியரசர் என்று சொல்லிக்கொண்டு வலுவற்ற அரசியல் அமைப்பை வளைத்து விளையாடக்கூடும்.

 

பதவி விலகினாலென்ன, விலகாவிட்டாலென்ன ஷிரானி ஒரு தொடர்கதையாகவே இருப்பார்.

இருட்டறைக்குள் கறுப்புப் பூனையைத் தேடுவதுபோல உலகமே ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்ட நீதியை இலங்கையில் தேடுகின்றன.

 

குறிப்பு:- இலங்கையினதும், உலகினதும் முதற் பெண் பிரதமர் என்ற சிறிமாவோ பண்டாரநாயக்கவை ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவி இழக்கச் செய்ததற்கும், இலங்கையின் முதற் பெண் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை மகிந்த ராஜபக்ச பதவி இழக்கச் செய்ததற்கும் இடையில் ஒரேயொரு ஒற்றுமை தெரிகின்றது. வீழ்த்தப்பட்ட இருவரும் 'முதல்' பெண்கள். வீழ்த்திய இருவரும் ஆண் ஜனாதிபதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.... பலே... சரியான, போட்டி. ஹ்ம்ம்... நடக்கட்டும்.

இறுதி யுத்தத்தில் புலிகளுக்கெதிராக இலங்கைக்கு உதவி செய்தார்கள் தானே... நல்லா வேணும் அமெரிக்காவுக்கு...

 

அமெரிக்காவின்ரை பொறுப்பிலை திருகோணமலையை குடுங்கோ.....ஒருபிரச்சனையும் வராது.......கொக்கோகோலா பைப்பிலை வரும் :D

 

முன்பு தான் அமெரிக்காவுக்கு திருகோணமலை தேவைப்பட்டது. ஓர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் என்பதால்....

ஆனால் இன்று அமெரிக்காவிடம் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து விட்டதால் எதையும் அமெரிக்காவிலிருந்தே செயற்படுத்த முடியும். திருகோணமலை அவர்களுக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன். :unsure:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.