Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி ஜாதிக கெல உறுமயவின் உதவியுடன் நாவற்குழியில் சிங்களவர்களுக்கு வீடுகள்

Featured Replies

navatkuli-sinhala-house-150x150.jpgயாழ். நகரத்தின் எல்லையான நாவற்குழியில் நிரந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளன. இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஈ.பி.டி.பி ஆதரவுடனும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் இந்தக் குடியேற்றப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிரந்தர சிங்களக் குடியிருப்பில் குடியேறியுள்ளவர்களுக்கு காணிகளைச் சொந்தமாக வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைசசர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.  2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறும் நோக்குடன் 54 குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள் திடீரென வந்து யாழ். தொடருந்து நிலையத்தில் தங்கின. ஒரு மாதத்தின் பின்னர் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி நாவற்குழியில் இருந்த தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் அத்துமீறி புகுந்து கொட்டில்கள் அமைத்துத் தங்கினர்.

இந்நிலையில் நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மக்கள் தமது குடியேற்றத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். நிரந்தர வீடுகளுக்கான கட்டிடங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அங்கு 135 சிங்கள குடும்பங்கள் தங்கியுள்ளன. இவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிரந்தர சிங்களக் குடியேற்றத்தில் விகாரை மற்றும் பொது நோக்கு மண்டபம் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளுக்குரிய அனுமதி பத்திரங்களை தான் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தம்மிடம் உறுதியளித்தார் என்று அந்த மக்களின் சார்பில் பேசும் மல்காந்தி என்ற பெண் தெரிவித்துள்ளார்.navatkuli-sinhala-house.jpg

 

 

 

http://www.thinakkathir.com/?p=47817

Edited by யாழ்அன்பு

நேற்று மகிந்தர் நாட்டில் யாரும் எங்கும் சுதந்திரமாக இருக்கலாம் என்றார்.

இன்று அந்த சிந்தனைக்கு வடிவம் தரப்படுகின்றது.

 

அப்படி செய்தால் தான் தன்னை வடமாகாண முதல்வர் தேர்தலில் நிறுத்துவார் என்ற ஆசை :(

  • கருத்துக்கள உறவுகள்
செந்தோழர்களிடம்,புளட் தோழர்களிடமும் ஒரு கேள்வி??
தமிழர்கள் அனுராதபுரத்தில் இப்படி குடியேற முடியுமோ??
 
நீங்கள் தான் சொன்னீர்கள் ஒரே நாடு.எல்லாரும் எங்கேயும் வெட்டி விழுத்தலாம் என்று.அது தான் இந்த கேள்வி.

கவனியுங்கள்!

2010 இல் சிங்கள மக்கள் வந்து தொடருந்து நிலையத்தில் தங்குகிறார்கள். பின்பு ஒரு காணியில் கொட்டில்கள் அமைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்கிறார்கள். இப்பொழுதுதான் நிரந்தர வீடுகள் கட்டும் வேலைகள் நடக்கின்றன.

தமிழர்களே! இத்தனை ஓர்மம் மிக்க சிங்கள மக்களை எப்படி வெல்லப் போகிறீர்கள்?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

கவனியுங்கள்!

2010 இல் சிங்கள மக்கள் வந்து தொடருந்து நிலையத்தில் தங்குகிறார்கள். பின்பு ஒரு காணியில் கொட்டில்கள் அமைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்கிறார்கள். இப்பொழுதுதான் நிரந்தர வீடுகள் கட்டும் வேலைகள் நடக்கின்றன.

தமிழர்களே! இத்தனை ஓர்மம் மிக்க சிங்கள மக்களை எப்படி வெல்லப் போகிறீர்கள்?

 

சிம்பிள்.. ஒரு கண்ணிவெடியை புதைக்க தன்பாட்டில ஓடுவாங்கள்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கவனியுங்கள்!

2010 இல் சிங்கள மக்கள் வந்து தொடருந்து நிலையத்தில் தங்குகிறார்கள். பின்பு ஒரு காணியில் கொட்டில்கள் அமைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்கிறார்கள். இப்பொழுதுதான் நிரந்தர வீடுகள் கட்டும் வேலைகள் நடக்கின்றன.

தமிழர்களே! இத்தனை ஓர்மம் மிக்க சிங்கள மக்களை எப்படி வெல்லப் போகிறீர்கள்?

 

அது ரொம்ப ஈசி.. பழசைக் கிளறி, அதிலிருந்து பாடம் கற்று வெற்றி காணலாம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பல சமரசங்களுக்கு மதிநுட்ப போதனைகளுக்கு.. இல்லாத மதிப்பை ஆயுதத்திற்கு மனிதன் கொடுக்கக் கற்றுள்ளான்..! அதுதான் பிரச்சனையே இங்கு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது ரொம்ப ஈசி.. பழசைக் கிளறி, அதிலிருந்து பாடம் கற்று வெற்றி காணலாம்..! :D

 

 

மீண்டும் வெப் ஈழமா ?? ஐயகோ!!!!!  :icon_mrgreen:  :icon_mrgreen:

இன்றைக்கு மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் தமிழர்கள் குடியேறுவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாவிட்டபுரம் கோயில் சுற்றாடல் விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் மட்டுமே வந்திருக்கின்றன. வீமன்காமத்தில் பெரும்பகுதியும் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கேயும் யாரும் வந்ததாக தெரியவில்லை. குரும்பசிட்டியில் மக்கள் வருவார்கள் என்று கோயில் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

சில மைல்கள் தள்ளி வசிக்கும் மக்களை சொந்த இடத்தில் வந்து வசியுங்கள், இல்லையென்றால் இராணுவம் அதை மீண்டும் பறித்து விடும் என்று கெஞ்சுகின்ற நிலையில் இருக்கிறோம்.

ஆனால் சில நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த சிங்களவர்கள் தாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இடம் என்று சொல்லி கொட்டில் போட்டு தங்குகிறார்கள்.

இரண்டு இனங்களுக்கு இடையிலும் எத்தனை வித்தியாசம்?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் தமிழர்கள் குடியேறுவதற்கு தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாவிட்டபுரம் கோயில் சுற்றாடல் விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் மட்டுமே வந்திருக்கின்றன. வீமன்காமத்தில் பெரும்பகுதியும் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கேயும் யாரும் வந்ததாக தெரியவில்லை. குரும்பசிட்டியில் மக்கள் வருவார்கள் என்று கோயில் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

சில மைல்கள் தள்ளி வசிக்கும் மக்களை சொந்த இடத்தில் வந்து வசியுங்கள், இல்லையென்றால் இராணுவம் அதை மீண்டும் பறித்து விடும் என்று கெஞ்சுகின்ற நிலையில் இருக்கிறோம்.

ஆனால் சில நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த சிங்களவர்கள் தாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இடம் என்று சொல்லி கொட்டில் போட்டு தங்குகிறார்கள்.

இரண்டு இனங்களுக்கு இடையிலும் எத்தனை வித்தியாசம்?

 

நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஊரில போய் இருக்க முன் வந்தால் அந்த மக்களும் வருவினம். ஊரில பேய் (ஆமிக்காரனும்.. ஒட்டுக்குழுக்களும்.. நிஜப் பேயும் (நம்புறவைக்காக) குடியிருக்குது.. ஒரு சில மக்களை போய் அதில குந்தி இருக்க முடியுமோ. கோயிலைக் கட்டினாப் போல.. சனம்.. தனிய எப்படிப் போய் இருக்கிறது. சிங்களவனுக்கு பராக்குப் பார்க்க ஆமிக்காரன் இருக்கிறான். சொந்த பந்தம் விசிட் அடிக்கும்.. எனி தமிழன்ர இடத்தில குந்திட்டம் என்ற வீராப்பு வேற இருக்கும். அதை ஊக்குவிக்க சிங்கள வெள்ளை வேட்டிகள்.. காவிகள் அடிக்கடி வருங்கள். எம் மக்களுக்கு..?????! அவையை.. தனிமையில் இனிமை காணச் சொன்னால்.. பாவம் அவர்கள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

சபேசன்.நீங்கள் இங்கிருந்து கதைப்பதுபோல் அல்ல யதார்த்தம்.யதார்த்தம் என்ற ஒன்று ஊரில் வேறுமாரி இருக்கு.நீங்கள் இங்குவந்து வசதியாக இருந்து கொன்டு சிங்கள பொறுக்கிகளின் காவலருணுக்கு பக்கத்தில் மக்களைப்போய் இருக்கவில்லை என்று கை நீட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.அந்த மக்கல் அந்த இடம் பாதுகாப்பானதென்று உணர்ந்தால் போகாமல் இருக்க அவர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை.

இப்படி ஒவ்வொரு காரணத்தை சொல்லி மண்ணை பறிகொடுத்து விட்டு, டக்ளஸ் போன்ற ஆட்களை திட்டி இன்பம் கண்டு கொண்டு காலத்தை கழிப்போம். வேறு எம்மால் என்னதான் செய்ய முடியும்?

வண்டுமுருகன்! 2010வரை யாழ்ப்பாணத்தின் அனைத்து வீடுகளுமே சிங்களக் காவலரண்களுக்கு பக்கத்தில்தான் இருந்தன. இன்றைக்கும் எத்தனையோ வீடுகள் இருக்கின்றன. "ஆமிக்காரர் பக்கத்தில் இருந்தால் கள்வர் தொல்லை இருக்காது" என்று சொல்கின்ற மக்களையும் நாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்திருக்கிறேன்.

பாதுகாப்பு என்பது பிரச்சனை இல்லை. நான் பேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் சொன்னது மின்சாரம் இல்லை என்பதைத்தான். ஒருவர் இணைய வசதி இல்லை என்பதைக் கூட காரணமாக சொன்னார். தற்பொழுது இருக்கின்ற இடத்தில் உள்ள வசதி சொந்த இடத்தில் இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொல்வதிலும்  உண்மை இருக்கத்தான்  செய்கின்றது . தீவகத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கணிசமானோர் 

திரும்ப்பிப் போக மனமின்றி யாழ்ப்பாணத்திலும் ,வவுனியா போன்ற இடங்களிலும் இருக்கின்றனர் (என் சகோதர ,சகோதரிகள் உட்பட )தீவகத்தில் சொந்த காணி ,தோட்டம் உட்பட சொத்துக்கள் இருந்தும் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒவ்வொரு காரணத்தை சொல்லி மண்ணை பறிகொடுத்து விட்டு, டக்ளஸ் போன்ற ஆட்களை திட்டி இன்பம் கண்டு கொண்டு காலத்தை கழிப்போம். வேறு எம்மால் என்னதான் செய்ய முடியும்?

 

பாதுகாப்பு என்பது பிரச்சனை இல்லை. நான் பேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் சொன்னது மின்சாரம் இல்லை என்பதைத்தான். ஒருவர் இணைய வசதி இல்லை என்பதைக் கூட காரணமாக சொன்னார். தற்பொழுது இருக்கின்ற இடத்தில் உள்ள வசதி சொந்த இடத்தில் இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் பிரச்சனை.

 

ஆம்.. இந்தியப் படைகளின் காவலண்கள் மத்தியிலும் மக்கள் வாழ்ந்தனர் தான். நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால்.. பயபீதி குறைவு. அதுவே கிராமப்புறங்களில் அதிகம். பலர் கிராமங்களை விட்டு இரவில் அண்டை நகர்களில் தங்கி இருந்த வரலாற்றையும் நாம் அனுபவித்தே வந்திருக்கிறோம்.

 

மக்கள் மின்சாரம்.. இணையம்.. பள்ளிக்கூடம்.. தொழில்.. கேட்பது ஒன்றும் தவறில்லையே. எதுவுமற்ற இடத்தில் கோயிலைக் கட்டி குடியிருன்னா.. எப்படி இருக்க முடியும்.

 

அதே நேரம் குடியேற்றச் சிங்களவர்களுக்கு எல்லா வசதிகளும் உடனுக்குடன் அளிக்கப்படுகின்றன. உச்ச பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு..???! :icon_idea:

 

செந்தோழர்களிடம்,புளட் தோழர்களிடமும் ஒரு கேள்வி??
தமிழர்கள் அனுராதபுரத்தில் இப்படி குடியேற முடியுமோ??
 
நீங்கள் தான் சொன்னீர்கள் ஒரே நாடு.எல்லாரும் எங்கேயும் வெட்டி விழுத்தலாம் என்று.அது தான் இந்த கேள்வி.

 

தென்னிலங்கையில் தமிழர்கள் கோயில்கள் குளங்கள் சைவமங்கையர் கழங்கள் சகிதம் வாழ்கையில் வட இலங்கையில் சிங்களவர்கள் விகாரைகளை கட்டி வாழ்வதில் நியாயம் இருக்கின்றது. அத்துமீறிய காணிப்பறிப்பு என்பது தவறு.

 

சிங்களவர்கள் இலங்கைத்தீவு தமது புனித பூமி என்று அதில் பற்றுடன் இருக்கின்றார்கள். அவர்கள் கடந்த முப்பது வருடமாக மணலாற்றுப் பகுதியில் யுத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது வாழ்வை கட்டியெழுப்பியுள்ளார்கள். பேரினவாதத்தின் இராணுவ வெற்றி என்பதின் மறுபக்கம் சிங்கள மக்களின் ஒத்துழைப்பு என்று பொருள். அவர்களின் ஒத்துழைப்பை கண்ணிவெடியல்ல அணுகுண்டு கொண்டும் அளிக்க முடியாது அவர்களின் மண் பற்று தேசீயம் மிக வலிமையானது. தமிழர்களால் கிட்டவும் நெருங்க முடியாது. வலிமையை பொறுத்தவரை சிங்களத் தேசீயத்தையும் தமிழ்த்தேசீயத்தையும் ஒப்பிடக் கூட முடியாது.

 

தமிழர்களுக்கு மண் மீதான பற்று என்பதும் இனம் என்ற பொது சிந்தனையும் சிங்களவர்கள் அடிபோட்ட பிறகு வந்தது். பாரம்பரியமாக சாதிகள் பிரதேசங்கள் தான் சார்ந்த சமயங்களே முக்கியம் என்று வாள்ந்தவர்கள் தமிழர்கள் தவிர தன்னினம் என்று வாழ்ந்தவர்கள் கிடையாது. அதனால் தமிழர்கள் இலகுவாக அவற்றை காவிக்கொண்டு உலகின் பல நாடுகளுக்குச் சென்று வாழ்கின்றார்கள் தென்னிலங்கையிலும் வாழ்கின்றார்கள். சிங்களவர்களின் நிலை அப்படியல்ல. சிங்களவர்களுக்கு அவனது பிரதேசம் என்பது இலங்கைத்தீவு அவனது ஆன்மீகம் சமயம் மதம் என்பதும் அவனது அரசியலுடன் இணைந்தது. தன்னிடம் உள்ள சிறு சிறு விடயங்களால் கூட தனது தேசீயத்தை வலிமைப்படுத்துகின்றவர்கள் சிங்களவர்கள் இதற்கு நேரெதிரானவர்கள் தமிழர்கள் தங்களிடம் உள்ள சிறு சிறு விடயங்களால் தமது தேசீயத்தை சிதைத்துக்கொள்கின்றவர்கள் தமிழர்கள்.

சபேசன்.நீங்கள் இங்கிருந்து கதைப்பதுபோல் அல்ல யதார்த்தம்.யதார்த்தம் என்ற ஒன்று ஊரில் வேறுமாரி இருக்கு.நீங்கள் இங்குவந்து வசதியாக இருந்து கொன்டு சிங்கள பொறுக்கிகளின் காவலருணுக்கு பக்கத்தில் மக்களைப்போய் இருக்கவில்லை என்று கை நீட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.அந்த மக்கல் அந்த இடம் பாதுகாப்பானதென்று உணர்ந்தால் போகாமல் இருக்க அவர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை.

 

உண்மையில் இதுதான்  யதார்த்தம் ................. ,உண்மை பாஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.