Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்திரிக்காவின் சதிராட்டம்

Featured Replies

இரண்டாம் பாகம் நல்லாருக்கு அங்கிள். பாராட்டுக்கள்

  • Replies 74
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் தூயா, எல்லாளன், ரமா, ரசிகை

சடச்சுட வாசிச்சுப் போட்டுக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்.

மணி வாசகன் கவிதை நன்றாகப் போகின்றது.. பாராட்டுக்கள்

எமது சரித்திரத்தினை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது..

ஜீ..ஜீ.பொன்னம்னலத்தின் மருமகன் துரையப்பா தானே..?(யாழ் மேயர்) அவரை அரசாங்கத்தின் அடிவருடியாகத்தான் நான் அறிந்திருக்கின்றேன்...அனுராவ

  • தொடங்கியவர்

வணக்கம் பாலன்,

அல்பிரட் துரையப்பா ஜீஜீயின் மருமகனா என்று தெரியவில்லை. (அனேகமாக இருக்காது என்று நினைக்கிறேன்)யாராவது தெரிந்தவர்கள் அறியத்தாருங்களேன்..

அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்கள்.

அவர் சுதந்திரக் கட்சியின் சாhபில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக இருந்தவர். சிறிமாவின் கூட்டாளி. தமிழாராட்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தாமல் கொழும்பில் நடத்தும் சிறிமாவின் கபடத்தனத்திற்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்தவர். அதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த விழாவைக் கொலைக்களமாக மாற்றிய அநியாயத்திற்குத் துணைபோனவர். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பநாட்களிலேயே களையெடுக்கப்பட்டவர்.

தந்தை செல்வா அரசியல்வாதியாயிருந்த போதிலும் உண்மையாய்த் தமிழினத்திற்காக உழைத்த பெருமகன் . ஒருபோதும் அமைச்சுப் பதவிகளையோ அரசின் சலுகைகளையோ நாடாதவர்.

ஜிஜி பொன்னம்பலம் அரசில் இணைந்து அமைச்சராக இருந்தபோதிலும் தமிழருக்கும் பெரும் துரோகஞ்செய்ததாக நானறியவில்லை. (இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிப்பின் போது நடந்து கொண்ட விதத்தைத் தவிர்த்து)

வடக்குக் கிழக்கின் மூன்று பெருந்தொழிற்சாலைகளான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனைக் கடதாசித் தொழிற்சாலை என்பவற்றை அமைப்பதற்குக் காரணமாயிருந்தவர். அரசுடன் சேர்ந்திருந்த போதிலும் பெரிதும் களங்கப்படாதவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

கவிதை நல்லாப் போகின்றது.

மூன்றாம் பாகம் எப்பொழுது?

மணி அண்ணா கவிதை நன்றாக இருக்கு இப்பதான் அல்பிரட் துரையப்பாக்கு வந்திருக்கீங்க மற்ற துரோகிகள் பற்றியும் எழுதுங்க

என்னைப் பொறுத்த வரை விடுதலைப்புலிகளையும் தலைவரையும் தவிர்த்து மற்றவர்கள் எல்லாரும் போராட்டத்துக் ஏதொ ஒரு வகையில துரோகம் இழைத்தவை என்றே நினைக்கிறன்

எழுதின சூட்டோடு வாசிக்கா விட்டாலும் சுவையாக இருக்கு உங்கட கவிதை பாராட்டுகள்

  • தொடங்கியவர்

வணக்கம் காவியா, நித்திலா

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் வணக்கம்,

ஆர்வமாக வாசித்துச் சுடச்சுடவும் ஆறவைத்தும் கருத்துச் சொல்கின்ற திருத்தங்கள் சொல்கின்ற (தனிமடலில் தான் சொல்லவேண்டும் என்று இல்லை) அத்தனை உள்ளங்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இதன் மூன்றாம் பாகத்தை ஞாயிற்றுக் கிழமை எழுதுவேன். நான் ஏற்கனவே சொன்னது போல இந்தக் கவிதையை முழுமையாக்கவதற்கு உங்களுடைய கருத்துக்களும் விமர்சனங்களும் ஆலோசனைகளும் அவசியம் தேவை.

அன்புடன்

மணிவாசகன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பால்குடியான காலத்துக்கதைகள்

அறிந்து கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன

என்பது புரிகிறது....

தொடருங்கள் அரசியல் வாதங்களில் எம்மைச் செம்மைப்படுத்த

உங்கள் ஆக்கங்கள் உதவும்.

வல்வை சகாறா

  • தொடங்கியவர்

வணக்கம் சகோதரர்களே,

ஆர்வமாய் வாசித்துக் கருத்துச் சொல்லும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

இதோ மூன்றாம் பாகம்

வரலாற்றை மறப்போமா - மூன்றாம் பாகம்

படிப்பினிலே தமிழர்கள்

பார்புகழ வாழ்தல்கண்டு

காமினியும் மத்தியுவும்

களத்திற்கே வந்திட்டார்

ஆசியாவில் பெரிதான

அருங்கலையின் பொக்கிசமாம்

புத்தகக் கோயிலினை

பொசுக்கிப் போட்டிட்டார்

தானாகப் படித்துத்

தமிழன் பல்கலைபோனான்

தாங்காத சிங்களவன்

தரப்படுத்தல் கொண்டுவந்தான்

எங்கே எழுந்தாலும்

எப்படிநாம் முளைத்தாலும்

எடுப்பார் சட்டத்தை

எமையடக்கிப் போட்டிடுவார்

இனியும் இவரோடு

இணைந்திருக்க முடியாது

தமிழர் தலைவாகள்

தனியாக யோசித்தார்

வல்லவர்கள் ஒன்றுகூடி

வடிவாக யோசித்து

வட்டுக் கோட்டையிலே

வரைந்திட்டார் ஒருதிட்டம்

தமிழர் இந்நாட்டில்

தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்

தமிழீழம் அமைத்திடவே

தந்திடுங்கள் ஆணையென்றார்

வரலாறு காணாத

வகையினிலே மக்களெல்லாம்

வரிசையிலே காத்திருந்து

வாக்களித்தார் அவர்களுக்கு

பெற்றிட்ட ஆணையினை

பெரிதாய்நாம் மதித்திடுவோம்

பெட்டிகளைக் கட்டுகையில்

பெரிதாகச் சத்தமிட்டார்

கொழும்பு போனதுமே

கொள்கையினை விட்டாச்சு

தலைநகரைக் கண்டதுமே

தம்மண்ணை மறந்தாச்சு

வீழ்ந்தோம் நாம்வீழ்ந்தோம்

விழாமல் வாழ்தலிலும்

வீழ்ந்தாலும் எழுந்திடலே

வீரர்க்குச் சிறப்பு

தமிழர் உரிமைபெற

தலைநகரம் தேவையில்லை

தன்மான உணர்வுடனே

தனியாக நாம்முயல்வோம்

தேசத்தைக் காத்திடவே

தேசீயத் தலைவரின்கீழ்

அணியணியாய் இளைஞர்கள்

அணிவகுத்து நினறிட்டார் .........................

வரலாறுகள் கவி மூலம் அழகாகக் எல்லோருக்கும் புரியுற மாதிரிக் கூறுகிறீர்கள். நன்றி அங்கிள். மேலும் தொடர்க

கவிதை நிறைய விடையங்களை அறியக்கூடியனவாக இருக்கின்றது...வாழ்த்துக்கள்

இதன் இடையில் முக்கியமான பாத்திரம் சிவகுமார்....இவரைப் பற்றியும் சொல்ல மறக்க வேண்டாம் :idea: :wink:

  • தொடங்கியவர்

வணக்கம் ரசிகை, பாலன்

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

பாலன்:

நான் விட்டுவிட்டுப் போன எங்கள் வரலாற்றின் மிக முக்கியமான சிவகுமாரை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

அனைத்துப் பாகங்களையும் எழுதிவிட்டு முழுமையாகத் தொகுக்கும் போது கட்டாயம் சேர்த்துக்கொள்கிறேன்.)மிக்க நன்றி.

90ம் ஆண்டிற்கு முற்பட்ட சம்பவங்கள் நான் வாசித்த அல்லது மற்றவர் மூலமாய் அறிந்த விடயங்களே. எனவே இது போல விடுபடுவதற்கு அனேகமான சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே தயவு செய்து அறிந்தவாகள் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.

அன்புடன்

மணிவாசகன்

கவிதை நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்

வரலாற்றைச் சொல்லும் கவிதைக்குப் பாராட்டுக்கள்

வணக்கம் மணிவாசன் அண்ணா. உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. பல புதிய தகவல்களையும் அறியக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். :D :arrow:

  • தொடங்கியவர்

வணக்கம் மூதேசி, காவியா, சுஜீந்தன்,

தங்கள் கருத்தக்களுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

வணக்கம் சகோதரர்களே!

ஆரம்பத்தில் நீங்கள் காட்டிய ஆர்வத்தை இப்போது காணவில்லையே. முழுவதையும் வாசித்துவிட்டுக் கருத்தச் சொல்லுவோம் என்று இருக்கிறீர்களா? அல்லது எழுதும் பாணி அல்லது விடயம் பிடிக்கவில்லையா? இப்படி மௌனமாக இருந்தால் நான் என்னவென்று முடிவு செய்வது? ...........

  • தொடங்கியவர்

வணக்கம் சகோதரர்களே!

ஆரம்பத்தில் நீங்கள் காட்டிய ஆர்வத்தை இப்போது காணவில்லையே. முழுவதையும் வாசித்துவிட்டுக் கருத்தச் சொல்லுவோம் என்று இருக்கிறீர்களா? அல்லது எழுதும் பாணி அல்லது விடயம் பிடிக்கவில்லையா? இப்படி மௌனமாக இருந்தால் நான் என்னவென்று முடிவு செய்வது? ...........

கவிதையில் கறையிருந்தால் தானே குறை சொல்ல முடியும். கவிதை நிறைவாகவே உள்ளது. பலர் வராததற்குக் காரணம் ஒருவேளை நீங்கள் மூன்றையும் ஒரே திரியில் எழுதியதால் ஏற்கனவே வாசித்த கவிதை என்று வராமல் இருக்கின்றார்களாக்கும்.

  • தொடங்கியவர்

கவிதையில் கறையிருந்தால் தானே குறை சொல்ல முடியும். கவிதை நிறைவாகவே உள்ளது. பலர் வராததற்குக் காரணம் ஒருவேளை நீங்கள் மூன்றையும் ஒரே திரியில் எழுதியதால் ஏற்கனவே வாசித்த கவிதை என்று வராமல் இருக்கின்றார்களாக்கும்.

வணக்கம் சஜீந்தன்,

அப்படிஎன்றீங்க........... :D:D:D

கவிதை அருமை காலத்தின் பதிவுகள் வாழ்த்துக்கள் :D

  • தொடங்கியவர்

நன்றி இலக்கியன்

3ம் பாகம் இன்று தான் வாசித்தேன். மற்றவர்களும் வாசித்திருப்பார்கள் ஆனால் நேரம் இல்லாமையினால் கருத்து வைக்க முடியமால் இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க நாங்கள் தாமதமாக வந்த என்றாலும் வாசிப்போம்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ரமா. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.