Jump to content

மத்திய காங்கிரஸ் அரசு விரும்பினாலும்கூட இனி இலங்கை அரசை காப்பாற்ற முடியாது – மனோ


Recommended Posts

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
விடுதலை புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட வேண்டுமென்ற பொதுவான இலக்கு, கடைசிகட்ட யுத்தத்தின் போது இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இருந்தது. இதனாலேயே பொதுமக்கள் இழப்புகளை பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் யுத்தம் நடத்தப்பட்டது.
 
பொது மக்கள் இழப்புகளை பற்றி, மேற்குலக நாடுகள் அந்த வேளையில் குரல் எழுப்பிய போதெல்லாம் இந்திய மத்திய அரசு, இலங்கை அரசின் பெரியண்ணனாக இருந்து, சின்ன தம்பியை காப்பாற்றியது. இது உலகம் அறிந்த உண்மை. அந்த வேளையில் இலங்கையில் யுத்தத்திற்கும், சமாதான அரசியல் தீர்வுக்கும் இடையில் தடையாக இருப்பது விடுதலை புலிகள் தான் என்றும், அந்த இயக்கம் அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதான அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், யுத்தம் முடிந்தவுடன் 13ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் முன்கொண்டு செல்ல இலங்கை அரசு தயாராக இருக்கின்றது என்றும், இந்திய அரசியல் தலைவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்.
 
ஆனால், இன்று யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்தும் இலங்கை அரசு எந்தவித அரசியல் தீர்வையும் தரவில்லை. அதுமட்டும் அல்லாமல், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருந்த இந்தியாவின் குழந்தை 13ம் திருத்தம் முதற்கொண்டு உரிமைகளையும் வெட்டி குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பகிரங்கமாக ஈடுபட்டு, இந்தியாவின் கன்னத்தில் பலமுறை அறைந்துவிட்டது.
 
எனவே இன்றைய சூழலில் இந்திய பெரியண்ணன், இலங்கை அரசை இனியும் காப்பாற்ற முடியாது. இந்த அரசை நம்பி வாழுங்கள் என எமக்கு ஆலோசனை செய்யும் நிலையிலும் இந்திய மத்திய அரசு இல்லை. இதையே இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுக்க வாழும் மக்கள் மத்தியில் உறுதியாக ஏற்பட்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றது. இந்த பொதுஜன அபிப்பிராயத்தை இன்று இந்திய மத்திய அரசு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ மீற முடியாது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும் , உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது

 

உண்மை

Link to comment
Share on other sites

நாலு வருடங்களில் எல்லாம் மறைக்கப்பட்டு மறந்துவிடப்படும் என எண்ணியவர்களுக்கு நெருக்கடிகளை வெற்றிகரமாக தந்த அனைவருக்கும் நன்றிகள்.

 

குறிப்பாக வை கோ, நெடுமாறன்  அய்யா, நாம் தமிழர், மே பதினேழு அமைப்பு, முதல்வர் உட்பட்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் மேற்குலக அமைப்புக்களான சனல் நாலு, மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு என அனைவரின் உழைப்புக்களும் தொடரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வருடங்களில் எல்லாம் மறைக்கப்பட்டு மறந்துவிடப்படும் என எண்ணியவர்களுக்கு நெருக்கடிகளை வெற்றிகரமாக தந்த அனைவருக்கும் நன்றிகள்.

 

குறிப்பாக வை கோ, நெடுமாறன்  அய்யா, நாம் தமிழர், மே பதினேழு அமைப்பு, முதல்வர் உட்பட்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் மேற்குலக அமைப்புக்களான சனல் நாலு, மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு என அனைவரின் உழைப்புக்களும் தொடரவேண்டும்.

 

இதுக்குத் தான் சொல்லுறது.. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று... சிங்களம் காட்டின பூச்சாண்டி விளையாட்டு எத்தனை... சொனியா மகிந்த ராஜபக்சா நினைத்து பார்த்து இருப்பினமா...தாங்கள் செய்த கொலைக் காட்சி காணொளி வெளி உலகத்துக்கு போக்கும் என்று.. கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டினம்........ 2008-2009பது விடுதலை போராட்டத்துக்கு எப்படி உழைத்தோமோ அதே போல் நாங்கள் மறு படியும் உழைக்க வேணும்...தூங்கி கொண்டு இருக்கும் எமது உறவுகளை தட்டி எழுப்புவோம்....முகப் புத்தகம் ஈனையத் தளம் என்று எல்லா இடத்திலையும் சிங்களவன்ட பொய் போலி முகத்தை உலகுக்கு காட்டுவோம்...

Link to comment
Share on other sites

நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு !

மலேசியாவில் சீமான் அவர்களின் பத்திரிகையாளர் / அரசியல்வாதிகள் சந்திப்பு

 

Link to comment
Share on other sites

போர்க்குற்றங்கள் : வை கோ, நெடுமாறன்  அய்யா, சுப வீ - விவாதம்

 

http://www.youtube.com/watch?v=Ad698Mg_XFU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வருடங்களில் எல்லாம் மறைக்கப்பட்டு மறந்துவிடப்படும் என எண்ணியவர்களுக்கு நெருக்கடிகளை வெற்றிகரமாக தந்த அனைவருக்கும் நன்றிகள்.

 

குறிப்பாக வை கோ, நெடுமாறன்  அய்யா, நாம் தமிழர், மே பதினேழு அமைப்பு, முதல்வர் உட்பட்ட அனைத்து தமிழக உறவுகளுக்கும் மேற்குலக அமைப்புக்களான சனல் நாலு, மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு என அனைவரின் உழைப்புக்களும் தொடரவேண்டும்.

 

 

இதுக்குத் தான் சொல்லுறது.. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று... சிங்களம் காட்டின பூச்சாண்டி விளையாட்டு எத்தனை... சொனியா மகிந்த ராஜபக்சா நினைத்து பார்த்து இருப்பினமா...தாங்கள் செய்த கொலைக் காட்சி காணொளி வெளி உலகத்துக்கு போக்கும் என்று.. கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டினம்........ 2008-2009பது விடுதலை போராட்டத்துக்கு எப்படி உழைத்தோமோ அதே போல் நாங்கள் மறு படியும் உழைக்க வேணும்...தூங்கி கொண்டு இருக்கும் எமது உறவுகளை தட்டி எழுப்புவோம்....முகப் புத்தகம் ஈனையத் தளம் என்று எல்லா இடத்திலையும் சிங்களவன்ட பொய் போலி முகத்தை உலகுக்கு காட்டுவோம்...

 

 

எம் தலைவன் போரைத்தொடர  விரும்பாது ஒரு முடிவெடுத்தான்

 

இனி  தொடர முடியாது.  மக்களுக்கு இனி  வேதனைகளை  சுமைகளைக்கொடுக்கமுடியாது

 

ஆனால் அவர் சுதந்திரமாக வாழணும். செய்த தியாகங்கள்  இழந்தவைகள் வீணாகப்போகக்கூடாது என்று கடினமான முடிவெடுத்தான்.

 

அவனது பார்வை  தூரமானது என்பதை  வரலாறு  நிச்சயம் சொல்லும்.

 

அதை அடையும் வழியில் எந்த தடைகளையும் தாண்டி ஒன்றாக பயணிப்போம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.