Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

கோவத்தின் பெறுமதி அறியாதவன்


கண்ணீரின் கனதி அறியாதவன்


அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன்


மானத்தின் மகத்துவம் புரியாதவன்


அவன் யார்?


நான்


 

 

நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன்


மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள்


முற்றத்தில் நாறுகின்றது


பாடை தூக்க நாலுபேரை


ஒன்றாக நிற்க விடவில்லை


 

 

ஊர் ரெண்டுபட்டால்


கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை


ஊர் ரெண்டுபட்டால்


கொன்றவனுக்கு கொண்டாட்டமென்று

 

புதுமொழியாக்கியவன்


 

 

பேரினவாதம் கோவணங்களை அவிட்டு


கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில்


உரிமையாளர்கள்


என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என


போட்ட சண்டையில்

முன் நிற்பவன்


 

சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து


செல்வார்கள்


சாவு வீட்டில் சண்டையிட்டு


வெளியேறியவன்


 

என் பாட்டன் கோவணத்தை உருவிய


எசமானி ஆஸ்பத்திரியில் என்ற செய்தி கேட்டதும்


அம்மணமாய் ஒரு மூலையில்


அழுதுகொண்டிருப்பவன்


 

 

முன்னுதாரணங்களுக்கெல்லாம்


தவறான முன் உதாரணமானவன்


எந்தப் புள்ளியில் இணைய வேண்டுமோ

 

அந்தப் புள்ளியில் பிரிபவன்


 

 


நான் யார்?

 

விடைதேடி சுடுகாடு நோக்கிச் செல்கின்றேன்


கடவுளே என்று அங்கே யாரும் எனக்காக


குழிதோண்டிக்கொண்டு இருக்கவேண்டும்!

 

குழி 8x4x6 ல் சரியாக இருக்கவேண்டும்.


 

Edited by சண்டமாருதன்

பேரினவாதம் கோவணங்களை அவிட்டு


கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில்


உரிமையாளர்கள்


என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என

போட்ட சண்டையில்


முன் நிற்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

கோவத்தின் பெறுமதி அறியாதவன்

கண்ணீரின் கனதி அறியாதவன்

அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன்

மானத்தின் மகத்துவம் புரியாதவன்

அவன் யார்?

நான்

 

 

நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன்

மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள்

முற்றத்தில் நாறுகின்றது

பாடை தூக்க நாலுபேரை

ஒன்றாக நிற்க விடவில்லை

 

 

நான் யார்?

 

விடைதேடி சுடுகாடு நோக்கிச் செல்கின்றேன்

கடவுளே என்று அங்கே யாரும் எனக்காக

குழிதோண்டிக்கொண்டு இருக்கவேண்டும்!

 

குழி 8x4x6 ல் சரியாக இருக்கவேண்டும்.

 

நான் எப்போதுமே பலவாகி நிற்கிற சமகாலத்தை கவிதை நானாகிச் சொல்கிறது. எல்லா அழிவுக்கும் காரணமான நான் புதைகுழியையும் யாரோதான் வெட்டி வைக்க விரும்புகிற தத்துவத்தை கடைசியில் சொல்லி முகத்தில் அறைகிறது நிசம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான கவிதை. நல்ல எழுத்து. வாழ்த்த்துக்கள். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கூறிய செயல்களை செய்யும் அந்த "நான்" ஒரு அஃறிணை.

மேற்கூறிய செயல்களை செய்யும் அந்த "நான்" ஒரு அஃறிணை.

 

ஐயோ பாவம் அஃறிணைகள். :o 

 

 

 மேற்கூறிய செயல்களை செய்யும் அந்த "நான்"
                                                                         அஃறிணை, உயர்திணை அனைத்திற்கும் அபாற்பட்ட  ஒரு                                                        வினை பிடித்த வினை.
  • கருத்துக்கள உறவுகள்

சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து

செல்வார்கள்

சாவு வீட்டில் சண்டையிட்டு

வெளியேறியவன்

 

சாவு வீட்டுக்குப் பிணத்தைப் பார்க்கும்போது ஒன்றில் இறந்தவரின் நல்ல குணங்கள் மட்டுமே தெரியுமாம் அல்லது வெறும் சவம் இருப்பதாகத் தெரியுமாம்.  அப்படியான இடத்தில் சண்டையிட்டு வெளியேறுபவன் மனிதனல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.