Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

தமிழ்நாடு மாணவர்களுக்கு நன்றிகள்.

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

இது நேற்றைய செய்தி. இன்னும் இங்கு இணைக்கப்படவில்லை :unsure: என்பதால் இணைக்கிறேன். :rolleyes:

 

தமிழ்நாட்டு மாணவர் உலகெங்கும் உள்ள தமிழர்களை போராட்டக் களத்தில் இறக்கியுள்ளது. அந்த வரிசையில் நோர்வே இளையோர்கள் இன்று நோர்வே பாராளுமன்றத்தின் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.

ஈழத்தை நடந்த இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை வெண்டும்.
ஈழ மக்களிடம் ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வெண்டும்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளையும் பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க வெண்டும்.
ஈழத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளின் மற்றும் பொதுமக்களின் தகவல்கள் உடனடியாக வெளியிடப்பட வெண்டும்.

 

2517_596221047056591_986089306_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

581698_596520173693345_1226424866_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கோவையில் மாணவர்கள் ,மாணவிகள் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரயில் மறியல்

 

கோவையில்  மாணவர்கள் ,மாணவிகள் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரயில் மறியலில் ஈடுபட்டனர் வழமைக்கு மாறாக பெண்கள் இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .200இற்கு  மேற்பட்ட மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

Kovai4.jpg

Kovai2.jpg

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வள்ளுவர் கோட்டத்தில்.

 

205328_596382020373827_397547305_n.jpg

 

 

 

சென்னை

 

526890_596435583701804_240259225_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

பி.கு: பையன் அண்ணா இதை யாழில் வேறொரு திரியில் இணைத்திருந்தார். அந்த இணைப்புக்கு செல்ல..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119575

Edited by துளசி

சூனியக்காரி சோனியா ,,ரத்தகாட்டேறி மன்மோஹன்சிங் , இனபடுகொலை கொடுங்கோலன் ராஜபக்சே மூவருக்கும் மதுரையில் தூக்கிலிட்ட மாணவர்கள்

 

10843541.jpg

 

 

இதுவரை செருப்பால் ஏறிவாங்கவில்லை இவர்கள், இனி தமிழ்நாட்டு பக்கம் தலை காட்ட பயப்படுவார்கள், நன்றி பகிர்வுக்கு. நன்றிகள் தமிழ்நாட்டு சகோதரங்களுக்கு

சென்னையின் புற நகரான மாங்காட்டில் முத்துகுமரன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பகோண ரயில் நிலைய மறியலில் ஈடுபட்ட கும்பகோண மாணவர் அணியினர் ஐநூறு மேற்பட்டவர்கள் கைது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர் பட்டினி போராட்டம் இருக்கும் இராசிபுரம் மாணவர்க்கு தயவுசெய்து நாமக்கல் மாவட்ட நண்பர்கள் மற்றும் தலைவர்கள் முடிந்தால் போராட்டத்தில் கலந்து ஆதரவு தாருங்கள் - வாழ்த்துக்கள் சொலுங்கள்.
vinoth - 9600394224,

Prakash - 7667676587,

Naveen - 9500730400 .

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்துக்கல்லூரி சார்பில் மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது
வாழ்த்துக்களை தெரிவிக்க,
தம்பி சம்பத்-8344295686

 

601296_596374850374544_653579819_n.jpg

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

IPLக்கு கூடும் கூட்டமே
நம் இனம் அழிவதை தடுக்க கூடக்கூடாதா?
-மெரினாவில்..-

 

733804_596374920374537_907613457_n.jpg

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் மாணவர் சமூகம் மற்றும் பொது மக்கள் சார்பில் நாளை (22.3.13) அன்று தமிழீழ நாட்டிற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடக்கவிருக்கிறது...

அலங்கியம் சுற்றுவட்டார மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

இடம்: மாரியம்மன் கோவில் திடல், அலங்கியம்
தொடர்புக்கு - மாதவன் -9698334410

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடி நீதிமன்றம் முன் அனைத்துக் கல்லூரிகளும் சேர்ந்து நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட கல்லுரி : காமராஜ் கல்லூரி, V.O.C கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள்

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடியில் ,ராஜபக்சேவிற்கு பாடை கட்டி , ஒப்பாரி போராட்டம்

 

526835_596377843707578_830532735_n.jpg

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ் ஈழம் மலர போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நமது மாணவ செல்வங்களை ஆதரித்து நாவலூரில் HCL ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்.

 

544179_596381237040572_1927875736_n.jpg

 

 

(முகநூல்: loyolahungerstrike)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8893_455039797897450_1937987290_n.jpg



(முகநூல்)

சென்னையில் இன்று உயர்த்தப்பட்ட புலிக்கொடி.
 

 

205298_559369330762560_1432219877_n.jpg

 

(முகநூல்)

ஜெனீவாவில் மகிந்தவுக்கு இறுதிக்கிரியை செய்வதற்காக எடுத்துச்செல்லப்படும் உருவ பொம்மை.

 

22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

அனைவரும் வாரீர்...!!

 

599815_4509902835743_417961730_n.jpg

 

(முகநூல்)

கொளத்தூர் தனியார் பள்ளி மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம்.

 

3621_620704161277771_133289954_n.jpg

 

734079_620704147944439_332844047_n.jpg

 

531650_620704497944404_205109905_n.jpg

 

208736_620704607944393_92575068_n.jpg

 

601303_620704787944375_1433236234_n.jpg

 

229998_620705081277679_2107278319_n.jpg

 

577445_620707277944126_422803737_n.jpg

 

579022_620707377944116_569717778_n.jpg

 

554874_620706311277556_2063841154_n.jpg

 

 

487961_620707187944135_529174566_n.jpg

 

544357_620706117944242_612512848_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

64128_438025796272789_817569040_n.jpg

இன்றைய தமிழக போராட்டங்கள்

 

 

 

 

 

போராட்டம் என்றால் அது மாணவர்கள் போராட்டம் தான் என்பதை இப்போது மாணவர்கள் நிரூபித்து வருகின்றனர் .

 

இன்று கல்லூரி சாலை டி பி ஐ அலுவலகம் முன் தொடங்கப்பட்ட மாணவர் பேரணி அமைதியாக நடக்க திட்டமிடப் பட்டது . ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து அனைவரையும் வண்டியில் ஏறுமாறு கூறியது . இதுவே அரசியல் கட்சியாக இருந்தால் கட்சித் தொண்டர்கள் ஒழுங்கு பிள்ளைகளாக வண்டியில் ஏறிப் போய் உட்கார்ந்து விடுவார்கள் . ஆனால் இவர்கள் மாணவர்கள் ஆயிற்றே . அடங்கி விடுவார்களா ?

 

காவல் துறை கட்டுப் பாட்டை மீறி மாணவர்கள் காவல் அரண்களை உடைத்து கல்லூரி சாலையில் இருந்து ஆடோஸ் சாலைக்கு ஓடிச் சென்றனர் . இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறை அதிர்ச்சி அடைந்தது . மாணவர்கள் பின்னாலே அவர்களும் ஓடத் தொடங்கினர் . பின்பு மாணவர்கள் சாஸ்திரி பவன் அருகே வந்ததும் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் . சாலையில் வட்டமாக கைகளை கோர்த்த படியே படுத்துக் கொண்டனர் . தனி ஈழமே ஒரே தீர்வு என மாணவர்கள் முழக்கமிட்டது காதைப் பிளப்பதாக இருந்தது . அந்த இடமே கலவர பூமியை போல் காட்சி அளித்தது . காவல் துறை செய்வதறியாது திகைத்தனர் . பின்னர் மாணவர்களை வலுக் கட்டாயமாக தூக்கிச் சென்று காவல் ஊர்தியில் ஏற்றினர் . எனினும் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதனால் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் முடங்கியது . இருந்தியில் ஆயிரம் மாணவர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் .

 

602889_620523857962468_1772519476_n.jpg

 

 

269217_620523854629135_116050555_n.jpg

 

 

205303_620523844629136_609048727_n.jpg

 

 

487673_620567754624745_2111692223_n.jpg

 

580837_620567761291411_1904721816_n.jpg

 

1638_620567561291431_1056157648_n.jpg

 

259952_620567357958118_1806835662_n.jpg

 

598974_620567607958093_1721275264_n.jpg

 

 

485952_620567831291404_172483795_n.jpg

 

 

208674_620567707958083_386082150_n.jpg

 

 

581905_620567031291484_703221092_n.jpg

 

524879_620566947958159_534747248_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

229442_620568101291377_1242907671_n.jpg

 

 

577515_620567697958084_1393580028_n.jpg

 

 

577522_620567151291472_464967021_n.jpg

 

 

526838_620567301291457_1779473501_n.jpg

 

 

295558_620567734624747_61595677_n.jpg

 

 

392810_620566844624836_714083294_n.jpg

 

 

527852_620567441291443_1654154956_n.jpg

 

 

544304_620567127958141_160871743_n.jpg

 

 

406_620567241291463_1263716112_n.jpg

 

(முகநூல்)

208900_620492047965649_720166480_n.jpg

 

- முகநூல் -

முத்துக்குமாரு இறந்து இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் கருணாநிதியின் ஆட்சியில் அது வெளிப்படையான தாக்கத்தை காட்டத் தொடங்கியது. ஆனால் கறையான் தின்ற கரும்பாக அது உள்ளே நெகிழ்ந்திருந்திருக்கலாம். அது போல இந்த மாணவர் போராட்டம்  குறைந்தது இன்னும் ஒருவருடதின் பின் வரும் தேர்தல் வரை தன் தாக்கத்தை வெளிக்காட்டும்.

 

தமிழ் நாட்டில் பலர் சீமான், வைகொ, நெடுமாறன் போன்றோர் நடத்திய பிரசாரங்கள்  சென்ற மானிலத் தேர்தலில் கருணாநிதி தோற்றவுடன் "அவ்வளவுதான்" என்று தப்பாக மட்டுக்கட்டியிருந்தனர். அதனால் இப்படி ஒரு அலைக்கு தயாராக இருக்கவில்லை.

 

 பிரதானமாக கருணாநிதி இதை எள்ளவும் எதிர் பார்க்கவில்லை என்பது அவர் எடுத்திருந்த தட்டுத்தடுமாற்றமான, அவசரப்பட்ட முடிவுகள் காட்டின. ஜெயலலிதா இன்னமும் புரிந்துகொள்ள முயல்கிறா என்பதைதான் அவவின் ஒருகரையும் போகாத முடிவுகள் காட்டுகிறது. போராட்டத்தை புரிந்திருந்தால் ஆதரித்திருந்திருப்ப அல்லது அடக்கியிருப்ப. போலிசை போட்டு சும்மா குழப்புவது அவவுக்கு அடக்கினால் தமிழ் நாட்டால் ஆபத்தா அல்லது ஆதரித்தால் டெல்கியால் ஆபத்தா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

 

அதாவது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சரியாக விளங்கினால் பயப்படாமல் மத்தியை எதிர்த்திருப்பா. கருணாநிதி மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்தியில் பதவியில் இருந்தார். மேலும் பதவி துறப்புக்களால் தான் சில கஸ்டங்களை சந்திக்க வேண்டிவரலாம் என்றும் தெரிந்து வைத்திருந்தார். (அதுதான் ஸ்ரலின் கார் விசாரணையின் பின்னர் கொடுத்த பேச்சின் கருத்து.) ஆனால் மத்திய ஆட்சியை தொடர ஆசைப்பட்டால் இழப்பு மிக கூடவாக இருக்கலாம் என்று கணக்குப் போட்டார். இதனால் மத்தியிலிருந்து பதவி விலகினார். மாணவர் போராட்டம் பற்றிய இந்த மாதிரி ஒரு தெளிவான நிலை இன்னமும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கருணானிதி காலத்தில் புலிக்கொடி வெளியில் கொண்டுவரவே கஸ்டப்பட்டவர்கள்..இன்று நமது தேசியக் கொடியையும்..தலைவர் படத்தையும் தாங்கும் தைரியத்தை கொடுத்து எற்ற தமிழக மாணவ கண்மணிகளுக்கு எமது நன்றிகள

அகூதா ,துளசி பையன் சகானா...மற்றும் இச் செய்திகளை இணைக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்...

 

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக தீ குளித்த விக்ரம் சிகிச்சை பலனின்றி பலி //வீரவணக்கம்.கண்ணீர் அஞ்சலி
சென்னை: இலங்கையை கண்டித்து தீக்குளித்த தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இலங்கையை கண்டித்து சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்த இயக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்ரம், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி உடலில் தீவைத்துக் கொண்டார்.
 
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விக்ரம் உடலில் பரவிய தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்ரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

 

 

 

 

 

 

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13123

ஆழ்ந்த அனுதாபங்கள்.   :(

 

தமிழக உறவுகளே நீங்கள் யாரும் தீக்குளிக்கும் முடிவை எடுக்காதீர்கள். நீங்கள் தீக்குளிப்பதால் தமிழீழத்தை தந்துவிட மாட்டார்கள். உயிருடன் இருந்து உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். மனவிரக்தியடையாதீர்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு அநியாயமான மரணம்! :o

 

அவரின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களும், 'விக்ரமுக்கு' எனது அஞ்சலிகளும்!

ஆழ்ந்த அஞ்சலிகள்

 

இந்த முறையில் வேண்டாமே சகோதரங்களே, மாணவர்களுடன் சேர்ந்து உங்கள் ஆதரவை தெரிவித்திருக்கலாம்.

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்



64128_438025796272789_817569040_n.jpg

 

வெளி மாநிலங்களுக்கு எம் அவலங்களை எடுத்து சென்ற சகோதரங்களுக்கு நன்றி

தமிழ் மாணவர்கள் ஆரம்பித்துள்ள இணையத்தளம்!

 

2011ம் ஆண்டு எகிப்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேஃஸ் புக் ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் பேஃஸ் புக் ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடையம்.

 

அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். டமில்ரைசிங்.காம் (tamilrising.com) (தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும். எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்.

 

http://www.tamilrising.com/

நேர்காணல்:மாணவர் போரட்டம் - திவ்யா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.