Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாடைக்காற்று

Featured Replies

செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான்.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நீங்கள் எழுதிய 'செங்கை ஆழியன்' என்ற தலைப்பின் மூலமும், சின்னக்குட்டியின்' ஊர் உளவாரம்- வாடைக்காற்று' மூலமும் பலதகவல்களினை அறியக்கூடியதாக இருந்தாலும், அவற்றில் வராத செய்திகளினையும் 'வாடைக்காற்று' என்ற புதிய தலைப்பின் மூலம் இப்படத்தினைப்பற்றிய மேலதிகத்தகவல்களினை அறியக்கூடியதாக இருக்கிறது.

சிறு வயதில் வாசித்த இந்த நாவல், பிறகு திரைப்படமாக பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பிரபாவின் மூலம் இவ் நாவலின் கதை மீண்டும் யாபகத்துக்கு வருகிறது. இதில் நடித்த ஜேசுரட்டிணம் தான் TTN ' நையாண்டி மேளம்' தொடரில் நடிப்பவரா?

நல்லதொரு பதிவு பாராட்டுக்கள் கானபிரபா, செங்கை ஆழியனின் சில கதைகளை படித்தபோதும்

தலைப்புகள் மறந்துவிட்டது. நீங்கள் இதில் கூறியதும் ஞாபகம் வருக்கிறது. இந்தப்புத்தகம்

நான் வாசித்து இருக்கிறேன். அருமையான கதை. நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி கானபிரபா.

  • தொடங்கியவர்

வணக்கம் அரவிந்தன், மற்றும் ரசிகை

வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.

அரவிந்தன்

யேசுரட்ணம் நையாண்டி மேளத்தில் நடிக்கவில்லை, அப்புக்குட்டி ராஜகோபாலின் தம்பி தான் நடிக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடைக்காற்றில் நடித்த ஆனந்தராணி பாலேந்திராவும், டாக்டர் இந்திரகுமாரும் இலண்டனில் வாழ்ந்துவருகிறார்கள். ஆனந்தராணி பாலேந்திரா கணவருடன் தமிழ் அவைக்காற்றுக் கழக மேடை நாடகங்களைத் தயாரித்தும், நடித்துவருகிறார். அத்தோடு தீபம் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமைகளில் செய்திகள் வாசிப்பார். பல வருடங்களாக அரங்கேற்றங்கள் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து திறம்பட வழங்கிவருகிறார்.

டாக்டர் இந்திரகுமார் ஓர் சிறந்த எழுத்தாளரும்கூட. இவர் எழுதிய "விண்வெளியில் வீரகாவியங்கள்" என்ற புத்தகத்திற்கு ஈழத்து, தமிழக அரசின் பரிசுகளும் கிடைத்தன. தற்போது கிழக்கு இலண்டனில் வசித்துக்கொண்டு எழுதுவதோடு, தனது மருத்துவப் பணியையும் தொடர்ந்து செய்துவருகிறார்.

  • தொடங்கியவர்

வணக்கம் செல்வமுத்து மாஸ்டர்

மேலதிக தகவல்களை பகிர்ந்துகொன்டமைக்கு என் நன்றிகள்.

வாடைக்காற்று படம் பற்றிய விமர்சனத்திற்கு இடையில் படங்களை போட்டு நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். நன்றிகள்.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றிகள் ரமா

வணக்கம் கானபிரபா,

ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களை இணைக்கின்ற உங்கள் பணி பாராட்டுக்குரியது.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

அன்பின் மணிவாசகன்

தங்கள் கருத்துக்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செங்கை ஆழியானின் குவேனி ஜன்மபூமி இரு நாவல்களும் வாசியுங்கள் மிக அருமையாக எழுதியுள்ளார். இவரின் அனைத்து கதைகளும் சிறந்த படைப்புகள் யானை காட்டாறு போன்றவற்றில் வ்ன்னிக்காட்டு வாழ்க்கை இனிக்கும். கங்கை கரையோரம் பேராதனைப் பல்கலைக் கழக வாழ்க்கை இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

'குவேனியின் காதலன்' நாவலின் இறுதியிலே வடபகுதித் தமிழர்களின் மேனி நிறங்கள் ஒரே மாதிரி இல்லாததற்கு ஒரு காரணம் கூறியிருப்பார். அந்நாவலைத் தொடர்ந்து அதைப்பற்றி ஏதாவது விமர்சனங்கள் வருமா என அப்போது எதிர்பார்த்தேன். என் பார்வைக்கு கிட்டவில்லை.

அந்த காரணம் இதுதான்:

விஜயனதும் நண்பர்களதும் மனைவிகளும் பிள்ளைகளும் பிறிதொரு கப்பலில் நாடுகடத்தப்பட்டார்கள் எனவும், கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக அந்தக் கப்பல் வடபகுதியில் கரையொதுங்கியதாகவும், அவர்களை வடபகுதியிலுள்ளவர்கள் அடிமைகொண்டார்கள் என்பதுவுமே அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.