Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரும்புலிகள் - பஜனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள் தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு இலண்டன் ருட்டிங் முத்துமாரி அம்மன் கோவிலுக்காக எழுதிய பஜனைப் பாடலை கள உறவுகளுக்காக இங்கே இணைக்கிறேன்.

முத்துமாரி அம்மன் பாடல்

கரும்புலிகள் - பஜனை

அம்மா தாயே முத்துமாரி

இம்மா நிலத்தின் சொத்துக்காரி

சிம்மாசனத்தில் இருப்பவளே

எம்மா நிலத்தைக் காப்பாயே! (அம்மா தாயே...) (1)

சங்கு சக்கரம் கொண்டவளே

சிங்கத்தின் மேலே இருப்பவளே

தங்கத் தமிழைக் காப்பாயே

எங்கும் சுகத்தைத் தருவாயே (அம்மா தாயே...) (2)

கற்புூரதீபம் நாம் வளர்த்தோம்

வெற்றிலை பாக்குடன் பழம்படைத்தோம்

நெற்றிக் கண்ணார் நாயகியே

உற்றார் உறவைக் காப்பாயே (அம்மா தாயே...) (3)

சங்கத் தமிழாய் வளர்ந்தாளே

வங்கம் போலே பரந்தாளே

பங்கம் செய்தல் முறைதானா

அங்கம் நொந்தே அழலாமா (அம்மா தாயே...) (4)

வில்லோ டம்பும் படைத்தாயே

இல்லா தெல்லாம் படைத்தோமே

சொல்லால் உன்னைப் புகழ்ந்தோமே

கல்மா நிலத்தைக் காப்பாயே (அம்மா தாயே...) (5)

பேசும் பேச்சில் பொலிவில்லை

வீசும் காற்றில் சுகமில்லை

தேசம் தோறும் தளிரில்லை

பேசாதிருந்தால் விடிவில்லை (அம்மா தாயே...) (6)

பாடிப் பாடித் தொழுவோமே

பாதம் நாளும் பணிவோமே

கூடிக்களித்து குலவிடவே

ஆதிக் குடியைக் காப்பாயே (அம்மா தாயே...) (7)

கண்ணாய் மணியாய் வளர்ந்தாரே

கால்மேல் தோள்மேல் தவழ்தாரே

மண்மேல் மெருகாய் மலருமுன்னே

மண்ணாய்ப் போவது முறைதானா? (அம்மா தாயே...) (8)

பாலும் பழமும் பெறவில்லை

மாலை மணமும் வரவில்லை

ஆலாய் அலைந்தோம் விடிவில்லை

பாலை வனமோ எமதெல்லை (அம்மா தாயே...) (9)

காலை மாலை இரவில்லை

வேளை வயிற்றுக் குணவில்லை

காலம் தோறும் கதியில்லை

நாளை வருமோ நறுமுல்லை (அம்மா தாயே...) (10)

எத்தனை ஆயிரம் உயிர்கொடுத்தோம்

நித்திரைபோய் உடல் நலமிழந்தோம்

பித்தரைப் போல்நாம் தினம்அலைந்தோம்

சத்திய வீரரைக் காப்பாயே (அம்மா தாயே...) (11)

வேதியர் மந்திரம் ஓதிடுவார்

வேதமும் ஆயிரம் கூறிடுவார்

ஏதுமில்லாமலே வாடுகின்றோம்

வேதனை நீங்கவே பாடுகின்றோம் (அம்மா தாயே...) (12)

வரும்பல திங்கள் வருவோமே

விரும்பிய தெல்லாம் தருவோமே

அரன் இடபாகம் அமர்தாயே

கரும்புலி வாழ அருள்வாயே (அம்மா தாயே...) (13)

ஆழக்கடல் இடை அமைந்தாளை

தமிழ் ஈழமகளாய் வளர்ந்தாளை

சுூழும் பகைபோய் இளவேங்கை

வாழியென்றே வரம் அருள்தாயே (அம்மா தாயே...) (14)

துஞ்சல் போதும் தாயுனையே

நெஞ்சகக் கோவிலில் வைத்தோமே

வஞ்சகர் காய்ந்தே வளமுடனே

செந்தமிழ் வாழ அருள்வாயே (அம்மா தாயே...) (15)

நெற்றிக் குங்குமம் உன்சொந்தம்

சுற்றி இருப்பதும் உன்சொந்தம்

சுற்றமுடன் தமிழ்க் குலம்வாழ

வெற்றியைத் தருவாய் கருமாரி (அம்மா தாயே...) (16)

தீரா நோய்கள் தீர்ப்பவளே

நீராய் நெருப்பாய் நிலைப்பவளே

ஊராய் உளைந்தோம் உமையவளே

பாரய் கடைக்கண் பார்வதியே (அம்மா தாயே...) (17)

மாவில் விளக்கை ஏற்றிவைத்தோம்

மாதவன் சோதரி முத்துமாரி

ஆதர வில்லா தலைந்தோம்

பாதாரம் துணை முத்துமாரி (அம்மா தாயே...) (18)

எழிலாய் ஆலயம் ஏற்றிவைத்தோம்

தமிழால் ஆயிரம் பாட்டிசைத்தோம்

விழியால் அலையாய் நாம்வடித்தோம்

கலையே கடைக்கண் பாராயோ (அம்மா தாயே...) (19)

வேள முகனைப் பெற்றவளே

பால முருகனைப் பயந்தவளே

ஆல முண்டவர் அருகிருந்தே

ஈழ மைந்தரைக் காப்பாயே (அம்மா தாயே...) (20)

தமிழில் தேசம் எழவேண்டும்

அழகாய் அதனில் குலம்வேண்டும்

எளிதாய் இனிதே நலம்வேண்டும்

முழுதாய் பலதாய் வரவேண்டும் (அம்மா தாயே...) (21)

இந்த அளவிற்கு - தமிழ் அறிவு இல்ல ...எங்கிட்ட !

இப்பிடி எழுத ........ :?

விளங்க கூடியதா இருப்பது .......

தெய்வத்திடம் இரந்து நிற்கிறோம் - தேசம் பத்தி- அப்பிடியா? :roll:

உங்க தமிழ் அறிவு நிறைய - அதுதான் - பெயர் சொல்லி கூட உங்களை - எல்லா இடமும் - எழுதுவதில்ல .......

உங்க கவிதை - நல்லருக்கு ஆசிரியர்! 8)

ஆகா கரும்புலிகளை நினைத்துப் பஜனைப் பாடலாக தந்திருக்கிறீர்கள். அருமை. அருமை.

கண்ணாய் மணியாய் வளர்ந்தாரே

கால்மேல் தோள் மேல் தவழ்தாரே

மண்மேல் மெருகாய் மலருமுன்னே

மண்ணாய்ப் போவது முறைதானா?

செல்லமுத்து அண்ணா,

மிகவும் நன்றாக இருக்கிறது.

நான்கைந்து தடவைகள் படித்துவிட்டேன்.

என்னுடையது என்னுடையது என்று எவற்றையெல்லாமோ தேடுகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் எங்களுக்காய் எங்கள் மண்ணுக்காகத் தருகின்ற இந்தப் புண்ணிய ஜீவன்களை வணங்கத்தான் முடியும்.

அன்புடன்

மணிவாசகன்

எமது தேசத்தின் இன்னல்களை அம்மனிடம் அழகாய் கவிதையில் கூறியுள்ளீர்கள்..நன்றாகவுள்ள

ஐயா உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. இவ்வாறு நல்ல சந்தத்துடன் கவிதை எழுதவேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால் உங்கள் தமிழறிவுக்குமுன் என் அறிவு சிறியது என்பதால் முடியாமல் தவிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாய் மணியாய் வளர்ந்தாரே

கால்மேல் தோள்மேல் தவழ்தாரே

மண்மேல் மெருகாய் மலருமுன்னே

மண்ணாய்ப் போவது முறைதானா? (அம்மா தாயே...) (

பாலும் பழமும் பெறவில்லை

மாலை மணமும் வரவில்லை

ஆலாய் அலைந்தோம் விடிவில்லை

பாலை வனமோ எமதெல்லை (அம்மா தாயே...) (9)

காலை மாலை இரவில்லை

வேளை வயிற்றுக் குணவில்லை

காலம் தோறும் கதியில்லை

நாளை வருமோ நறுமுல்லை (அம்மா தாயே...) (10)

நாளை வருமே நறுமுல்லை

நலமே பணி செய் என் பிள்ளாய்!

வேளை இதுதான் விழித்திருப்பாய்!

வெற்றித் திருமகள் வரம் தருவாள்.

வல்வை சகாறா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்துப் பாராட்டுக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி.

இது பாராட்டுப் பெறுவதற்காக எழுதப்படவில்லை. வேலைப்பழு காரணமாக களத்தில் வந்து கருத்தெழுத நேரம் கிடைக்காத காரணத்தால் முன்னரே எழுதிய ஒன்றை கரும்புலி மறவர்களுக்காக இணைத்தேன். இப்படி எத்தனைதான் எழுதினாலும் அவர்களின் தற்கொடைக்கு எதுவுமே ஈடாகாது. என்னால் ஆன ஒரு சிறிய துதிதான் இது.

கரும்புலிகளுக்கான கவிதை நன்றாக இருக்கிறது

கரும்புலிகளுக்கான பஐனை நன்றாக இருக்கின்றது. மாரியம்மான் காதிற்கு உங்கள் பஐனை கட்டாயம் போய் சேரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

மிகவும் நல்லகவிதை வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.