Jump to content

யேர்மன்; தமிழ் மக்களுடன் செந்தமிழன் சீமான் சந்திப்பு;அரங்கை நிறைத்த மக்கள்(படங்கள் இணைப்பு)


Recommended Posts

 

v-seemangermaninewss%20%2818%29.jpgசெந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள்.

 

 

 

செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள்.

 

 

v-seemangermaninewss%20%285%29.jpg

 

 

தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
 

 

 

 

 

v-seemannngermanii%20%284%29.JPG

 

 

 

அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழீழத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிற்கு தமிழகம் உறுதுணையாக நிற்கும் என செந்தமிழன் சீமான தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைக்கான போரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் அதற்கு தமிழகம் என்றும் துணைநின்று போராடும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சீமான் நாம்தமிழர் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தார். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் புரட்சிபற்றியும் சீமான் விளக்கிக் கூறியிருந்தார்.

அருகாமையில் உள்ள பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல தமிழர்கள் வந்திருந்ததையும் தாம் வசிக்கும் நாடுகளிற்கும் வருமாறும் சீமானிடம் வேண்டுகோள் வைத்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

சிறப்புரையாற்றிய பின்னர் சீமானுடன் வந்திருந்த மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தார் சீமான்.

 

 

 

 

 

v-seemangermaninewss%20%281%29.jpgv-seemangermaninewss%20%2817%29.jpgv-seemangermaninewss%20%288%29.jpgv-seemangermaninewss%20%289%29.jpgv-seemangermaninewss%20%282%29.jpgv-seemangermaninewss%20%284%29.jpgv-seemangermaninewss%20%2811%29.jpgv-seemangermaninewss%20%2813%29.jpgv-seemangermaninewss%20%2814%29.jpgv-seemangermaninewss%20%2812%29.jpgv-seemangermaninewss%20%2815%29.jpgv-seemangermaninewss%20%2819%29.jpg

 

 

 

 

v-seemangermaninewss%20%2818%29.jpgv-seemangermaninewss%20%2822%29.jpg

www.irruppu.com

Link to comment
Share on other sites

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

 

என்ன சபேசன் அண்ணா தமிழ் தமிழ் என்று மொழி வளர்ச்சிக்காக உயிரையே குடுக்கிற நீங்கள் இப்பிடி ஆங்கிலக் கலப்பிலை எழுதுறது கொஞ்சம் இடிக்குதே...

 

தொடக்கம் நல்லாயிருந்துது முடிப்புச் சரியல்லை என்று போட்டிருக்கலாமே?

Link to comment
Share on other sites

உண்மையில் எல்லாம் மாறும்   என்கின்ற என் நம்பிக்கை உண்மை ..................................

சில வருடங்களுக்கு முன் கிற்றார் வாசிப்பதற்காக யேர்மன்  தமிழீழம் இசைக்குழுவினர் என்னை அடிக்கடி அழைப்பார்கள் .....................யேர்மனியில் பல மாவீரர் தின நிகழ்வுகளில் நான் அன்று   பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளதை பார்க்கும் பொது மனம் நிறைவடைகிறது ....அது மட்டுமல்லாமல் எதோ ஒரு செய்தியையும் சொல்கிறது .இணைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் .தோழா ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

 

அதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன்

ஓப்பினிங் நல்லாத்தான் இருக்கு(இங்கு நீங்கள் ஆரம்பித்து வைக்கும் இந்த விவாதம்) :rolleyes:

 

ஆனால் பினிசிங் உங்களுக்கு ஏற்றது போல் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரியின் நடத்தை சரியில்லாவிட்டாலும் அந்தப் பூசாரி பூசை புரியும் கோவிலில் ஒரு திருவிழா என்றால் பக்தர்கள் கூட்டம் ஓகோ என்றிருக்கும். அப்படித்தான் ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்த, புலிகளின் முன்னைய ஜேர்மன் பொறுப்பாளர்களைப் போட்டுக்கொடுத்து இன்று ஜேர்மன் பொறுப்பாளராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட

'சிறீரவி' என்பவரால் (இறுதிப் படத்தில் இருப்பவர்) சீமான் வரவழைக்கப்பட்டதும் அன்று பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளது. இந்த மக்கள் கூட்டம் சீமானுக்காக கூடியதே தவிர முன்புபோல நடைபெறும் போராட்ட நிகழ்வுகளுக்கு கூடும் என்பதில் ஐயப்பாடுகள் உண்டு. ஜேர்மனியில் பழைய பொறுப்பாளர்களின் அழுத்தங்களற்ற புதிய பொறுப்பாளர்கள் தோற்றம் கொள்ளும்வரை மக்களின் நம்பிக்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் 23.03.2013 அன்று 17 மணிக்கு Möhringer Str.56, 70199 Stuttgart, Germany யில் இந்தச் சிறீரவி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 06 பொதுமக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்குப்பிரச்சினை ..இனம் அழிந்தாலும் விடமாட்டர்கள் போலதெரியுது   எந்த ஒரு உணர்வும்  கொழுந்துவிட ஆரம்பித்ததும்...கல்லுக் குத்த ஆரம்பித்துடுவங்கள்..



உண்மையில் எல்லாம் மாறும்   என்கின்ற என் நம்பிக்கை உண்மை ..................................

சில வருடங்களுக்கு முன் கிற்றார் வாசிப்பதற்காக யேர்மன்  தமிழீழம் இசைக்குழுவினர் என்னை அடிக்கடி அழைப்பார்கள் .....................யேர்மனியில் பல மாவீரர் தின நிகழ்வுகளில் நான் அன்று   பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளதை பார்க்கும் பொது மனம் நிறைவடைகிறது ....அது மட்டுமல்லாமல் எதோ ஒரு செய்தியையும் சொல்கிறது .இணைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் .தோழா ..................

எந்த ஒரு உணர்வும் பொங்கியெழ விடமாட்டார்களே...இன்னும்  _ _ _ _ பிரச்சினை முடியலைபோலை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.