Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.

நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினத் தீவிரவாதிகளின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு சமூக, அரசியல், வர்த்தகப் பரிமாணம் என மூன்று பரிமாணங்கள் உள்ளன. காலம் காலமாக இவற்றின் மீது பேரினத் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியிருந்தது.

 

அவர்கள் அவ்வப்போது முஸ்லிம்களை சீண்டிப் பார்த்து நாங்கள் எந்த அளவுக்கு சகித்துக்கொள்கிறோம் அல்லது எங்களது பதில் நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதை பரீட்சித்து வந்துள்ளனர்.

 

போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் இப்பொழுது வெளிக்கிளம்பியுள்ளது. வெளியில் வந்த பூதத்தை மீண்டும் போத்தலுக்குள் அனுப்புவது இலேசான காரியமல்ல. ஆப்பிழுத்த குரங்கின் நிலை ஏற்பட்டுள்ளது.

 

முஸ்லிம்கள் மத்தியில் வேறுபட்ட சிந்தனைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பலவீனமான மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பலமான அரசாங்கத்திற்கு உண்டென நான் முன்னரும் வலியுறுத்தியிருக்கிறேன்.

 

முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்திருப்பதாக அச்சமடைகின்றனர். அண்மையில் நான் பிறப்பு, இறப்பு பற்றிய தலைசிறந்த புள்ளிவிபர ஆய்வாளர் பேராசிரியர் ஜயந்த திஸாநாயக்கவை சந்திக்க நேர்ந்த பொழுது அவர், முஸ்லிம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். பொதுவாக சனத்தொகை விகிதாசாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவது இயல்பானது என்றும், அது மாறும் தன்மை வாய்ந்தது என்றும் அதற்காக சிங்கள மக்கள் வீணாக அஞ்சவோ, அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை என்று என்னிடம் கூறினார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து ஏழு முஸ்லிம் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. அத்துடன், 52 நாடுகள் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளின் அமைப்பு ஜனாதிபதிக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு முக்கியமான கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளன என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3717

ஒரு பக்கத்தில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவை வெற்றிகரமாக முன்னெடுத்தும்
மறு பக்கத்தில் முஸ்லீம் மக்களை அடிமைகளாக்க பௌத்த சிங்களத்தால் முடிகின்றது.

 

எவ்வாறு?


சோரம் போகும் முஸ்லீம் தலைவர்களால், குறிப்பாக ஹக்கீம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்கள் கூட சரியான தலைமைத்துவம் இல்லாமல் உள்ளார்கள்.அரசுடன் சேர்ந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்கும் ஹக்கீம் போன்ற தலைவர்களை தான் முஸ்லிம் மக்கள் கொண்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பூதத்தை திறந்துவிட்டதே நீங்கள் தானே.. தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராட்டத்திற்கும் எதிரான நிலையெடுத்து. அப்புறம் என்ன சிணுங்கல்..! :o:(

உங்களுக்கு நினைவிருக்கோ இலையோ, உவர் குமார் போன்னம்பலத்தோட ஒரு சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சியில் விவாதத்தில் இருந்தார். அப்போது மறைந்த ஜெயராஜ் போர்ணண்ட்தோ பிளளையுடன் சேர்ந்து குமார் பொன்னம்பலத்தை இவர் வெகுவாக நக்கல் அடிச்சார். 

 

அப்போது குமார் ஒன்றைச் சொன்னார், இப்ப எங்களுக்கு நடக்கு அடுத்தது உங்களுக்கு.. ஆனால் உங்களால வாய்திறக்க முடியாமல் இருப்பில் என்று.

 

இப்ப உவருக்கு நினைவருமோ தெரியாது.

போத்திலாலை வெளியை வந்திருக்கிற பூதம் பாய வெளிக்கிட்டா முதல் முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதுதான் பாயும் போல இருக்கு கவனம் ஹக்ஹீம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம்கள் மீது நேரடித் தாக்குதல்களை பொதுபலசேனா ஆரம்பித்துள்ளது: றிசாத்
 

rizathbadudeenasasas.jpg

பெஷன் பக் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

 

இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு குறித்த களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும்,ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் உரிமையாளருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இவ்வளவு காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலையேற்படுத்தி வந்த அமைப்பு இன்று நேரடியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் என்பதை விளக்கப்படுத்தியுள்ளதுடன்,இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு,இந்த செயல்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையேற்படுத்தியுள்ளதெனவும் இவ்வாறான செயல்களை எவர் செய்தாலும் அவர்கள் தாரதரம் பாராமால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இனிமேலும் இவ்வாறான செயல்கள் இடம் பெறாமல் இருப்பதை பொலிஸார் உறுததிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு போதுமான வீடியோ ஒளிப்பதிவுகள் உரியவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://maavirarmann.com/news-newsid-51191.html

வடக்கில் நடந்த பெருமளவான பொருள், உயிர் நட்டத்துக்கு பதியுதின் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்தது மட்டுமல்ல மன்னாரில் சட்டத்தையே தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு் நீதவானையே, தண்டிக்க முயன்ற பதியுதின் இப்போ எங்கே இருந்து நீதி வரும் என்று கேட்கிறார். முதல் தர கோளையும் காடையும்.  துணிச்சல் இருந்தால் மன்னாரில் தான் போட்ட ஆட்டங்களை இங்கே போட்டு காட்டட்டும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்போதும் ஒரு பக்கம் இருந்தது இல்லையே சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அங்கேயும் இங்கேயுமாக இருந்தால் இரு தோணியில் கால் வைத்தவன் கதையாகத்தான் இருக்கும் உங்களின் கதையும் இதற்க்கு யார்தான் என்ன செய்யமுடியும் ?   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.