Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

Featured Replies

விருதுநகர்

காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள்

மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=p9nqbYCLYbc

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் மன உறுதி பிரமிப்பாக உள்ளது..! குறிப்பாக அந்த மெல்லிய தேகம் கொண்ட இளைஞர்.. :(

 

இறுதியில் ஒரு காங்கிரஸ் குண்டனை காவல்துறை இரண்டு தட்டுத் தட்டியது பார்க்க ஆறுதலாக இருந்தது..! மாணவர்கள் கேட்பது போல பொதுமக்கள் மாணவர்களுக்கு கேடயம்போல் இருக்க வேண்டும்..! பார்வையாளர்கள் தேவையில்லை.. :unsure:

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ராஜீவ் காந்தி வாழ்க? ராஜீவ் காந்தி "புகழ்" வாழ்க என்று சொல்ல முயன்றார்கள் என நினைக்கிறேன்..! காங்கிரஸ் குண்டர்களில் சிந்தனையோட்டம் அந்த அளவிலேயே உள்ளது..!

  • கருத்துக்கள உறவுகள்
காங்கிரசுக்காரர் தங்கள் தலையிலையே மண்ணை வாரி போடுகின்றார்கள் .... 
 
காங்கிரஸ் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாது ஒளிந்து போகும் காலம் வெகு துரத்தில் இல்லை என்பதினையே இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றது. 

தமிழ் ஈழ விடுதலை மாணவர் இயக்கத்தினர் 20 பேர், விருதுநகரில் காங்கிரஸ்  எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட சிலர் இருந்தனர். முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது  உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர் .

இதில் மாணவர்கள் நால்வருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் பின்னர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நால்வரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

30-03-2013.JPG

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவ சொந்தங்களுக்கு என்ன நன்றிக்கடன் சொல்லப் போகின்றோமோ தெரியவில்லை. அடிவிழும்போதும் அதே இடத்தில் சில மாணவர்கள் நிற்கின்றார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன்....எவ்வளவு வேகமான தடிவீச்சை எதிர்த்து நிற்கின்றார்கள்...தலை வணங்குகின்றேன்..மாணவச்செல்வங்களே...

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு சவக்குழி ஆழமாக வெட்டப்படுகிறது .

ராஜீவ் காந்தி வாழ்க ???

காங்கிரஸ்  தமிழ் உறவுகளே அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் . 20 வருடங்களின் முன்பு துப்பாக்கி பிடியால் அடி வாங்கினவனை கூப்பிட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள்.

 

மாணவர்களே உங்கள் வீரத்தை போற்றுகிறேன் 

 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

பத்து 15கஜந்து மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தால் இப்படியா காங்கிரஸ் குண்டர்களை சந்திக்க வேண்டி இருக்கும்.....ஒரு 200 மாணவர் ஆர்பாட்டத்தில் நின்டால்..காங்கிரஸ் குண்டர்கள்...அடி தடிக்கு போக்க மாட்டினம்...இரண்டு ஆர்பாட்டத்திலும் மாணவர் வலு குறைவு..அது தான் காங்கிரஸ் அடி ஆக்கள் இந்த ஆட்டம் ஆடினம்....

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை!

 

மாணவர்களின் போராட்டம்,மனதைத் தொடுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மாணவர்களின் ஓர்மம் வியக்கவைக்கிறது..தலைவணங்குகிறோம் உங்கள் உனர்வுகளுக்கு உரவுகளே..

  • கருத்துக்கள உறவுகள்

553232_447365638677297_699981966_n.jpg

 

 

https://www.facebook.com/photo.php?fbid=447365638677297&set=a.325208067559722.74619.169405469806650&type=1&theater

 

 

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் தாக்கி உள்ளனர்.

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர்
உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

 

மாணவர்களை தாக்கியது தொடர்பாக எம்.பி. அலுவலக உதவியாளர் ஜெயமூர்த்தி , பால்பாண்டி, சதீஷ், கார்த்திக் உள்பட சிலரை கைது செய்தனர்.

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.