Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரடியில் தேசிகனைக் கண்டேன்!

Featured Replies

சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_08.html

நல்ல தகவல்களைத் தந்திருக்கின்றீர்கள் கானபிரபா. ஈழத்தமிழர்களின் ஆன்மிகத்

தேடலைப் பற்றியும் யோகர் சுவாமிகளைப் பற்றியும் உங்கள் எழுத்தின் வழியாக

அழகாக கூறியிருக்கிறீர்கள். இணைப்புக்கு நன்றி கானபிரபா

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு என் நன்றிகள் ரசிகை

  • கருத்துக்கள உறவுகள்

"சாதி பேதந் தவிர்வது வீரமே

நீதி நூல்வழி நிற்பது வீரமெ"..........

"சாதியும் இல்லைச் சமயமும் இல்லை

ஒதி உணர்ந்தவர் உறுதி மொழியெ"...............

யோகரின் பாடல்களில் இருந்து.சாதி பிரச்சனைக்கு அப்பவெ குரல் கொடுத்திருக்கிறர்.

யோகர் சுவாமிகளின் சிவதொன்டன் நிலையம் ஒண்று மட்டகள்ப்பு செங்கலடியிலும் உள்ளது.அதை சொல்பரி பிரபுவின் மகன் தான் தொடக்கி நடத்தினவர்.

  • தொடங்கியவர்

மேலதிக தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள் புத்தன்

இவர்களைப்பற்றி பாடசாலையில் படித்திருக்கின்றேன். நினைவுகளை மீள வரவைத்தமைக்கு நன்றி கானா பிரபா.

ஆமா இனுவில் மக்கள் உண்மையில் சைவ பக்கத்தர்களா? சின்ன சந்தேகம் அது தான்.

நல்ல நினைவு மீட்டல் பிரபாண்ணா :-) ஒரு சித்தர்களைப் பற்றியும் ஞாபகம் இல்லை எனக்கு ...உங்கட ஊருக்குப் பக்கத்தில் வாழ்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ இவ்வளவு விசயம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

இவர்களைப்பற்றி பாடசாலையில் படித்திருக்கின்றேன். நினைவுகளை மீள வரவைத்தமைக்கு நன்றி கானா பிரபா.

ஆமா இனுவில் மக்கள் உண்மையில் சைவ பக்கத்தர்களா? சின்ன சந்தேகம் அது தான்.

ஏன் சந்தேகம் ரமா:-)

  • தொடங்கியவர்

உங்கட ஊருக்குப் பக்கத்தில் வாழ்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ இவ்வளவு விசயம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

சினேகிதி,

இவர்கள் எங்கட ஊருக்குப் பக்கத்தில் இருக்கவில்லை, நல்லூரில்:-)

இவர்களைப்பற்றி பாடசாலையில் படித்திருக்கின்றேன். நினைவுகளை மீள வரவைத்தமைக்கு நன்றி கானா பிரபா.

ஆமா இனுவில் மக்கள் உண்மையில் சைவ பக்கத்தர்களா? சின்ன சந்தேகம் அது தான்.

நானும் அரைவாசி இணுவில். எனது அப்பா இணுவில். வெள்ளைக்காரர்கள் இணுவில் மக்களினை மதம் மாற்றுவதற்காக ஆங்கிலப்பாடசாலை, வைத்தியசாலை,தேவலாயம் போன்றவற்றினை இணுவிலில் கட்டினாலும், அங்குள்ள மக்கள் சைவசமயத்தில் நம்பிக்கையோடு இருந்தமையினால் கிட்டத்தட்ட 100 வீதமானவர்களும் சைவசமயத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலனவர்கள் முருக பக்தர்கள். பல சைவக் கோவில்களினை இணுவிலில் காணலாம். 'கற்பக வல்லியும்' என்ற பாடலினை எழுதிய வீரமணி அய்யர் பிறந்த இடம் இணுவில். T.M.செளந்தராரஜன் பாடிய முதல் பக்திப்பாடல் இப்பாடலாகும்.

தகவல்களுக்கு நன்றிகள் கானா பிரபா அண்ண...

அரைவாசி என்ன? ;)

இணைப்புக்கு நன்றி கானபிரபா.

மிகவும் நன்றாக உள்ளது. பலவிடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி கானபிரபா அண்ணா.

  • தொடங்கியவர்

தங்கள் வருகைக்கு நன்றிகள் அரவிந்தன், தூயா,அஜீவன், சுஜீந்தன்

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. வாசிக்கும் போது பழைய யாபகம் வருகிறது.

இந்தியா இராணுவம் இலங்கைக்கு வர முன்பு 86,87களில் உதயன் அல்லது அப்பத்திரிகையின் சனிக்கிழமைகளில் வரும் சஞ்சிவியில் 'யாழ்ப்பாணத்தான் நாசமாய்ப்போவார். அண்ணாதான் எங்களைக்காப்பார்,'தமிழ் இளைஞ்சர்கள் பணக்காரர்களாக வாழ்வார்கள்' என்ற பொருள்பட யோகர்சுவாமிகள் சொன்னவற்றை பிரசுரித்து அண்ணா என்றால் இந்தியாவினைக்குறிப்பிட்டார

பலாலி விதி கோண்டாவில் சந்தியில் குடைச்சாமியாரின் சமாதியினைக்காணலாம். எங்கள் வீட்டுக்குடி பூசைக்கு தவில்,மேளம் வாசிக்க இணுவில் புண்ணியமூர்த்தியும், அவரோடு சில கலைஞர்களும் மகிழூர்ந்தில் மருதனார்மடத்தினுடாக வந்து கொண்டிருக்க, குடைச்சாமியார் இவர்களை மறித்து தானும் வரப்போவதாகச் சொல்ல அவரையும் எற்றிக்கொண்டு மகிழூர்ந்து எங்கட வீட்டுக்கு முன்னால் வந்தது. வீட்டுக்குள் வராமல் வீட்டுக்கு முன்னால் இருக்கும் தோட்ட வெளிக்குள் குடைச்சாமியார் போய் இருக்க, எனது சித்தப்பா புகைப்படக்கருவியில் அவரைபடம்பிடித்தார்.அதற்கு குடைச்சாமியார் படத்தில் நான் வரமாட்டேன் என்று சொன்னார். படம் கழுவிப்பார்க்கும் போது உண்மையில் அப்படத்தில் அவர் வரவில்லை. எங்கள் அப்பா கேட்டதற்கு இணங்க அவர் வீட்டுக்கு வந்து உணவு அருந்தி விட்டுச் சென்றார்.

சில ஆண்டுகளின் பிறகு இலங்கை வானொலியில் குடைச்சாமியார் நாளை 6 மணிக்கு சமாதி அடைகிறார் என்று சொன்னார்கள். சொன்னதினைப்போல அவர் மறுனாள் 6 மணிக்கு சமாதி அடைந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.