Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூசு தட்டியெடுத்த பழைய கிறுக்கல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளுக்கு முன்பு வாசிக்கவும் எழுதவும் நேரமும் மன வெளியும் இருந்த காலங்களில், சில கிறுக்கல்களை நான் தாள்களில் பதிய, அவை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எழுதிய எதற்கும் மூலப்பிரதி என்னிடம் இல்லை. பிரசுரமான இதழ்களின் பிரதிகளும் பல்வேறு இடம்பெயர்வுகளின் போது ஒவ்வொன்றாகத் தொலைந்து போய் விட்டன. இவையெல்லாம் சிறு வயது மணல் வீடு ஞாபகங்கள் மாதிரி மனதில் மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கையில் அண்மையில் எனது பழைய கவிதை ஒன்றை யாரோ ஒரு நண்பர் முகநூல் வழியாக நினைவு படுத்தியிருந்தார். அக்கவிதையின் தடங்களைப் பின்பற்றித் தேடல் செய்த போது தான் நூலகம் என்ற அரிய தமிழ் நூல்/இதழ் ஆவணக்காப்பக இணையத் தளமொன்று இருப்பது தெரிய வந்தது (www.noolaham.org). இந்த இணைய நூலகத்தில் இருக்கும் இதழ்களைத் துளாவிய போது எனது பழைய கிறுக்கல்கள் அனேகமாக எல்லாமே கிடைத்தன. சில கிறுக்கல்களை மீள வாசிக்கையில் சிரிப்பாகவும் சிலவற்றை வாசிக்கையில் எனது அக்கால மன நிலையை அப்படியே "போமலின்" போத்தலில் சேமித்து வைத்த மாதிரியும் இருந்தது.சுய விலாசத்திற்காக அன்றி, யாழ் களத்தில் உலாவரும் கவிதை மற்றும் புனைகதையல்லாத ஆக்கங்களின் ரசிகர்களுக்காக இங்கே எனது பழைய ஆக்கங்கள் சிலவற்றைத் தருகிறேன். இக்கவிதைகள் அனேகமாக ஒரு சிறிய செய்தியை அல்லது எனக்குள் வந்த ஒரு பிரத்தியேகமான உணர்வை வெளிப்படுத்தும் கவிதைகள். இதனால், சிலருக்கு இவை அர்த்தமில்லாத கிறுக்கல்களாகவே தோன்றக் கூடும்...வாசிக்கும் உங்களுக்கு ஏதாவது புரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த முதலாவது கவிதை பேராதனை சங்கீத நாட்டிய சங்கத்தின் "இளங்கதிர்" ஆண்டு மலரில் பிரசுரமானது, நண்பர் நினைவூட்டிய கவிதையும் இது தான்:

 

 

வண்டித் தடம்

 

காய்ந்து கிடக்கிறது கால்வாய்
கண்கூச வைக்கிறது கடும் வெய்யில்
இன்று
கால்வாய் தாண்டி நான்
அப்பால் நடக்கையிலே
எப்போதோ ஒரு வண்டி
போட்ட தடம் பார்த்தேன்

 

பலகாலம் முன்பிங்கு
மழைபெய்த நாளில் இக்
கால்வாயின் வழியேயும்
நீர் பாய்ந்தது

 

காலங்களுண்டென்று
காத்திருந்த புல் விதைகள்
முளைவிட்டு வெளிவந்து
தலை சாய்ந்தன

 

சுயமாக விளைந்ததென்று
சொன்னாலும் நம்பாத
அளவுக்கு அழகழகாய்ப்
பூப்பூத்தன

 

கரையோடு வேர் கொண்ட
வயதான மரமொன்றும்
நகர்கின்ற நீர் மீது
மலர் தூவிற்று

 

வசந்தம் முடிந்து ஒரு
கோடை எழுந்ததிங்கு
நீண்டதொரு ஊர்வலமாய்
நகர்ந்து வந்த நீர்ப்படுக்கை
குறைந்து தடைப்பட்டு
இடையிடையே தேங்கியது

 

சூரியனும் தரையும் அதைப்
போட்டியிட்டு உறிஞ்சிவிட
எஞ்சியது கால் வைத்தால்  
நெகிழ்ந்தசையும் ஈரநிலம்

 

தாகத்துடனிருந்த
ஈரத்தரையதன் மேல்
தாண்டிச் சென்றவொரு
வண்டியிட்ட தடமொன்றே
இதுவரையில் அழியாமல்
இத்தரையில் இருக்கிறது

 

நீரோடும் போதிந்த
மரவண்டி போயிருந்தால்
அழியாத சுவடொன்றை
வெட்டாமல் போயிருக்கும்

 

சூட்டில் தகிக்கின்ற
மணல் மீது போயிருந்தால்
அனற்காற்று வீசியந்த
அடையாளம் போயிருக்கும்

 

தாகத்துடனிருந்த
ஈரத்தரையதன் மேல்
ஆழத்தடம் போட்டு அவ்வண்டி போன பின்பும்
காயம் சுமந்தபடி
காய்கிறது இக்கால்வாய்

 

கரையெல்லாம் பூக்களில்லை
வரண்ட நில வன்முட்கள்

 

இன்னும் மழை பெய்யும்
இவ்வழியே நீர் பாயும்
பூச்சொரிவும் புல்லசைவும்
கால்வாயை அழகாக்கும்.

 

 

நன்றி: இளங்கதிர் (30 வது ஆண்டிதழ் 1996/97)

 

 

(மேலும் வரும்)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு ஜஸ்டின்!

 

ஏலக்கூடிய அளவுக்குக் கிண்டுங்கோ!

 

மக்கி போனப்பிறகு தான், நல்ல கருங்கல்லு வரும்! :icon_idea:

மிக அழகியலான கவிதை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க‌ருத்துக்க‌ளுக்கும் வர‌வுக்கும் ந‌ன்றிக‌ள் புங்கை, குளா. கையில் கிடைத்த‌ இன்னொரு க‌விதை இது. த‌லைப்பைப் பார்க்காம‌ல் இக்க‌விதையை வாசித்தால் ஏதோ காத‌ல் க‌விதை போல‌ தெரியும்.ஆனால் காத‌லிலும், வேறு எந்த‌ உற‌வு நிலையிலும் இல்லாத‌ சௌக‌ரிய‌மும் சுத‌ந்திர‌மும் ந‌ம‌து சினேகித‌ர்க‌ளிட‌ம் ம‌ட்டுமே கிடைக்கும் (இது ஆண்க‌ளுக்குப் பொருந்தும், பெண்க‌ளுக்கு எப்ப‌டி என்று அறியேன்!). வீட்டில் அடை ப‌ட்டுக் கிட‌ந்த‌ பின்ன‌ர் ஒரேய‌டியாக‌ க‌யிற‌விழ்த்து விட‌ப் ப‌ட்டு ப‌ல‌ தூர‌ தேச‌ங்க‌ள் மேய‌க் கிடைத்த‌ நாட்க‌ளில் ந‌ல்ல‌தையும் கெட்ட‌தையும் தொட்டுப் பார்த்து, அறிந்து பின்ன‌ர் வில‌கிச் செல்லும் முதிர்ச்சியை என் இர‌ண்டு சினேகித‌ர்க‌ள் என‌க்கு அளித்தார்க‌ள். அந்த‌ சினேகித‌ங்க‌ள் ப‌ற்றி எழுந்த‌ க‌விதை இது:

 

 

சினேக‌ம்

 

 

எழுந்த‌ நில‌வில்

க‌றை க‌ண்டேன்

 

மூடிய‌ ஜ‌ன்ன‌லில்

மோதி வ‌ழிந்த‌து சூரிய‌ வெள்ள‌ம்


தூக்க‌ம் க‌லைத்த‌தாய்த்

திரும்பிப் ப‌டுத்தேன்

 

நிழ‌ல் க‌விந்த‌ நாட்க‌ளில்

சூரிய‌னுக்க‌ஞ்சி

ம‌ழைத் த‌ழுவ‌லில்

குடையைத் தேடி


ச‌ந்தோஷ‌ ஒளியில் எங்கேனும்

சோக‌ம் உள்ள‌தாய் ந‌ம்பி


இருப்புண‌ர்வின்றிக்

க‌ட‌ந்தன‌ நாட்க‌ள்


அ‍‍ந்த‌ நாட்க‌ளில்

உன்னுட‌ன் க‌ழிக்க‌க் கிடைத்த‌

க‌ண‌ங்க‌ளில் ம‌ட்டும்


தேட‌லுமின்றி

எதையும் உறுதி செய்யும்

ஆவ‌லுமின்றி


சுக‌மாய் அமிழ்ந்தேன் உற‌வில்.

 

 

ந‌ன்றி: "இள‌ங்க‌திர்" (ஆண்டு நினைவில் இல்லை!)



 

 



 

 

  • கருத்துக்கள உறவுகள்
 
நன்றாக உள்ளதே. மிகுதியையும் இணையுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

தேட‌லுமின்றி

எதையும் உறுதி செய்யும்

ஆவ‌லுமின்றி

சுக‌மாய் அமிழ்ந்தேன் உற‌வில்.

 

 

இந்த நிலை, எல்லாருக்கும், இலேசில கைவர மாட்டாது!

 

இதைத்தான் நுற்றும் துறந்த நிலை என்று சொல்லுவார்கள்! :D

 

தொடர்ந்தும் தூசு தட்டுங்கள்! :icon_idea:

வண்டித் தடம்

 

காய்ந்து கிடக்கிறது கால்வாய்

கண்கூச வைக்கிறது கடும் வெய்யில்

இன்று

கால்வாய் தாண்டி நான்

அப்பால் நடக்கையிலே

எப்போதோ ஒரு வண்டி

போட்ட தடம் பார்த்தேன்

 

பலகாலம் முன்பிங்கு

மழைபெய்த நாளில் இக்

கால்வாயின் வழியேயும்

நீர் பாய்ந்தது

 

காலங்களுண்டென்று

காத்திருந்த புல் விதைகள்

முளைவிட்டு வெளிவந்து

தலை சாய்ந்தன

 

சுயமாக விளைந்ததென்று

சொன்னாலும் நம்பாத

அளவுக்கு அழகழகாய்ப்

பூப்பூத்தன

 

கரையோடு வேர் கொண்ட

வயதான மரமொன்றும்

நகர்கின்ற நீர் மீது

மலர் தூவிற்று

 

வசந்தம் முடிந்து ஒரு

கோடை எழுந்ததிங்கு

நீண்டதொரு ஊர்வலமாய்

நகர்ந்து வந்த நீர்ப்படுக்கை

குறைந்து தடைப்பட்டு

இடையிடையே தேங்கியது

 

சூரியனும் தரையும் அதைப்

போட்டியிட்டு உறிஞ்சிவிட

எஞ்சியது கால் வைத்தால்  

நெகிழ்ந்தசையும் ஈரநிலம்

 

தாகத்துடனிருந்த

ஈரத்தரையதன் மேல்

தாண்டிச் சென்றவொரு

வண்டியிட்ட தடமொன்றே

இதுவரையில் அழியாமல்

இத்தரையில் இருக்கிறது

 

நீரோடும் போதிந்த

மரவண்டி போயிருந்தால்

அழியாத சுவடொன்றை

வெட்டாமல் போயிருக்கும்

 

சூட்டில் தகிக்கின்ற

மணல் மீது போயிருந்தால்

அனற்காற்று வீசியந்த

அடையாளம் போயிருக்கும்

 

தாகத்துடனிருந்த

ஈரத்தரையதன் மேல்

ஆழத்தடம் போட்டு அவ்வண்டி போன பின்பும்

காயம் சுமந்தபடி

காய்கிறது இக்கால்வாய்

 

கரையெல்லாம் பூக்களில்லை

வரண்ட நில வன்முட்கள்

 

இன்னும் மழை பெய்யும்

இவ்வழியே நீர் பாயும்

பூச்சொரிவும் புல்லசைவும்

கால்வாயை அழகாக்கும்.

 

 

நன்றி: இளங்கதிர் (30 வது ஆண்டிதழ் 1996/97)

 

 

(மேலும் வரும்)

 

அருமையானதொரு கவிதை.... ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள் ஜஸ்ரின்.

 

17 வருடங்கள் போய்விட்டன.. இன்னும் அதிகமான அனுபவங்களும் அவை தந்த உணர்வுகளும் பெருகியிருக்கும் தானே. மீண்டும் கவிதை எழுதுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ந‌ன்றி நுணா, நிழ‌லி.

 

நிழ‌லி, அனுப‌வ‌ங்க‌ள் மிக‌வும் ஆழ‌மாக‌ இருக்கும் போது எழுத்தில் வ‌டிக்க‌ இய‌லாம‌ல் மௌன‌ம் தான் எஞ்சுகிற‌து. உதார‌ண‌த்திற்கு என் ம‌க‌ளின் பிற‌ப்பைக் க‌விதையில் கொண்டு வ‌ர‌‌ மூன்று வ‌ருட‌ங்க‌ளாக‌ முய‌ன்றும் இய‌லாம‌ல் த‌விக்கிறேன். உங்க‌ளுக்கும் இப்ப‌டியான‌ வார்த்தைக‌ள் தோற்றுப் போகும் அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும் என நினைக்கிறேன்.

கீழ் வ‌ரும் க‌விதை ஒரு த‌த்துவ‌க் கிறுக்க‌ல். முக‌ச் ச‌வ‌ர‌ம் செய்து கொண்டிருக்கையில் கை த‌வ‌றி விழுந்து நொருங்கிய‌ ஆடியில் சித‌றிய‌ என் முக‌த்தைப் பார்த்த‌ போது பிற‌ந்த‌து. வாசிப்ப‌வ‌ருக்கு என்ன‌ அனுப‌வ‌மோ அத‌ற்கேற்ப‌ விள‌க்க‌ம் த‌ரும் ஒரு ப‌டிம‌ம் இது:

 

என் முகம்

 

 

முகங் காட்டும் ஆடிக்குத்
தனியே முகமில்லை

 

 

தரித்து நகரும்
முகங்கள் எல்லாம்
அப்போதைக்கு
ஆடியின் முகமே

 

ஒரு நாள்

எனக்கேயெனக்கென்று
உரித்தாகும் வேகத்தில்
கவனம் கை நழுவத்
தரை தொட்டுச் சிதறிற்று


ஆடியும்
அதனுள் என் முகமும்

 

சிதறிப் போன
சில்லுகள் தேடி
ஓரங்கள் பொருத்தி

ஒட்ட வைத்தாலும்


ஒட்டவே மாட்டாமல்
பிரிந்து மிதக்கிறது

 

இப்போதுள்ள
என் முக விம்பம்

 

நன்றி: ஞானம், ஏப்பிரல் 2002 இதழ்.
 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.