Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வலிவடக்கு ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கு ஆதரவு கூடுகிறது!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"வலிவடக்கு ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கு ஆதரவு கூடுகிறது!"

 

 

 

 

 

வலி.வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் தமது ஆதரவை வெளியிட்டுவருகின்றன. 

நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்.செயலகத்திற்கு முன்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டினில் கண்டன ஆர்ப்பாட்மொன்றிற்கு ஏற்பாடாகியுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் உள்ளடங்கியுள்ள வலிவடக்கு பிரதேச சபை மற்றும் வலிகிழக்கு பிரதேச சபைகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. 

 

இது பற்றி தகவல் வெளியிட்ட கூட்டமைப்பு சார்பு வலிவடக்கு பிரதேச சபை தலைவர் தமது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் நாளை இடம்பெயர்ந்த மக்களை தான சந்தித்து உரையாடி புதன்கிழமை போராட்டத்தி;றகான ஆதரவை கோரவுள்ளதாக தெரிவித்தார். 

 

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் மறியல் போராட்டமொன்றை வலிவடக்கு பிரதேச செயலகம் முன்பதாக நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இதே கருத்தை வலியுறுத்திய வலிகிழக்கு கூட்டமைப்பு சார்பு பிரதேச சபை தலைவர் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.அதே வேளை மீனவ அமைப்புக்கள் இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்களென பல தரப்பும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றன.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91020/language/ta-IN/article.aspx

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

காணி அபகரிப்புக்கு எதிராக புதனன்று யாழில் ஆர்ப்பாட்டம்

 
protest(32).jpg

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தால் தீவிரமாக்கப்பட்;டுள்ள காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. 

இந்த ஆர்பாட்டம் காலை 11 மணி தொடக்கம் 1 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

காணி அபிவிருத்தி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை கடந்த மாதம்;  திறந்து வைத்திருந்தார்.  

யாழ்ப்பாணத்தில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும் தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக காணிச் சுவீகரிப்புச் சட்டத்தில் பிரிவு 2 இன் கீழான அறிவித்தல்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றன.  

இதன் காரணமாக வலிகாமம் வடக்கு உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் 30000திற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளது. 

மேற்படி காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய அனைத்து மாவட்டங்களில் தீவிரமாக நடைபெறுகின்றது. 

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இராணுவக் குறைப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவது போல பாசாங்கு காட்டிவரும் இலங்கை அரசு மறுபுறத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நில அபகரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.  

இந் நிலச் சுவீகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்தக் கோரியும், இடம்பெயர்ந்து வாழும் வலி வடக்கு உட்பட்ட அனைத்து மக்களையும் உடன் மீள் குடியமர அனுமதிக்க கோரியும்,  இவ்விடயத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிவடக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களது வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் பொறு அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/64666-2013-04-22-06-09-50.html



 

Edited by nunavilan

இது என்ன தலைப்பு? யாருக்காவது புரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு புரியாமல் இருப்பதே தலைப்பின் வெற்றி தான்...! மக்களே நீங்கள் உங்கள் வழியில் உங்கள் தேவையை ஒட்டிப் போங்கள். குழப்பிற கூட்டம் குழம்பிற கூட்டம் அதைச் செய்து கொண்டிருக்கும். அதையெல்லாம் கணக்கில் எடுக்கப்படாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன தலைப்பு? யாருக்காவது புரிகிறதா?

 

உங்களுக்குப்புரியவில்லையா?

 

எங்களுக்கு உங்க தலைப்புக்கள் புரிந்தா படித்தோம்.........???

  • கருத்துக்கள உறவுகள்

"வலிவடக்கு ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கு ஆதரவு கூடுகிறது!" என்று வந்திருக்க வேணும்.. :D

ஆம், இசைக்கலைஞன் சொல்வதே சரி. ஆயினும் நான் சுட்டிக்காட்டிய ஒரே காரணத்தினால் இருவருக்கு தலைப்பு அர்த்தம் பொதிந்ததாக மாறி விட்டது. தயவு செய்து கருத்தைப் பாருங்கள். யார் சொன்னது என்பது அல்ல முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இசைக்கலைஞன் சொல்வதே சரி. ஆயினும் நான் சுட்டிக்காட்டிய ஒரே காரணத்தினால் இருவருக்கு தலைப்பு அர்த்தம் பொதிந்ததாக மாறி விட்டது. தயவு செய்து கருத்தைப் பாருங்கள். யார் சொன்னது என்பது அல்ல முக்கியம்.

 

இதை முதலில் நீங்கள் செயற்படுத்தணும்

நான்கு விரல்கள் உங்களை  நோக்கி...........

இனி தலைப்பை நியாயப்படுத்துவதற்காக இப்படி ஒரு அர்த்தம் கொடுப்பார்கள்:

சிறிலங்கா அரசு வலிவடக்கில் நடத்துகின்ற ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக (நடக்கின்ற போராட்டத்திற்கு) ஆதரவு கூடுகிறது. ஆனால் இதிலும் பொருட் பிழை உண்டு.

Edited by சபேசன்

சபேசன் இந்த திரிக்கு வந்தது தான் வந்தீர்கள், இந்த போராட்டம் தொடர்பாக உங்கள் கருத்தையும் பதிந்துவிட்டு போனீர்கள் என்றால் வாசிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்றும் தெளிவாக புரியும் அல்லவா.?

 

உங்களை போன்றவர்களின் அரசியல் ஞானம் மக்களை சென்றடைய யாழ் களமும் ஒரு வழியாகட்டும் என்ற நல்ல எண்ணம் தான் என் மனசில் குடி கொண்டு இருக்கிறது.

 



பிழம்பு அண்ணா அல்லது நிர்வாகம் தலைப்பை மாற்றினால் உங்களின் பிரச்சனை முடிந்தது ஆனால் அந்த மக்களின் பிரச்சனை .???

 

  • கருத்துக்கள உறவுகள்

வலிவடக்கு, ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக ஆதரவு கூடுகின்றது!

 

 

, இது தான் விடுபட்டது

இதற்கு இத்தனை அமர்க்களம் செய்கிறார்  சபேசன்

அவருக்கு

தமிழும் பிரச்சினை  போல....

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன தலைப்பு? யாருக்காவது புரிகிறதா?

 

 

தலைப்பு புரியும் படி மாற்றப்பட்டுள்ளது. இனி நீங்கள் உங்களின் கருத்துக்களை பகிரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.