Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்.

Featured Replies

இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றையும் முதல்வர் கொண்டு வந்தார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14414:chief-minister-jayalalithaa-on-katchativu-varkkappatta-recover-from-jet-assembly-resolution&catid=36:tamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய நகர்வு. 

 

வரலாற்று ரீதியாக தமிழகத்திற்கு சொந்தமான ஒரு பகுதியை பொந்தியா தன் சுயனலத்திற்கு தமிழர்களை அழிக்கும் ஒரு தேசத்திற்கு தாரவார்த்தது கண்டிக்கப்படவேண்டியது. இதற்கு துணைபோன திமுகவின் சுயநலம் வருந்தத்தக்கது.

இதேபோல் இடுக்கி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, குமரியில் நெய்யாற்றின்கரை போன்ற தமிழர் பகுதிகளையும் மீட்கப்பட வேண்டும்.

 

கச்சதீவை மீட்க பேரவையில் தீர்மானம்.

 

கச்சதீவை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

முன்னதாக, பேரவையில் இருந்த அனைத்து எதிர்க்கட்சியினர், இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தனர். திமுக, பாமக ஆகிய கட்சிகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், கச்சதீவை மீட்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.


தீர்மான விவரம்:-

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருவாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சதீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்துகிறது.

இந்தத் தீர்மானத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்), அ.சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), ஏ.அஸ்லாம் பாட்சா (மனித நேய மக்கள் கட்சி), கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஆர்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் வழிமொழிந்து பேசினர்.

பின்னர், முதல்வர் ஜெயலலிதா வழங்கிய பதிலுரை:-

இலங்கை நாட்டுக்கு கச்சதீவை காவு கொடுக்கும் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு ஜூனில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே இந்தப் பிரச்னை குறித்து பேசப்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் விரிவாக குறைந்தபட்சம் இரண்டு முறை பேசப்பட்டது எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதிலிருந்து,

இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கச்சதீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை இந்தியா, இலங்கை நாட்டுக்கு தாரை வார்க்கப் போகிறது என்பது நன்கு தெரியும்.

நான் எடுத்த நடவடிக்கைகள்: முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்றதும் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று கச்சதீவை மீட்போம் என்று அறிவித்தேன். கச்சதீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி எனது அரசால் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கச்சதீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமரை நேரில் பலமுறை வலியுறுத்திக் கூறினேன். கடிதம் மூலமும் வற்புறுத்தி இருக்கிறேன்.

இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, கச்சதீவில் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தயவில் மத்திய அரசு இருந்ததாலோ என்னவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அதிமுக சார்பில் பெருவாரி வழக்கினை மேற்கோள் காட்டி, கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்

கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் மத்திய அரசுடன், தமிழக அரசையும் பிரதிவாதியாக சேர்த்து இருந்தேன். ஆனால், அப்போது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு சார்பில் சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதும் பேரவையில் தீர்மானத்தை இயற்றி தமிழக அரசின் வருவாய்த் துறையையும் வழக்கில் இணையச் செய்தேன். ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்துள்ளது. வழக்கு நடந்து வருகிறது.

தீவை மீட்க வேண்டும்: தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடைமைகள் இலங்கை கடற்படையினரால் நாசம் செய்யப்பட்டன.

இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், தமிழக மீனவர்களைக் காக்க கச்சதீவை மீட்பதைத் தவிர வழியில்லை. மீனவர்களின் நலன் காக்கும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

இதன்பின், இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
 

http://www.newsalai.com/details/TN-assembly-resolution-abt-katchchatheevu.html

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவை மட்டுமல்ல சிறிலங்கா இனவாத அரசு அபகரித்து வைத்திருக்கும்

ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் சிங்கள இனவாதிகளிடமிருந்து

மீட்டெடுக்க ஒரு தீர்மானம் வேண்டும்.

ஈழத் தமிழர்களின் உயிராபத்தற்ற வாழ்விற்குத தனித் தமிழீழமே இறுதி முடிவு

என்ற தீர்மானத்தையும் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அதை

இந்திய நாடாளுமன்றிலும்  நிறவேற வைக்க வேண்டும்

 

 

நல்ல தீர்மானம் ..............ஆனால் செயல்வடிவம் கொடுப்பதே அம்மையாரின் பாரிய பொறுப்பாகும் ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.