Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புலிகள் இன்று இருந்திருந்தால் வடகிழக்கில் இட்மபெற்றுவரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்பட்டிருக்காது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கை நியாயமானதும், நீதியானதும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது. எமக்கான தீர்வ கிடைக்கம் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
எமது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர். ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும், தமது பதவிகளுக்காகவும் எமது உரிமைகளைத் தர மறுக்கின்றனர். விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இட்மபெற்றுவரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
சமகால அரசியலும், இன்றைய தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் என்னும் பொருள்பற்றியும் வாக்காளர் பதவுகள் பற்றியும் திருகோணமலை சில்வெஸ்டர் ஹோட்டலில் நேற்று ஞாயிறு காலை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 
 
இன்று வடகிழக்கில் பல்வேறு கெடுபிடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் பல்வெறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். காணிகளை சுவீகரிக்கின்றார்கள். மக்களின் மீள் குடியேற்றம் முறையாக செய்யப்படவில்லை. புலிகள் இருந்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் நடைபெற வாய்ப்பு இருந்திருக்காது. அதற்காக விடுதலைப் புலிகள் சரியானவர்கள், பிழை செய்யவில்லை என்று சொல்லவரவில்லை.
 
எமது மக்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். எங்களுக்கென தனித்துவமான மொழி, கலாசாரம், பாரம்பரியம் உண்டு. குறிப்பிட்ட பிரதேசங்களில் நாங்கள் வாழ்ந்து வந்திருக்கிறோம். நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து எல்லாத்துறைகளிலும், நாங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.
 
நாங்கள் தமிழ் மக்கள். தனி தேசிய இனம். சர்வதேச சட்டங்களின்படி ஐ.நா. பிரகடனங்களின்படி நாங்கள் மக்கள். மக்கள் என்ற சொல்லுக்கு வலுவான கருத்துண்டு. எங்கள் உரிமைகளை நாங்கள் கேட்ட காரணத்தினாலேயே புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறோம். எமது சந்ததி இந்த நாட்டில் ஒரு உரிமையுடன் பின் சந்ததியாக வாழ வேண்டும். அதற்காகவே போராடுகின்றோம்.
 
அரசாங்கத்தில் பின் வரிசையில் இருக்கின்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பணம் 100 மில்லியன் ரூபா. நான் அபிவிருத்தி பற்றி கவனிக்கவில்லை என குற்றஞ்சாட்டுகிறீர்கள். அந்த பின் வரிசை ஆசனக்காரர் போல் நானும் அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பேனானால் 500 மில்லியன் பணத்தைப் பெற்று அபிவிருத்தியை செய்துகொள்ள முடியும். அபிவிருத்திக்காக எனது இனத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன். எமது இலட்சியத்தை விட்டுக் கொடுக்கமாட்டேன். எனது மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும். இரண்டாம் தரப் பிரஜைகளாக இருக்கக்கூடாது என்று விரும்புகின்றவன் நான். இந்த நாட்டில் எமது சந்ததி தலைநிமிர்ந்து வாழ வேண்டும். அதை அடகுவைக்க நான் தயார் இல்லை.
 
தந்தை செல்வா சாத்வீக ரீதியாக போராடினார். சமாதானம் பேசினார். ஒப்பந்தம் செய்தார். அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்தார். ஒன்றும் கைகூடவில்லை.
 
அடுத்து ஆயுதப் போராட்டமாக மாறியது. தற்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பிறகு என்ன நடக்கிறது. சமாதானத்தீரவை அடைவதற்கு எங்களால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்கிறோம்.
 
எமது போராட்டம் இன்று இலங்கைத் தீவை தாண்டி வெளியே சென்றுள்ளது. ஐ.நா. சபைக்குப் போய் இருக்கிறது. ஐக்கிய நாடுக் சபையின் மனித உரிமை சபைக்குப் போயிருக்கிறது. எமது தீர்மானத்தின் அடிப்படையில் அமெரிக்கா, மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எமது நோக்கத்தை இலக்கை அடைவதற்கு நாங்கள் ஒன்றுபட வேண்டும். கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
 
கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. மூன்று மாவட்டங்களிலும் இன்னும் கூடுதலான ஆதரவு கிடைத்திருந்தால், ஆட்சியைக் கைப்பற்றி இருக்க முடியும். ஏன் இரண்டு மாவட்டங்களிலும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருந்தாலும், ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் அதில் எமக்கு வெற்றிபெறும் சாதக நிலை உருவாகும் என்று சொல்லிவிட முடியாது. 17ஆவது சரத்து நீக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? அல்லது தேர்தல் நடைபெறுவதற்கு முன் அவர்கள் வருவார்கள் என்று அரசு உத்தரவாதம் வழங்க முடியுமா? இன்றைய நிலையில் சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படுமென்று அரசாங்கத்தினால் உத்தரவாதம் தரமுடியுமா?
 
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட வேண்டும். பொலிஸ், காணி அதிகாரங்களை பறித்துவிட வேண்டம் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் வடக்கு மாகாண தேர்தல் நடந்தால் ஆட்சி தமிழ் மக்கள் கையில் போய்விடும். தாம் ஆட்சியமைக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே 13ஆவது திருதத்தை இரத்துச் செய்ய வேண்டும். பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கவிட வேண்டும் என முயற்சி செய்கிறார்கள்.
 
ஒருமித்த நாட்டுக்குள் இறைமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேலாக நாம் ஒன்றையும் கேட்கவில்லை. எமது கோரிக்கை நியாயமானது. நீதியானது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அங்கீகரிக்கின்றது. நாங்கள் இன்று முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எமது கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் சிங்கள மக்களின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகள் அதை மறுத்து வருகிறார்கள். சிங்கள மக்கள் நேசிக்கிறார்கள். எங்களுக்கு தீர்வு தர தயாராகவுள்ளார்கள். ஆனால், அரசியல் தலைவர்கள் தமது சுயநலத்துக்காக, தமது பதவிக்காக எமது உரிமைகளைத் தர மறுக்கிறார்கள்.
 
நாங்கள் மீண்டும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். எமக்கு தீர்வு கிடைக்கும். அது வரும் வரை பொறுத்திருப்போம். தீர்வு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன். எனத் தெரிவித்தார்.
 
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, நகர முதல்வர் க.செல்வராஜா, மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன், தவிசாளர் விஜேந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தாரகள்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92227/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அல்சிமர் ஞாபக மறதி.. மூளைப் பிறழல்.. வாய் உழறல்.. பிரச்சனை போல..! அடிக்கடி மாற்றி மாற்றிக் கதைக்கிறாரே..! :lol:

இவருக்கு அல்சிமர் ஞாபக மறதி.. மூளைப் பிறழல்.. வாய் உழறல்.. பிரச்சனை போல..! அடிக்கடி மாற்றி மாற்றிக் கதைக்கிறாரே..! :lol:

 

தேர்தல் வருகுதாம் எண்டு கதையை கிழப்பி விட்டிருக்காங்கள் இல்லை...   தமிழ் சனத்திட்டை வாக்கு வாங்கிறது எண்டால் கல்லிலை நார் உரிக்கிறது மாதிரி பாருங்கோ...   பாழ் படுவார் யரையும் நம்புறது இல்லை....   வேறை என்னத்தை செய்ய... ?? 

ஆண்டிகளையும் பிடிக்காது. சம்பந்தர் மாதிரி அப்பப்பாக்களையும் பிடிக்காது. அஞ்சலீனா, பீராட் மாதிரி சோடிகளை பிடிக்குமா? :lol:

இந்தமுறை தனக்கு வாக்குகள் வராது என்ற கவலை வந்திருக்கும்!

அதனாலே அவரோட புதுசா ஒப்பந்தம் போட்டு ஆதரிக்கும் ஒருசில அமெரிக்கரின் ஆலோசனையின் படி கதைத்திருக்கலாம்.

தேர்தல் முடிய வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடும்? 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அல்சிமர் ஞாபக மறதி.. மூளைப் பிறழல்.. வாய் உழறல்.. பிரச்சனை போல..! அடிக்கடி மாற்றி மாற்றிக் கதைக்கிறாரே..! :lol:

 

அல்சிமர் என்றால்... என்ன வருத்தம், நெடுக்ஸ்.

இதுவரை நான்... கேள்விப்படாத வருத்தமாய் இருக்கு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.