Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் துப்பாக்கிச் சூடு; ஒரு தமிழர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada_tamils_001.jpg

 

 

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கனேடியத் தமிழர் கொல்லபப்ட்டுள்ளார்.இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார்.

 

இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

 

இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுடைய தொகுதி என்பதுடன் அண்மைகாலமாக இப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்து காணப்டுகின்றது. கடந்த ஏப்ரல் 25 ம் திகதியன்றும் இன்று கொலை நடந்த இடத்தில இருந்து 200 மீட்டர் தொலைவில் இன்னொரு நபர் கொல்லப்பட்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

 

 

=========================

 

மேலதிக விபரம் அறிந்த யாழ் உறவுகள் மிச்ச செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். என்ன தான் நடக்குது அங்க..! மீண்டும் குழுச் சண்டையா..??! :(:rolleyes:

 

 

ஏனப்பா இதற்குள் ராதிகாவின் பெயரை இழுத்துள்ளார்கள்.

எல்லாம் எமது அயல்தான் .பழைய படி 90 கள் போல தொடர் கதை ஆகாவிட்டால் சரிதான் .

சுரேந்திராவிற்கு எனது அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா கொலைக்கு என்ன செய்வார்? யாராவது கொலை செய்யப்படுவதற்கும் ராதிகாவுக்கும் என்ன சம்பந்தம்? ராதிகாவின் தொகுதி என்ற படியால் தான் கொலை நடந்ததா? ஏனையவர்களின் தொகுதிகளில் கொலை நடப்பதில்லையா??

 

கண்ணீர் அஞ்சலிகள்

இவர் மாவை சேனாதிராசாவின் பிறாமகன் , இலங்கை இராணுவத்தின் மற்றொரு எல்லைதாண்டிய பயங்கரவாத செயல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேக நபர்கள் மூன்றுபேர் ஓடுகிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

இவர் மாவை சேனாதிராசாவின் பிறாமகன் , இலங்கை இராணுவத்தின் மற்றொரு எல்லைதாண்டிய பயங்கரவாத செயல்

 

அவர் மாவையின்ட சொந்தக்காரராய் இருந்தால் கட்டாயம் சிங்களவன் தான் கொல்ல வேண்டுமா?...கனடாப் பொலீஸ் விசாரித்து முடிந்து விட்டதா :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பா இதற்குள் ராதிகாவின் பெயரை இழுத்துள்ளார்கள்.

எல்லாம் எமது அயல்தான் .பழைய படி 90 கள் போல தொடர் கதை ஆகாவிட்டால் சரிதான் .

சுரேந்திராவிற்கு எனது அனுதாபங்கள் .

 

பழையபடி என்பது என்ன கருத்தில் சொல்லுகிறீர்கள்?

90 களில் வாரத்திற்கு ஒருமுறையாவது எம்மவர் அடிபாடு பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கும் .கொலைகளும் நடந்திருக்கு .அதுவும் உதைபந்த மைதானங்கள் ,கலைநிகழ்சி மண்டபங்களில் அதிகம் நடைபெற்றதால் தமிழருக்கு மைதானங்கள் ,மண்டபங்கள் கொடுக்க city  மறுத்துவிட்டது ,பின்னர் போலிஸ் காவலுடன் நடாத்த அனுமதித்தார்கள் .மண்டப வாடகை இரு நூறு டொலர்கள் போலிசுக்கு ஐநூறு கொடுத்த காலங்கள் அவை .எனது கண்ணாலேயே துப்பாக்கி சூடுகள்,வாள்வெட்டுக்கள்,அடிபிடிகள் பார்த்திருக்கின்றேன் .

90களில் என்ன நடந்ததோ தெரியாது. ஆனால், தொழில்நுட்பம், விஞ்ஞானம் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டது. செய்திதரவுகளை பார்க்கும்போது விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்றே தெரிகின்றது.

Edited by கரும்பு

90 களில் வாரத்திற்கு ஒருமுறையாவது எம்மவர் அடிபாடு பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கும் .கொலைகளும் நடந்திருக்கு .அதுவும் உதைபந்த மைதானங்கள் ,கலைநிகழ்சி மண்டபங்களில் அதிகம் நடைபெற்றதால் தமிழருக்கு மைதானங்கள் ,மண்டபங்கள் கொடுக்க city  மறுத்துவிட்டது ,பின்னர் போலிஸ் காவலுடன் நடாத்த அனுமதித்தார்கள் .மண்டப வாடகை இரு நூறு டொலர்கள் போலிசுக்கு ஐநூறு கொடுத்த காலங்கள் அவை .எனது கண்ணாலேயே துப்பாக்கி சூடுகள்,வாள்வெட்டுக்கள்,அடிபிடிகள் பார்த்திருக்கின்றேன் .

 

இத்தகைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர்களை கனடா நாடுகடத்தியது.  அதனால் குறைந்திருந்தது.  ஆனால், இப்போது மீண்டும் வன்முறை தொடங்கிவிட்டது.  அதற்கு ஒத்து ஊதுகின்றவர்களும் அதிகரித்து விட்டார்கள். 

அவர் மாவையின்ட சொந்தக்காரராய் இருந்தால் கட்டாயம் சிங்களவன் தான் கொல்ல வேண்டுமா?...கனடாப் பொலீஸ் விசாரித்து முடிந்து விட்டதா :unsure:

 

உறவுமுறையை ஒரு தகவலுக்காக சொன்னேன், எதற்காக கொல்லப்பட்டார் என்று தெரியாது, ஆனால் இவர் புலிகளுக்கு ஆதரவாக பிரான்சில் முன்னர் வேலைசெய்தவர் , 2009 பின் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார் , இதே பாணியில் பிரான்சில் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டார் , அது இலங்கை அரசின் செயல் என்று விசாரனையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது

 

http://www.citynews.ca/2013/06/01/family-heartbroken-after-man-fatally-shot-in-east-end-backyard/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.