Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் தலைமையில் ஐ.தே.க ஆட்சியமைக்கும் சாத்தியமில்லை..

Featured Replies

ரணில் தலைமையில் ஐ.தே.க ஆட்சியமைக்கும் சாத்தியமில்லை.. 

[sunday, 2013-06-02 19:03:33]
ranil-seithy-2012-150.jpg

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் ஆருடர்களை ஒன்றுக்கூட்டு அவர்களின் ஆருடங்கள் பெறப்பட்டன. இதன்போது சில ஆருடர்கள் ஐக்கிய தேசியக்கட்சி இந்த வருடத்துக்குள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தனர். எனினும் இலங்கையின் முன்னணி ஆருடர்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றோ ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆட்சி அமையும் என்றோ கூறவில்லை என்று குறிப்பிட்டு;ள்ளது

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=84144&category=TamilNews&language=tamil

 

 

இப்படி சிறிய சமாசாரங்களுக்கெல்லாம் அப்படி பெரிய மனிதர்களை அழைத்து பணத்தை விரயமாக்குகிறார்களே. நம்மை ஒரு சொல்லு கேட்டிருந்தால் இலவசமாக சொல்லிகொடுத்திருக்க மாட்டோமா? 

செய்திக்காக இந்த படத்தைத் தேடிப்பிடித்தவர் உண்மையான திறமை சாலி.

 

இப்படி சிறிய சமாசாரங்களுக்கெல்லாம் அப்படி  ஆருடர்களை அழைத்து பணத்தை விரயமாக்குகிறார்களே. நம்மை ஒரு சொல்லு கேட்டிருந்தால் இலவசமாக சொல்லிகொடுத்திருக்க மாட்டோமா? 

 

 

ranil-seithy-2012-150.jpg

 

:D  :D

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே விமோசனம் சஜித் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே விமோசனம் சஜித் தான்....

 

ஆனால் அவரும்  ஒரு இனவாதப் பேயின் வாரிசாக இருக்கின்றாரே... 

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் ஒரு இனவாதி தான் ஆனால் ஐக்கிய தேசிய கட்சி க்கு அவர் வரவு நல்லதே தவிர தமிழர் தரப்புக்கு அல்ல.... காலம் காலமாக இலங்கையை ஆண்டதும் ஆளப்போவதும் இனவாதிகளே தான் ...... இனவாத பேச்சு தான் கிராமப்புற சிங்கள மக்களிடமும் புத்த துறவிகளிடமும் எடுபடும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரேமதாசாவோட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்போ பிரேமதாசா நல்லவரு .....

ரணிலோட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்போ ரணிலு நல்லவரு .....

9 கோடி வேண்டிக்கொண்டு வாக்கு போடாம தடுத்தப்போ மகிந்தா நல்லவரு ....

இப்போ ரணிலவிட சஜீத்து நல்லவரெண்டு ஒரு கதை இங்க அடிபடுது .....

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலை இல்லை எண்டுதானே இங்க இருக்கிறம் ....

அங்கயும் அப்பிடி காலம் வந்திட்டுது ....

வடமாகான லெக்சன் முடிய .... வடமாகான தமிழரே தலைமை பற்றி உதைத்தான் சொல்லப்போகினம் ... :lol: :lol:

  • தொடங்கியவர்

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னான சரித்திரத்தில் பின்னால் வந்த தலைவர்கள் முன்னால் இருந்தவர்களை விட இனவாதிகளாகத்தான் இருந்தார்கள். (ஆனால் சந்திரிக்கா பதவிக்கு வருவதற்கு இன வாதத்தை விட ஸ்டார் தகமைதான் முன்னின்றது. இதனால் சந்திக்கா சமாதனம் பேசுவதாக மேற்குநாடுகள் நம்பின) எனவே மகிந்தாவை விழுத்த அதைவிட இனவாதம் சயீத்தால் பேச முடியுமா என்பது ஒரு கேள்வி. முடியாது என்றால் அவருக்கும் ரணிலுக்கும் இடையில் சிங்கள் மக்களிடம் அதிக தேர்வு வித்தியாசத்தை காணமுடியாமல் போய்விடும். 

 

இரண்டு நிலைகள் உண்டு - இனவாதமா அல்லது இனவாத வன்முறையா என்று இரண்டு இருப்பத்தால் சயீத் இனவாத வன்முறையிலும், ரணில் இனவாதத்திலும் கூடியவர்கள். கருணாவிடையம், சந்திரிக்கா காலத்தில் அரசியலமைப்பை திருத்தி தீர்வு முன்வைக்க முடியாமல் போனமை, பான்-கி-மூனிடம் சென்று மகிந்தவை போர்குற்றத்திலிருந்து காப்பாற்ற நிபுணர் அறிக்கையைத் தள்ளிவிடக் கேட்டது போன்றவற்றால் ரணில் மோசமான இனவாதி. இப்படியானவற்றை சயீத்திடமிருந்து இன்னமும் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் சிங்களப் பாமரமக்கள் இரண்டுக்கும் இடையில் இருக்கும் பேதத்தை உணராமல் இனவாத வன்முறையை ஆதரிக்கலாம் தந்த நேரத்தில் சயீத் அவர்களுக்கு நல்ல தேர்வாகப் படலாம்.

 

ஆனால் மகிந்தாவை விட இனவாதி கிடைக்காவிட்டாலும் பொருளாதாரம் பதவி மாற்றத்திற்கு உதவலாம். சீனாவை வைத்து பொருளாதாரதை கட்டி எழுப்பிய நாடுகள் இதுவரையில் இல்லை. லிபியா, மியன்மார் மாதிரி அழிந்தவைகள் தான் உண்டு. சீனாவில் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரம் அந்த வகையில் உதவலாம். சிங்கள மக்கள் தமது மனதுக்கு  பிடித்த தேர்வு ஒன்றை கண்டு பிடித்தாலும் ஒரு ஜனாதிபதி தேர்தலைக்கொண்டுவந்து பதவியை மகிந்தா இன்னொருவர் கையில் கொடுத்து விட்டு நடந்தது எல்லாவற்றுக்கும் பொறுப்பு எடுக்கத் தயாராவாரா? இல்லையாயிம் சயீத்தும், ரணிலும் ஒருவரே. இருவருக்கும் இடையில் வித்தியாசம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாசாவோட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்போ பிரேமதாசா நல்லவரு .....

ரணிலோட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்போ ரணிலு நல்லவரு .....

9 கோடி வேண்டிக்கொண்டு வாக்கு போடாம தடுத்தப்போ மகிந்தா நல்லவரு ....

இப்போ ரணிலவிட சஜீத்து நல்லவரெண்டு ஒரு கதை இங்க அடிபடுது .....

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலை இல்லை எண்டுதானே இங்க இருக்கிறம் ....

அங்கயும் அப்பிடி காலம் வந்திட்டுது ....

வடமாகான லெக்சன் முடிய .... வடமாகான தமிழரே தலைமை பற்றி உதைத்தான் சொல்லப்போகினம் ... :lol: :lol:

 

 

காலத்துக்கு ஏற்ப நல்லவன் என்று சொல்லி கருமத்தை முடிப்பதை இராஜதந்திரம் என்று சொல்வார்கள்.உலகின் பல இடங்களில் இது தான் நடந்தது. நடக்கிறது. 
 
சஜித் சிங்கள மக்களுக்கு தான் நல்லவர் என சொல்லப்பட்டுள்ளது. கிரகித்து வாசிக்க பழகவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.