Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாதப் போராட்டம் அல்ல - இன விடுதலைப் போராட்டம் - யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

Featured Replies

ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாதப் போராட்டம் அல்ல. இது இன விடுதலைப் போராட்டம் என்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இங்கே நடைபெற்ற போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று சித்தரிப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்  பயங்கரவாதம் என்ற பெயர்சுட்டி நடைபெறுகின்ற கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களைத் தாங்கள் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழித்துள்ள நிலையில் மீள் இணக்கம் என்ற தொனிப்பொருளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கு தாங்கள் செல்வதில்லை என்றும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கலந்துரையாடல் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ்.பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடி ஏற்பாடு செய்யவில்லை என்றும் ஆசிரியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

அத்துடன் மீள் இணக்கத்திற்கான கலந்துரையாடல் என்று எழுதப்பட்டுள்ள கடிதத்தில் “பயங்கரவாதத்தினை ஒழித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீள் இணக்கம்” என்ற தொனிப்பொருளில் ஆராயவுள்ளதாக எழுதப்பட்டுள்ளதை தாங்கள் முற்றாக எதிர்ப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

'பயங்கரவாதம் என்ற சொல்லை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அச்சொல்லிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றும் ஆசிரியர் சங்கதினர் தெரிவித்துள்ளனர்.

தூயகத்தில் நடைபெற்ற போராட்டம் விடுதலைக்கான போராட்டமே தவிர பயங்கரவாத போராட்டம் அல்ல. வடக்கில் மீள் இணக்கம் சாதகமாக இல்லை. சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அத்துடன்; நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள் காணப்படுகின்றன.

இத்தகைய தலையீடுகள் முற்றாக நீக்கப்பட்டு, தமிழர்களுக்கான உரிமை வழங்க வேண்டும். அடிப்படை பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும், அவ்வாறு தீர்க்கப்படாத பட்சத்தில் மீள் இணக்கப்பாடு என்னும் கலந்துரையாடலில் கலந்து கொள்வது பிரியோசனமாக இருக்காது என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்களவர்கள் தமிழ் உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் எந்த இணக்கப்பாடும் இடைக்கப் போவதில்லை. சிங்களவர்களின் மனநிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15787:terrorism-is-not-held-in-sri-lanka-sex-liberation-struggle-general-association-of-university-teachers&catid=86:eezham&Itemid=104

வாழ்க யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!

வாழ்க யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!

 

அரச பயங்கரவாதம் அழிக்கப்படால் தான் மீள் இணக்கம் சாத்தியம் என்று மனதில் நினைப்பதை அவர்களால் வெளிப்படையாக சொல்ல முடியாது.

"அரச பயங்கரவாதம்", "சிங்கள பயங்கரவாதம்" என்று சொன்னால் அரசின் எடுபிடிகளாக இருக்கும் "தமிழரும்"  சகித்துக் கொள்ளமாட்டார்கள்.

Edited by Sayani

  • கருத்துக்கள உறவுகள்

சரியான அறிக்கை.. ஆசிரியர் சங்கத்திற்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

துணிவான அறிக்கை!

 

ஆசிரியர் சங்கத்திற்கு நன்றிகள்!

983589_278359682310281_1691892536_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் சங்கத்திற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை எங்களுக்கு மட்டும் சொல்லாமல்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதன் கீழ் குண்டுகளையும் தொழில்நுட்பங்களையும்.. புலனாய்வுகளையும்.. கண்காணிப்பு பணிகளையும்.. வானூர்திகளையும்.. படைகளையும் வழங்கி தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் வாழ்விடங்களையும் பறித்து அடிமைப்படுத்தி உள்ள சர்வதேச சமூகத்தை நோக்கி ஒரு ஆவணப்படுத்திச் சொல்லுங்கள்.

 

1995 சூரியக் கதிர் நடவடிக்கை காலத்தில்.. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பினர் என்ற சிறிதரன் குழுவினர்.. விட்ட அறிக்கைகளை பிபிசி அன்றைய காலத்தில் சந்திரிக்கா - ரத்வத்தை கூட்டணியின் படுகொலைகளை.. புலிக் கொலைகளாக இனங்காட்ட பாவித்து வந்தது. இன்று வரை அவர்கள் வெளியிட்ட பல உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளிநாடுகளிடம் ஆவணமாகப் பேணப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் தான் எமது மக்களின் பேரழிவுக்கும் அடிமை வாழ்விற்கும்.. காரணமாகின. அந்த வகையில் இவற்றிற்கு பிராய்ச்சித்தம் தேட வேண்டிய தார்மீகப் பொறுப்பு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புக்களுக்கு உள்ளது..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.