Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்

Featured Replies

சமஸ்

எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த சரப்ஜித் சிங்?

நமக்கு சரப்ஜித் சிங் தொடர்பாக இரண்டு கதைகள் தெரியும். சரப்ஜித் சிங் ஓர் அப்பாவி. இந்தியா - பாகிஸ் தான் எல்லை அருகே போதையில் சுற்றித் திரிந்த சரப்ஜித் சிங்கைக் கைதுசெய்த பாகிஸ்தான், அவரை இந்திய உளவாளியாகச் சித்திரித்து சிறையில் அடைத்தது. ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் அவருக்குப் பங்கு இருப்பதாக ஜோடித்து மரண தண்டனை வழங்கியது. இது இந்தியக் கதை.

 

சரப்ஜித் சிங் ஒரு பயங்கரவாதி. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் கைக்கூலியான அவர், 14 பேர் உயிர் இழக்கக் காரணமாக இருந்த 1990 லாகூர், பைசலாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் சதியில் முக்கியப் பங்காற்றிய குற்றவாளி. இது பாகிஸ்தான் கதை.

 

சரப்ஜித் சிங்கின் சடலம் தனி விமானத்தில் இந்தியா கொண்டுவரப்படும் வரை பாகிஸ்தான் சொன்ன கதையை உறுதியாக மறுத்தது இந்திய அரசு. அதாவது, சரப்ஜித் சிங் ஏதும் அறியாத அப்பாவி என்றது. ஆனால், சடலம் வந்த பின் நடந்த சங்கதிகள் இந்தியக் கதை மீதான நம்பகத் தன்மையைக் கிழித்து எறிந்தன. இந்த நாட்டில் இதற்கு முன் எந்த அப்பாவியின் மரணத்துக்கும் இவ்வளவு மரியாதை கொடுக்கப்பட்டதில்லையே?

 

சரப்ஜித் சிங் ஓர் உளவாளி என்பதை சரப்ஜித் சிங்\மரணத்துக்கு அளிக்கப்பட்ட மரியாதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில், டெல்லியில் அரசே கசியவிட்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. சரப்ஜித் சிங் இறந்த அடுத்த சில நாட்களில், நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்ட ஒரு செய்தி, ‘‘பாகிஸ்தானில் ‘ரா’ முன்னெடுத்த ‘ஒரு திட்ட’த்தில் பங்கேற்றவர் சரப்ஜித் சிங்; இந்தத் திட்டத்தை முன்னெடுத்த அதிகாரி பின்னாளில் உளவுத் துறையின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர்’’ என்று அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிடாமல் சொன்னது. இந்தியாவில் அரசின் கண்ணசைவு இல்லாமல் இப்படி ஒரு செய்தி வெகுஜன ஊடகங்களில் வெளியாக வாய்ப்பே கிடையாது. ஆக, இதுவரை இந்தியா சொன்ன கதை பொய்க் கதை

funeral-protest.jpg.

 

 

 

சீன, பாகிஸ்தான் போர்களுக்குப் பின் 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட ‘ரா’ உளவுப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகப் பெரும்பான்மை இந்தியர் கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மை அல்ல. எப்படி அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’, இஸ்ரேலின் ‘மொஸாத்’ ஆகியவை சதி வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அப்படியே ‘ரா’வும் சதி வேலைகளில் ஈடுபடுகின்றது. எப்படி இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பின்னின்று இயக்குகிறதோ, அப்படியே ‘ரா’வும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைப் பின்னின்று இயக்குகிறது.

 

ஒருகாலத்தில் அண்டை நாடுகளை மேலாதிக்கம் செய்ய அங்குள்ள அரசுகளுக்கு எதிராக ‘ரா’ காய்களை நகர்த்தியது. பின்னர், அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் நிதி உதவியும் வழங்கியது. சிக்கிம் அப்படித்தான் இந்தியாவோடு இணைந்தது. வங்கதேசம் அப்படித்தான் உருவானது. இலங்கையில் அந்த நோக்கத்தில்தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. தொண்ணூறுகளில் பயங்கரவாதத்தையும் ஓர் உத்தியாக ‘ரா’ கையில் எடுத்தது. 'ரா’வின் சிறப்புப் பிரிவான ‘சி.ஐ.டி. எக்ஸ்’ முன்னெடுத்த இந்தச் சதி வேலை கள் குஜ்ரால் காலத்தோடு முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய அரசு சொன்னது.

ஆனால், ‘‘ ‘சி.ஐ.டி. எக்ஸ்’ தொடர்ந்து செயல்படுகிறது. இப்போது அதன் செயல்பாடுகள் மேலும் பல மடங்கு விரிவடைந்திருக்கின்றன. இஸ்ரேலின் ‘மோஸாத்’துடனும் அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ’-வுடனும் இணைந்து தனித்தனியே பல திட்டங்களை ‘சி.ஐ.டி. எக்ஸ்’ முன்னெடுக்கிறது. இவற்றில் முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பது. பல்வாரிஸ்தான் இயக்கத்தைப் பின்னின்று இயக்குவதே ‘சி.ஐ.டி. எக்ஸ்’தான். இதில் ஆப்கனியர்களை இரண்டாம் படையாக இந்தியா பயன்படுத்துகிறது” என்று தொடர்ந்து கூறிவருகிறது பாகிஸ்தான்.

ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இந்தியாவைப் பார்த்து, வெளிப்படையாகவே கேட்டார்: ‘‘நீங்கள் 'ஐ.எஸ்.ஐ.' மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஆனால், ஆப்கனில் கந்தஹாரிலும் ஜலாலாபாத் திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? உங்கள் ‘ரா’ என்ன செய்துகொண்டிருக்கிறது?”

 

முஷாரப்பின் கேள்வியை பல்வாரிஸ்தான் தேசிய முன்னணியின் தலைவர் அப்துல் ஹமீது கான் சொன்ன ‘‘எங்களுக்குத் தேவை பல்வாரிஸ்தான். இந்தியாவா, பாகிஸ்தானா என்று எங்களைக் கேட்டால், நாங்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுப்போம்” என்ற வார்த்தை களோடும், உளவுப் பணியின்போது பிடிபட்டு, சித்திர வதைகளைச் சுமந்து, நடைப்பிணங்களாக நாடு திரும்பி, ஓய்வூதியத்துக்காக அலையும் நூற்றுக்கணக்கான இந்திய உளவாளிகளின் மத்தியில், சரப்ஜித் சிங்குக்கு அளிக்கப்பட்ட ‘வீரத் திருமகன்’ மரியாதையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்... பதில் தெரியும்

 

http://www.kalachuvadu.com/issue-162/page09.asp

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய உளவுப்படையை மொசாட், சி.ஐ.ஏயுடன் ஒப்பிட முடியாது.பாகிஸ்தான் உளவுப்படை இந்தியாவில் பல நாச வேலைகளை செய்துள்ளனர்.ஒப்பீட்டலவில் இந்திய உளவுப்படை நோஞ்சான்களை நோண்டத்தான் லாயக்கானவர்கள்.
ஆப்கானியர்களால் கடத்தப்பட்ட இந்திய விமான கடத்தலில் இந்திய உளவுப்படையின் கெட்டித்தனம் தெரிந்து விட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இலங்கை அணியின்மீது துப்பாக்கிச் சூட்டுக்கும் இவர்கள்தான் காரணம் என சந்தேகம் உள்ளது..

பாகிஸ்தானில் இலங்கை அணியின்மீது துப்பாக்கிச் சூட்டுக்கும் இவர்கள்தான் காரணம் என சந்தேகம் உள்ளது..

 

அடப் பாவிகள்!  என்னுடன் வேலைசெய்த குஜராத்தி, இந்திய பத்திரிகைகளுக்கு பாகிஸ்தானில் நல்ல தொடர்பு இருக்கு அவை எல்லாம் புலிகள்தான் செய்திருக்கின்றன என்றுதான் எழுதுகின்றன என்று வந்து சொன்னார்.  பின்னாளில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் என்று சந்தேகித்த போது வயை மூடிவிட்டார். ஆனல் இப்படி நடந்தையா அந்த நேரம் இந்திய பத்திரிகளை அப்படி போட்டன?

 

 

இவற்றில் முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பது.

 

அது நடந்தால் மட்டும் சந்தோசம். பாகிஸ்தான் ஒருபாடம் படிப்பது மட்டும்மல்ல. ஒரு இனம் விடுதலை பெறும் என்பதினால்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகள்! என்னுடன் வேலைசெய்த குஜராத்தி, இந்திய பத்திரிகைகளுக்கு பாகிஸ்தானில் நல்ல தொடர்பு இருக்கு அவை எல்லாம் புலிகள்தான் செய்திருக்கின்றன என்றுதான் எழுதுகின்றன என்று வந்து சொன்னார். பின்னாளில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் என்று சந்தேகித்த போது வயை மூடிவிட்டார். ஆனல் இப்படி நடந்தையா அந்த நேரம் இந்திய பத்திரிகளை அப்படி போட்டன?

அது நடந்தால் மட்டும் சந்தோசம். பாகிஸ்தான் ஒருபாடம் படிப்பது மட்டும்மல்ல. ஒரு இனம் விடுதலை பெறும் என்பதினால்.

புலிகள்.. அதுவும் பாகிஸ்தானில்.. :D பிறகு பிடிபடவும் இல்லை.. அடேயப்பா.. :D

அந்தநேரம் பல இந்தியர்கள் இப்படித்தான் புசத்திக்கொண்டு திரிந்தார்கள்.. ஒருகட்டத்தில் தமிழக மீனவர்களைப் புலிகள் கடத்தியதாக ஒரு பிரச்சினை போனது.. பிறகு மீண்டுவந்த மீனவர்களை பேட்டி காண விடாமல் தடுத்தார்கள்.. கலைஞர் ஆட்சியில் நடந்தது.. மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போனது இலங்கை கடற்படைதான் என்கிற உண்மை பிறகு வெட்டவெ ளிச்சம் ஆகியது..

ஆக, பழி போடவது என்றால் யாரும் யாருக்குமேலும் பழிபோடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
இவற்றில் முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பது. பல்வாரிஸ்தான் இயக்கத்தைப் பின்னின்று இயக்குவதே ‘சி.ஐ
2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இராணுவம் இந்த பகுதியில் கடுமையான இராணுவநடவடிக்கையை மேற்கொண்டது..பல்லாயிரமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.