Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை காவலர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்....

Featured Replies

இலங்கை காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : கருணாநிதி!

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2006 (13:55 ஐளுகூ)

கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறிலங்க காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்!

தமிழக சட்டப் பேரவையில் இன்று உயர்கல்வி மானியத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறிய கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார்.

கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் சிறிலங்க காவல் அதிகாரிகள் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூறியதை மத்திய உள்துறை செயலருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் வாயிலாக தெரிவித்திருந்ததாகவும், அதற்கு மத்திய அரசின் உள்துறை செயலர் அனுப்பிய பதில் கடிதம் இன்று வந்ததாகவும், சிறிலங்க காவல் அதிகாரிகள் அனைவரும் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.

முதலமைச்சர் கருணாநிதி பேரவைக்கு இத்தகவலை தெரிவித்தவுடன், அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக, இப்பிரச்சனை குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் செல்வம், தமிழர்களின் உணர்விற்கு எதிராக சிறிலங்க காவலர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்சனையில் மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூ விடுதலைச் சிறுத்தைகளும், மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேறினர்.

தமிழர்களின் உணர்வுகளை இப்பிரச்சனை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதனை மத்திய அரசு புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.

http://www.webulagam.com/news/regional/060...060804007_1.htm

இந்திய நடுவெண் அரசின் நடவடிக்கை மானில அரசின் வேண்டுதலால் நடாத்தப்பட்டு இருக்கின்றது.

இதில் ஏதோ செய்தி ஒண்று இலங்கை அரசுக்கு எதிராக போவது போல ஒரு தோற்றத்தை திட்டமிட்டு உண்டு பண்ணி இருக்கிறார்களே.? யாருக்காவது தெரிகிறதா.??

செய்தி என்ன இதில எல்லாம் திருகோணமலைக் குதங்கள் பற்றித் தான்.திருகோணமலை கைக்கு வந்த பின் பல தடைகள் நீங்கும்.அடி உதவிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

நல்ல விசயம் தான். நம்ப நட நம்பி நடவாதே, இதனை நாங்கள் எப்பவும் மனதில வச்சிருந்தாச் சரி.

  • தொடங்கியவர்

தங்களின் வேண்டு கோளையும் மீறி புலிகளை வெண்று விடலாம் எண்று சண்டையை தொடக்கிய இலங்கை அரசுக்கு தங்களின் எந்த விதமான உதவிகளும் இல்லை என்பதை மக்களவையூடாக காரணம் காட்டி இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது....!

அதாவது இந்திய மக்கள் இலங்கையை அதன் இனப்படுகொலையை ஆதரிக்க வில்லை என்பதையும்... அதை இந்தியா செவிமடுக்கின்றது என்பதையும்... ஈழதமிழ் மக்களுக்கு இந்தியா ஆதரவாய் இருக்கின்றது என்பதுமானதுதான் அந்த செய்தி....!

  • தொடங்கியவர்

செய்தி என்ன இதில எல்லாம் திருகோணமலைக் குதங்கள் பற்றித் தான்.திருகோணமலை கைக்கு வந்த பின் பல தடைகள் நீங்கும்.அடி உதவிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

நல்ல விசயம் தான். நம்ப நட நம்பி நடவாதே, இதனை நாங்கள் எப்பவும் மனதில வச்சிருந்தாச் சரி.

இல்லை நாரதர் இது மிகவும் திட்டமிட்டு நடை பெற்று இருப்பதாகத்தான் நான் நினைக்கின்றேன்.... அதுவும் இந்தவேளையில்.....!

என் கருத்து பிளையா..?? :roll: :roll: :roll:

ஓம் செய்தி உண்மை தான் தல , நான் சொல்லவாற விடயம் நாங்கள் இங்க பல முறை விவாதிச்சிருக்கம் நாபகம் இருக்கா?பாலசிங்கம் அண்ணரின் பேட்டி இப்படி கன விசயம் எல்லாம் ஒருவகை தயார் படுத்தல் தான்.கொள்கை மாற்றங்களை ஏற்படுத்த இவ்வாறு தான் செய்வார்கள்.அந்தக் கொள்கை மாற்றங்கள் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைவது பூகோள தேசிய நலங்கள் என்ற அடிப்படையை நாங்கள் விளங்கி வச்சிருக்க வேணும்.எவனும் இரங்கி எமக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை.எல்லாம் புவியியல் சார் தேசிய நலங்களின் பாற்பட்டுத் தான் மாற்றங்கள் நிகழும்.கள நிலவரம் மாற எல்லாம் ஒரு நேர் கோட்டில வரும்.

  • தொடங்கியவர்

எதுவோ நடப்பது நல்லதாக நடந்தால் மகிழ்ச்சி அண்ணா...!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போலிசார் வெளியேற்றம்:

கோவை பயிற்சி திடீர் நிருத்தம்

http://www.dinamalar.com/

முதலமைச்சர் கருணாநிதிநன்றி தெரிவித்தனர்.

அவர்களுக்கு நாங்களும் எங்களின் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.eelampage.com/?cn=27995

கோவையிலிருந்து சிறிலங்கா காவல்துறையினரை வெளியேற்றியது தமிழக அரசு

[வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 21:49 ஈழம்] [புதினம் நிருபர்]

கோவையில் பயிற்சி பெற வந்த சிறிலங்கா காவல்துறையினர் நேற்று இரவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்துறை பயிற்சி நிலையத்தில் சிறிலங்காவைச் சேர்ந்த 45 காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழக சட்டசபையில் இன்று பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின.

விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் செலவம் பேசுகையில,

நூற்றுக்கணக்கான தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கொன்று குவித்து வரும் நிலையில், அந்த நாட்டவருக்கு இங்கு போர் சார்ந்த பயிற்சியை அளிப்பது தமிழ் மக்களுக்கு எதிரானது. இதனால் தமிழர் நெஞ்சம் கொதிப்படைந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இது குறிதது பேசிய முதல்வர், இந்த பிரச்சினை சட்டசபையில் எழுப்பப்பட்டு விட்டதால் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என நம்புவதாக தெரிவித்தார். ஆனால் முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமலும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், அங்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இதேபோல பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியம் ஆகியோரும் பேசினர்.

அவர்களுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்தப் பிரச்சினை அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்பதை நானும் அறிவேன். இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளேன்.

அங்கே பயிற்சி பெறுவது இராணுவம் அல்ல காவல்துறை என்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சிதான் அது என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்த சந்தேகத்தை போக்க வேண்டிய, தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு மாத்திரமல்ல, மத்திய அரசுக்கும் உண்டு.

தமிழர்கள் எங்கே தாக்கப்பட்டாலும், தமிழர்கள் வேதனைப்படுவதும், கலங்கி நிற்பதும் இயல்புதான். இந்த பயிற்சி குறித்து நாம் அனைவருமே வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்.

வெறும் காவல்துறை பயிற்சிதான் என்றாலும் கூட இப்போது இது தேவையா என்பதை சிறிலங்கா அரசும், இந்திய அரசும் எண்ணிப் பார்க்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு கால கட்டப்பகுதியில் நான் முதல்வராக இருந்தபோது, அப்போதயை பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

அப்போது நாங்கள் இருவரும் நடத்திய உரையாடலின் முடிவு, வெற்றிகரமாக இருந்திருந்தால், இலங்கைப் பிரச்சினையே நல்லவிதமாக முடிந்திருக்கும்.

கோவையில் பயிற்சி பெற வந்த சிறிலங்கா காவல்துறையினர் குறித்த தகவலை கடந்த 2 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு எடுத்துரைத்தார்.

3 ஆம் தேதி (நேற்று) இது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளருக்கு கடிதம் ஒனறும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து கோவையில் பயிற்சி பெற்று வந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் நேற்று இரவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

இதை உறுப்பினர்கள அனைவரும் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.

இருப்பினும், சிங்கள காவல்துறையினர் தமிழக மண்ணில் பயிற்சி பெற அனுமதி கொடுத்த மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்கள் வெளியேறினர்.

அவர்களைத் தொடர்ந்து ம.தி.மு.கவும் வெளிநடப்புபு செய்தது.

அப்போது அ.தி.மு.க கொறடா செங்கோட்டையன் எழுந்து, மத்திய அரசு பயிற்சி அளிக்க அனுமதி தந்தது என்றால் இது குறித்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவுக்கு தெரியுமா, தெரியாதா?

மாநில முதல்வருக்கு இது பற்றிக் கூட தெரியாதா என்று கூறி அதனைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக அறிவித்தார். பின்னர் அ.தி.மு.கவினரும் வெளிநடப்பு செய்தனர்.

அ.தி.மு.கவின் இந்த திடீர் வெளிநடப்பை காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்குக்கொண்ட அ.தி.மு.க. இப்போது திடீர் பாசம் வந்து வெளிநடப்புச் செயவதாக இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் விமர்சித்தனர்.

இது குறித்து கருணாநதி குறிப்பிடுகையில், சிறுத்தைகளின் சீற்றத்துக்குப் பிறகு திடீரென ஒரு உணர்வு ஏற்பட்டு அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் வெளிநடப்புச் செய்து விட்டு இவர்களைப் பார்க்க, இவர்கள் அவர்களைப் பார்க்க நீங்கள் வெளிநடப்பு செய்தபோதெல்லாம் நாங்கள் உங்கள் பின்னால் வந்தோமே, இப்போது நீங்கள் பேசாமல் அமர்ந்திருக்கிறீர்களே என்று அவர்கள் மௌன பாசையில், பேசியதை நான் அறிவேன்.

எனவே அ.தி.மு.கவினர் வெளிநடப்பு ஒரு வேடிக்கையான வெளிநடப்பு. அதேசமயத்தில விடுதலைச் சிறுத்தைளின் வெளிநடப்பு உணர்வுப்பூர்வமானது என்பதையும் அறிவேன். அதை பழித்தோ, இழித்தோ கூற விரும்பவில்லை எனறார் கருணாநிதி.

ஆதாரம்: தற்ஸ் தமிழ்

தமிழக அரசுக்கும் இந்தப் பயிற்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.... இருந்தாலும் போர்மேகங்கள் ஈழத்தைச் சூழ்ந்திருக்கும் வேளையில் இலங்கை காவலர்களுக்கு இந்திய அரசு பயிற்சியளிப்பது என்பது தமிழக மக்களை வேதனைக்குள்ளாக்கி இருந்தது... இதே உணர்வுகள் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் ஆகியோரும் பகிர்ந்து கொண்டார்கள்....

இந்த உணர்வுகள் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.... தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் பிரதமர் நீண்ட காலம் கழித்து இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறார்... பிரதமருக்கு தமிழக மக்கள் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள்....

உண்மையில் நன்றி தெரிவிக்கவேண்டியது மருத்துவர் ராமதாஸுக்கும்,தோழர்.திருமாவள

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பினரின் கடிதம் வந்தவுடன் அவர்களை சந்திப்பது குறித்து பரிசீலிக்கிறேன்

*பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது தொடர்பாக அவர்களின் கடிதம் வந்த பின்னர் பரிசீலிப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கை பொலிஸாருக்கு இந்தியாவில் எவ்வித பயிற்சிகளும் வழங்கக்கூடாதென வலியுறுத்துமுகமாகவும் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்குடன் வைகோ தொலை பேசியில் உரையாடியபோதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் வந்தவுடன் இது தொடர்பாக பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கையில் யுத்தம் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவமும், விமானப்படையும் பலத்த தாக்குதல் நடத்துகின்றன. எதிர்த்தாக்குதலில் புலிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பதற்றமான சூழலில், இலங்கையின் பொலிஸ் படைக்கு, தமிழ்நாட்டில் - கோவையில் மத்திய பாதுகாப்புப் படைத்தளத்தில் பயிற்சி கொடுப்பது தமிழர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தும் செயல் ஆகும். எனவே, அதைத் தடுத்து நிறுத்தி, இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தங்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தேன். என் கவனத்துக்கு வந்துவிட்டதாகவும் - அது குறித்து கவனிக்கிறேன் என்றும், எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களை சந்தித்தபோது கூறினீர்களாம்.

தற்போது கோவையில் இருந்து சிங்கள பொலிஸார் அனுப்பப்பட்டு விட்டாலும், அவர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படுவதாக அறிகிறேன். இந்தியாவில் எந்த இடத்தில் பயிற்சி கொடுத்தாலும், அது தமிழர்கள் உள்ளத்தை புண்படுத்தும் செயல் ஆகும். எனவே, இந்தியாவில் அவர்களுக்கு வேறு எங்கும் பயிற்சி கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை சந்திக்க வாய்ப்பு அளிக்குமாறு நான் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி நேரில் வேண்டியபோது, அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதாகக் கூறினீர்கள். தங்களை சந்திப்பதற்கு வாய்ப்புத் தருமாறு கேட்டு, இலங்கையின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்ப இருக்கின்றனர். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தபோது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் கடிதம் வரட்டும் அதையும் பரிசீலிக்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.