Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவிய நடிகர் சூர்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா.
 
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர்.
 
ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர்.
 
அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம்கூறினார்.
 
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது. அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல்.
 
தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/09/tamilnadu-surya-agaram-foundation-to-provide-financial-help-178794.html
  • கருத்துக்கள உறவுகள்

தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் நன்றியும் பாராட்டுகளும்....

 

கடவுள் உங்களுடன் இருப்பார்.

http://www.youtube.com/watch?v=wVMScQsTmQE

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் பவுன்டேஷன் அமைப்புக்கும்

நடிகர் சூர்யா அவர்களுக்கும் நன்றிகள்....

 

மாணவி தினுஸியாவிற்கு வாழ்த்துகள்!

 

சூரியாவின் நடிப்பில் உருவான சிங்கம் 2 படம் திரைஅரங்க்குக்கு சென்று பார்ப்பதாக உள்ளேன்  :D

 

ஆருமையான இணைப்பு ஈசன் ,நன்றிகள் .பச்சை முடிந்துவிட்டது .பின்பு போடுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

அகரம் சிகரமாய் மின்னுகின்றது,  சூர்யா சூப்பர்யா !!

 

மாணவிக்கும் வாழ்த்துகள் !!!

நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் செயலிலும் காட்டியவர்கள் எமது புரட்சி தலைவரைப்போல ஒரு சிலரே ,,,,,,,,,,,,,,,,,,அந்த வரிசையில் உளம் மகிழ்கிறது .சேவை இன்னும் பல்கருக்கு போய் சேர இறைவன் என்றும் உங்களுக்கு அருள் புரிவாராக .............

நன்றி சூர்யா. நல்லதோர் குடும்பம். அகரத்தின் சேவை இன்னும் பல வறிய மாணவர்களை சென்றடைய வாழ்த்துகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.