Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஊரில் ஒரே ஒரு ஐயா!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  •  
  •  
  •  
  •  
Rate this

Photo0796-225x300.jpg

-க. சக்திவேல்-

அடர்ந்த காட்டை அண்டி ஒரு கிராமம். அந்தக் கிரமத்தில் ஒருவர் மட்டும் தனிமையில் வாழுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கடும் குளிர், மழை, வெள்ளம், யானை, சிறுத்தை, பன்றி, பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல் அனைத்தையும் எதிர்கொண்டு தன்னந்தனிக் காட்டு ராஜாவாக வாழ்கிறார் ஒரு முதியவர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில்; பல்லவராயன்கட்டு சந்தியின் மேற்கு பக்கமாக 12 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது பொன்னாவெளி கிராமம். இங்குதான் தனி ராஜ்ஜியம் செய்கிறார் 65 வயதான செல்லையா இராசநாயகம்.

 

PICT0746-300x224.jpg

PICT0751-300x224.jpg

2006 ஆம் ஆண்டுவரை வளம் கொழிக்கும் விவசாய பூமியாக பூத்துக் குலுங்கிக் கிடந்தது இந்தக் கிராமம். கிராஞ்சிக்குடா குளம், செக்கட்டிக் குளம், ஈச்சினாவெளி குளம கிராமத்தைச் சுற்றி மூன்று குளங்கள், வயல் வெளிகள், ஆடு, மாடு பட்டிகள் என இங்கு வளங்கள் ஏராளம்.

2006 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு நகர்ந்துவிட வெறிச்சோடியது கிராமம். 2011 ஆம் ஆம் ஆண்டில் தான் இங்கு மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

2006 ஆண்டுவரை சுமார் 15 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. மீள்குடியேற அனுமதிக்கப்பட்டபோது 8 குடும்பங்கள் தாமாக முன்வந்து குடியேறின. எனினும் பல்வேறு காரணங்களால் அங்கு தொடர்ந்து இருக்க முடியாத நிலையில் அனைவரும் அயல் கிராமங்கள் அல்லது வேறு பகுதிகளுக்கு நகர்ந்துவிட ஒரே ஒருவர் மட்டுமே அங்கு இன்னமும் வாழ்கிறார் முதியவரான செல்லையா இராசநாயகம்.

கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். பொன்னாவெளி கிராமத்தில் மட்டும் பழைமையான 3 கோவில்கள் உள்ளன. சிவன் கோவில், கண்னகை அம்மன் கோயில், பிள்ளயார் கோயில் என்பனவே அவை.

இங்கு கண்னகை அம்மன் கோயிலில் தற்போது பூசை தினமும் நடைபெறுகின்றது சிவன் கோயில் மற்றும் பிள்ளயார் கோயில் பூசை இன்றி அழிந்த நிலையில் காணப்படுகின்றன.

சைவப் பெரியார் ஆறுமுகநாவலரால் அடிக்கல் நாட்டப்பட்ட சைவப்பிரகாச வித்தியாலயத்தின் கட்டட இடிபாடுகள் கூட இன்னும் இக்கிராமத்தின் பெருமையையும் புகழையும் பறைசாற்றுகின்றன.

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன நடந்தாலும இந்தக் கிராமத்தைவிட்டு வேறு இடத்துக்கு போகவே மாட்டேன் என்ற உறுதியுடன் தனிமையிலேயே வாழ்கிறார் இராசநாயகம். என்ற நாம் முன்னர் குறிப்பிட்ட அந்த முதியவர்.

இயற்கையான இக்கிராமம் கி.மு 2ம் நூற்றாண்டு காலத்திலே பொன்னாவெளி கிராமம் என அழைக்கப்பட்தாக வரலாறு கூறுகிறது.

இயற்கை எங்க்ளுக்கு அழிந்த கொடை இந்தக் கிராமம். ஆனால் இன்று யுத்தத்தால் அனைத்தும் அழிந்துபோயுள்ளன என்கிறார் இக்கிராமத்தில் வாழும் ஒரே ஒரு நபரான இராசநாயகம்.

யானைகள் அட்டகாசம் குறைவடைந்து காணப்படுகின்றது என்றார்.

நீங்கள் என் தனியாக இருக்கிறியள் ? ஏன் அயல் கிராமத்துக்கு செல்லவில்லை எனக் கேட்ட போது தான் பிறந்த மண்னை விட்டு வெளியிடத்துகு செல்ல விருப்பம் இல்லை என்றார். தான் திருமணம் செய்ய வில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் அரச நிவாரணங்கள் கிடைத்தன. இ;ப்போது தமக்கு நிவாரணம் வழங்குது இல்லை என்றார் தனக்கு சொந்தமாக பசுமாடுகள் உள்ளன என்றார் தமக்கு எனைய தேவைக்கு அயல் கிராமத்துக்கு செல்வதாக குறிப்பிட்டார்.

அன்று ஊரில் இருக்;கும் போது அதிக வேலைகள் தேடி பலர் வந்ததாகவும் இன்று அநாதரவாக வேலைகள் இன்றி வறுமையாக உள்ளது இதனால் ‘என்னுடன் இந்த கிராமம் அழிந்து போகும்’ என்று கவலையுடன் கண்கலங்கினார்.

oodaham.com

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Photo0796.jpg

 

மண்ணின் மைந்தன் இவர். 

 

 

நல்லதொரு பதிவு 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ ஒரு காட்டுக்குள் சிறு கொட்டில் கிடைத்தாலும் சிங்களவன் குடியேறிவிடுகிறான்.

 

வீதியோரம் காணிகிடைத்தால் முகமதியன் கடைபோட்டு வியாரம் செய்கிறான்.

 

சிறு கல்லைக்கண்டாலும் கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டுக் கோவில் கோபுரம் கட்டுபவனாக தமிழன் உள்ளான்.

 

 

இன்றைய தமிழீழத்தில் இதனைத் தாராளமாகக் காணலாம்.

அதிசயமாக இருக்கிறது ,பதிவுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இவரை நான் சில காரணங்களுக்காகத் தொடர்புகொள்ளவேண்டும், அது இயலுமா? காரணம் இவர்வாழும் பூமியிலேயே எனது முன்ணோர்களது நிலம் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாதி ராஜா , நீடூழி வாழ வேண்டும் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Photo0796.jpg

 

மண்ணின் மைந்தன் இவர். 

 

இப்பிடி ஊருக்கு ஒருவர் கட்டாயம் இருப்பார்

 

பதிவுக்கு நன்றி நந்தன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி நந்தன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.