Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கா(தல்)ல மாற்றம்..........

Featured Replies

காற்றும் வறண்டு கிடக்கும் 
இதுபோன்ற ஒரு கோடையில் தான் 
உனை பிரிந்தேன்.

உனைப்பிரிந்த அந்த காலம் 
புல் நுனிகள் கருகிய அந்த காலம் 
காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. 

அன்று,
உயிப்பூவிதழ்களின் சாயங்களை 
வெளுறவைத்த 
பெரும் கோடையின் கோபம்
நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........

இன்று, 
விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் 
தளம்பல்களை தந்தாலும் 
கோடைக்கு முன்னான அந்த 
இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன..........

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் 
மக்கிக் கிடக்கும் 
சிறுவெண் நண்டுக்கூடுகளாய் 
காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,

எனக்குத்தெரியும் 
இருந்தவரை 
நல்ல காதலியாக இருந்தவள் நீ. 

எனக்குத்தெரியும் 
பிரியும்வரை 
அன்பை பொழிந்தவள் நீ 

எனக்குத்தெரியும் 
அனல்சுமந்த பெருமூசுக்களால் 
நீ தீமூட்டப்பட்ட அந்த கோடை காலமும்,

உனக்கு தெரியுமா? 
இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள் 
தவறியும் அந்த இளவேனிற்காலம் 
உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது 
என்பதாக இருக்கிறது என்பது..........

காற்றும் வறண்டு கிடக்கும் 

இதுபோன்ற ஒரு கோடையில் தான் 

உனை பிரிந்தேன்.

உனைப்பிரிந்த அந்த காலம் 

புல் நுனிகள் கருகிய அந்த காலம் 

காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. 

அன்று,

உயிப்பூவிதழ்களின் சாயங்களை 

வெளுறவைத்த 

பெரும் கோடையின் கோபம்

நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........

இன்று, 

விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் 

தளம்பல்களை தந்தாலும் 

கோடைக்கு முன்னான அந்த 

இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன..........

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் 

மக்கிக் கிடக்கும் 

சிறுவெண் நண்டுக்கூடுகளாய் 

காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,

எனக்குத்தெரியும் 

இருந்தவரை 

நல்ல காதலியாக இருந்தவள் நீ. 

எனக்குத்தெரியும் 

பிரியும்வரை 

அன்பை பொழிந்தவள் நீ 

எனக்குத்தெரியும் 

அனல்சுமந்த பெருமூசுக்களால் 

நீ தீமூட்டப்பட்ட அந்த கோடை காலமும்,

உனக்கு தெரியுமா? 

இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள் 

தவறியும் அந்த இளவேனிற்காலம் 

உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது 

என்பதாக இருக்கிறது என்பது..........

 

காதல் கிள்ளைகள் பிரிவினால் ஏற்படும் வலியானது என்றுமே மனதின் ஓரத்தில் ஒளித்திருந்து காண்ணாம் மூஞ்சி காட்டியபடியே இருந்து கொண்டேயிருக்கும் . உங்கள் உவமேயம் கற்பனை சிறகுகளை பறக்கடிக்க வைக்கின்றன .உங்கள் கவிதைக்கு எனது மனங்கனித்த பாராட்டுக்கள் கொழுவன் . தொடருங்கள் மேலும் பல கவிதைகளை வடிக்க :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கவிதை, நேற்கொழுதாசன்!

 

வார்த்தைகள், பிரிந்து போன காதலியைப் பழி வாங்கவில்லை!

 

அதற்குப் பதிலாகக் காதலனின் மனிதத்தை மட்டுமே வெளிக்காட்டுகின்றன!

 

ஆழ்ந்த அனுதாபங்கள், அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த காதலிக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் 
மக்கிக் கிடக்கும் 
சிறுவெண் நண்டுக்கூடுகளாய் 
காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,
 
எனக்குத்தெரியும் 
இருந்தவரை 
நல்ல காதலியாக இருந்தவள் நீ. 
 
எனக்குத்தெரியும் 
பிரியும்வரை 
அன்பை பொழிந்தவள் நீ 
 
எனக்குத்தெரியும் 
அனல்சுமந்த பெருமூசுக்களால் 
நீ தீமூட்டப்பட்ட அந்த கோடை காலமும்,
 
உனக்கு தெரியுமா? 
இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள் 
தவறியும் அந்த இளவேனிற்காலம் 
உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது 
என்பதாக இருக்கிறது என்பது..........

 

 

 
 
சா.. ஏன் தான் இபடிக்கவிதைகளை வடித்து தொலைத்துவிடுகிறார்களோ தெரியவில்லை.. எல்லாவற்றையும் மறந்து தொலைக்கவும் விடமாட்டீர்கள் போல.. எவ்வளவுதூரம் பிரிந்து போனாலும் உண்மை அன்பு வைத்திருந்தவர்களால் இப்படியான கவிதைகளை வாசிக்கும் போது கண்களின் ஓரங்களில் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடிவதில்லை.. அருமையான கவிதை நேற்கொழு அண்ணா...
 
 

Edited by சுபேஸ்

........................................................................................

அன்று,

உயிப்பூவிதழ்களின் சாயங்களை 

வெளுறவைத்த 

பெரும் கோடையின் கோபம்

நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் 

மக்கிக் கிடக்கும் 

சிறுவெண் நண்டுக்கூடுகளாய் 

காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,

எனக்குத்தெரியும் 

இருந்தவரை 

நல்ல காதலியாக இருந்தவள் நீ. 

எனக்குத்தெரியும் 

பிரியும்வரை 

அன்பை பொழிந்தவள் நீ 

உனக்கு தெரியுமா? 

இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள் 

தவறியும் அந்த இளவேனிற்காலம் 

உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது 

என்பதாக இருக்கிறது என்பது..........

 

நேற்கொழுதாசன்.... உங்கள் அடி மனதிலிருந்து வந்திருக்கும் வார்த்தைகள் இவை. உண்மையான காதலோடு இருந்த உங்களை அந்தப் பிரிவு எந்தளவுக்கு பாதித்திருக்கின்றது என்பதனை இதனைப் படிக்கும்போது உணரமுடிகின்றது. அப்படியான வலிகளை அனுபவித்தவர்கள் எவராவது உங்களின் இந்த வரிகளைப் படித்தால் அவர்களின் விழியோரத்தில் சிறுதுளியேனும் கண்ணீர் கசியவைக்கும் உணர்வுபூர்வமான வரிகள் இவை.

 

மிக அழகாக காதலின் இயல்புமாறாமல் காதலின் புனிதத்தை சொல்லியிருக்கின்றீர்கள். காதலுக்கு நேசிக்கமட்டுந்தான் தெரியும். காதலின் நினைவுகள்.....எத்தனை வருடங்கள் ஆனாலும் இதயத்தின் ஏதோவொரு மூலையில் நின்றுகொண்டு, அவ்வப்போது வந்துபோவதை யாராலும் தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது. அதுதான் காதல். அதுதான் அதன் இயல்பு.

 

என்னை மிகவும் ஆழமாகப் பாதித்திருந்தது தங்களின் கவிதை.

மனதைத் தொடும் கவிதைகளைத் தரும் தங்களிற்கு என் மனதார்ந்த நன்றிகள். :)

 

Edited by கவிதை

  • தொடங்கியவர்

காதல் கிள்ளைகள் பிரிவினால் ஏற்படும் வலியானது என்றுமே மனதின் ஓரத்தில் ஒளித்திருந்து காண்ணாம் மூஞ்சி காட்டியபடியே இருந்து கொண்டேயிருக்கும் . உங்கள் உவமேயம் கற்பனை சிறகுகளை பறக்கடிக்க வைக்கின்றன .உங்கள் கவிதைக்கு எனது மனங்கனித்த பாராட்டுக்கள் கொழுவன் . தொடருங்கள் மேலும் பல கவிதைகளை வடிக்க :) :) .

 

 

 ஒரு நெருங்கிய மரணத்தின் நினைவுகள் போல காதலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது ஒவ்வொரு காதலர்களின்  மனதுகளிலும்....

 

உங்களின் வாழ்த்துக்களும் விமர்சிப்புகளும் என் பயணத்தில் வழிகாட்டியாக என்றும் தொடர வேண்டும்.

நல்ல ஒரு கவிதை, நேற்கொழுதாசன்!

 

வார்த்தைகள், பிரிந்து போன காதலியைப் பழி வாங்கவில்லை!

 

அதற்குப் பதிலாகக் காதலனின் மனிதத்தை மட்டுமே வெளிக்காட்டுகின்றன!

 

ஆழ்ந்த அனுதாபங்கள், அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த காதலிக்கு!

நன்றி புங்கை அண்ணா. 

 

அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த காதலிக்கு!/////////////// இல்லை அண்ணா அவளுக்கு நல்ல அதிஸ்டம் கிடைக்கட்டுமே...........

 

அண்ணா இது கவிதை மட்டுமே. நம்புங்க 

 

 

 
 
சா.. ஏன் தான் இபடிக்கவிதைகளை வடித்து தொலைத்துவிடுகிறார்களோ தெரியவில்லை.. எல்லாவற்றையும் மறந்து தொலைக்கவும் விடமாட்டீர்கள் போல.. எவ்வளவுதூரம் பிரிந்து போனாலும் உண்மை அன்பு வைத்திருந்தவர்களால் இப்படியான கவிதைகளை வாசிக்கும் போது கண்களின் ஓரங்களில் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடிவதில்லை.. அருமையான கவிதை நேற்கொழு அண்ணா...

 

ஏன்யா ஏன் உந்த வெறித்தனமான தாக்குதல். 

உந்தபக்கம்  ரொம்பதான் நொந்து போய் இருக்கு போல.........நான் பொதுவாக தான் சொன்னேன்.

சப்பா ஏன்னா வலி.........

நன்றி பாஸ் 

  • தொடங்கியவர்

நேற்கொழுதாசன்.... உங்கள் அடி மனதிலிருந்து வந்திருக்கும் வார்த்தைகள் இவை. உண்மையான காதலோடு இருந்த உங்களை அந்தப் பிரிவு எந்தளவுக்கு பாதித்திருக்கின்றது என்பதனை இதனைப் படிக்கும்போது உணரமுடிகின்றது. அப்படியான வலிகளை அனுபவித்தவர்கள் எவராவது உங்களின் இந்த வரிகளைப் படித்தால் அவர்களின் விழியோரத்தில் சிறுதுளியேனும் கண்ணீர் கசியவைக்கும் உணர்வுபூர்வமான வரிகள் இவை.

 

மிக அழகாக காதலின் இயல்புமாறாமல் காதலின் புனிதத்தை சொல்லியிருக்கின்றீர்கள். காதலுக்கு நேசிக்கமட்டுந்தான் தெரியும். காதலின் நினைவுகள்.....எத்தனை வருடங்கள் ஆனாலும் இதயத்தின் ஏதோவொரு மூலையில் நின்றுகொண்டு, அவ்வப்போது வந்துபோவதை யாராலும் தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது. அதுதான் காதல். அதுதான் அதன் இயல்பு.

 

என்னை மிகவும் ஆழமாகப் பாதித்திருந்தது தங்களின் கவிதை.

மனதைத் தொடும் கவிதைகளைத் தரும் தங்களிற்கு என் மனதார்ந்த நன்றிகள். :)

 

மிகவும் சந்தோசம் கவிதை. எனது எழுத்துக்கள் எதோ ஒரு வகையில் உங்களையும் கவர்ந்திருப்பதையிட்டு.

 

காதலுக்கு நேசிக்க மட்டும் தான் தெரியம்.  அழகான உண்மை கவிதை. ஒரு காதல் கவிதையை ரசிக்கும் உங்களின் காதல் கூட நிச்சயமாக உயர்ந்து தான் நிற்கும்.அது உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது.

 வாருங்கள் காதலைப்பாடுவோம் வாழ்த்துவோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கவிதைமேற்கெழு தாசன். வேறொன்றும் சொல்லத் தேவையே இல்லை.

அட நேற்கொழு தாசனுக்கும் இப்படி அருமையாகக் கவிதை வடிக்கத் தெரியுமா? :lol: வாழ்த்துக்கள்! :D தொடரட்டும் உங்கள் கவிகவி! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.