Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு கொடுக்கக்கூடாது! - அண்டை மாநிலங்கள் போர்க்கொடி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kudankulam-31713-150.jpg

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கு தரக்கூடாது என, தென்மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த மின்சாரத்தில், தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பலத்த எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி,கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கியுள்ளது. ஆனாலும், முழுவீச்சில் உற்பத்தி துவங்க, இன்னும் சில நாட்களாகும்.

  

இங்கு உற்பத்தியாக உள்ள, மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, பலரும், மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்திற்கே வழங்கக் கூடாது என, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதுதொடர்பான கோரிக்கை மனுக்களும், மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த விவகாரத்தில், முன்னணியில் நிற்பது ஆந்திர மாநிலமே.

 

கூடங்குள மின்சாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, 2001ல், ஒப்பந்தம் ஒன்று போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், இரண்டு பிரிவுகளில், உற்பத்தியாக உள்ளன. 2,000 மெகாவாட் மின்சாரத்தில், 540 மெகாவாட்டை, ஆந்திராவுக்கு தர, மத்திய அரசு முன்வந்தது. ஆனால், கிருஷ்ணா - கோதாவரி படுகையில், நிறைய எரிவாயு கிடைப்பதால், எங்களுக்கு கூடங்குளம் மின்சாரத்தில் பங்கு வேண்டாம்' என, அப்போது ஆந்திரா கூறிவிட்டது. தற்போது, கிருஷ்ணா - கோதாவரி படுகையில், எரிவாயு உற்பத்தி குறைந்து, நின்று போகும் அளவுக்கு, நிலைமைகள் உள்ளதால், கூடங்குளம் மின்சாரத்தில், தங்களுக்கு பங்கு தர வேண்டும் என, ஆந்திரா வலியுறுத்தி வருகிறது.

 

அதேபோல், கர்நாடக அரசும், "கூடங்குளம் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்திற்கே வழங்கக் கூடாது. எங்களுக்கும், 360 மெகா வாட் மின்சாரம் தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.கூடங்குளத்தில், விரைவில் உற்பத்தியாக உள்ள, 1,000 மெகா வாட் மின்சாரத்தில், தற்போதைய நிலவரப்படி, 440 மெகா வாட் தமிழகத்துக்கு வழங்கப்பட உள்ளது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு, 600 மெகா வாட் வரை, தமிழகத்துக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.கேரளாவுக்கு, 100 மெகா வாட்டும், புதுச்சேரிக்கு, 35 மெகாவாட்டும், கர்நாடகாவுக்கு, 225 மெகா வாட்டும் வழங்குவது என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று கூறி, மத்திய அரசுக்கு, கர்நாடக காங்.அரசு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது.

 

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, ஆந்திராவில், 20 சதவீதமும், கர்நாடகாவில், 17.8 சதவீதமும், தமிழகத்தில், 19.4 சதவீதமும், மின் பற்றாக்குறை உள்ளது. எனவேதான், கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரத்திற்காக, தென்மாநிலங்கள், போட்டா போட்டியில் இறங்கி உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88839&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

முதலில், இந்த அபாயகரமான அணு உலையை ஏன் அவரவர் மாநிலத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது?

 

கேரளாவும், கர்நாடகமும் இவ்வுலைக்கான திட்டத்தை தங்கள் மாநிலத்தில் நிறுவக்கூடாதென முதலில் மறுத்துவிட்டு இப்பொழுது அண்டை நாட்டு ஏமாளி மக்களின் உயிர்மேல் இயங்க ஆரம்பித்தவுடன் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

பங்கு கேட்கும் அனைத்து மாநில மக்களை அணு உலையின் மடியிலேயே விகிதாச்சரப்படி குடியேற்றி, தமிழகத்திற்கு தர வேண்டிய நீரையும், இழந்த தமிழ் நாட்டுப் பகுதிகளையும் மீட்ட பின்  இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கலாம். அதுவரை அணு உலையை பொத்தி விடுவதாலேயே தமிழ் நாட்டு உரிமைகள் காக்கப்படும்.

அப்பிடி எண்டா அணுமின் நிலையத்தை உங்கள் மாநிலதிட்கு மாத்தி விட்டு அதில் இருந்து ஒரு 20% மின்சாரத்தை தமிழ் நாடுக்கு கொடுங்கோ யாரு வேணாம் எண்டா?

தமிழனை தவிர எல்லா பயலுகளும் புத்திசாலிகளா இருக்காக  :wub: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பிறமாநிலத்தவர் பேசுவதற்கான காரணம் என்ன என்று பார்த்தால் புரியும் 

 

வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பினால் அண்டிய மாநிலத்தவர்களை முதலமைச்சர்களாக ஆக்கி அழகுபார்த்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு உண்மையில் தமிழர்கள்மேல் அக்கறை இல்லை முடிந்தவரைக்கும் அரசியலை சுயநலத்துக்காக பாவித்தார்கள்.

வேறு எந்த மாநிலத்திலாவது பிறமாநிலத்தவர் முதல்வராக இருக்கின்றாரா ?

தமிழ்நாட்டில் மட்டும்தான் வேறு மாநிலத்தவர் முதல்வராக கடந்த பல தசார்ப்தங்களாக ஆட்சி செய்து வருகின்றார்கள் அதனாலையே     ஏற்பட்டதே இன்றைய பரிதாபநிலை 

பவர்ஸ்டார் போன்ற கோமாளிகளையும் HERO ஆக்கி தமிழன் சூடு சொரணையற்றவனாக இருக்கும் வரை இந்தமாதிரி அபகரிப்புக்கள் தொடரும்.

மத்திய அரசு பங்கு பிரிப்பது மாநிலங்களை தன்னிடம் கெஞ்சவைக்கவே.  இந்த ஒரு அணு உலை எல்லா மாநிலங்களுக்கும் போதாது. மின்சாரம் தேவையான மானிலங்களில் அவரவர்க்கென்று அணு உலையை இப்போது திறக்க வேண்டும். நல்ல தொழில் நுட்பங்கள் வருங்காலத்தில் வந்தால் அணு உலைகளை மூடி யூரேனியத்தை புத்துப்பித்து வேறு விதமாக பயன் படுத்துவதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  இந்த செய்தியை  வாசித்தபோது

ஒரு  சந்தேகம்  வந்தது

ஏதோ இருக்கு பின்னால  என்று......... :(

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126497&hl=

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  இந்த செய்தியை  வாசித்தபோது

ஒரு  சந்தேகம்  வந்தது

ஏதோ இருக்கு பின்னால  என்று......... :(

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126497&hl=

 

மலையாளத்தான்.... இப்படி இறங்கி வருகின்றானே என்று, நானும் யோசித்தேன். சோழியன் குடுமி... சும்மா ஆடாது, விசுகு.

மலையாளத்தான்.... இப்படி இறங்கி வருகின்றானே என்று, நானும் யோசித்தேன். சோழியன் குடுமி... சும்மா ஆடாது, விசுகு.

காரணம் இல்லாமல் தோரணம் ஆடாது விசுகு  அண்ணா  :icon_idea: 

தமிழகத்துக்கு கொடுக்கவேண்டிய தண்ணீரை முதல்ல கொடுங்கடா.

 

தண்ணி தரமாட்டாங்க ஆனா மானாட மயிராட பாக்க மின்சாரம் வேண்டுமாக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

அணு உலைகள் தொடர்பாக பொதுவான நிலைபாடு அவசியம்.

 

மின்சாரத்தை ப்ங்கு கேட்ப்பவர்கள் அணு உலைப் பாதுகாப்பு அணு உலலை அமைந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பு செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அணு உலைக்  கழிவு சேமிப்பிலும்  பங்கு பெற வேண்டும். தங்கள் மண்ணில் அணு உலை அமைவை எதிர்க்கும் மாநிலங்கள் அனுமின்சாரத்தில் பங்கு கேட்க அனுமதிக்கப்படக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.