Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓசையில்லா இதயம்...!!

Featured Replies

மனம் ஆசைகளின் இயக்கம் .அது எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது அல்லது கேட்டுக் கொண்டே இருக்கிறது. பெண்ணைத் தேடுவது, பொன்னைத் தேடுவது, புகழைத் தேடுவது, மோட்சத்தை தேடுவது, இன்னும் எத்தனையோ ...

 

ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது ஒரு விருப்பம். எனக்கு ஆசையே வரக்கூடாது என்று எண்ணுவதும் ஒரு விருப்பமே. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நான் எதிர்காலத்தை நோக்கியே ஓடுகிறேன். நாளையே எனது உயிர் பிரியக்கூடும். நிச்சயமில்லாத இந்த நாளையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நான் நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி?

ஆசைப்படுவதற்கும், ஆசைப்படாமல் இருக்க நினைப்பதற்கும் இடைப்பட்ட நிலை ஏதேனும் உண்டா? அந்நிலையை என்னால் உணர முடியுமா? அப்படி உணரும்பட்சத்தில் நான் அடையக்கூடிய பலன் என்ன ?

 

உங்களின் மேலான கருத்து வரவேற்கப்படுகிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசைப்படுதலே ஒரு மனிதனின் அடுத்த நகர்வின் முதல் படி.நான் ஆசை இல்லாதவன் என ஒருவன் கூறினால் நீ கொடுக்கலாம் செருப்படி.ஒரு பெண்ணை பார்த்து ஆசை கொள்வது என்பது என் நிலை.அவளும் ஆசை கொண்டால்தான் அடுத்தநிலை.என் தந்தையும் தாயும் ஆசை கொண்டதால் வந்ததே என் உசிர் நிலை.ஆகையால் அனைவரும் ஆசை கொள்வீர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை என்பது ஒன்றை அடைந்துவிட வேண்டும் என்ற ஒரு 'உந்துதல்' மட்டுமே! அந்த 'உந்துதல்' நிலையே, ஒரு விதமான மயக்க நிலையை, அல்லது போதை நிலையைத் தருகின்றது! அதை அடைந்த பின்னர், அந்தப் போதை நிலை அல்லது மயக்க நிலை மறைந்து போகின்றது என எண்ணுகின்றேன்!

 

அது மண்ணாகட்டும், அல்லது பெண்ணாகட்டும் அல்லது பொன்னாகட்டும், அல்லது வெளிநாட்டுப் பிரஜாவுரிமை ஆகட்டும், நிலை ஒன்று தான்! அந்த 'உந்துதல்'நிலையில் மற்ற எல்லாமே மறந்து போகின்றன! நியாயங்கள், விதிகள், தர்மங்கள் எல்லாமே புறக்கணிக்கப் படுகின்றன! அந்த 'உந்துதல்' நிலை சில மணித்துளிகளில் இருந்து, பல வருடங்கள் கூட நீடிக்கலாம்!

 

ஆனால் அது கிடைத்த பிறகு, அல்லது கிடைக்க முடியாமல், அந்த ஆசை 'நிராசையாகி' விட்டபிறகு, அமைதியாக யோசித்துப் பார்த்தால்...எல்லாமே அர்த்தமில்லாதது மாதிரித் தெரியும்!

அதனால் தான், அதை 'மாயை' என்று பெரியவர்கள் அழைக்கின்றார்கள்! :D

 

அட, போயும் போயும், இந்தப் பெட்டைக்காகவா, இவ்வளவு தூரம் சைக்கிள் ஓடி மினக்கெட்டிருக்கிறேன்? :unsure:

 

ஆசை, பயம் என்ற இரண்டையும் நீக்கிவிட்டால், 'உண்மைகள்' தெரியத் தொடங்கும்! :icon_idea:

ஒரு குழந்தையை, வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது. பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை. பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி, அப்பாவை நேசி, என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது. தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன. பற்று என்பது உறவுமுறை. அன்பு என்பதோ ஒரு மனநிலை.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112806&page=9

  • கருத்துக்கள உறவுகள்





ஆசைகளற்று வாழ்வது கடினமாயினும் பலர் அப்படி இருக்கவே செய்கின்றனர். ஆனால் ஆசை கொள்பவனே நல்லவை  பலவற்றை அடைகிறான். தீமையையும் அனுபவிக்கின்றான். நாம் ஆசை கொண்டாற்றான் சாதிக்க முடியும் என்று ஒன்றும் இருக்கிறது. மனித வாழ்வில் ஆடம்பர  வாழ்வுக்காகவோ, அமைதியான வாழ்வுக்கோ அன்றி ஆன்மீக வாழ்வுக்கோகூட ஆழ்மனதில் எழும் ஆசைகளே காரணம். சித்தர்கள் கூட ஆசையை வென்றவர்கள் என்று கூறினாலும், கடவுளை அடையவேண்டும் என்னும் ஆசையே மற்றவற்றைத் துறக்க வைத்தது எனலாம். ஒவ்வொருவரின் மனதின் ஆளுமையின் அளவைக் கொண்டே ஆசைகள் வேறுபடுகின்றன.

  • தொடங்கியவர்

லிங்கம், புங்கை, கோமகன் மற்றும் சுமேரியர் உங்களது கருத்துகளுக்கு எனது நன்றிகள். இது பற்றி விரிவாக பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறத்தில் இருப்பவனுக்கு ஆசைகள் இருப்பது அவசியமானது. துறவியிடமும் ஆசை முற்றாக ஒழிவதில்லை , ஒன்றிரண்டு ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது .

இதிகாசங்களில் கூட ஆயிரக் கணக்கான பாத்திரங்கள் வந்து போகின்றன,தெய்வங்கள், தேவர்கள் என்று பலர் !

ஆயினும் என் அறிவுக்கும், கருத்துக்கும் எட்டிய வரையில் இருவரைக் கூறலாம்.

ஒருவர் சுகப்பிரமம் . (மகரிசி  வேதவியாசரின் மகன், எட்டு நாளில் பரிசித்து மகாராஜாவுக்கு பாகவதம் உரைத்து முத்திக்கு வித்திட்டவர்.)

மற்றவர்  ஜனக மகாராஜன் . ( ஜீவன்முக்தர் . சீதாதேவியின் தந்தையார்.)

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.