Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்!

Featured Replies

லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்!

லண்டன் மாநகரில் “மானாட மயிலாட”வை வெற்றிகரமாக நடத்தி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பெருமைப்படும் முதலாளி அல்லி ராஜாவுக்கு பட்டினியால் வாழ வழியின்றி கிணற்றில் வீசி கொல்லப்பட்ட இந்த குழந்தைகளின் போட்டோவை சமர்ப்பிக்கிறேன். இதைப் பார்த்தாவது அவர் உணர்வு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தாயகத்தில் போராட்டம் நடந்த போது அதைக் காட்டி புலத்தில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர்கள் இன்று அதே தாயகத்தில் மக்கள் கஸ்டப்படும்போது அதை மறந்து புலத்தில் வீண் ஆடம்பர கேளிக்கைகள் செய்வது அவசியம்தானா எனக் கேட்க தோன்றுகிறது.

வன்னியில் பிறந்த லைக்கா மொபைல் முதலாளி இன்று அதே வன்னியில் பட்டினியால் மக்கள் தற்கொலை செய்யும் போது லண்டனில் “மானாட மயிலாட” நடத்துவது தேவைதானா? வன்னியில் உணவின்றி குழந்தைகள் சாகும்போது அதையிட்டு கவலை கொள்ளாது தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு பிரதம விருந்தினராக நடிகர் சிம்புவை அழைக்க வேண்டுமா? 

வன்னியில் முன்னாள் பெண் பொராளிகள சிலர் உணவுக்காக தமது கற்பையே விற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது குறித்து கவலை கொள்ளாது “மானாட மயிலாட” மேடையில் நடிகைகளின் புகழ்ச்சியைப் பெறுவது தேவைதானா? ஆல்லது அவ்வாறு புகழ்ச்சி பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது?

லண்டனில் மிகப் பெரிய வெம்பிளி அரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலைஞரின் “மானா மயிலாட” நடந்துள்ளது. இதற்கான அனைத்து செலவையும் ஏற்று உதவியவர் இந்த முதலாளி அல்லிராஜா என்று மேடையேறிய அனைத்து நடிகர் நடிகையரும் நன்றி தெரிவித்தனர். இது குறித்து இலங்கைத் தமிழரான அல்லி ராஜா அவர்கள் பெருமைப்படலாம். ஆனால் அவரது இந்த செயல் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் வெட்கி தலை குனிய வைத்துள்ளது.



Balan Tholar

thankx facebook

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி ஆக்கங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.. இனக்கொலையின் கூட்டாளிகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று கேட்பது நியாயம். அதற்காக தாயகத்தின் சிறார்களின் படத்தைப் போட்டு சினத்தை விதைப்பது சரியல்ல..

இந்த குழந்தைகளுக்கு சாப்பாடு போட எங்களாலும் முடிந்திருக்கும். போரில் தப்பி இப்படி சாப்பாடு இல்லாமல் சாக விட நானும் தான் காரணம்.சிறுவர்களின் பசியை போக்க பணக்காரர்களை நம்பி இருக்காமல் எம்மால் முடிந்தததை செய்வோம்

  • தொடங்கியவர்

ok boss :icon_idea:

பொறாமையின் உச்ச கட்டம் .மிக கேவலமான ஒரு இனம் நாம் என்று மீண்டும் மீண்டும் பறையடிக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

படம் வேதனையைத் தருகிறது .ஆனால் இந்தக் கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை ! ஈழத்துத் தமிழ்ப் பணக்காரர்கள்  பலரும் பெரும்பாலும் உதவிகள் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு வேற வேலை இல்லை..... சும்மா கண்டதுக்கும் அறிக்கை விட்டு கொண்டும்....ஆட்டுக்குள்ள மாட்ட விட்டு கொண்டும்.....,

மற்றவன் காசு பாத்துட்டானே...தாங்கள் செய்ய முடியாதத மற்றவன் செய்திட்டானே..... என்ற மன நோய்....

பாலன் தோழருக்கு வீட்ட வேற வேலை இல்லை...:D

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா மொபைல் காரரே கள்ளர். இதில.. அவையிட்டப் போய் பிச்சை கேட்டுக்கிட்டு..???! அவர்கள் சொந்த ஊழியர்களையே கூலிகள் போல நடத்துகிறவர்கள். அவர்களிடம் தமிழர்கள் பெருமை கொள்ள எதுவும் இல்லை..!

 

மேலும் பெரும்பாலான உள்ளூர் மக்கள் லைக்கா மொபைலை நாடுவதில்லை. நாங்களும் இதுவரைக்கும் அதனை நாடியதில்லை. நாட வேண்டிய தேவையும் வரவில்லை. ஆனால் குடியேற்றக்காரர்களை இலக்கு வைத்தே லைக்கா மொபைலின்  வியாபாரம் நடக்கிறது..! இவர்களின் வியாபாரம் ஒன்றும் முறியடிக்க முடியாத.. பெரிய தந்திரமானது என்றும் இல்லை.

 

வன்னியில் உள்ள நிலவரங்கள் தொடர்பில் கவனிக்க புலம்பெயர் நாடுகளில் பல தன்னார்வ அமைப்புக்கள் இயங்குகின்றன. அவர்களிடம் உங்கள் முறைப்பாடுகளை சமர்ப்பித்தால் தீர்வு கிட்டும். லைக்காவோ.. கலைஞரோ.. ஜெயலலிதாவோ.. தென்னிந்திய.. நடிகை.. நடிகர்களோ..டக்கிளஸோ.. சம்பந்தனோ.. சங்கரியோ.. சித்தார்த்தனோ.. மக்களுக்கு உதவப் போறதில்லை. அவர்களின் நோக்கம்.. வியாபாரம்.. விளம்பரம்.. ஆதாயம்... வெட்டிப் பெருமை.. சுய இலாபம்..சுய நலம்..! இவர்களிடம் கெஞ்சிப் பயனில்லை..! :icon_idea:

 

வெம்பிலி.. திருக்கூத்திற்கு முன்னர் எழுதிய ஆக்கம் இங்கு....! அப்ப எல்லாம் கூட்டத்தோடு கூட்டமா நின்று விசிலடிச்சிட்டு.. இப்ப எல்லாம் முடிஞ்சு பொக்கற்றுக்களும் நிரம்பினாப் பிறகு... சும்மா கூப்பாடு போட்டுப் பயனில்லை..!

 

 மானாட மயிலாட கூடவே கலைஞரோட கனிமொழியாட..!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124918

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பணம் இருந்தால் ஒபாமாவையும் கூப்பிட்டு
கரீபியன்ஸ் ஆட்டம் போடலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.