Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவில் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்னரின் பிரச்சார நடவடிக்கை

Featured Replies

கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்னர் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று வடக்கு மாகாணசபைக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி யினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவு பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெடுந்தீவிற்குச் சென்றுள்ளனர்.

இதன் போது ஒட்டுக்குழுவின் அடக்குமுறைகளையும் மீறி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்கள் பெரும் ஆதரவினை தெரிவித்திருந்ததோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இம்முறை வெற்றியடையச் செய்வோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.

ஆயினும் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் நெடுந்தீவு சென்ற பாராளுமன்ற உறுப்பினரை யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுரை பின்தொடரந்து சென்று அவர்களை அச்சுறுத்தும் வகையில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Nedunthivu%201.JPG

Nedunthivu%202.JPG

Nedunthivu%203.JPG

Nedunthivu%204.JPG

Nedunthivu%205.JPG

Nedunthivu%206.JPG

Nedunthivu%207.JPG

Nedunthivu%208.JPG

Nedunthivu%209.JPG

Nedunthivu%2010.JPG

http://www.sankathi24.com/news/32378/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு மக்களின் எழுச்சிச் செய்தியை வாசிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. இது நிகழுமென நான் நம்பினேன். 

 

எமது போர்குணம் மிக்க மூதாதையர்களின் மண்ணில் சிலகாலமாக நிலவிய அச்சுறுத்தும் கொலொனியல் நிலமையை உடைத்த பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சிறீதரனுக்கும் அவரை வரவேற்பதில் முன்னிலை வகுத்த தமிழர் தேசிய கூட்டமைப்பின் ஆர்வலர்களுக்கும் என் நன்றிகள்.

 

சில காலமாக தேர்தலுக்குத் தேர்தல் இடம்பெறுகிற இத்தகைய அச்சுறுத்தல்களை ஒட்டு மொத்தமாக உடைத்தெறிய போர்க்குணம் மிக்க எனது ஊரின் மக்கள் அணிதிரண்டெழுந்திருப்பது வரவேற்புக்குரியது.

 

சகல மேலாதிக்கங்களையும் நிராகரிப்பது நமது கடமை. அதேசமயம் நமக்குள் மலிந்துள்ள சாதி வேறுபாடுகளை நமது இளைய தலைமுறை உறுதியாக நிராகரிக்க வேண்டும்.இதுமட்டுமே நம்மை அடிப்படை நாகரீகமுள்ள மக்களாக மேம்படுத்தும். நம் இளைய தோழ தோழியர்கள் இப்பவே அந்த புரட்சிகர பணியை ஆரம்பிக்க வேணும். 

 

அதேசமயம் எழுச்சி பெற்றுள்ள எம் மக்கள் மாற்று கருத்துள்ளவர்களையும் மாற்று அரசியல் அமைப்பினரையும் அச்சுறுத்தாமல் கருத்தை கருத்தினால் எதிர் கொள்ள வேண்டும். இழந்த நமது ஜனநாயக மரபுகளையும் நாம் மீட்டெடுக்கவேண்டும். .

 

இந்த வேண்டுகோள் நெடுந்தீவு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதி மக்களுக்கும் குரிப்பாக யாழ்குடாநாட்டு மக்களுக்கும் பொருந்தும் வேண்டுகோளாகும்.

 

- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கக்கூடிய கருத்து, கவிஞர். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கக்கூடிய கருத்து,   தோழர்.

தொடருங்கள்.

 

முப்பது வருடமாக இதை எல்லாம் தாண்டி எமது மக்கள் வந்தார்கள் .அராஜகத்திற்கு எப்போதும் மக்கள் எதிரிதான் .

ஈ.பி.டி.பி யால் தனது கோட்டை என்று கூறப்படும் நெடுந்தீவுக் கோட்டையை உடைத்து கோட்டைக்குள் சென்று தாக்குதல்தலகள் நடந்திருக்கு. 

 

எழுச்சி நடக்கிறது என்று நினைக்கும் பொய்யட் அமைச்சர் சுசில் நெடுந்தீவு 99% ஈ.பி.டி.பி என்று சொன்ன திரியில் அதை எழுதிவைக்க வேண்டும்.

 

"புலி" என்று பலதடவை 4ம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டிருந்தாலும், நெடுந்தீவு 99% விதம் ஈ.பி.டி.பி என்று அமைச்சர் சுசிலால் கூறப்பட்டாலும் அங்கு இருக்கும் 1% கூட்டமைப்பு மக்களுக்காக அங்கு சென்று பேச தனக்கு உரிமை இருக்கு என்று வன்னிவீரன் சிறிதரன் நிரூபித்திருக்கிறார்.  எழுச்சி நடந்ததா இல்லையா என்பது தேர்தலின் பின்னர் வெளிவரும் புள்ளிவிபரங்கள் சொல்லிவைக்கும்.

 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.