Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

madras cafe போராட்ட செய்திகள் உடனுக்குடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17b4.jpg
 
மெட்ராஸ் கபே படத்தை எதிர்த்து மாணவர் போராட்டம் ! 

பாலசந்திரன் மாணவர் இயக்கத்தின் சார்பாக தமிழர் விரோத படமான மெட்ராஸ் கபே திரைபடத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 30மாணவர்கள் இன்று 22.08.13 காலை 11மணி அளவில் மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் செய்தோம். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை காவல் துறை கைது செய்து மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் பாலசந்திரன் மாணவர் இயக்கமும் , தமீழத்திற்கான மாணவர் கூட்டமைப்பும் கலந்து கொண்டது.

fc

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் தமிழர்களால் முற்றுகை ...

ப்ளெக்ஸ் போர்ட்கள் கிழிப்பு அணைத்து பாணர்களும் உடைப்பு...

சாதி மதம் அரசியல் கடந்து தமிழர்கள் ஒற்றுமை வாழ்த்துக்கள் .
http://www.youtube.com/watch?v=evbV3KbnNuE&feature=c4-overview&list=UUfogl0kdrKh-GEJKrFrF_aA

 

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை! பேனர்கள் கிழிப்பு! 

 

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன. படம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானபடுத்து போல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் பாஜக பிரமுகர்கள் மற்றும் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=106148


rveb.jpg
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் விடுதி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள் .

http://www.youtube.com/watch?v=4nsO9axlnE0

fc

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8pct.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் பையா.. தொடருங்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று புதுச்சேரியில் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு தடை
விதிக்க முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 
மனு கொடுத்துவிட்டு... இன்று அனைத்து திரையரங்குகளுக்கும்
நேரில் சென்று எச்சரித்தோம்!!!!!!!!!!! 
புதுச்சேரியில் இப்படம் வரவாய்ப்பு இல்லை!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பூரான்கள் இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிறிதர், தமிழர் களம் அழகர், செந்தமிழர் இயக்கம், ந.மு.தமிழ்மணி, அலைகள் இயக்கம் பாரதி, பெரியார் சிந்தனையாளர் தீனதயாளன் ஆகியோர்கள் அவரவர் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று எச்சரிக்கை வித்துள்ளார்கள்......
 

btnv.jpg
 
fc
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் காபே" திரைப்படம் - திருச்சியில் நாம் தமிழர் அமைப்பு எதிர்ப்பு: 
22 08 2013
"மெட்ராஸ் காபே" திரைப்படத்தை திருச்சியில் தடை செய்ய கோரி நாம் தமிழர் அமைப்பினர் இன்று காலை (21.08.2013) நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் மனு கொடுத்ததோடு திரைப்படத்தை வெளியிட்டால் கடுமையான போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துச் சென்னறனர்.

 

tyvd.jpg

 
 

fc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்றால் இதுக்கு பேர் தான் போராட்டம்! 

திரையரங்கத்தின் உள்ளே நுழைந்தோமா , மெட்ராஸ் கபே பதாகையை கிழித்தொமா , உள்ளே இருக்கும் திரையரங்க ஊழியர்களிடம் தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோமா என்று வெற்றியுடன் நடைபோட்டு வந்தனர் தமிழர் முன்னேற்ற கழக தோழர்கள். 

தமிழினத்திற்கு எதிரான இப்படத்தை மீறி திரையிட்டால் திரைப்பட திரை கிழிந்து விடும் என எச்சரித்துள்ளனர். படத்தில் அதியமான் மற்றும் தோழர் வேல்முருகன் உள்ளனர். 

சென்னை சிட்டி சென்டர் ஐநாக்ஸ் திரையரங்கின் உள்ளே எடுத்த படங்கள்

x1tm.jpg
 
fc
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கபே படத்தை எதிர்த்து சென்னை Skywalk முன்னர் ஆர்ப்பாட்டம்

 
மெட்ராஸ் கபே படத்தை எதிர்த்து சென்னை Skywalk முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய சிவப்ரியன் செம்பியன் Joe Britto Mani Kandan உள்ளிட்ட மாணவர்கள் சுமார் 30 பேர் கைது.
 
tlws.png
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை: பதாகைகள் கிழிப்பு - சென்னையிலும் மாணவர்கள் போராட்டம்
22 .08.2013

நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் வெளியாவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திரையரங்கு உரிமையாளர்களும், மக்கள் மனதை புண்படுத்தும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. சென்னையில் மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தை முன்னெடுத்து விட்டனர்.

இத்திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன. பிரபாகரன் தீவிரவாதியாக காட்டப்படும் திரைபடம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானப்படுத்துபோல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையில் களத்தில் இறங்கி முதல் அடியை கொடுத்துள்ளனர் மும்பை பாஜக கட்சியினரும் மற்றும் தமிழ் அமைப்பினரும்.

இன்று மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. திரைப்பட சுவரொட்டிகள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

சாதி மதம் அரசியல் கடந்து ஒற்றுமையாக களமாடினர் தமிழர்களுக்கு மும்பையில் சாதித்து விட்டனர். தமிழகத்தில் நம் பலத்தை காட்டுவோம் என்று கூறுகின்றனர் தமிழக தமிழர்கள்.


fc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை 
இந்திய அரசசே தடை செய்..!
தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதே..!
பாலசந்தர் மாணவர் இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் 
சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் சாலை மறியல்…
 

eybu.jpg
 
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கி ல‌ Maddras Cafe படம் ஓடாது அப்படி ஓடினா முதலாவது ரிக்கற் நானும் எனது நண்பர்களும் எடுப்பம் திரையரங்கை உடைக்கவும் தயங்க மாட்டோம் விநியோகஸ்தரை போட்டு தாக்கவும் தயங்க மாட்டோம் படம் பாக்க வாற ஆக்களுக்கு உதை குடுக்கவும் தயங்க மாட்டோம்....
 

32a2.jpg
 

இப்படிக்கு பையன் 26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
f59h.jpg
 

 

 

 

மெட்ராஸ் கபே - தடுத்து நிறுத்த தமிழக, புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு
ஆக 20, 2013

தமிழர்களுக்கு எதிரான ‘மெட்ராஸ் கபே’ திரைப்ப படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அமைப்புகளும், கட்சிகளும் தமது எதிர்ப்பை காட்டமாக வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் வெளியிடக் கூடாது என்றும் அதனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இத்திரைப்படம் குறித்து கருத்துவெளியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்ச பணம் கொடுத்து, சோனியா காந்தி இயக்கி, இந்திய றோ உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு, ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை புலிகளை கெட்டவர்களாகவும், இந்திய அமைதிப் படையும், சிங்கள அரசும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்று இப்படத்தைப் பார்த்த பலரும் வலியுறுத்தியுள்ளனர். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தைக் காண்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, இத் திரைப்படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி ‘மெட்ராஸ் கபே’ என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறீலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமோ என்று நினைக்கின்ற அளவிற்குத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் ‘ஜப்னா’ என்று பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு, பிறகு ‘மெட்ராஸ் கபே’ என்று பெயர் மாற்றம் செய்து, இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ஜோன் ஆப்ரகாம், யாழ்ப்பாணத்தில் தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, ஏதோ ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது போல் சித்தரித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடாத்திய ஒரு திட்டமிட்ட இன அழித்தலை நியாயப்படுத்த, 1980-90 ஆண்டுகளுக்கு இடையிலான ஒரு காலகட்டத்தை கதைக்கு அடிப்படையாக்கி, தமிழின போராட்டத்தை பயங்கரவாதமாகவும், தமிழின விடுதலைக்குப் போராடிய தமிழர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழித்தலை நியாயப்படுத்தவே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தமிழினத்தை தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களாகச் சித்தரிக்கும் அதே வேளையில், ராஜீவ் காந்தியைக் காப்பாற்ற மலையாள அதிகாரிகள் சிரத்தையுடன் செயலாற்றியதாகவும் சித்தரிக்கிறது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தைப் பார்க்கும் எந்த தமிழனுக்கும் மலையாளிகள் மேல் கோபம் ஏற்படும். அந்த அளவிற்கு மலையாளிகளை தூக்கி வைத்தும், தமிழர்களைத் தாழ்த்தியும் படத்தை எடுத்துள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்தின் பின்னணியில் தமிழினத்தை கேவலப்படுத்தும், தமிழர் - மலையாளிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. இலங்கையில் வரும் நவம்பரில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் இத்திரைப்படம், சிங்கள பௌத்த இனவெறி அரசின் போரை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராடத்திற்கான நியாயத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல், தமிழினம் அங்கு திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறைத்து, தம் இனத்தைக் காக்க தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கண்மூடித்தனமான தீவிரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படத்தைத் தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை திட்டமிட்டு கேவலப்படுத்துகிறது. இதனைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் திரையிடக் கூடாது என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இப்படத்தைத் தடை செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்டதொரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்.

ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, இலங்கை அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது.

எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, இலங்கை அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளபாடங்களையும் தந்தது யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு. அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டது.

தற்போது பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின.

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் ‘மெட்ராஸ் கஃபே’ எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், இரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சவை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான்.

1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவராக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும்.

நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஓகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு’ என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தார். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம். 1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கொமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது.

எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர். யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர். ‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன. நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, இலண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான றோ, பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார்.

இந்திய உளவு நிறுவனம் றோ, விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜொனியை, சென்னையில் இருந்து வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1993 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.

இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த துரோகத்தை மறைக்கவும், கொடிய இந்திய அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜோன் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும். என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டுவான்? ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சவுக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

1984 இல், புதுடில்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா? தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன.

இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும். ஓகஸ்ட் 23 ஆம் திகதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்! தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர்,

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன். இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்’ என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்தப் படத்தை திரையிட்டால் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவும் தயாராகிவருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இப்படத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.

 

fc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு (ம்) வந்த மாணவ உறவுகளுக்கு வாழ்த்துக்கள்..ஈழம் அடையாமல் நம் போராட்டம் ஓயாது...ஓயாது ...

 

di9u.jpg

 
fc
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஷ் கபே க்காக இன்று கருத்து சுதந்திரத்தைப் பற்றி வாய்கிழிய பேசுபவர்கள்

அன்று
தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்காது ஈழ போராட்டத்தின் உண்மைகளை சொன்ன ஆணிவேர், உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி
போன்ற திரைப்படங்களை தடைசெய்தது எவ்வகையில் நியாயம்? அதுமட்டுமா இறுதி யுத்தத்தில் எம் மக்கள் கொத்தாக மரணிதுகொண்டு இருந்தபோது அந்த படுகொலை காணொளிகளை வெளியிட்ட மக்கள் தொலைகாட்சியை கூட உளவுத்துறைமூலம் மிரட்டியது எதிர்ப்பை மீறி வெளியிட்டபோது பல பகுதிகளிலும் மக்கள் தொலைகாட்சி ஒளிபரப்பை தடுத்தது..ஈழ படுகொலை செய்திகளை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகையை மிரட்டி பல இடங்களில் பத்திரிகையை விற்பனையை தடுத்தது..ஈழ படுகொலை காணொளிகளை மக்களில் வீடுகளில் கொண்டு சென்று சேர்த்த ம.தி.மு.க , விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், மே 17 இயக்க தோழர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதுவா உங்கள் உங்க கருத்துரிமை? உண்மையான படுகொலை காணொளிகளை வெளியிடுவதற்கே அனுமதிக்க மாட்டீர்கள்..அனால் தமிழர்களை தீவிரவாதிகளாக பொய்யான காட்சிகளை படமாக எடுத்தால் நாம் அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா?

மும்பை ஹோட்டலை தாக்கி மக்களைக் கொன்றதால் பாகிஸ்தனுடன் கிரிகட் விளையாடமாட்டோம் என்றீர்கள்,
1 1/2 இலட்சம் தமிழர்களைக் கொன்ற ,600க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்ற இலங்கையுடன் கிரிகட் விளையாடக்கூடாது என்று நாம் சொன்னதிற்க்கு 
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று உபதேசம் செய்கின்றீர்கள்.

தமிழர்கள் ஏமாளிகளாக, இருந்தது உண்மை தான் அனால் தற்போது விளித்து கொண்டு விட்டோம்.. எமக்கு எதிரான சதி எந்த ரூபத்தில் வந்தாலும் முறியடிப்போம்..வெற்றிகொள்வோம்..

fc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி போராட்டங்களை அறிவித்திருந்த மாணவர்களாலும், திரைஅரங்கு உரிமையாளர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்த களப்போராளிகளின் செய்கைகளாலும், வீதிக்கு வந்து போராடிய மாணவர்களாலும் நாளை வெளியாக இருந்த மெட்ராஸ் கபே திரைப்படம் தமிழர் நாட்டில் திரையிடப்படமாட்டாது என திரை அரங்கு உரிமையாளர்களால் அறிவிக்க செய்துள்ளது.

மெகா ஊழல் புரிந்துவரும் மக்கள் விரோத காங்கிரசு கட்சிக்கு மீண்டும் ஒரு அனுதாப அலையின் வாழ்வளிக்கும் விதமாக , பொய்யாக புனைந்து, வரலாற்றினை திரித்து எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே -இந்தி திரைப்படம் தமிழகத்தில் தனது வர்த்தக கடையை மூடும் படி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மற்ற மாநிலங்களில் காங்கிரசு கட்சிக்கு எதிராக செயலாற்றும் கட்சிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்புரிந்தால் அவர்கள் தங்களை காத்துக்கொள்ளலாம். இந்த படம் தமிழர்களுக்கு எதிரான ஒரு படம் மட்டும் அல்ல காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கும் படமுமாகும். எப்போதுமே தமிழர்களை வைத்தே காங்கிரசு அரசியல் கைகளை நகர்த்துகிறது. அதற்க்கு எப்போதுமே தமிழர் பிரச்சினைகள் வேண்டும். 

காங்கிரசின் உளவியல் ரீதியான இந்த போரை தமிழர்கள் தமிழகம் கடந்தும் முறியடிக்க வேண்டும்!

fc

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் ஆப்பு...    9qvo.jpg

 
 

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம். தியேட்டர் அதிபர்களின் அதிரடியால் படக்குழுவினர் அதிர்ச்சி........

நீதிமன்றம் அனுமதித்தாலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம். தியேட்டர் அதிபர்களின் அதிரடியால் படக்குழுவினர் அதிர்ச்சி.

மெட்ராஸ் கபே’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் நாளை (23–ந் தேதி) ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர். 

தமிழ் பதிப்புக்கு தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம் இது என கொந்தளித்தனர். 

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வக்கீல் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார். நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

விசாரணையை அடுத்த மாதம் 3–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று மாலை சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்று பன்னீர் செல்வத்திடம் இன்று மாலை மலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா வேண்டாமா அந்தந்த தியேட்டர் உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்’’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார். 

தியேட்டர் அதிபர் ஒருவர் கூறும் போது, ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்’’ மேலும் இந்த படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றாலும் தியேட்டர் பாதுகாப்பு கருதி இந்த திரைப்படைத்தை திரையிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிரோம் " என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.

தியேட்டர் அதிபர்கள் எடுத்த இந்த அதிரடி முடிவால் மெட்ராஸ் கபே படக்குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்."

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட ஒரு சிறந்த கருத்தியல் புரட்சி இருக்கமுடியாது.. வட இந்திய வாலாக்களுக்கு ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும்.. ஏண்டா இப்பிடி செய்யிறாங்கள் எண்டு.. ராஜீவ் காந்தியை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்றும் தெரியவரும்..

  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டர் அதிபர் ஒருவர் கூறும் போது, ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்’’ மேலும் இந்த படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றாலும் தியேட்டர் பாதுகாப்பு கருதி இந்த திரைப்படைத்தை திரையிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிரோம் " என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.

--------

 

சந்தோசமான செய்தி. :) 

திரையரங்கு அதிபர்களின் முடிவு வரவேற்கத்தக்கது. இதற்காக குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

பையன்.. இது சம்மந்தமான செய்திகளை... உடனுக்குடன் இணைத்து விடுங்கள், வாசிக்க... ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையா. தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
enkn.jpg
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலும் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிர்ப்புப் போராட்டம்
22 08 2013
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்றுவரும் இப்போராட்டம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருவதாக பதிவின் செய்தியாளர் தொிவிக்கின்றார்.

 

yr2x.jpg
 

 

fc
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோ, :)

தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் அறியத்தாருங்கள்.  


madras-cafe-pro-mumbai-220813-seithy-150

நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் வெளியாவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திரையரங்கு உரிமையாளர்களும், மக்கள் மனதை புண்படுத்தும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. சென்னையில் மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தை முன்னெடுத்து விட்டனர்.

  

இத்திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன. பிரபாகரன் தீவிரவாதியாக காட்டப்படும் திரைபடம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானப்படுத்துபோல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மும்பையில் களத்தில் இறங்கி முதல் அடியை கொடுத்துள்ளனர் மும்பை பாஜக கட்சியினரும் மற்றும் தமிழ் அமைப்பினரும். இன்று மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. திரைப்பட சுவரொட்டிகள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. சாதி மதம் அரசியல் கடந்து ஒற்றுமையாக களமாடினர் தமிழர்களுக்கு மும்பையில் சாதித்து விட்டனர். தமிழகத்தில் நம் பலத்தை காட்டுவோம் என்று கூறுகின்றனர் தமிழக தமிழர்கள்.

 

madras-cafe-pro-mumbai-220813-seithy-001

 

 

madras-cafe-pro-mumbai-220813-seithy-002

 

 

madras-cafe-pro-mumbai-220813-seithy-003

 

 

madras-cafe-pro-mumbai-220813-seithy-004

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90812&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பையா !   தொடர்ந்து இணையுங்கள் !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.