Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோவை- திருப்பூரில் சிங்கள தேசியக் கொடிகள் எரிப்பு

Featured Replies

தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் சிங்கள தேசியக் கொடிகள் இன்று எரிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் வான் குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் பலியெடுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன.

கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன், ஆட்சிக் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன.

இதையடுத்து 40 பெரியார் திராவிடர் கழகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் தலைமையில் சிங்களத் தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. சிங்களத் தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டதையடுத்து 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே கொளத்தூர் உள்ளிட்ட தமிழக பாடசாலைகளில் இன்று இந்திய சுதந்திர நாள் நிகழ்வுகளுக்கு முன்னதாக முல்லைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமிகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

"சிங்கள குண்டுவீச்சுக்குப் பலியான 61 செஞ்சோலை இளந்தளிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி" என்ற தலைப்பில் சென்னையில் எதிர்வரும் 21 ஆம் நாளன்று பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் நாளன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளது. எதிர்வரும் 17 ஆம் நாள் தொடக்கம் தமிழ்நாடு முழுவதும் கண்டன நிகழ்வுகளை நடத்த தமிழின உணர்வாளர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

நன்றி - புதினம்

http://www.eelampage.com/?cn=28202

தகவலுக்கு நன்றி தம்பி உடையான்,அங்கு உள்ளூர் தினசரிகளில் என்ன வென்று செய்தி போட்டுள்ளார்கள் என்று எழுத முடியுமா?

  • தொடங்கியவர்

நேற்று மாலை தமிழ்முரசில் "அதிசயமாக" சிங்களராணுவம் கொடூர தாக்குதல் என்று தலைப்பிட்டிருந்தார்கள். இன்று தினத்தந்தி உள்ளிட்ட தமிழர் நலன் பேனும் தினசரிகளில் எல்லாம் செஞ்சோலை படுகொலை தலைப்புச்செய்தியாக வந்துள்ளது.

தகவலுக்கு நன்றி தம்பியுடையான்.

  • தொடங்கியவர்

நன்றி வசி !

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தம்பியுடையான்!

தமிழ்நாட்டில், சிறிலங்கா அரசின் தூதரகம் ஒன்று உண்டு உண்மையா? ஏன் தமிழ்நாட்டிற்கு என விசேடமாக அமைத்திருக்கின்றார்கள்!

  • தொடங்கியவர்

அண்ணன் கோவை.ராமகிருட்டினன் பற்றிய எனது முந்தைய பதிவு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#148126

  • தொடங்கியவர்

சண்டாள சிறீலங்காவிற்கு மட்டுமல்ல நாசகார அமெரிக்காவிற்க்கும் இங்கு தூதரகம் உண்டு. விசா வழங்குவதற்கு ஏதுவாக என்று சொல்கிறார்கள். முக்கிய நாடுகள் பலவற்றுக்கும் சென்னையில் தூதரகங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உப தூதரகங்கள் முக்கியமான நகரங்களில் அமைத்து இருப்பார்கள்...

தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் முக்கியமாக உளவு நடை முறைக்காகவே அங்கு இருக்கிறது.இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இந்தியர்களுக்கு விசா அவசியம் இல்லை.தற்போது இந்தத் தூதரகத்தில் இருப்பவர் தமிழ் பேசும் முஸ்லிம் அவர் அண்மையில் குடுத்த பேட்டியை பிபிசி தமிழ் ஓசையின் நரிகள் ஒலி பரப்பியதை எல்லாரும் கேட்டிருப்பீர்கள்.

இந்த தூதரகத்தில் இருக்கும் இலங்கைப் புல நாய்வு அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கும் ஒட்டுக் குழுக்களுடன் உறவைப் பேணுவதுடன் தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அரசிற்குச்சார்பான அரசியல் வாதிகள்,பத்திரிகையாளர் ஆகியோருக்கு அனுசரணையாக செயற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்த மதத்தைப் பற்றித் தப்பாகச் சொல்லவில்லை. ஆனால் அங்கே தமிழ்நாட்டில்; முக்கியமாக விகாரைகள் அமைத்து, பௌத்தம் தமிழனுக்கு எதிரானது அல்ல என்ற தோற்றப்பாட்டைச் சில பிக்குகள் மூலம் இலங்கையரசு செய்து வருகின்றது.

ஒவ்வொரு வடிவிலும் அது தான் இனகொலைகளை மறைக்க முயற்சிக்கின்றது. ஆனால் நாம் வாய்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்!

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தம்பியுடையான்.

தாய் தமிழகமும் குமுறி வெடித்துக் கொண்டிருக்கின்றது என்ற சேதி ஈழத்து உறவுகளுக்கு சாய்ந்து அழ தோள் கிடைத்த ஆறுதலைக் கொடுக்கிறது.

இப்படியான எதிர்ப்பு கொடி எரிப்பு தூதுவரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் என்பவற்றை ஏன் ஐரோப்பாவில் தமிழர்கள் சிறிலங்கன் தூதுவராலயத்திற்கு முன்னால் செய்வதில்லை?

http://www.dinakaran.co.in/epaperdinakaran

இந்த லிங்கில் ஆகஸ்டு 15ஆம் தேதி தினகரன் படித்துப் பாருங்கள்.... முதல் பக்கத்திலேயே முல்லைத்தீவு செய்தி தான் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் இந்த லிங் பதிவு செய்த வாசகர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

முதல் பக்கத்தில் ஏதோ இலவச காஸ் இணைப்பு என்று உள்ளதே :D

தின தந்தியில் 6 ம் பக்கம் இந்த செய்தி வந்தது..

தலைப்பு செய்தி என்ன தெரியுமா??

சுதந்திர தின விழாவை கெடுக்க மனித வெடுகுண்டுகள் டெல்லியில் பரப்ரப்பு..

தம்புடு என்ன இப்படி பொய்ய்னா தகவல் எல்லாம் சொல்றீங்க? :D

நேற்று மாலை தமிழ்முரசில் "அதிசயமாக" சிங்களராணுவம் கொடூர தாக்குதல் என்று தலைப்பிட்டிருந்தார்கள். இன்று தினத்தந்தி உள்ளிட்ட தமிழர் நலன் பேனும் தினசரிகளில் எல்லாம் செஞ்சோலை படுகொலை தலைப்புச்செய்தியாக வந்துள்ளது.

இப்படியான எதிர்ப்பு  கொடி எரிப்பு  தூதுவரகத்திற்கு  முன்னால்  ஆர்ப்பாட்டம் என்பவற்றை  ஏன் ஐரோப்பாவில் தமிழர்கள்   சிறிலங்கன் தூதுவராலயத்திற்கு முன்னால்  செய்வதில்லை?

எங்கட நாட்டிலையே செய்தாலும் ஓரு பிரியோசனமும் இல்லை புலத்தில் அனால் இப்படி செய்தால் எம் பிரச்சினை அந்த நாட்டுக்காரனுக்கு விளங்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை

லக்கி லுக் இந்த லிங் பதிவு செய்த வாசகர்கள் மட்டுமே பார்க்க முடியும்.  

முதல் பக்கத்தில் ஏதோ இலவச காஸ் இணைப்பு என்று உள்ளதே :D

இலவசம் இலவசம் இலவசம் தான் உங்கட அரசியல் rajathiraja( http://www.dinakaran.co.in/epaperdinakaran )அதனால் தான் உண்மையான அரசியல் வெல்வது இல்லை அங்கு இலவசம் எண்டால் வோட்டு தன் பரமஎதிரிக்கும் உண்டு தன் தந்தையை கொண்டவனுக்கும் போடுவீங்க

இதேல்லாம் தேவையா?

சமூகத்தில் ஏற்ற தாழ்வு நிலை வர கூடாது என்பதற்க்காக அரசாங்கம் சில பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி தான் தீர வேண்டும்.. உங்களிடம் பணம் இருக்கிறது.. அதனால் உங்களால் எல்லாம் வாங்க முடியும்.. ஏழைகளுக்கு யார் கொடுப்பார்கள்?

இலவசம் இலவசம் இலவசம் தான் உங்கட அரசியல் rajathiraja( http://www.dinakaran.co.in/epaperdinakaran )அதனால் தான் உண்மையான அரசியல் வெல்வது இல்லை அங்கு இலவசம் எண்டால் வோட்டு தன் பரமஎதிரிக்கும் உண்டு தன் தந்தையை கொண்டவனுக்கும் போடுவீங்க

நான் அதை சொல்லவிலை நீங்கள் கொவுத்தூர் மணி யை பற்றி சொனதுக்கு சொல்கின்றோன் அவருடமும் பணம் இருந்தால் வெல்லலாம் எண்டு சொலுறது மதிரி இருக்கு

கொளத்தூர் மணியிடம் எத்தனை பணம் இருந்தாலும் அவரால் ஜெயிக்க முடியாது.. அவரின் கொள்கை சரி இல்லை( தனி தமிழ் நாடு)

நான் அதை சொல்லவிலை நீங்கள் கொவுத்தூர் மணி யை பற்றி சொனதுக்கு சொல்கின்றோன் அவருடமும் பணம் இருந்தால் வெல்லலாம் எண்டு சொலுறது மதிரி இருக்கு

அதை சொல்லவில்லை நான் உங்கள் அரசியல் பற்றி சொன்னேன் அப்படி பிழை ஆயின் என்னை மன்னிங்கள் சகோதரனே

அப்படி இல்லை ஈழவன்.. நானும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.. எல்லா இடத்திலும் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு.. வெறும் கெட்டதையே பேசு பயன் இல்லை தானே

:D

அதை சொல்லவில்லை நான் உங்கள் அரசியல் பற்றி சொன்னேன் அப்படி பிழை ஆயின் என்னை மன்னிங்கள் சகோதரனே
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேல்லாம் தேவையா?

சமூகத்தில் ஏற்ற தாழ்வு நிலை வர கூடாது என்பதற்க்காக அரசாங்கம் சில பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி தான் தீர வேண்டும்.. உங்களிடம் பணம் இருக்கிறது.. அதனால் உங்களால் எல்லாம் வாங்க முடியும்.. ஏழைகளுக்கு யார் கொடுப்பார்கள்?

நல்ல விடயம் தான். ஏழைகளிற்கு இலவசமாக கொடுப்பது. ஆனால் அதை ஏன் அய்யா 90வீதமானவர்கள் தேர்தல் வர முன் செய்கிறார்கள்?

அது எபோதும் நடப்பது தான்.. தேர்தல் நேரத்தில் அதிகமாக ஏழை மக்களின் ஓட்டு வாங்க செய்ய படுகிறது.. இது சில் ஆண்டுகளாக தான் நடக்கிறது..

நல்ல விடயம் தான். ஏழைகளிற்கு இலவசமாக கொடுப்பது. ஆனால் அதை ஏன் அய்யா 90வீதமானவர்கள் தேர்தல் வர முன் செய்கிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.