Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரது இன்றைய அவசரத் தேவை கடும்கோட்பாடுடைய ஒரு தமிழ் கட்சி!

Featured Replies

வடக்குத் தேர்தல் ஒரு முக்கியமான செய்தியை சொல்லிச் சென்றிருக்கிறது. தென்னிலங்கையைப் பொலவே தமிழ் பிரதேசத்திலும் ஒரு பலமான எதிர்க்கட்சி இல்லை என்பதே அந்தச் செய்தி. எப்படி சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சரியான ஒரு மாற்று இல்லாத காரணத்தால் தொடர்ந்து மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் ஆமாம் போடும் சாமிகளாகி தொடர்ந்து அவரது கட்சிக்கே தாவுவதும் அவரது கட்சிக்கே வாக்குப் போடுவதுமாக இருக்கின்றார்களோ அதே போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமீழ் பிரதேசத்தில் தனிப் பெரும் கட்சீயாக இருந்து வருகிறது.

 

இந்த நிலமை தருகின்ற சாதகங்களை விட பாதகங்களே அதிகம். 

 

தாம் எது செய்தாலும் மக்கள் எம் பக்கமே என்று பறை தட்டிக் கொண்டு தமது சுயநல அரசியலைச் செய்யும் தைரியத்தை சம்பந்தன் அண்ட் கோவிற்கு வழங்கியிருப்பதும் இந்த ஏக போக உரிமையே!

 

ஆமியை விரட்டுவோம் என்று முழங்கிய குரல்கள் ஆமியை 'அரசுத் தலைவருடன் " பேசிக் குறைப்போம் என்று இறங்கியிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்திற்குள்ளாக  ஆமீ தங்கடை பாட்டிலை இருக்கட்டும். நாங்கள் எங்கடை பாட்டிலை இருப்பம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

எனவே தமிழர்களுக்கான மாற்று அரசியலை மன்னெடுக்கக் கூடிய அதிதீவிரக் கட்சியொன்றின் அவசியம் இப்போது உணரப்படுகிறது. 

 

தமிழீழமே தமீழர்களுக்கான தீர்வு, இதை விடுத்து குறைந்த அதிகாரங்களைக் கேட்பது தமிழினத்திற்குச் செய்யும் துரோகம் போன்ற கடும் கோசங்களுடன் (நடைமுறைச் சாத்தியமா என்ற விசயத்தை விட்டு விடுவோம்) ஒரு கட்சி பிரச்சாரங்களுடன் மக்கள் மத்தியில் ஒரு கட்சி தலையெடுத்தால் விரும்பியோ விரும்பாமலோ தனிப் பெரும் சக்தியாக இருக்கிற தமிழ் தேசீயக் சூட்டமைப்பு புலியாக இருக்காவிட்டாலும் எலியாக மாறாமல் பூனையாகவாவது நடந்து கொள்ளும்.

 

தற்போதைய நிலையில் தமிழர்களின் இந்த மாற்று அரசியலை முன்னெடுக்கக் கூடியவர்களாக கஜேந்திரகுமூர் பொன்னம்பலம் தலைமையிலான அணியையெ நான் பார்க்கிறேன். அவர்கள் தற்போது செயற்படுவதை விட தீவிர அரசியலில் கால் பதிக்க வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு என்ற விடயத்தை கொஞ்ச நாட்களுக்கு மறந்து தாமும் தேர்தல் களத்தில குதித்து மக்கள் மத்தியில் கால் பதிக்க வேண்டும். 

 

எங்கே தாம் அதிகம் இறங்கிப் போனால் மக்கள் தம்மைப் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் வர வேண்டும்.  கட்சிக்குள் அதிருப்தி வந்து இருப்பவர்கள் எதிரணியில் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் தான்தோன்றித் தனமான தீர்மானங்களை தலைமை எடுப்பதைத் தவிர்க்கும்.

 

அது மட்டுமல்லாம் சொச்ச வாக்குகளால் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவீயை அலங்கரிக்கும் அங்கஜன் ஆண்ட் கோவும்  விலாசமிழப்பதற்கு தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் அணி வழிவகுக்கும்....

 

இது குறித்து அதிகம் எழுத வேணும். இப்ப நேரமில்லை. பிறகு எழுதுறன். 

 

 

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

1.இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
 

( சிங்களம் மட்டும் சட்டம் போன்றவை தமிழர்களின் உரிமைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டத்தை அமைச்சராக இருந்த பொன்னம்பலம் ஆதரித்ததால், தமிழ்க் காங்கிரசுக் கட்சி இரண்டாக உடைந்தது.)
 

2. இலங்கைத் தமிழரசுக் கட்சி
 

(1965ல் டட்லி சேனாநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மாவட்ட அடிப்படையிலான ஓரளவு அதிகாரப் பரவலாகத்துக்கான வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, தமிழரசுக் கட்சியினர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்காததால், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.)
 

3.தமிழர் ஐக்கிய முன்னணி
 

(1970ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய சிரிமா பண்டாரநாயக்கா, இலங்கையைப் பிரித்தானியாவில் இருந்து முற்றாகத் துண்டித்துக்கொண்டு குடியரசு ஆக்குவதற்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார். நாடு முழுவதும் சிங்களமே அரச மொழியாகவும், பௌத்த மதம் முன்னுரிமை கொண்ட மதமாகவும் இருக்கும் வகையில் யாப்பு உருவாக்கப்பட்டு 1972ல் இலங்கை குடியரசு ஆக்கப்பட்டது. அத்துடன், கல்வித்துறையில் தரப்படுத்தல் போன்றவை தமிழ் மாணவர்களை விரக்திக்கு உள்ளாக்கின. இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குத் தலைதூக்கத் தொடங்கியது. மிதவாதத் தமிழ்த் தலைவர்களுக்கு இளைஞர்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்பட்டன. இதனால், இதுவரை எதிரெதிராக இயங்கிவந்த இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு என்பனவும், தொண்டமான் தலைமையில் இந்தியத் தமிழருக்காக இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கிச் சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.)
 

4.தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
 

(1976ல் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனவும் மாற்றப்பட்டது. அமைதிவழியில் தமது இலக்கை அடைவதையே இம்முன்னணி நோக்கமாகக் கொண்டிருந்தது.)
 

5.இதுவும் தமிழர் விடுதலைக்கூட்டணியாக மாறியது.
 

6.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
 

(கூட்டணியின் மென்மையான போக்கினாலும் பல விடுதலை இயக்கங்கள் அரசியற் கட்சிகளாக உருவெடுத்து இருந்தபோது அனைத்தையும் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழரின் அரசியற்சக்தியை கூர்மையாக்கி விடுதலைப் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான உந்து சக்தியாகவும் ஆயுதப் போராட்டத்துடன் சமாந்தரமான அரசியற்போராட்டத்தினை முன்னெடுப்பதற்காகவும்
உருவாக்கப்பட்டது)
 

7.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
 

கூட்டமைப்பின் நிலையற்ற அரசியற்போக்கினால்
உருவாக்கப்பட்டது. இந்தக்கட்சியின் தோற்றம் சரியான தருணத்தில்

இடம்பெற்றதா என நினைக்கத் தோன்றுகின்றது.

ஆரம்பத்தில் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட குறைந்தது

ஆறு முன்னாள் பா உ களுடன் உருவாக்கப்பட இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இறுதியில் மூன்று முன்னாள் பா உ க்களுடன் தோற்றம் பெற்றதும்
மக்கள் மத்தியில் அதன் ஆதரவு குறையக் காரணமாகியது.

அவர்களுடைய எதிர்காலம் கூட்டமைப்பின் எதிர்காலத்தில் தங்கியுள்ளது என்பதே உண்மை. 
 

எத்தனை முறை ஏன் ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில்

இப்படியான கட்சி மாற்றங்கள் உருவாகின.

 

ஒன்றில் சிங்கள அரசியற் சக்திகளுடன்
பேரம் பேசும் சக்தி இழக்கப்பட்டபோது உருவாகியது.
அல்லது பேரம் பேசும் சக்தியினை அதிகரிக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
 

இருந்தாலும் கட்சிகளின் தலைமைகள் கொள்கைமாறும்போதும்

மக்கள் தங்கள் நிலையில் இருந்து மாறாமல் சிங்கள இனவாதிகளின் கடும் போக்கினை எதிர்த்து தங்களின் எதிர்ப்புக்களை அவ்வப்போது காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்
 

ஆகவே இங்கே மாற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே மக்கள் அல்லர்.
கொண்ட கொள்கையில் உறுதிகொண்ட அரசியற் தலைமைகள்  தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன்  
போன்ற தலைமைகள் தான் இன்றைய நிலையில் மக்களுக்கு அவசியம்

 

 

ஆளும் கட்சி என்று ஒன்று இருந்தால்தான் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கும். ஆழும் கட்சிதான் பலமானதா இல்லையா என்று பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி ஏற்கனவே தேர்தல் போட்டியில் தோற்றதொன்றே. அதை பலமானதா இல்லையா என்று பார்ப்பது தேவை இல்லாதது. எனவே மக்கள் சுதந்திர முன்னனி பலமான ஆளும் கட்சி மட்டும் என்பதே சரி. அதைத்தான் சிங்கள் மக்கள் விரும்புகிறார்கள்.

 

கூட்டமைப்பும் எதிர்க்கட்சியே.  வடமாகணத்தில் இந்த் தடவை ஆட்சியை ஏற்றிருக்கு. அதன் ஆளும் திறன், நிலைப்பட்டுகள் போனறவை  இன்னமும் தெரியவரவில்லை. கிழ்க்கு மாகாணத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அழும் கூட்டணியை தொடந்தும் சிக்கலில் வைத்திருக்கிறது. அதாவது ஓரளவுக்கு எதிர்க்கட்சியின் நடைமுறைகளைத் தெரிந்து வைத்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் எழதிது போல கட்சிகள் இருந்தாலும்

தமிழர்களின் தாயக உரிமை சார்ந்து சிந்தித்தால் அதற்கு சரியான அமைப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒன்றே  தான்.

 

இதுவே கூட்டமைப்பின் சறுக்கல்களுக்கும்

இந்திய  மற்றும்உலகத்துக்கும் ஒரு செய்தியைச்சொல்லக்கூடியது

தமிழருக்கு ஒரு தீர்வை கூட்டமைப்பு ஊடாக வையுங்கள்

அல்லது நாங்கள்  இருக்கின்றோம்

அடுத்து கட்டத்துக்கு போக என்பதாகும்.

இது வளர்த்து எடுக்கப்படவேண்டிய  ஒன்றாகும்

ஆனால் தற்பொழுது அடக்கி  வாசித்தலே சரி.

 

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கட்சியின் அவசியத்துக்கு இப்ப என்ன தேவை இருக்கிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பு அதற்கு எதிராக மகிந்தவின் அய்கிய மக்க்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இருக்கிறது. இதில் மூன்றாவது கட்சி ஒன்று இருக்குமாயின் அது முந்தய இரு கட்சிகளில் ஒன்றை ஆதரிக்கத் தலைப்படும்.இல்லை தனித்து நிற்பதானால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அதன் அனுகூலம் மகிந்த தரப்பையே சென்றடையும். ஏன் தாயகத்தில் வாழும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பற்றி சிந்திக்க மறுக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கட்சியின் அவசியத்துக்கு இப்ப என்ன தேவை இருக்கிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பு அதற்கு எதிராக மகிந்தவின் அய்கிய மக்க்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இருக்கிறது. இதில் மூன்றாவது கட்சி ஒன்று இருக்குமாயின் அது முந்தய இரு கட்சிகளில் ஒன்றை ஆதரிக்கத் தலைப்படும்.இல்லை தனித்து நிற்பதானால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அதன் அனுகூலம் மகிந்த தரப்பையே சென்றடையும். ஏன் தாயகத்தில் வாழும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பற்றி சிந்திக்க மறுக்கிறீர்கள்?

தேவானந்தா போல் கூட்டமைப்பும் மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டால் தாயகத்தில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் :(

 தமிழர்கள் எண்ணிக்கையில் இன்னும் அதிக மந்திரிப் பதவிகளை வாங்கி

மக்களுக்குச் சேவை செய்யலாமே  :D

  • கருத்துக்கள உறவுகள்

திட்டவட்டமாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றேன் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகக் களமிறக்கப்படும் எந்த ஒரு கட்சியும் வெல்லப்போவதில்லை. வேண்டுமெனில் ஒரு சிறிய அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கமுடியுமே தவிர வேறு ஒன்றையும் செய்யமுடியாது. பலவருடங்களாக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தாயகத்து மக்களின் நிலை விளங்காது அது அவர்களுக்குத் தேவையும் இல்லை.

 

மக்களுக்குச் சேவை செய்ய மந்திரிப் பதவிதான் தேவை என்பதுபோல் எழுதுகிறீர்கள். அதுவல்ல அங்கு நிலைமை. உங்கள் அகக்கண்கள் திறக்கப்படும்வரை சுற்றியுள்ள மாயத்திரை என்றும் கிழிபடப்போவதில்லை!
 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படிக் கூறவில்லை யாழ் வாலி
பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்துக் கொண்டே மக்களுக்காக இத்தனை சேவைகளையும் அவர்களின் இயல்பு வாழ்க்கையைச் செப்பனிட சகலமுறையிலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் கூட்டமைப்பு   :)  அரசுடன் இணைந்து அரசியல் செய்தால் இன்னும் அதிகளவிலான உதவிகளை மக்களுக்காக அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற தொனியில் கூறினேன்.
 

எந்த நாட்டிலும் எதிர்க்கட்சிகள் இருக்கும்  நிலைதான் அங்கிருக்கும் ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் இல்லை.  முன்னர் பலமுறையும் சொல்லியிருக்கிறன். தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் பிரிந்துநிற்பதை வெறுக்கின்றேன்.

அங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் வறுமைக்கோட்டுக்குள் வாழ்பவர்கள். அடுத்தவேளை உணவுக்கு அல்லாடும் உறவுகள் அதிகம். இப்ப அங்க தேவை அடிப்படை உட்கட்டமைப்பு. இதை விடுத்து தேசியம் விடுதலை என்பனவற்றைச் சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.