Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வாதிகாரத்தை நோக்கி தமிழரசு கட்சி செல்கின்றது - சுரேஷ் பிரேமசந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
suresh-MP-150-seithy.jpg

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின்னரே அமைச்சர்கள் தெரிவு முடிவாகியுள்ளது என செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

  

ஆனால் நேற்றைய இந்த கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணத்தில் நின்ற போதிலும் எனக்கு அழைப்பு வரவில்லை. அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளான புளொட், ரெலோ போன்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை தனியே தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களே அந்த கூட்டத்தை நடத்தி முடிவெடுத்துள்ளார்கள். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அமைச்சர்கள் பெயரில் எமக்கு திருப்தி இல்லை நாம் கேட்பது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு பதவி.

 

ஏனெனில் அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை சிங்கள - முஸ்லிம் மக்களை சட்டவிரோதமாக குடியேற்றுதல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு ஒரு அமைச்சு தேவைப்படுகின்றது. வவுனியா மன்னாருக்கு ஒரு அமைச்சு இருக்கின்றது யாழ்ப்பாணத்திற்கு முதலமைச்சர் இருக்கின்றார் எனவே முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு தரவேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கை அந்த மக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனால் நாம் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு பதவி கேட்கின்றோம்.

 

இவர்கள் இப்ப சொல்கின்றனர் ஈ.பி.ர்.எல்.ப் க்கு ஒரு அமைச்சு கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு பற்றி கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவே அவ்வாறு ஒரு அமைச்சு பதவி கொடுத்தால் அது ஒரு தனி நபருக்கு கொடுத்த அமைச்சு பதவியாகவே இருக்கும். அவ்வாறு எமது கட்சிக்கு ஒரு அமைச்சு பதவி கொடுப்பதாக இருந்தால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கவே நாம் கோருகின்றோம். அதேவேளை தேர்தல் பிரச்சார காலங்களில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்துள்ளது. இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், என பேசிவிட்டு அவர் முன்னிலையில் முதலமைச்சர் சத்திய பிரமாணம் எடுத்ததில் எமக்கு உடன்பாடில்லை.

 

எனவே தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது. இந்த முடிவுகள் எதிர்காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களை குழப்பும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94664&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதில்  சில நியாயங்கள்  இருக்கின்றன

 

கூட்டமைப்பின்  உறுப்பினர்கள்

பிரான்சுக்கு வந்திருந்தபோதும்

கூட்டமைப்பை பற்றியே  நாம் ஆவலாக இருந்தோம்

ஆனால் அவர்கள்  கூட்டமைப்பைவிட

தமிழரசுக்கட்சியை  வளர்ப்பதிலும்

பேசுவதிலும்

கட்சிக்கு அலுவலகம் திறப்பதிலும்

கட்சிக்கு ஆட்கள்   சேர்ப்பதிலுமே ஆர்வமாக இருந்தது

பெரும் அவநம்பிக்கையைத்தந்தது

அத்துடன் புலம் பெயர்   தேசமெங்கும் அவர்கள்  வந்தபோது

இதையே  செய்ததை அறியக்கூடியதாக இருந்தது........ :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை ஒரு கட்சியாக இதுவரை பதியாமல் இருப்பதன்

காரணங்களை ஆராய முற்பட்டால் தமிழரசுக் கட்சியின் அதிகாரங்களும்

சம்பந்தரின் சாணக்கியங்களும் வெளிப்படும்.

ஒட்டு மொத்தத்தில்  வேட்டி கட்டிய அரசியல் வாதியும் ,காக்கிச்சட்டை போட்ட காவல்துறையும் எனக்கு எப்பவும் அலற்ச்சியை தரும் பொருள்கள் . :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக துடிப்பாகச் செயற்பட்ட கஜதீபனுக்கே தமிழரசுக் கட்சி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை. புளொட் இயக்கம் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினைத்தான் கஜதீபனுக்கு கொடுத்தது. கஜதீபனும் வெற்றி பெற்றார்.

 

சோகம் என்னவெனில், அவரும் தமது ஆள் என்றே இன்று தமிழரசுக் கட்சி உரிமை கொண்டாடுகின்றது.

 

இங்கே நான் புளொட்டுக்கு வால் பிடிக்கவில்லை. வெற்றி என்பது தனி ஒரு தமிழரசுக் கட்சிக்குச் சொந்தமானதல்ல. கடந்த காலங்களில் அனைவருமே தவறு விட்டவர்கள்தான். அந்தத் தவறைச் சரி செய்யவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற ஒரு குடைக்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டமைப்பு சிதறிவிடுமோ என்கின்ற அச்ச நிலையினை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் உருவாக்கி வருகின்றனர்.

Edited by nirmalan

முல்லைத்தீவில் EPRLFஇல் போட்டியிட்ட இருவர் தமிழரசு கட்சிக்காரர்கள் .வென்றுள்ளார்கள் .

இவர் சொல்வதில்  சில நியாயங்கள்  இருக்கின்றன

 

கூட்டமைப்பின்  உறுப்பினர்கள்

பிரான்சுக்கு வந்திருந்தபோதும்

கூட்டமைப்பை பற்றியே  நாம் ஆவலாக இருந்தோம்

ஆனால் அவர்கள்  கூட்டமைப்பைவிட

தமிழரசுக்கட்சியை  வளர்ப்பதிலும்

பேசுவதிலும்

கட்சிக்கு அலுவலகம் திறப்பதிலும்

கட்சிக்கு ஆட்கள்   சேர்ப்பதிலுமே ஆர்வமாக இருந்தது

பெரும் அவநம்பிக்கையைத்தந்தது

அத்துடன் புலம் பெயர்   தேசமெங்கும் அவர்கள்  வந்தபோது

இதையே  செய்ததை அறியக்கூடியதாக இருந்தது........ :(  :(  :(

கனடாவில் TNAஎன்றுதான் இயங்குகின்றது .இங்கு எல்லோரையும் அழைத்தும் அவர்கள் வரவில்லை .ஆனால் கனடா TNAஅனுப்பும் நிதி அங்கு எல்லோருக்கும் பகிரப்படுகின்றது .அதேநேரம் EPRLF,PLOT,TELO அமைப்பினர் தனியாக நிதி சேர்த்து அனுப்பியுள்ளார்கள் .

   

தற்போது பலரும் சேருவதற்கு விண்ணப்பங்களை செயலாளருக்கு கொடுத்துள்ளார்கள் .அதிலும் மக்கள் அவையை சார்ந்தவர்கள் ,EPRLF ஐ சார்ந்தவர்களும் உள்ளார்கள் .

 

நீங்கள் விரும்பினால் முழு விபரங்களை தனிமடலில் அறியத்தாருங்கள் .எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் தவிர்க்கலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.