Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைக்கே அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைக்கே அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு


முல்லை. மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு எதுவும் கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையிலேயே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக இதனை அறிவித்துள்ளார்.

யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெகநாதனுக்கு புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம் தொடர்பான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த அமைச்சிற்கான பொறுப்புக்களை முழுமையாக அவரிடம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை திடீர் முடிவல்ல. மாகாணசபைத் தேர்தலில் வெற்றியடைந்த ஒரு சில நாட்களில் இவை திட்டமிடப்பட்டவை. தேவை ஏற்படும் வேளையில் தேவையானவை அறிமுகமாகும்.

முல்லைத்தீவை நாம் புறம் தள்ளவில்லை. அது எமது அகம், இருப்பினும் இதனை சிலர் அரசியலாக்கியுள்ளனர். எம் மக்களின் தீர்வு விடயத்தில் பாகுபாடு காட்ட சிலர் எத்தனித்தாலும், என் மனச் சாட்சிப்படி நான் அனுமதியேன், வரலாறுகள் யாரையும் ஒதுக்குவதில்லை.

இருப்பினும் சுயநலன்களால் சிலர் வரலாற்றால் ஒதுக்கப்படுகின்றனர், மக்களின் மீள் எழுச்சிக்கு பாகுபாடு என்பது இல்லை, சுய நலனுக்காக தூய்மையான மக்களை களங்கப்படுத்த முனைய வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=304212360814157707#sthash.ZjBcsIw9.dpuf

இவரின் செயலை விட அறிக்கைகள் தான் அதிகமா காணப்படுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே அண்ணே.. இன்னும் ஒரு செயலும் செய்யவே இல்லை.. அறிக்கைதான் அதிகம் விடுறார். எப்பவாம் முதலாவது அமர்வு கூட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்

இது சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கிடைத்த முதல் வெற்றி வாழ்த்துக்கள் சுரேஷ்

அனரன் ஜெகந்தான் ஏற்கனவே முல்லை மக்களின் புனர்வாழ்வில் தன் கைகளை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டவரும் முல்லை மாவட்ட தமிழரசுக்கட்சி அமைப்பாளரும் என்று அறிகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இது சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கிடைத்த முதல் வெற்றி வாழ்த்துக்கள் சுரேஷ்

 

ஏன் சுரேசின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கா இந்த அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

சர்வே க்கு அப்பால் அவர்களின் முக்கிய கோரிக்கை முல்லை மாவட்டத்திற்கு அமைச்சுப்பதவி அந்த வகையில் இது அவர்களுக்கு வெற்றியே

முல்லைத்தீவுக்கு கிடைக்கும் வெற்றி சுரேசுக்கான வெற்றியாயின் சுரேஸ் கட்டாயமாக வெல்ல வேண்டும். , விக்கினேஸ்வரன் தகைமையைப் பார்த்த்தே மந்திரி பதவி என்றவுடன், சர்வேஸ்வரனை கைவிட்டுவிட்டு முல்லைமாவட்டத்தின் படித்த கல்விமான்களுள் ஒருவராகிய அந்தனிக்காவது ஒரு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டுமென்று கேட்டிருந்தால், இந்த வெற்றி சுரேசுக்கு இன்னும் சற்று விரைவாக கிடைந்திருந்திருக்கும்.

 

சுரேஸ் வெற்றியை கொண்டலாம். ஆனால் விக்கினேஸ்வரன் தன்னை கேட்காமல் கொடுத்த மந்திரிப் பதவியை எற்றார் என்ற குற்றச்சாட்டுடன் ஐங்கரனை கட்சி நீக்கிய மாதிரி அதிபர் அந்தனியை பதவி நீக்க முடியாது. சுரேசின் அங்கீகாரம் இல்லாமல் அதிபர் அந்தனி (உப)மந்திரிப்பதவியை ஏற்றாலும் அவர் EPRLF இல் இல்லாமையால் சுரேசால் அவரைப் பதவி நீக்க முடியாது. 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐங்கரநேசனும் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரல்ல. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை (கட்சியில் இருந்தால்தானே நீக்குவதற்கு) அவருக்கும் கட்சிக்கும் இனி எந்த சம்மந்தமும் கிடையாது என்பதே அறிவிப்பு.

விபரத்திற்கு நன்றி.

 

அப்போ ஏன் இந்த துள்ளு மிதி. அது விள்ங்கவில்லையே. தேர்தலுக்காக த்மிழரசுக்கட்சி உறுப்பினரை கடன் வாங்கினார்களா?

இது சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கிடைத்த முதல் வெற்றி வாழ்த்துக்கள் சுரேஷ்

 

பாவம் நீங்கள். இது அமைச்சரவை அறிவித்த நாளன்றே அறிவிக்கப்பட்ட விடயம். இதோ 10-Oct-2013 வந்த செய்திகள்:

 

http://tnapolitics.org/ta/tamil-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/

 

 

எமது உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் தகைமைகள,அனுபவங்கள், விருப்பங்கள் சம்பந்தமாக தரவுகளைப் பெறக்காலதாமதம் ஆகிவிட்டதால் எமது அமைச்சர்களையும் அமைச்சுக்களையும் அடையாளம் காணவுந் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒருவரின் தரவுகள் இன்னும் கூட கிடைத்தபாடில்லை! எமது கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் தமது அமைச்சர் விருப்புகளைத் தெரிவித்திருந்தன. எனினுஞ் சகல உறுப்பினர்களும் ஒரேமாதிரியான தேர்வுக்கே உட்படுத்தப்பட்டனர்.

போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்க்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக்கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சியாக இதுவரை இருந்து தற்போது ஆட்சியில் ஈடுபட அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நாம் எமது நோக்குகளில் அடிப்படை வித்தியாசத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். அத்துடன் மக்கள் எமக்களித்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையுங் கொண்டுள்ளோம்.

எனினும் குறிப்பிட்ட அளவு அமைச்சர்களையே சட்டப்படி நாங்கள் நியமிக்க வேண்டியிருந்தது. பலருக்குத் தகைமையிருந்தும் சிலருக்கே அமைச்சுப் பதவிகள் கொடுக்கக்கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் பிரதேச பிரதிநிதித்துவம், கட்சியடிப்படை, நிர்வாகப்பொறுப்புக்களின் அந்நியோன்யம் ஆகியனவுங் கருத்திற்கெடுக்கப்பட்டன. மக்களின் ஆதரவைப்பெற்ற கட்சிகளுக்கு உரிய முன்னுரிமையும்

அளிக்கப்பட்டது. இவ்வாறான அடிப்படையிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதே நேரம் எந்த ஒரு உறுப்பினருக்குங் குறிப்பிட்ட அமைச்சுத் துறை சார் பொறுப்புக்கள் கொடுக்கப்படாமல் விடுபடவும் இல்லை. அவர்கள் அந்தந்த அமைச்சின் குறிப்பிட்ட துறைசார் பொறுப்புக்களை ஏற்று அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவார்கள். விடுபட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் அந்தந்த அமைச்சர்களால் நேரடியாகவே கண்காணிக்கப்படுவன. குறிப்பிட்ட பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் சில பொது ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டே செயலாற்ற வேண்டியிருக்கும். அவையாவன:-

1. காலத்திற்குக் காலம் பொறுப்புள்ள தலைமை அலுவலருடன் சேர்ந்து குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக ஆற்றப்படும் காரியங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.

2. அதேபோல் அவ்வந்த அமைச்சரினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களின் நன்மைதீமைகள், பயன்கள், விளைவுகள் ஆகியன தொடர்ந்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3. இருமாதங்களுக்கு ஒருமுறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்குந்தமது கருத்துக்களை மேற்படி உறுப்பினர்கள் எழுத்து மூலம் தெரியப்படுத்தி வரவேண்டும். இவற்றை விட சில நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டி இருக்கும். அவை பின்னர் அறிவிக்கப்படுவன. அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு

சபையின்தவிசாளர்- திரு.சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் இ.த.அ.கட்சி யாழ்ப்பாணம்

சபையின் பிரதி தவிசாளர்- திரு.அன்ரன் ஜெயநாதன் அவர்கள் இ.த.அ.கட்சி முல்லைத்தீவு

முதலமைச்சர்- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பொது வேட்பாளர் யாழ்ப்பாணம்

வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்- திரு.பி.ஜங்கரநேசன் அவர்கள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் யாழ்ப்பாணம்

கல்வி, கலாச்சார, அமைச்சர்- திரு.தி.குருகுலராஜா அவர்கள் இ.த.அ.கட்சி கிளிநொச்சி

சுகாதார அமைச்சர்- வைத்திய கலாநிதி.பி.சத்தியலிங்கம் அவர்கள் இ.த.அ.கட்சி வவுனியா

மீன்பிடி, போக்குவரத்து, கிராமஅபிவிருத்தி அமைச்சர்- திரு.டெனீஸ்வரன்

அவர்கள் ரெலோ மன்னார்

கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம்பின்வருமாறு-

1.இலங்கைத்தமிழரசுக்கட்சி -14

2. ஈ.பீ.ஆர்.எல்.எஃப் -06

3.ரெலோ -05

4.புளொட் -02

5.ரி.யு.எல்.எஃப் -01

6.நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம -01;

7.பொது வேட்பாளர் -01

மொத்தம் -30

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் திரு.அன்ரன் ஜெயநாதன் அவர்களுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதிரு.அயுப்அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள். முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப்பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும். அமைச்சர்கள் ஒவ்வொருவரின் கீழும் பிரித்தொதுக்கப்பட்ட துறை சார்ந்த விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றைக் குறிப்பிடும் அரசியல் யாப்பு சான்றாதாரமுந் தரப்பட்டுள்ளன. வடமாகாணசபை மற்றைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது எனது விருப்பம். இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர் களையப்பாடுபடுவோமாக!

 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவை அறிவிக்க முதலே அவர்களின் மிக முக்கிய கோரிக்கையா இது இருந்தது சோ ஆதான் அமைச்சரவையிலையே அதை அறிவித்து விட்டார்கள்....

முல்லைத்தீவுக்கு கிடைக்கும் வெற்றி சுரேசுக்கான வெற்றியாயின் சுரேஸ் கட்டாயமாக வெல்ல வேண்டும். , விக்கினேஸ்வரன் தகைமையைப் பார்த்த்தே மந்திரி பதவி என்றவுடன், சர்வேஸ்வரனை கைவிட்டுவிட்டு முல்லைமாவட்டத்தின் படித்த கல்விமான்களுள் ஒருவராகிய அந்தனிக்காவது ஒரு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டுமென்று கேட்டிருந்தால், இந்த வெற்றி சுரேசுக்கு இன்னும் சற்று விரைவாக கிடைந்திருந்திருக்கும்.

 

சுரேஸ் வெற்றியை கொண்டலாம். ஆனால் விக்கினேஸ்வரன் தன்னை கேட்காமல் கொடுத்த மந்திரிப் பதவியை எற்றார் என்ற குற்றச்சாட்டுடன் ஐங்கரனை கட்சி நீக்கிய மாதிரி அதிபர் அந்தனியை பதவி நீக்க முடியாது. சுரேசின் அங்கீகாரம் இல்லாமல் அதிபர் அந்தனி (உப)மந்திரிப்பதவியை ஏற்றாலும் அவர் EPRLF இல் இல்லாமையால் சுரேசால் அவரைப் பதவி நீக்க முடியாது. 

 

மலை நான் கீழே பத்திரிகை அறிவித்தலை பார்க்கவும். தமிழ் ஊததகங்கள் நான்கு அமைச்சு பற்றி மஅட்டும் செய்தி எழுதிவிட்து மற்றது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 
 
அதோடு இங்கே சென்றும் வாசிக்கலாம் - சர்வசேஊவருக்கு என்ன பதிவி கொடுக்கப்படட்து என்று. ஆனந்தி அக்காவின் விபரங்களும் உள்ளன. 10-10-2013 அன்று வந்த பத்திரிகை அறிவிட்தல்
 
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அடுத்த தேர்தலில் முல்லை மண்ணில் தாங்கள் மண்ணை கவ்வி விடுவமோ என்ற பயத்தில் தானம் அவசர அவசரமா முல்லை மண்ணிற்கு உப அமைச்சு பதவி வழங்கப்பட்டதாம் ஆனாலும் இந்த தமிழரசு கட்சியின் ஏமாற்று வித்தையால் மக்கள் சினத்துடன் இருகின்றார்கலாம் இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட சுரேஷ் அதை அரசியல் ஆக இப்போ தமிழ் அரசுக்கட்சி திகைத்து போய் இருக்காம் அதனால் தான் அவசர அவசரமா முல்லைக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடலாம்

சுரேஷ்இன் இந்த அரசியல் சாணக்கியத்தை பாத்து சம்மந்தன் மருத்துவமனையில் சென்று படுக்காத குறையாம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அடுத்த தேர்தலில் முல்லை மண்ணில் தாங்கள் மண்ணை கவ்வி விடுவமோ என்ற பயத்தில் தானம் அவசர அவசரமா முல்லை மண்ணிற்கு உப அமைச்சு பதவி வழங்கப்பட்டதாம் ஆனாலும் இந்த தமிழரசு கட்சியின் ஏமாற்று வித்தையால் மக்கள் சினத்துடன் இருகின்றார்கலாம் இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட சுரேஷ் அதை அரசியல் ஆக இப்போ தமிழ் அரசுக்கட்சி திகைத்து போய் இருக்காம் அதனால் தான் அவசர அவசரமா முல்லைக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடலாம்

சுரேஷ்இன் இந்த அரசியல் சாணக்கியத்தை பாத்து சம்மந்தன் மருத்துவமனையில் சென்று படுக்காத குறையாம்

 

அதுதானே! தமிழரசுக் கட்சியினர் இன்னும் திகைப்பில் ஆடாமல் அசையாமல் இருக்கின்றனராம்!

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மண்ணிற்கு கொடுக்கப்பட்ட வெறும் உப அமைச்சு பதவிகளில் ஒன்றுமே இல்லையாம் சும்மா பேருக்கு முன்னாடி போட்டுக்க மட்டும் பயன்படுத்திக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன......

முல்லை மக்களிடம் இந்த ஏமாற்று வித்தைகள் பலிக்கும் என்று கணக்கு பண்ணி வைச்சிருக்கும் சம்மந்தன் குழுவிற்கு அடுத்த தேர்தலில் பல அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்காம்.....:D

அதுதானே! தமிழரசுக் கட்சியினர் இன்னும் திகைப்பில் ஆடாமல் அசையாமல் இருக்கின்றனராம்!

சுண்டலும் தமிழ் ஊடகங்களில் தானே வேலை. அதுதான்......

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அரசாங்கம் அழைப்பு!

 

 

cv_vickneswaran2.jpg
 
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது.

வடமாகாண சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து அவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­  தலைமையில் அலரிமாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது வழமை.

இதில் மாத இறுதி அமர்வில் மாத்திரமே மாகாண முதல்வர்கள் கலந்துகொள்வார்கள்.

மாகாண அபிவிருத்தித் திட்டப் பொறிமுறைகள், மாகாண விடயதானங்கள் குறித்தான சட்டமூலங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்பதுடன் முதல்வர்களின் ஆலோசனைகளும் பெறப்படும்.

குறிப்பாக இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, அரசின் திட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே முதலமைச்சர்கள் எடுப்பார்கள்.

எனினும், ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இம்முறையே எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சரொருவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.

மாகாண சபை சம்பந்தமான பிரேரணைகள் அமைச்சரவையின் அனுமதிக்காக வரும்போது, அது மாகாண நிர்வாகத்துக்கு பாதகமாக இருந்தால் அதற்கு எதிராக முதல்வரால் கருத்து வெளியிடமுடியும்.

அத்துடன், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளு மாறும் அவரால் கோரிக்கை விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://valarnila.com/news.php?id=6238

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.