Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பெண் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கன்னியாஸ்த்திரிகளால் பராமரிக்கப்பட்டு வந்த வவுனியா நெல்லுக்குளத்தை சேர்ந்த மனனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கிறார். அவருடைய சடலம் நாச்சிமார் கோயில் தேர்வண்டியருகில் கடந்த வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இராணுவம் அதிகம் நடமாடுவதாக இப்பகுதி வாசிகள் கூறியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் சில பெண்ணுரிமை இயக்கங்கள் வெளிப்படையாக இது இராணூவத்தின் செயல்தான் என்று கண்டித்திருக்கின்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொலைதொடர்பாக ஆர்ரப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள். 

 

பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் இது மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட கூட்டுப்பாலியல் வன்புணர்வென்றும், கூரிய ஆயுதமொன்றினால் இவரது தலையில் அடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அடையாளம் காணாதிருக்க முகம் கடுமையாக சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். 

 

விசாரணைகளில் கொல்லப்பட்டவர் 47 வயதுடைய மார்க்கண்டு யோகராணி என்றும், நெல்லுக்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து உறவினர்களுடன் வாழ்ந்துவந்த இவர் வன்னி யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது.

 

கடந்த 4 ஆம் திகதி இவர் காணாமல்ப்போனதாக கன்னியாஸ்த்திரிகள் பொலீஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும், கடந்த வியாழக்கிழமை நாச்சிமார் கோயிலடி வாசிகள் தேர்ப்பகுதியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கூறியதையடுத்து தேடிய போதே இவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையில் இன்னொரு பெண்ணும் காணாமல்ப் போயுள்ளதாக பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

செய்தி மூலம் : தமிழ்நெட்

 

 

இந்த சம்பவத்துக்கான எதிர்ப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைக்கு தெரிவானவர்களில் எவரெவர் உரிய முறையில் காட்டியுள்ளனர்? இது தொடர்பாக இவர்கள் ஆற்றிய ஏதாவது காத்திரமான செயல் பற்றி யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலின் போதும்.. பின்னும்.. தடுப்பு முகாம்களிலும் அதன் பின் கைதாகியும் எத்தனையோ தமிழ் மக்கள் அழிந்து போன போதும்.. இந்தக் கூட்டமைப்பு இருந்தது தானே. அவர்கள் அன்று போல் இன்றும் பாரா முகமாக இருந்து.. தங்களுக்கு இஸ்டப்பட்ட அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இடையில் மக்களின் வாக்கைப் பெற.. சில உணர்ச்சியூட்டும் நம்பிக்கைகளை பேச்சு மேடைகளில் வழங்குகின்றனர். வாக்குகள் விழுந்ததும்.. அதில் இருந்து பின்வாங்கிக் கொள்கின்றனர். மக்களும்.. மாற்றுத் தேர்வின்றி.. இவர்களையே இன்னும் நம்பிக் கொண்டு..???! இதனை எதிரி தனக்கு நல்ல சாதகமாகவே பயன்படுத்திக் கொள்கிறான். பல வழிகளில் தப்பை செய்துவிட்டு தப்பியும் கொள்கிறான். நியாயப்படுத்தியும் கொள்கிறான். ஒரு இன அழிப்பையே மூடிமறைக்கிற கூட்டமைப்பின் அரசியல்.. என்பது இப்படியான செயல்களுக்கு மறைமுகமாக அனுமதிக்கின்ற ஒன்று தானே. இதில் அவர்களிடம் வேறு.. எதனை எதிர்பார்க்க முடியும். :icon_idea::rolleyes::(

Edited by nedukkalapoovan

இந்த சம்பவத்துக்கான எதிர்ப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைக்கு தெரிவானவர்களில் எவரெவர் உரிய முறையில் காட்டியுள்ளனர்? இது தொடர்பாக இவர்கள் ஆற்றிய ஏதாவது காத்திரமான செயல் பற்றி யாருக்காவது தெரியுமா?

நிழலி நீங்கள் இன்னுமா? ௬த்தமைப்பை நம்புகிறீர்கள்! சம்பந்தனை நம்புபவர், என்னைப்போல் பழனியில் குடி கொள்ள வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறிப்பாகப் பெண்களுக்காக கூட்டமைப்பு சார்பாக அரசியலில் இறங்கின அனந்தி அக்காவுமா ஒரு கேள்வி கேக்கேல்லை. கூட்டமைப்பின் உயர்பீடம் அனந்தி அக்காவை எதிர்ப்புக்காட்ட வேண்டாமெனத் தடுத்துள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

கதச்சால் மகிந்த மாமாவுடன் இடியாப்பமும் முட்டை சொதியும் சாப்பிடமுடியாதே.....5வரியத்துக்கு ஏன் ஆப்பு வைப்பான் என்று நினைகினம் போலை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.