Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்காகத் தீக்குளித்த முதல் இந்திய முஸ்லீம் இளைஞரின் பெயர் என்ன?

ரவூப்
  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத அலைகள் 3 இல் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதும்.. அங்கு தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைத்தது யார்..??!

ஓயாத அலைகள் 3 இல் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதும்.. அங்கு தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைத்தது யார்..??!

பானு.

 

 

கேள்வி

 

புலிகளின் ஆரம்பகால பிரிவிற்குப் பின் (பிரபா-உமா), அதிலிருந்து விலகிய சிலர் ஒரு அமைப்பாக இயங்கினார்கள். அவர்களால் கிழக்கில் (80 ஆரம்பம்) முதலில் ஒரு போலீஸ் நிலையம் (மத்திய முகாம்) தாக்கி அழிக்கப்பட்டு ஆயுதங்களும் கைப்பட்டப்பட்டன. அத்துடன்  வெல்லாவெளியில் வைத்து ஒரு போலீஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தி 8 போலீசாரைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். இயக்கத்தின் பெயர் என்ன? (வடக்கில் நடத்திய தாக்குதல்கள் பற்றி ஞாபகப்படுத்த முடியவிலை. தெரிந்தவர்கள் கூறவும்.)

ஓயாத அலைகள் 3 இல் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதும்.. அங்கு தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைத்தது யார்..??!

 

பிரிக்கேடியர் பானு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே எங்களால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு சரியான விடையளித்த தப்பிலி மற்றும் அஞ்சரனுக்கு நன்றிகளும் பாராட்டும்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலியாக நின்று களமாடி மாவீரரான முஸ்லீம் போராளிகள் எத்தனை பேர்.. முதலில் மாவீரர் ஆனவர் யார்..??!

 

(அண்மையில் ஒரு ஆக்கம் படித்த போது அதில் மாவீரர் பட்டியலில் நூற்றுக்கும் அதிகமான முஸ்லீம்கள் புலிகள் அமைப்பில் இணைந்து போராடி வீரமரணம் அடைந்ததாக எழுதப்பட்டிருந்தது. அது உண்மை எனில் அந்த மாவீரர்கள் நிச்சயம் கெளரவிக்கப்பட வேண்டியவர்களே. அந்த வகையில்.. மேற்படி வினா தொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் போராளிகள் இருந்தார்கள் என்பது தெரியும்.. எத்தனை பேர் மாவீரர் ஆனார்கள்.. யார் முதலில் வீரச்சாவடைந்தது என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. தெரிந்த உறவுகள் நிச்சயம் இதற்குப் பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.)

ரவூப்

மிகவும் சரியான பதில்

 

நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

 

அப்துல் ரவூப்.

  • கருத்துக்கள உறவுகள்

பானு.

 

 

கேள்வி

 

புலிகளின் ஆரம்பகால பிரிவிற்குப் பின் (பிரபா-உமா), அதிலிருந்து விலகிய சிலர் ஒரு அமைப்பாக இயங்கினார்கள். அவர்களால் கிழக்கில் (80 ஆரம்பம்) முதலில் ஒரு போலீஸ் நிலையம் (மத்திய முகாம்) தாக்கி அழிக்கப்பட்டு ஆயுதங்களும் கைப்பட்டப்பட்டன. அத்துடன்  வெல்லாவெளியில் வைத்து ஒரு போலீஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தி 8 போலீசாரைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். இயக்கத்தின் பெயர் என்ன? (வடக்கில் நடத்திய தாக்குதல்கள் பற்றி ஞாபகப்படுத்த முடியவிலை. தெரிந்தவர்கள் கூறவும்.)

 

பாதுகாப்பு பேரவை . இவர்கள் வடக்கில் தாக்குதல்கள் செய்ததாக தெரியவில்லை.

கேள்வி: -  லெப்.கேணல் விக்ரருடன்  சாவினை தழுவிய மற்றைய மாவீரரின் பெயர் என்ன?

 

 2ம் லெப்ரினன் றோம் அண்ணை...    

 

மன்னார் அடம்பனில் வசித்தாலும் எனது ஊர் காறர்...   எனது வீட்டுக்கு அருகில்  நாள் தோறும் கடந்து போகும் A9  வீதியில் அமைக்கப்பட்டு இருந்த அவரது படத்தை (இன்னும் இருவரது படமும் சேர்த்து )  பார்த்து  போவேன்...  நீண்டகாலமாக அந்த இடத்தில் படங்கள் இருந்ததால் மூண்று படத்தடி எண்று அந்த இடத்தை இப்பவும் ஊரில் சொல்வார்கள்... 

 

 சரியானவிடை தயா.

பாதுகாப்பு பேரவை . இவர்கள் வடக்கில் தாக்குதல்கள் செய்ததாக தெரியவில்லை.

 

சரியான விடை. பாராட்டுகள் நுனா.

இவர்கள் வடக்கிலும் செய்ததாக சிறு ஞாபகம். தெரியவில்லை.

 

 

 

மறந்து போனவை  

 

84/85 காலப் பகுதிகளில், மன்னாரில்  14/15 வயதுடைய ஒரு புலிப் போராளி மிகச் சிறப்பாக செயற்பட்டார். 'லங்கா புவத்' செய்தி அறிக்கைகளில் அவரின் பெயர் அடிக்கடி இடம் பெறும். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர்  லலித் அத்துலத் முதலியும் அவரைப் பற்றி  சொல்லி  இருக்கிறார். ஒரு ஜீப் வண்டி ஒன்றில் வைத்து கொல்லப்பட்டதாக ஞாபகம்.  யாருக்காவது தெரியுமா? 

மண்கிண்டி மலை ........என்று நினைக்கிறேன் .

 

மணலாறு பகுதியில் உள்ளது எந்த மாவட்டத்தில் அடங்கும் என்று தெரில திருகோணமலை அல்லது முல்லைத்தீவு .

 

ஆண்டு 1993 இருக்கும்

(உங்கள் விடைக்கு காத்து இருக்குறேன் )

எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் தருகின்றேன்

 

கைப்பற்றப்பட்ட இராணுவ நடவடிக்கை இதயபூமி இராணுவ நடவடிக்கை

 

நீற்கள் குறிப்பிட்டுள்ள ஜானகபுர அமைந்துள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்

 

வாழ்க வளமுடன்

இருவர் சொல்வதும் கிட்டத்தட்ட சரியே...

புலிகளின் ஆழுகையில் மணலாறு கோட்டம் வன்னி மாவட்டத்தோடு நிர்வாக அலகில் சேர்க்கப்பட்டு இருந்தது... சிங்கள ஆட்ச்சியில் மணலாறு ( வெலி யோயா ) தனி மாவட்டமாகும்...

ஜனகபுர என்பது மண்கிண்டி மலையை குறிக்கும்... அந்த முகாம் புலிகளிடம் இருந்து 1990 ம் ஆண்டு வெலிஓயா நடவடிக்கை மூலம் வல்வளைக்கப்பட்டு அங்கு முகாம் அமைக்க பட்டது...

கிழக்கை தரைவளியை வடக்கில் இருந்து பிரிக்கும் நோக்கோடு அந்த முகாம் அமைக்கப்பட்டாலும் சுற்றி இருந்த 41 தமிழ் கிராமங்களில் சிலவான தென்னமரவாடி , கொக்குதொடுவாய் , கொக்கிளாய் கருவாட்டு கேணி, மண்கிண்டி மலை, நித்தியை குளம், பதவிகுளம் , டெளர் பாம், கென்ற் பாம் , ஒதியமலை , முந்திரி குளம் எண்டு 13200 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன கிட்டத்தட்ட அரைப்பங்குக்கு மேற்பட்ட மக்கள் அந்த பிரதேசங்களை விட்டு அந்த நடவடிக்கை மூலம் விரட்டி அடிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டனர்...

மணல் ஆறு என்பது வெலியோயாவாகவும் , பதவி குளம் பதவியா ஆகவும் , மண்கிண்டி ஜானக புரவாகவும் , மாற்றப்பட்டு இருக்கிறது...

இன்று எனக்கு ஊரிலிருந்து வந்த தகவலின்படி இறந்தோர் தொகை 142 எனச் சொல்லுகின்றார்கள் எது சரி? என்பதைத்

 

தெளிவுபடுத்துவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை கெரில்லா அமைப்பு என்ற நிலையில் இருந்து  "இலங்கைத் தீவில் இன்னொரு மரபுவழி இராணுவம் " என்ற நிலைக்கு சர்வதேசத்தை உச்சரிக்க வைத்த விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை எது..?!

"ஆகாவெ" என்ற குறியீட்டுடன் 1991 இல் ஆனையிறவுபடைத்தளம் மீதான பெரும் தாக்குதல்.

தமிழீழ விடுதலைப் புலிகளை கெரில்லா அமைப்பு என்ற நிலையில் இருந்து  "இலங்கைத் தீவில் இன்னொரு மரபுவழி இராணுவம் " என்ற நிலைக்கு சர்வதேசத்தை உச்சரிக்க வைத்த விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை எது..?!

ஆகாய கடல் வெளிச்சமர்

முதன் முதலில் குறியீட்டுப் பெயர் வைத்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையும் இது தான்

 

வாழ்க வளமுடன்

முதன் முதலில் மேதகு தலைவர் பிரபாகரன் பொதுமக்கள் முன் தோன்றிய ஆண்டு எது?

ஆகாய கடல் வெளிச்சமர்

முதன் முதலில் குறியீட்டுப் பெயர் வைத்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையும் இது தான்

 

வாழ்க வளமுடன்

முதன் முதலில் மேதகு தலைவர் பிரபாகரன் பொதுமக்கள் முன் தோன்றிய ஆண்டு எது?

 

1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்;, நான்காம் திகதியன்று, அதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

யாழ் அளவெட்டி பகுதியில் ஊடறுப்பு தாக்குதல் செய்து வீரச்சாவு அடைத்த கரும்புலிகள எத்தினை பேர் ?

இயற்கை வனப்புகளையும் சொல்லற்கரிய இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறப் பிரதேசம் மணலாறு. வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் துண்டு போடுவதற்காக சிங்களத்தால் தீட்சண்யமாகத் திட்டமிடப்பட்டு 1960களில் மணலாறைச் சூழவுள்ள தமிழ்க் கிராமங்களான பதவிக்குளம், தனிக்கல், மண்கிண்டிமலை, கும்பகர்ணன்மலை உட்பட பல கிராமங்களில் பரம்பரையாகக் குடியிருந்த மக்களை விரட்டியடித்து விட்டு, சிங்களவர்களைக் குடியேற்றிக் கிராமங்களுக்கும் சிங்களப் பெயர்களைச் சூட்டிய காரணத்தினால் தான் எங்கள் பாரம்பரிய பிரதேசமான மணலாறு வெலிஓயாவாக மாற்றமடைந்தது. குடியேற்றத்திற்கான காரணங்களை நாம் உற்றுநோக்குவோமேயானால் தமழீழ இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான்அடிப்படை நோக்கம். முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை வளங்களை நோக்குவதானால் கொக்குளாய் முதல் நாயாறு அளம்பில் மற்றும் முல்லைத்தீவு தீர்த்தக் கடற்கரை வரை இயற்கையாகவே இல்மனைட் படிமங்கள் கடற்கரை மணலுடன் கலந்துள்ளது. இந்த இடம் நாயாற்றுக் கடலேரி போன்ற சிறு ஆறுகள் ஒன்றிணைந்து கடலுடன் சங்கமிக்கும் இடம். இந்த நாயாற்றுப் பகுதியில் இறால், நண்டு போன்ற கடல் உணவுகளின் பெருக்கம் மற்றைய அனைத்து இடங்களையும் விட பல மடங்கு அதிகம். இதனால் நாயாற்றுப் பகுதியில் இறால் பண்ணை, நண்டு வளர்ப்பு போன்ற பண்ணைகளை அமைப்பதற்கு இயற்கைச் சூழலும் இடம் கொடுத்துள்ளது. இதே போல் அளம்பில் செம்மலை முதல் இரணைப்பாலை தேவிபுரம் வரை உள்ள தென்னம் தோப்புகள் எண்ணிலடங்கா. தேங்காய், தென்னோலை, தேங்காய்:மட்டை எனப் பலமுக கைத்தொழில் நிலையங்கள் அமைக்கக் கூடிய எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களத்தின் பின்பலத்துடன் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக அப்போது நிறுவப்பட்ட இராணுவ முகாம்கள் நாளடைவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களாக மாறின. அவ்வாறு மாற்றம் அடைந்த முகாம்களில் ஒன்று தான் மண்கிண்டிமலை இராணுவ முகாம். இந்த இராணுவ முகாம் பின்னாளில் இதயபூமி 01 என்னும் குறியீட்டுடன் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலமாக விடுதலைப் புலிகள் வசமானது. ஆனால் தற்போது மண்கிண்டிமலைக்கு ஜானகபுர என்ற பெயர் வந்த விதம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை நினைவுகூரும் முகமாக இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில்

பண்டாரவன்னியன் காலத்தில்

முல்லைத்தீவின் பெயர் குரந்தை

பதவிக்குளத்தின் பெயர் பல்லவங்கம்

 

 

நியானி: எழுத்துரு சீர் செய்யப்பட்டுள்ளது.

Edited by Puyal

1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்;, நான்காம் திகதியன்று, அதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

யாழ் அளவெட்டி பகுதியில் ஊடறுப்பு தாக்குதல் செய்து வீரச்சாவு அடைத்த கரும்புலிகள எத்தினை பேர் ?

பதினொரு கரும்புலிகள்

 

மிகவும் சரியான பதில்

 

அஞ்சரனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

திருமலைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்கி விஜயவர்த்தன குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆண்டு எது?


 

Edited by Puyal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை கெரில்லா அமைப்பு என்ற நிலையில் இருந்து  "இலங்கைத் தீவில் இன்னொரு மரபுவழி இராணுவம் " என்ற நிலைக்கு சர்வதேசத்தை உச்சரிக்க வைத்த விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை எது..?!

 

இவ்வினாவிற்கு ஆகாய கடல் வெளி சமர் என்ற இராணுவ நடவடிக்கையின் பின் என்று சரியான தகவல் தந்த சிறி.. மற்றும் புயல் ஆகிய உறவுகளுக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.

Edited by nedukkalapoovan

யாழ் அளவெட்டி பகுதியில் ஊடறுப்பு தாக்குதல் செய்து வீரச்சாவு அடைத்த கரும்புலிகள எத்தினை பேர் ?

 

பதினெரு கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்... 

 

 

1995 ம் ஆண்டு இறுதியில்  சூரியகதிர் நடவடிக்கை மூலம்  அச்சுவெலிப்பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகரைக்கைப்பற்றும் எண்ணத்தில்  மேற்கொள்ளப்பட்ட  இராணுவ நடவடிக்கையை  தாமதப்படுத்த ஒருங்கிணைக்கப்பட்ட  ஒரு தாக்குதல் நடவடிக்கை...  அளவெட்டி பகுதி ஊடாக  ஒரு தாக்குதல் மூலம் பாதுகாப்பாக  ஊடறுத்த அணி நீர்வேலிக்கு அருகில் முன்னேறி இருந்த இராணுவத்துக்கான வளங்கல்  மற்றும்  ஆட்லறி சூட்டாதரவை கொடுக்கும் நிலைகளை கண்டறிய முயண்ற வேளை எதிரிகளால் இனங்காணப்பட்டதால் தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது... 

  • கருத்துக்கள உறவுகள்

 

திருமலைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்கி விஜயவர்த்தன குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆண்டு எது?

 

 

 

1990

திருமலைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்கி விஜயவர்த்தன குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆண்டு எது?

 

 

1990 ம் ஆண்டு மார்களி 18 ம் திகதி  கொல்லப்பட்டார்...!  

 

1999 ம் ஆண்டு இதே நாள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா மீது  தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது... 

 

இப்ப எனது கேள்வி..

 

இலங்கை கூட்டுப்படை தலைமையகம் மீது  குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட ஆண்டு எது...???     அதே காலத்தில்  ஈழத்தில் நடந்து கொண்டு இருந்த சிங்கள இராணுவ நடவடிக்கை எது.... ???    எங்கு நடாத்தப்பட்டது....?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்  உறவுகளே

 

காலத்தின்  கட்டாயபதிவு

பதிவுகளை  இடவில்லை என்றாலும்

எல்லோரலும் பார்க்கப்படமும் முக்கிய  திரி இது.

நானும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்.

 

மறந்து போன  பல விடயங்களை  எமக்கே இத்திரி நினைவு படுத்தி  நிற்பதுடன்

அவர்களின் நினைவுகளை  எம்முள் மீண்டும்  விதைத்து செல்கிறது

 

நேரங்களை  செலவிட்டு

பதிவுகளை  இடும்

அனைத்து தம்பிகளுக்கும் நன்றிகள்

உங்கள்  கரங்களை  இறுகப்பற்றி  நிற்கின்றேன்..........

 

பதினெரு கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்... 

 

 

1995 ம் ஆண்டு இறுதியில்  சூரியகதிர் நடவடிக்கை மூலம்  அச்சுவெலிப்பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகரைக்கைப்பற்றும் எண்ணத்தில்  மேற்கொள்ளப்பட்ட  இராணுவ நடவடிக்கையை  தாமதப்படுத்த ஒருங்கிணைக்கப்பட்ட  ஒரு தாக்குதல் நடவடிக்கை...  அளவெட்டி பகுதி ஊடாக  ஒரு தாக்குதல் மூலம் பாதுகாப்பாக  ஊடறுத்த அணி நீர்வேலிக்கு அருகில் முன்னேறி இருந்த இராணுவத்துக்கான வளங்கல்  மற்றும்  ஆட்லறி சூட்டாதரவை கொடுக்கும் நிலைகளை கண்டறிய முயண்ற வேளை எதிரிகளால் இனங்காணப்பட்டதால் தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது... 

 

புயல் ...தயா அண்ணைக்கு சிறப்பான பாராட்டுக்கள் சரியான பதிலுக்கு .

 

 

1<கருணாவால் கொலை செய்யப்பட்ட புலனாய்வு துறை தளபதி யார் ?

1<கருணாவால் கொலை செய்யப்பட்ட புலனாய்வு துறை தளபதி யார் ?

 

லெப் கேணல் நீலன்.... !  அவருக்கு அடுத்த பொறுப்பில்  பிள்ளையான் இருந்தான்... !

 

பலரால் முகமும் திறமையும் அறியப்படாமல் வாழ்ந்து மறைந்து போன பல உன்னதமான போராளிகளில் ஒருவர்...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.