Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியாவின் படுகொலை: இந்தியா கண்டனம்

Featured Replies

  news_02-11-2013_58isaipriya%202.jpg

இசைப்பிரியா எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் கண்டிக்கதக்கதென இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மற்றும் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க செயல் என்றார்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த சிதம்பரம், காங்கிரஸ் உயர்நிலைக்குழு முடிவு எடுத்ததாக வெளியான செய்தி தவறானது என்றார்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிதம்பரம், இறுதி முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றார்

http://www.paristamil.com/tamilnews/view-news-MzAzNzU2MTMy.htm#.UnTb0fkWKnY

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம்  முக்கிய  பிரமுகர் தான்

ஆனால்

இவருடைய  சொல்லை காங்கிரசின் மேலிடம்  செவிமடுக்கமா என்பதும்

இதை தமிழகத்தில் வைத்து இவர் சொல்வதும் சந்தேகத்தையே  கொடுக்கிறது :(

1455137_364465733689780_837785032_n.jpg

இது இந்த கரிநாய் கூப்பிட்டு இப்படி சொல்லு எண்டு சொல்லி கொடுத்து இருக்கும் வேறு ஒண்டு இல்லை .

வழமையில் அதையேதான் கருணாநிதி செய்து வந்தார்.  தி.மு.க கோட்டை இப்படி ஈடாடி போனபின்னரும் அதன் உள்ளே இருந்து கொண்டு காங்கிரஸ் கொடுக்கும் ஈக்கு வாணங்களை தமிழ்நாட்டுமக்கள், ஈழமக்கள் மீது விடும் தைரியம் இன்னும் இருக்கா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய மந்திரி என்ன ஆலோசனைக்கு தன்னை சந்தித்தார் என்பதை கருணாநிதி நேர்மையா வெளியே சொன்னால், இசைப்பிரியாவின் காணொளி தமிழ்நாடில் கொண்டுவரும் வலி தணிந்து மக்கள் ஆறுதல் அடையலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு விசித்திரமான நாடு.. அமைச்சர் ஒன்று சொல்லுவார்.. அவரின் கட்சிக்காரர்கள் வேறொன்றைச் சொல்லுவார்கள்.. அந்தக் கட்சி நடத்தும் அரசு வேறொன்றைச் சொல்லும்.. கேட்டால் மற்றயவை தனிப்பட்ட கருத்துக்கள் என்பார்கள்.. மக்கள் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

'கொலைகாறனின் மற்றொரு கொடுங்கரம் தடவமுயல்வது மருந்தல்ல மருந்தென்றபோர்வையுள் விடம்'

வடவரின் வார்த்தைகளை செயலை 2009இன் பின்பும் நம்புவதென்பது...........

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பு முடிவாகவில்லை-சிதம்பரம்

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு கொள்ள கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த விஷயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, காங்கிரசுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியி்ட்டார். இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இன்று காலை கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையி்ல், 'இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமர் செல்ல காங்., உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை,' என்றார்


dinamalar.com

 

இசைப்பிரியா: கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும்- சிதம்பரம்

2 நவம்பர், 2013 - 16:54 ஜிஎம்டி

 

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட 'இசைப்பிரியாவை கொடூரமாக கொலைசெய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை' என்று இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கை இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளதாக சேனல் 4 வெளியிட்டுள்ள புதிய காணொளிப் பதிவு உண்மையானது என்று தான் நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சேனல் 4 காணொளி வெறும் நாடகம் என்று பிபிசி தமிழோசையிடம் நேற்றுக்கூறிய இலங்கை இராணுவம், அதுபற்றி தாங்கள் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை என்று கூறிவிட்டது.

லெப்டினன் கர்ணல் இசைப்பிரியா இராணுவத்துடனான மோதலிலேயே கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, அந்த வீடியோ காட்சிகள் உண்மையானது என்று தான் நம்புவதாக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவரின் இந்தக் கருத்து வந்திருக்கிறது.

 

சிதம்பரம்- கருணாநிதி பேச்சு

 

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் சிதம்பரம் இன்று சனிக்கிழமை காலை பேச்சு நடத்தினார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிதம்பரம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் அரசு தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் என்று முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்றும் கூறினார்.

மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா இல்லையா என்று இன்னும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டம் முடிவு எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், கொழும்பு மாநாட்டில் தான் கலந்துகொள்வேன் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதிபடக் கூறிவிட்டார்.

ஆனால், 'இந்தியாவிலிருந்து சிறு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டுக்கு போகக்கூடாது, அப்படி போனால் அதன் பலாபலன்களை அவர்களே அனுபவித்துக்கொள்ளட்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதியும் அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையிலேயே, அமைச்சர் சிதம்பரம் கருணாநிதியை இன்று சந்தித்து பேச்சுநடத்தியிருக்கிறார்.

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது.

 

அழுத்தத்தில் மன்மோகன் சிங்

 

இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி, மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து திமுக விலகிவிட்டபோதிலும் இருதரப்பு உறவுகளில் பெரியளவு பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சூழ்நிலையில், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழுத்தங்களைக் கொடுத்துவருகிறது.

 

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் பலரும் இந்திய அரசு தமிழக மக்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

 

53 உறுப்பு நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உச்சிமாநாடு இன்னும் இரண்டு வாரங்களில் கொழும்பில் நடக்கிறது. அதில் கனேடிய பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லை. ஆனால் அங்கிருந்து கீழ்மட்ட தூதுக்குழுவொன்று செல்கிறது என்று முடிவாகிவிட்டது.

 

தமிழர்களின் மனநிலையை கருத்தில் எடுத்தே முடிவு எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதிக்கு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார். அதன் அர்த்தம் என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/11/131102_chidambarammanmohan.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மனநிலையை கருத்தில் எடுத்தே முடிவு எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதிக்கு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார். அதன் அர்த்தம் என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

இந்தியாவில் 'பொறுத்திருப்பது' என்பது மிகவும் வித்தியாசமான கருத்தில் உபயோகிக்கிப்படுகின்றது, துளசி!

 

முன்னாள் இந்தியப்பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு நண்பி இருந்தா! அவவைக் கலியாணம் செய்து தரும்படி, அவர் தனது தந்தையிடம் கேட்டார்!

 

தந்தையாரும், தம்பி, இப்ப என்ன அவசரம், கொஞ்சம் பொறுத்திரு என்று கூறினார்!

 

அதை நம்பிய வி.பி. சிங்கும பொறுத்திருந்தார்!

 

நாற்பத்தொன்பது வயது வரை!......... :o

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பது என் கருத்தல்ல. :D செய்தியில் அவ்வாறு உள்ளது. :)

ஒரு மாநாட்டுக்கு போவதா இல்லையா என்ற ஒரு முடிவையே எடுக்கமுடியாமல் தடுமாறும் ஒரு அரசு வேறென்னத்தை செய்து கிளிக்கப்போகுது?

இந்தியா ஒரு விசித்திரமான நாடு.. அமைச்சர் ஒன்று சொல்லுவார்.. அவரின் கட்சிக்காரர்கள் வேறொன்றைச் சொல்லுவார்கள்.. அந்தக் கட்சி நடத்தும் அரசு வேறொன்றைச் சொல்லும்.. கேட்டால் மற்றயவை தனிப்பட்ட கருத்துக்கள் என்பார்கள்.. மக்கள் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

 

இலங்கைக்கு பிரதமர் செல்ல வேண்டுமா? கருணாநிதி கேள்வி

 

சென்னை:இசைப்பிரியாவுக்கு நடைபெற்ற கொடூரத்திற்குப் பின், பிரதமர், இலங்கை செல்ல வேண்டுமா? என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:இசைப்பிரியா; பெயரே அழகு; அவர் முகமோ, குழந்தை முகம். கல்லூரி சென்று வரும் குழந்தை எனக் கூறலாம். 27 வயது நிரம்பியவர். அவர் உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான். இசைப்பிரியா போரின் போது கொல்லப்ட்டதாக, ராஜபக்சே அரசு இதுவரை சொல்லி வந்த கதையை, ஏமாற்று வித்தையை வெளிப்படுத்துகின்ற வகையில், இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகள் இன்று ஆதராத்தோடு வெளிவந்துள்ளன. இசைப்பிரியா சின்னாப்படுத்தப்பட்ட சாட்சியங்களைக் கணட பின், அதற்குக் காரணமான, சிங்கள அரசைக் கண்டித்திடும் வகையிலும், நெஞ்சை உலுக்கிடும் இந்த நிகழ்வுக்கு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும், இலங்கையில நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என, இங்குள்ள தமிழர்களும், உலகமெங்குமுள்ள தமிழர்களும் எதிர்பார்க்கின்றனர்.

என்ன செய்யப் போகிறது, மத்திய அரசு? இசைப்பிரியாவுக்கு நடைபெற்ற கொடூரத்திற்கு பின் இலங்கை செல்ல வேண்டுமா? இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=841622

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.