Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதிர்ந்த பல பூக்களில் ஒற்றைப் பூ இசைப்பிரியா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Issaipriya2.jpg

 

ஆரியச் சக்கரவர்த்தி

ஆசோகனின் காடைக் கடையன்

விஜயன் பரம்பரையில்

உதித்த சிங்கள தேசத்தில்

50 களில்

தமிழ் பெண்கள் மார்பறுத்து

கொதி தார்  ஊற்றி...

அனல் தணல் மீது விட்டெறிந்து

கொடுமை செய்து..

கூடி நின்று கேலி செய்து

வெற்றிக் கோசம் போட்டு

மகிழ்ந்த கூட்டம்...

83 இல்

அதையே அகலப்படுத்தி

தமிழச்சிகள் சேலை களைந்து

மானபங்கப்படுத்தி

தமிழர் குடியையே

ஆடை இன்றி விரட்டி அடித்து

மகிழ்ந்து நின்று..

மகாவம்சம் வழி

வீரம் பேசிக் கொண்டது.

 

அந்தக் காடைக் கழுதைகளை

காட்டேரிகளை..

இராணுவம் என்ற பெயரில்

உலக நாடுகள்

அள்ளி வழங்கிய

கொலைக்கருவி கொடுத்து

தமிழர் பகுதிக்கு

அனுப்பி வைத்தான் ஜே ஆர்..!

 

ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி

தொடங்கி

ஒப்பரேசன் லிபரேசனில்

தமிழ் பெண்கள் வீடு புகுந்து

சீரழித்தது வரை

அது தொடர்ந்தது தொடர்கதையாய்..!

தமிழ் கணவான் அரசியல்வாதிகளும்

வட்டம் என்றும் சதுரம் என்றும்

குந்தி எழும்பி

கூடித் தின்று.. முடித்தார்

கூட்டுக் கதை..!

 

அன்னை இந்திராவின்

புதல்வனும்

பத்தாக்குறைக்கு

அனுப்பி வைத்தான்

ஹிந்திய ஜவான்களை..!

சிங்களம் விட்டதை

தொட்டுத் தொடர்ந்து

முடித்துவா.. காட்டிவா

அசோகனின்

ஆரிய வீரத்தை

தமிழ் பெண்டிரிடம் என்றிட...

ஏவல் படையும்

ஆயிரக்கணக்கில்

தமிழ் பெண்கள்

கற்புத் தின்று

ஏப்பம் விட்டு வெளியேறியது..!

கணக்கில் காட்சியில்

அவை அடங்காததால்

உண்மைகளை ஊமையாக்கும்

கேடுகெட்ட ஜனநாயக உலகில்

அமுங்கிப் போயின சாட்சிகள்..!

 

மீண்டும்..

சிங்களம் முறுக்கேறி

முற்றாக

முடித்துக் கட்ட தொடங்கியது

விட்ட இடத்தில் தொடர்கதை..!

பிரேமதாச.. டிங்கிரி பண்டா

என்று போய்..

சந்திரிக்கா அம்மையார்

செம்மணியில் வைத்து

பள்ளி மாணவி

கிருசாந்தி என்ற மகளை

வெட்டை வெளியில்

துகில் உரிந்தார்... தொடக்கி வைத்தார்

தொடர் நாடகம்..!

அந்த வரிசையில்

வந்த பலரில்..

சகோதரி கோணேஸுவரியை

காடைக்கும் கைக்குண்டிற்கும்

பலியிட்டார்..!

போதாக்குறைக்கு

ஒட்டி நின்ற ஒட்டுக்குழு

ஓநாய்களும் பங்கு பிரிச்சு

சொந்தச் சகோதரிகள் உடை கிழிக்க..

பொத்துவில் தொடங்கி

தொண்டமனாறு வரை

ஊரே வன்புணர்வில்

அல்லோல கல்லோலப்பட்டது..!

 

இறுதில்

மகிந்த வந்தான்

தம்பி பரிவாரங்களுடன்..!

வாகரையில் தொடங்கி

முள்ளிவாய்க்கால் வரை..

தமிழ் பெண்கள்

சிங்களப் படைகளின்

இச்சைக்கு விருந்து..

பப்ளிக்காச் சொல்லி

படையல் செய்தார்கள்..!

அந்தச் சுழலில்

சிக்கிச் சீரழிந்த

பல்லாயிரம் பூக்களில்

ஒற்றைப் பூத்தான்

எங்கள் இசைப்பிரியா..!

 

அவளே

65 ஆண்டு கால

இன அழிப்பில்

மெளனமாகிப் போன

பெண்ணியப் பொய்யர்களின்

கூட்டுக் குதூகலிப்பில்..

தமிழ் பெண்களின்

கொடு நிலைக்கு

பதியப்பட்ட

காணொளிச் சாட்சியாகியும் உள்ளாள்.

 

காணாமல் போன

காட்சிகள் சாட்சிகள்

மறந்து மறைத்து

மீண்டும் கணவான் அரசியல்

சித்தர்கள்

முணுமுணுக்கின்றார்..

சிங்கள "ஜனாதிபதி "

விசாரிக்க வேண்டுமாம்..!

ஏதோ விசாரித்து

நீதியும் தர்மமும் நிலைநாட்டிய

கணக்கில் வெட்டிக் கதையளப்பு..!

கண்கெட்ட பாதகர்கள்

இவர்களே

இத்தனை கொடுமைகளும்

தொடரக் காரணம்..!

தன் மகளும்

தர்ம பத்தினியும்

பத்திரமாக வெளிநாட்டில்

என்ற திமிரில்

அவர்களுக்கு இது

பொழுதுபோக்கு.. அரசியல்..!

 

கேடு கெட்ட

மானுட உலகே..

இன்னும் என்ன வேண்டும்

சாட்சியாய்.. நீ நடவடிக்கை எடுக்க..???!

உண்மையைச் சொன்னால்..

இசைபிரியா என்ற பூவோடு

இந்தக் கதை முடியாது..!

காடைகள் கூட்டம்

கையில் அதிகாரமும் ஆயுதமும்

உள்ளவரை..!

அதைக் களையாமல்

இல்லை

மானுட உலகில்

உயிர்க்கும் மானத்திற்கும்

உரிமைக்கும்...

உத்தரவாதம்..!

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கவிதை வாசிக்க செரியான களைப்பாய் இருக்கு . எப்பிடியெண்டால் முதல் 5 பந்தியும் தேவை இல்லை . அது எங்களுக்கு தெரிஞ்சது அதை விட்டுட்டு எழுதினிங்கள் எண்டால் நீங்கள் சொல்ல வந்த மெசேஜ் நல்லாய் இருக்கும் . எண்டாலும் உங்கடை கவிதை  நல்லாய் தான் இருக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம் பெண்கள் மீது சிங்களம் செய்து வரும் கொடுமைகளின் வரலாற்று முழுமையை கொண்டு வரும் பொருட்டு நீட்டம் அடைந்துள்ளது... ஆக்கம்.

 

நன்றி மைத்திரேயி அக்கா உங்கள் வரவிற்கும் கருத்திற்கும். தமிழினிக்கும் கூடவே.

  • கருத்துக்கள உறவுகள்

 

கேடு கெட்ட

மானுட உலகே..

இன்னும் என்ன வேண்டும்

சாட்சியாய்.. நீ நடவடிக்கை எடுக்க..???!

உண்மையைச் சொன்னால்..

இசைபிரியா என்ற பூவோடு

இந்தக் கதை முடியாது..!

காடைகள் கூட்டம்

கையில் அதிகாரமும் ஆயுதமும்

உள்ளவரை..!

அதைக் களையாமல்

இல்லை

மானுட உலகில்

உயிர்க்கும் மானத்திற்கும்

உரிமைக்கும்...

உத்தரவாதம்..!

 

நெடுக்கு இந்தக் கேடுகெட்ட உலகத்திடம் கையேந்தி என்ன கிடைக்கப்போகிறது? மீள் எழுச்சி இல்லையேல் தமிழினத்திற்கு வாழ்வில்லை. எங்கள் அழிவுகள் வல்லாண்மைகளின் வியாபாரப் பொருளாகி போனபின்னரும் மானுடம் என்பது இருக்கிறதா என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இன்று அநேகர் உள்ளங்களில் இதே ஏக்கமே உள்ளது.

 

மீள் எழுச்சி என்பது.. முறியடிக்க முடியாத ஒன்றாக அமைதல் வேண்டும். மீண்டும் ஓர் முள்ளிவாய்க்கால் என்று போய் எம்மினம் நிற்க முடியாது. அதனால்.. மீள் எழுச்சி பல தளங்களில் நிகழ்ந்தாகனும். அது கூட்டெழுச்சியாக அமைதலும் வேண்டும்..!

 

வல்லாதிக சக்திகளுக்கு தங்கள் சொந்த நலன்.. ஆதிக்க சக்திகளுக்கு தங்கள் சொந்த நலன்.. பேரினவாதிகளுக்கு சொந்த நலன்.. இதற்குள் ஒரு சிறுபான்மை இனம் உரிமை உரிமை என்று கத்தினாலும்.. அதற்குப் பயங்கரவாதப் பட்டம்.

 

இதனையே ரஷ்சியா மீது அமெரிக்கா காட்டுமா.. பாகிஸ்தான் மீது இந்தியா காட்டுமா.

 

நாங்கள் பலவீனமாக இருந்ததால் பலவீனமான போர்க்களத்தில் இருந்ததால்.. கூட்டுச் சேர்ந்து கும்பி அடித்தார்கள். இதையே செய்யப் போய்.. ஆப்கானிஸ்தானில் மூட்டை கட்டுகிறார்கள். கோத்தாவை அங்க விட்டு தலிபான்களை வெல்லட்டும் பார்க்கலாம். பாடையில் போவான் கோத்தா. அவனும் அவனின் வீரமும்.. 25 நாடுகளை கூட்டு வைச்சு..  நாலு வழியையும் அடைச்சு வைச்சு.. 100,000 துருப்புக்களையும் 10,000 துரோகிகளையும் அகோரக் குண்டு வீச்சுக்கள் மத்தியில் பத்திரமா நகர்த்துவதில் தான் உண்டு..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அலைவரிசை 4 வெளியிட்ட காணொளியில், பின்புலத்தில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்கின்றன.. ஆனால் இசைப்பிரியாவைக் கண்டுபிடித்தவர்கள் எதுவித பதட்டமும் இல்லாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய செயற்பாடு அப்போது அங்கு சண்டை ஏதும் நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு வெடிச்சத்தமும் ஒவ்வொரு உயிராக இருககலாம்..

அலைவரிசை 4 வெளியிட்ட காணொளியில், பின்புலத்தில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்கின்றன.. ஆனால் இசைப்பிரியாவைக் கண்டுபிடித்தவர்கள் எதுவித பதட்டமும் இல்லாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய செயற்பாடு அப்போது அங்கு சண்டை ஏதும் நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு வெடிச்சத்தமும் ஒவ்வொரு உயிராக இருககலாம்..

 

அந்த இடத்தில் தான் தமிழ் மக்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கண்கள், கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இறுதியில் இசைப்பிரியா அக்காவின் உடலும் அங்கே கிடந்தது. :rolleyes:

 

0ucg.jpg

 

படம்: google இலிருந்து பெற்ற படத்தில் சில பகுதிகளை உருமறைப்பு செய்து இணைத்துள்ளேன்.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இராணுவ மிலேச்ச தனங்களைச் செய்ய.. வல்லாதிக்க மற்றும் ஆதிக்க சக்திகளின் இராணுவங்களும் பின் நின்றதில்லை. ஆனாலும் அமெரிக்கா சில சம்பவங்களுக்கு உள்ளக விசாரணையையாவது மேற்கொண்டது. ஆனால் ஈழத்தில் காஷ்மீரில் இந்திய இராணுவம்.. செச்னியாவில் ரஷ்சிய இராணுவம்.. ஆப்கானிஸ்தானில்.. ஈராக்கில் மேற்குலக இராணுவங்களும் செய்த கொடூரங்களை ஐநா விசாரிக்கத் தவறியது போல.. சிறீலங்காவையும் தப்பிக்கச் செய்ய முனைகிறது. சிறீலங்காவில் நடந்தவை மேலே உள்ள இராணுவங்கள் செய்ததை விட மிக மிக அதிகம். புருண்டி.. ருவாண்டா இனப்படுகொலைகளை விட மோசமாக உள்ளது.

 

97df2aadd6093022a11131f31fc67a0c.jpg?ito

 

iraqis_tortured-l.jpg

 

ஈராக்கில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள்.

 

நெடுக்கு இந்தக் கேடுகெட்ட உலகத்திடம் கையேந்தி என்ன கிடைக்கப்போகிறது? மீள் எழுச்சி இல்லையேல் தமிழினத்திற்கு வாழ்வில்லை. எங்கள் அழிவுகள் வல்லாண்மைகளின் வியாபாரப் பொருளாகி போனபின்னரும் மானுடம் என்பது இருக்கிறதா என்ன?

இந்த கேடுகெட்ட அநியாயங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டுமானால்.... அதற்கு ஒரே தீர்வு எம் விடுதலைதான்

 மீண்டும் ஆரம்பப் புள்ளியிலேயே வந்து நிற்கும் நாம்.... எம் விடுதலைக்கு என்ன செய்யப்போகின்றோம்....??? என்பதே இப்போதுள்ள ஒரே கேள்வி!!!

 

கவிதைக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.