Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநாடு ~ மரணநாடு ( ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது)

Featured Replies

 

 

மரண நாடொன்றில்
மாநாடு வைக்கப்போகும்
மான்புமிகு நாடுகளின்
மாபெரும் மனிதர்களே!!

கட்டுநாயக்கா உங்களை
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியோடு வரவேற்கும்!

 

அங்கு வீசும் காற்றில் சுற்றும்
வண்ணக் காற்றாடிகளின் வண்ணத்தில்
உங்கள் எண்ணமெல்லாம் வண்ணமாகும்!
அக்காற்றோடு  கலந்து  வரும்
கந்தகவாடையும் வெந்தக வாடையும்
உங்களுக்குப் புரியாது!

அலங்கார மண்டபத்தில்
சிங்கார மங்கைகளின்
ஆரவார வரவேற்பில்
எங்களின் அவலக்குரல்
உங்களுக்குக் கேட்காது!!

வரும் வழியில் பாருங்கள்
தமிழனின் மண்டையோடுகள்
உங்கள் கண்களிலும் தென்படலாம்!
நீங்கள் உட்காரும்
நாற்காலிகளின் அடியில்கூட
தமிழனின் எலும்புக்கூடுகள்
உக்கிக்கொண்டிருக்கும்!

சர்வாதிகாரி வீட்டில்
சர்வதேச விருந்து...!
சிங்களம் படைக்கும்
சிங்கிறால் கறிக்குள்
எங்கள் சின்னஞ் சிறுசுகளின்
சின்னி விரல் துண்டுகளும் இருக்கும் பாருங்கள்!
நன்றாகச் சாப்பிடுங்கள்...!
உங்கள் கோரப்பசி அடங்கட்டும்!!

உங்கள் மதுக்கிண்ணங்களை
நிரப்பப் போவது
சிவப்பு நிற திராட்சை ரசமல்ல...
ஈழத்தமிழனின் செங்குருதி...!

அது... ஈழத்தமிழனின் செங்குருதி!!
சுவைத்துப் பாருங்கள்...!!
தன்மானத் தமிழனின்
உப்புக் கரிக்கும்!
நன்றாகக் குடியுங்கள்...!
உங்கள் கொலைவெறி அடங்கட்டும்!!

ஈழத் தமிழரின் மரணவீட்டில்
விருந்து வைக்கின்றீர்கள்...!
எங்களைக் கொல்லும் மரணநாட்டில்
மாநாடு வைக்கின்றீர்கள்..!!

வட்டமாய் உட்கார்ந்து
திட்டம் போடுவீர்கள்...!
பொதுநலவாய மாநாடு எனும்பெயரில்
சுயநல மாநாட்டை நடாத்திவிட்டு...
ஈழத்தமிழரின் நலத்தை மட்டும்
ஆழத்தோண்டிப் புதைப்பீர்கள்...
எம்மைப் புதைத்ததைப் போலவே!!!

முன்பே முடிவான ஒன்றுதான்
மீண்டும் கூறுகின்றோம்....!

வட்டமாய் உட்கார்ந்து
திட்டம் போடுவீர்கள்...!
பொதுநலவாய மாநாடு என்ற பெயரில்
 சுயநல மாநாடொன்றை  நடாத்திவிட்டு...
ஈழத்தமிழரின் நலத்தை மட்டும்
ஆழத்தோண்டிப் புதைப்பீர்கள்...
எம்மைப் புதைத்ததைப் போலவே!!!

ஆனால்,
நீங்கள் புதைக்கப் புதைக்க...
கார்த்திகைக் கிழங்குகள் போல...
மீண்டும் மீண்டும்
கார்த்திகைப் பூக்களோடு
துளிர்விடுவோம்!!!

 

உங்கள் மதுக்கிண்ணங்களை

நிரப்பப் போவது

சிவப்பு நிற திராட்சை ரசமல்ல...

ஈழத்தமிழனின் செங்குருதி...!

அது... ஈழத்தமிழனின் செங்குருதி!!

சுவைத்துப் பாருங்கள்...!!

  • கருத்துக்கள உறவுகள்

குரலும் உணர்வும் எழுத்தும் அருமை கவிதை.

ஈழத் தமிழரின் மரணவீட்டில்
விருந்து வைக்கின்றீர்கள்...!
எங்களைக் கொல்லும் மரணநாட்டில்
மாநாடு வைக்கின்றீர்கள்..!!

 

அருமை வரிகள் ..வாழ்த்துக்கள் தொடருங்கள் கவிதை .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புதிய தளமொன்றில் பயணிக்கும் பயணம், கவிதையின் ஆதங்கங்களை, மேலும் இலகுவாக  காவிச் செல்லுகின்றது!

 

வளமான குரல்வளம் உங்களுக்கு ! 

 

தொடருங்கள்! :D

  • தொடங்கியவர்

 

உங்கள் மதுக்கிண்ணங்களை

நிரப்பப் போவது

சிவப்பு நிற திராட்சை ரசமல்ல...

ஈழத்தமிழனின் செங்குருதி...!

அது... ஈழத்தமிழனின் செங்குருதி!!

சுவைத்துப் பாருங்கள்...!!

 

 

வருகைக்கு மிக்க நன்றி கரன்! :)

 

  • தொடங்கியவர்

குரலும் உணர்வும் எழுத்தும் அருமை கவிதை.

 

மிக்க நன்றி சுமே அக்கா.... தங்களின் ஆக்கபூர்வமான நடுநிலையான விமர்சனங்களை முன்வையுங்கள். அவைதான் என் எதிர்காலப் படைப்புக்களை இன்னும் சிறப்பாகத் தர பேருதவியாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்,
நீங்கள் புதைக்கப் புதைக்க...
கார்த்திகைக் கிழங்குகள் போல...
மீண்டும் மீண்டும்
கார்த்திகைப் பூக்களோடு
துளிர்விடுவோம்!!!

 

துளிர்விடுவோமாக!!!

 

நன்றி  தம்பி கவிதைக்கும் நேரத்திற்கும்.....

  • தொடங்கியவர்

ஈழத் தமிழரின் மரணவீட்டில்

விருந்து வைக்கின்றீர்கள்...!

எங்களைக் கொல்லும் மரணநாட்டில்

மாநாடு வைக்கின்றீர்கள்..!!

 

அருமை வரிகள் ..வாழ்த்துக்கள் தொடருங்கள் கவிதை .

 

மிக்க நன்றி அஞ்சரன்....

நிச்சயமாக ! :)

  • தொடங்கியவர்

உங்கள் புதிய தளமொன்றில் பயணிக்கும் பயணம், கவிதையின் ஆதங்கங்களை, மேலும் இலகுவாக  காவிச் செல்லுகின்றது!

 

வளமான குரல்வளம் உங்களுக்கு ! 

 

தொடருங்கள்! :D

 

மிக்க நன்றி புங்கை.... உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கு. :)

 

"நல்லா இருக்கு, அருமையா இருக்கு" என்று சொல்லும் அளவுக்கு என் படைப்புக்கள் தகுதியானவையா தெரியாது??!!!

உங்களைப்போன்றவர்களது விமர்சனங்கள்தான்.... இன்னும் தரமான ஆக்கங்களைத் தருவதற்கு பேருதவியாக இருக்கும்.

எனவே....விமர்சனங்கள் இருந்தால் தயங்காமல் முன்வையுங்கள். விமர்சனங்களை விரும்பி வரவேற்பவன் நான்! :)

  • தொடங்கியவர்

ஆனால்,

நீங்கள் புதைக்கப் புதைக்க...

கார்த்திகைக் கிழங்குகள் போல...

மீண்டும் மீண்டும்

கார்த்திகைப் பூக்களோடு

துளிர்விடுவோம்!!!

 

துளிர்விடுவோமாக!!!

 

நன்றி  தம்பி கவிதைக்கும் நேரத்திற்கும்.....

 

மிக்க நன்றி விசுகண்ணை....!  :)

பெற்ற தாய்க்காகவும்... ஈன்ற தாய்மண்ணுக்காகவும் நேரம் ஒதுக்காமல் இருக்கமுடியுமா அண்ணா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.