Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஜேர்மனியில் வசித்தாலும் நான் ஈழத்தமிழச்சிதான்..' – நடிகை தேனுகாவுடன் ஒரு சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
A-gun-and-a-ring-150-seithy.jpg

நடிப்பு பட்டறையில் மூன்று வருட பயிற்சி…, முறைப்படி நடனம்…! இவற்றின் விளைவாய்.. ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் சிவப்புக்கம்பள வரவேற்பு…. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் நடிகை தேனுகா. ஈழத்தமிழர்களின் சாதனை திரைப்படமாகிய எ கன் அண்ட் எ ரிங் படத்தின் நாயகி..! 'எ கன் அண்ட் எ ரிங்' திரைப்படம் தான் தேனுகாவின் முதல் படம். இதற்கு முன் இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. இப்போது ஒரு ஜெர்மேனிய படத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை இலங்கை கலைஞன் இணையத்தளத்திற்காக தொலைபேசியில் பிடித்தோம். பேச்சில் அத்தனை அமைதி.. மிக எளிமையாக, மிக சாதாரணமான ஒரு பெண்ணாக எங்களுடன் தன் அனுபவங்களை அழகு தமிழிலில் பகிர்ந்துகொண்டார்.

  

 

500753-renuka-a-gun-and-aring-seithy-001

 

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

 

எனது சொந்த இடம், சாவகச்சேரி கொடிகாமம். சிறிய வயதில் இலங்கையில் இருந்து வெளியேறி ஜென்மனியின் பேர்லின் நகரில் குடியேறினோம், அங்கேயே படித்து, அங்கேயே கல்லூரி படிப்பையும் முடித்து, முறைப்படி நடிப்பு பயிற்சி கற்றேன். கனடாவில் 3 வருடம் தங்கியிருந்து, சினிமா கல்லூரி ஒன்றில் நடிப்பு பயிற்சி பெற்றேன்.. ஜெர்மன் பள்ளியில் படித்தாலும், சிறுவயதிலேயே தமிழ் பள்ளிக்கூடம் சென்று தமிழையும், பரதம் முதலான கலைகளையும் கற்றேன். நடன அரங்கேற்றமும் செய்தேன். படிப்பு முடிந்ததும் இந்தியாவிற்கு சென்று ஒரு வருடம் தங்கியிருந்து, பத்மஸ்ரீ சித்ரா விஷ்வேஷ்வரன் குருவிடம் பரத நாட்டியம் முறைப்படி கற்றுக்கொண்டேன். இந்தியாவில் இருக்கும் போது என் குரு அரங்கேற்றும் நிகழ்ச்சிகளில் நானும் கலந்துகொள்வேன். என்னுடைய அம்மா இலங்கையில் ஒரு சங்கீத ஆசிரியையாக இருந்ததால், கலைத்துறையில் நுழைவது எனக்கு இலகுவாக இருந்தது. முறைப்படி நடிப்பு, நடனம் கற்றுக்கொள்ள முடிந்தது.

 

'எ கன் அண்ட் எ ரிங்’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?

 

திரு.லெனின் அவர்கள் தனது புதியபடத்திற்கு கதாநாயகி தேடுகிறார் என்ற தகவல் கிடைத்தது. அதனால் நண்பர் ஒருவரின் மூலமாக எனது போட்டோக்களை அனுப்பிவைத்தேன். அத்துடன் லெனின் அவர்களும் படத்தின் கதையை எனக்கு அனுப்பியிருந்தார். இரண்டு மணித்தியாலங்களில் அக்கதையை முழுமையாக படித்து முடித்தேன். அக்கதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. கதைப்படி இலங்கையில் இருந்து வரும் ஒரு சாதாரண பெண்ணாக நான் நடிக்க வேண்டும். ஆனால் நான் மொடேர்னாக இருப்பதால், நான் எப்படி அந்த பாத்திரத்துக்கு பொருந்துவேன் என்ற தயக்கம் லெனின் அவர்களுக்கு இருந்ததை உணர்ந்து கொண்டேன்.

இந்த படவாய்ப்பினை நழுவ விடக் கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அதனால், என்னை ஒரு சாதாரண பெண்ணாக நினைத்துக் கொண்டு, அப்படியே மாற ஆரம்பித்தேன். சாதாரண உடைகளை அணிந்து, ஒரு கிராமத்து பெண் போல என்னை மாற்றிக் கொண்டேன். அதனால் தான் என்னால் இப்படத்தில் நடிக்க முடிந்தது.

மேலும், ஒரு காட்சி ஒன்றினை நடித்து அனுப்புமாறு லெனின் கேட்டிருந்தார். அதனை நடித்து அனுப்பினேன். அது அவருக்கு திருப்தியாக இருந்தது. இதனால் தான் இந்த வெற்றிப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.

 

படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது..?

 

அருமையான ஒரு அனுபவம். என் முதல் படம், நடிப்பின் மேல் இருந்த காதல்.., இயக்குனர் உட்பட சக கலைஞர்கள், நடிகர்கள் எல்லாருமே நன்றாக ஒத்துழைப்பு வழங்கினார்கள். ’இது எங்கட படம், எங்கட கதை..’என்ற உணர்வோடு நடித்தேன்.

 

த்ரில்லிங்கான அனுபவம். கன் அண்ட் ரிங் படத்தில் நடித்த மறக்க முடியாத காட்சி ஒன்று சொல்லுங்கள்?

 

படத்தில் என்னுடைய கதையை ஒருவருக்கு சொல்லுவது போன்ற ஒரு காட்சி.. அழுது அழுது அக்கதையை சொல்லவேண்டும். அந்த காட்சியில் நான் அதை முழுமையாக உள்வாங்கி, என்னுடைய சொந்த கதை போல் அழுது அழுது நடித்தேன்.. உண்மைலேயே அழுதேன். அனைவரும் பாராட்டினார்கள். நான் நடித்த காட்சிகளில் எனக்கு பிடித்த காட்சி அது!

 

ஜெர்மனியில் பிறந்து, வளர்ந்த நீங்கள் எப்படி இப்படி நடிக்க முடிந்தது, அதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது?

 

நான் ஜெர்மனியில் வளர்ந்தாலும், 2009ல் நடந்த அவலங்கள் அனைத்தையும் இணையத்தளங்கள் மூலம் பார்த்திருக்கிறேன்…எமது மக்கள் அனுபவித்த அத்தனை துன்பங்களையும் அறிவேன். (பேசிக்கொண்டிருந்த தேனுகா சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். அனேகமாக அவர் அழுதிருக்க வேண்டும். சிறிது நிமிடங்கள் கழித்து உடைந்துபோன குரலில் மீண்டும் பேசினார். ) '... பலர் இங்கு தங்கள் கதையை சொல்ல கேட்டிருக்கேன். ஊருக்கு போன் பண்ணினால் அதை பற்றி சொல்வார்கள். அழுவார்கள். மனது அந்த பாதிப்பிலேயே இருந்தது. அதனால்தான் அந்தக் காட்சியில் அப்படி நடிக்க முடிந்தது

 

எந்த காட்சியில் நடிப்பதற்கு சிரமப்பட்டீர்கள்?

 

அதுவும் ஒரு சோகமான காட்சிதான். காட்சியை உள்வாங்கி, நடிப்பதற்கு தயாராகிவிட்டேன். வசனங்கள் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. அந்த காட்சிக்குத்தேவையான உணர்வோடு நான் தயாராகியாகி இருந்ததேன். ஆனால் அந்த காட்சி ஷூட் செய்ய நேரமாகிவிட்டது. வேறு சில காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார்கள். நேரமாக நேரமாக என்னுடைய அந்த உணர்வு கலைந்துவிட்டது. அதனால் சரியாக நடிக்க முடியவில்லை. ரீ – டேக், ரீ – டேக் போய்க்கொண்டே இருந்தது. ஒளிப்பதிவாளருக்கு கோபம் வந்துவிட்டது. கோபத்தில் என்னை திட்டிவிட்டார். அதனால் அழுதுவிட்டேன். அப்படியே நடித்தேன். அக்காட்சி நன்றாக வந்தது. அக்காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தான் திட்டினேன், கோபித்துவிடாதீர்கள் என்று ஒளிப்பதிவாளர் பின்னர் சொல்லியிருந்தார்.

 

'கன் அண்ட் ரிங்' இவ்வளவு வெற்றி பெறும் என நினைத்திருந்தீர்களா..?

 

ஆம். இப்படம் நல்ல கதை, திரைக்கதை, நடிப்பு என நல்ல விஷயங்களாக சேர்ந்த போது படம் நிச்சயம் வெற்றிபெறும் என தெரிந்திருந்தது. என் உள்ளுணர்வும் அதையே சொல்லியது.

 

படத்தின் கதையை வாசித்தபோதே உணர்ந்து கொண்டேன் இப்படத்தின் வெற்றியை. ஷங்காய் சிவப்புக்கம்பள வரவேற்பு எப்படி இருந்தது?

 

வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத ஒரு தருணம். அவ்வளவு பிரம்மாண்டம், அவ்வளவு அன்பு, அவ்வளவு வரவேற்பு என மகிழ்ச்சி நிறைந்த ஒரு தருணம் அது. வாழ்க்கையில் அதை மறக்கவே முடியாது. என் வாழ் நாளில் மிகச் சிறந்த நாள் அது. இயக்குனர் லெனினுக்கும், தயாரிப்பாளர் முரளிக்கும் அந்தக் கணத்தில் மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

 

தமிழ் சினிமாவிலும் சரி, ஈழத்து சினிமாவிலும் சரி, பல நடிகைகள் நடிக்க வர தயங்குகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல ஆசைப்படுகிறீகள்..?

 

இதில் என்ன இருக்கிறதென தெரியவில்லை, ஏன் பெற்றோர் மறுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. பரத நாட்டியம் கற்றுக்கொள்ள சொல்லும் பல பெற்றோர்கள், நடிக்க கற்றுக்கொள் என சொல்லவதில்லை. ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்யும் போது பலர் பார்க்கிறார்கள். அதையேதான் சினிமாவிலும்... எல்லாமே கலை தான். அதனால் நடிப்பதில் தயக்கமே காட்டவேண்டியதில்லை!

என அழகாக தன் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார் தேனுகா. இலங்கை கலைஞன் இணையத்தளத்தின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்களையும், தன் நன்றிகளையும் பகிர்ந்துகொண்டார். நன்றி தேனுகா, உங்கள் சினிமா வாழ்க்கை மேலும் உற்சாகமானதாக, சந்தோசமானதாக அமையவும், மேலும் நிறைய படங்களில் நீங்கள் நடித்து வெற்றி பெறவும் இலங்கைகலைஞன் வாழ்த்துகிறது.

 

-நேர்காணல் : இலங்கை கலைஞன் -

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100561&category=TamilNews&language=tamil

இந்த படத்தில் இவரின் நடிப்பு தான் மிக இயல்பும் யதார்த்தமும் ஆக இருந்தது .மிக மிக சிறப்பாக நடித்திருந்தார் ,குறிப்பாக அழுகை காட்சிகளில் புல்லரிக்க வைத்தார் .

நடிப்பு பயணம் தொடர வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

 

எனது சொந்த இடம், சாவகச்சேரி கொடிகாமம். சிறிய வயதில் இலங்கையில் இருந்து வெளியேறி ஜென்மனியின் பேர்லின் நகரில் குடியேறினோம், அங்கேயே படித்து, அங்கேயே கல்லூரி படிப்பையும் முடித்து, முறைப்படி நடிப்பு பயிற்சி கற்றேன். கனடாவில் 3 வருடம் தங்கியிருந்து, சினிமா கல்லூரி ஒன்றில் நடிப்பு பயிற்சி பெற்றேன்.. ஜெர்மன் பள்ளியில் படித்தாலும், சிறுவயதிலேயே தமிழ் பள்ளிக்கூடம் சென்று தமிழையும், பரதம் முதலான கலைகளையும் கற்றேன். நடன அரங்கேற்றமும் செய்தேன். படிப்பு முடிந்ததும் இந்தியாவிற்கு சென்று ஒரு வருடம் தங்கியிருந்து, பத்மஸ்ரீ சித்ரா விஷ்வேஷ்வரன் குருவிடம் பரத நாட்டியம் முறைப்படி கற்றுக்கொண்டேன். இந்தியாவில் இருக்கும் போது என் குரு அரங்கேற்றும் நிகழ்ச்சிகளில் நானும் கலந்துகொள்வேன். என்னுடைய அம்மா இலங்கையில் ஒரு சங்கீத ஆசிரியையாக இருந்ததால், கலைத்துறையில் நுழைவது எனக்கு இலகுவாக இருந்தது. முறைப்படி நடிப்பு, நடனம் கற்றுக்கொள்ள முடிந்தது.

-------

 

த‌ன‌து ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில்... மிகுந்த‌ முய‌ற்சி எடுத்துள்ளதால்... தான், அவ‌ருக்கு இந்த‌ உய‌ரிய‌ வாய்ப்பு கிடைத்த‌து.

உங்க‌ள‌து... முய‌ற்சிக்கும், தாய்த் த‌மிழை நேசிக்கும் ப‌ண்புக்கும் பாராட்டுக்க‌ள் தேனுகா.

 

  • கருத்துக்கள உறவுகள்

கலைப்பயணம் மென்மேலும்  சிறக்க , தொடர வாழ்த்துக்கள் தேனுகா !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

இருந்தாலும் கடைசியில் உங்கள் கலியாண முடிவு ? என்னால் தாங்கமுடியாமல் போய்விட்டது . :icon_mrgreen: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.