Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது – மஹிந்த ஹத்துருசிங்க-

Featured Replies

"எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது"

Hathru1_CI.JPG

யாழ்ப்பாணத்தில்  உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது என யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

 
எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. என்றார். 
 
யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட  மஹிந்த ஹத்துருசிங்க, சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
 
யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ்பாணத்தின் 52 ஆவது படையணி  கடந்த காலத்தில் வறணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது.
 
யுத்தத்தின் பின்னர் பொது மக்களை மீள் குடியமர்த்துவதற்காக இந்த காணியை மீண்டும் வழங்கியதாக யாழ். பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
 
குறித்த காணியில் இதுவரையில் 39 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 41 காணிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 

அட! வேண்டுமென்றே தலைப்பை போட்டிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
பாசக்கார பய புள்ள!
 
ஒரு நிமிஷம் கண்ணு கலங்கிருச்சு!!!
 
:rolleyes:

Edited by Nathamuni

நாங்களும் இங்கு வெளி நாடுகளில் இரத்த தானம் செய்கிறோம். அதற்காக இங்குள்ளவர்ககை அரைத் தமிழர்கள் என்று சொல்ல முடியுமா அண்ணே.?

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த  தானத்தை கேவலப்படுத்துகிறான் சிங்களவன்

அதையும் தமிழின  அழிப்புக்கு ஒரு கருவியாக தாம் பயன்படுத்தியதை பெருமையாக சொல்கின்றான். :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த தானத்தை கேவலப்படுத்துகிறான் சிங்களவன்

அதையும் தமிழின அழிப்புக்கு ஒரு கருவியாக தாம் பயன்படுத்தியதை பெருமையாக சொல்கின்றான். :( :( :(

விடுங்கண்ணே இதுக்குப் போய் ரென்சன் ஆகிறீங்க,கொழும்பில் இருக்கிற அரைவாசி சிங்களவன் நம்ம ஊர் ரத்தம் அண்ணே இதையெல்லாம் நாம சொல்லிக்கொண்டா திரியுறம்
  • கருத்துக்கள உறவுகள்
hathurusinge-100114-150.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது என யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாக இருந்து மாற்றலாகிச் செல்லும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குகிறது. சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் தமிழர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  

மிருசுவில் பிரதேசத்தில் 52 ஆவது படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் 52 ஆவது படையணி கடந்த காலத்தில் வரணி பிரதேசத்தில் நிலைக் கொண்டிருந்தது.யுத்தத்தின் பின்னர் பொது மக்களை மீள் குடியமர்த்துவதற்காக இந்த காணியை மீண்டும் வழங்கியதாக யாழ். பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=101068&category=TamilNews&language=tamil

அப்ப ஏன் சிங்களவர் ஜீனோம் புராஜெக்டில் சேரவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
தந்திரமான இன அழிப்பு கொள்கை சிங்களவரை போல யாருக்கும் வர முடியாது.
 

 ஹத்துருசிங்க இவனுக்கு திராவிடனின் வராலாறு தெரியாது எங்கள் இரத்தம்

கண்டி சிங்களவனிடம் ஒடுவதாக டி என் யில் அறியபட்டுள்ளது அதுவும் மதுரை இரத்தம் இப்ப அதற்கு பிராயாசித்தம் செய்துள்ளனர்

 

 

இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகின்றது. அதே மகாவம்சம் நூலின் படி 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சான்றாக 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னனான எல்லாளன் மன்னனுடன் சிங்கள மன்னனான துட்டைகைமுனு போரிட்ட வரலாறு உள்ளது. அத்துடன் துட்டைகைமுனு எல்லாளனுடன் போரிடுவதற்கு முன்பு 32 குறுநில மன்னர்களை வென்றதாகவும் மகாவம்சம் கூறுகிறது. அந்தவகையில் தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆட்சிப் புரிந்துள்ளனர். எல்லாளனுடனான போரின் பின்னரும் தமிழ் மன்னர்கள் இருந்ததற்கான சான்றுகளும் மகாவம்சத்தில் உள்ளன. எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.

தொடக்கத்தில் இந்துக்களாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 இலிருந்து கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின. இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.