Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிபதாதி விளம்புவீரே !!

Featured Replies

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். 
 
கீழே உள்ள பாடலில் திரிபதாதி சொல் ஒளிந்துள்ளது. 
 
 
முன்னொரு ஊரின்  பேராம் 
 
முதலெழுத்து இல்லாவிட்டால் 
நன்னகர் மன்னர் பேராம் 
 
நடுவெழுத்து இல்லாவிட்டால் 
கன்னமா மிருகத்தின் பெயர் 
 
கடையெழுத்து இல்லாவிட்டால் 
உன்னிய தேனின் பேராம் 
 
ஊரின் பேர் விளம்புவீரே !!
 
விடை : மதுரை 
1. துரை 
2. மரை
3, மது 
 
இதே மாதிரி  வேறு எதாவது  திரிபதாதி பாடல் தெரிந்தால் பகிரவும். 
  • Replies 1.6k
  • Views 131.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை இளம்பிறையன். நீங்கள் இயற்றியதா ???

 

 

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். 
 

 
விடை : மதுரை 
1. துரை 
2. மரை
3, மது 
 
 

 

 

ஆ.இளம்பிறையன்,

 

திரிபதாதி என்ற சொல்லை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

 

ஒரு கேள்வி:  நீங்கள் கூறிய 'முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் ' என்ற விதிகளுக்கும் அப்பால் மூன்றாவது விதியும் உள்ள விதத்டில் தானே 'மதுரை' அமைந்து இருக்கு. அதாவது முதலெழுத்தும் இரண்டாவது எழுத்தும் (அல்லது முதலெழுத்தும் நடு எழுத்தும்) சேர்ந்து தானே 'மது' என்ற வார்த்தையைத் தருகின்றது. மூன்று விதிகளும் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமா?

  • தொடங்கியவர்

மிக அருமை இளம்பிறையன். நீங்கள் இயற்றியதா ???

 

இதை நான் எழுதவில்லை :)  இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர் என்று இணையத்தில் கண்டேன்

ஆ.இளம்பிறையன்,

 

திரிபதாதி என்ற சொல்லை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

 

ஒரு கேள்வி:  நீங்கள் கூறிய 'முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் ' என்ற விதிகளுக்கும் அப்பால் மூன்றாவது விதியும் உள்ள விதத்டில் தானே 'மதுரை' அமைந்து இருக்கு. அதாவது முதலெழுத்தும் இரண்டாவது எழுத்தும் (அல்லது முதலெழுத்தும் நடு எழுத்தும்) சேர்ந்து தானே 'மது' என்ற வார்த்தையைத் தருகின்றது. மூன்று விதிகளும் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமா?

 

நிழலி, திரிபதாதியின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

"மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ

றன்ற பொருள்பிற  வாந்திரி பதாதி "

திரிபதாதி சொல் மூன்று விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

1) மூன்றெழுத் தொருமொழி (மதுரை) - தொடர் மொழியாக , சொற்றொடராக அல்லாமல் மூன்றெழுத் தொருமொழியாக இருக்க வேண்டும்.

2) முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் சேர்க்க ஒரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (மரை)

3) இடை எழுத்தையும் கடை எழுத்தையும் சேர்க்க பின்னொரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (துரை)

இதற்கு மேல் சேரும் சொற்கள் விதிகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை. மற்றவற்றை இலவச இணைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான்

  • தொடங்கியவர்

மற்றுமொரு திரிபதாதி

 

மூன்றெழுத்து மெங்கோ
முதலில் ஒரு வள்ளல்
என்றும் உலகம் காப்பதும் இடை
....

காமாரி

மூன்றெழுத் தொருமொழி --> காமாரி (மன்மதனுக்கு பகைவனாகிய சிவன்)
முதலெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்க வருவது --> காரி (ஒரு வள்ளல்)
இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்க கிடைப்பது -> மாரி (பூமாரி மழை பெய்து என்றும் உலகம் காப்பது)
 

இதை நான் எழுதவில்லை :)  இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர் என்று இணையத்தில் கண்டேன்

 

நிழலி, திரிபதாதியின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

"மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ

றன்ற பொருள்பிற  வாந்திரி பதாதி "

திரிபதாதி சொல் மூன்று விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

1) மூன்றெழுத் தொருமொழி (மதுரை) - தொடர் மொழியாக , சொற்றொடராக அல்லாமல் மூன்றெழுத் தொருமொழியாக இருக்க வேண்டும்.

2) முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் சேர்க்க ஒரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (மரை)

3) இடை எழுத்தையும் கடை எழுத்தையும் சேர்க்க பின்னொரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (துரை)

இதற்கு மேல் சேரும் சொற்கள் விதிகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை. மற்றவற்றை இலவச இணைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான்

 

விளக்கத்துக்கு நன்றி. மொத்த எழுத்து இரட்டை இலக்கத்தில் வந்தால் எந்த எழுத்தினை நடு எழுத்தாக் கொள்வது?

 

உதாரணம் 'பண்பாடு'

 

1. பாடு

2. படு

3. பண் (இலவச இணைப்பு)

  • தொடங்கியவர்

விளக்கத்துக்கு நன்றி. மொத்த எழுத்து இரட்டை இலக்கத்தில் வந்தால் எந்த எழுத்தினை நடு எழுத்தாக் கொள்வது?

 

உதாரணம் 'பண்பாடு'

 

1. பாடு

2. படு

3. பண் (இலவச இணைப்பு)

 

பண்பாடு என்ற சொல் முதல் விதிக்குள் அடங்காமல் நான்கு எழுத்துக்களை கொண்டுள்ளதால் இது திரிபதாதி என்ற சொல்லுக்குள் அடங்காது. மேலும் பண்பாடு (பண்(இசை) + பாடு) மூன்றெழுத் தொருமொழிக்குள் அடங்காமல் தொடர்மொழிக்குள் தொங்கி நிற்கிறது.

 

  • தொடங்கியவர்

எளிதான இந்த திரிபதாதி சொல்லை யாரேனும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முத்தமிழின் ஓர் அங்கம் இந்த மூன்றெழுத்து...
இடை நீக்கின்
     மனையாள் வாழும் இடம் வரும்
முதல் நீக்கின்
      கோட்டான்கள்  குதுகலிக்கும் காலம் வரும்
 

எளிதான இந்த திரிபதாதி சொல்லை யாரேனும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முத்தமிழின் ஓர் அங்கம் இந்த மூன்றெழுத்து...

இடை நீக்கின்

     மனையாள் வாழும் இடம் வரும்

முதல் நீக்கின்

      கோட்டான்கள்  குதுகலிக்கும் காலம் வரும்

 

 

..ஆஹா... குழப்புதே..

 

முத்தமிழில் ஒரு அங்கம் என்றால் 'இயல்' வரும். இல் என்றால் 'இல்லம்', வீடு என்று பொருள் வரும். ஆனால் 'யல்' என்றால் ஒரு அர்த்தம் வராதே...

 

  • தொடங்கியவர்

மிகச் சரியான பதில் தான்.

 

யல் = அல்  --> என்றால் கருப்பு, இரவு

மிகச் சரியான பதில் தான்.

 

யல் = அல்  --> என்றால் கருப்பு, இரவு

 

நன்றி ஆதித்ய இளம்பிறையன்.

 

என் மகளது பெயர் 'இயலினி'. அவரை நாங்கள் வீட்டில் கூப்பிடுவது 'இயல்' என்று தான். 'யல்' என்றாலும் ஒரு அர்த்தம் வரும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டோம்.

சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம்.

 

இதனுள் வதரியென்பது திருப்பதி

 

மேலும் , செய்யுள்களில் உள்ள கடகபெந்தம் , அக்கரச்சுதகத்தி லோர்பேதம் ,சதுரங்கபெந்தம் , மாத்திரைப்பெருக்கம் , ஒற்றுப்பெயர்த்தல் , மாத்திரைச்சுருக்கம், போன்றவற்ரையும் பிறையானார் விபரித்தால் நன்று .

 

  • தொடங்கியவர்

நன்றி ஆதித்ய இளம்பிறையன்.

 

என் மகளது பெயர் 'இயலினி'. அவரை நாங்கள் வீட்டில் கூப்பிடுவது 'இயல்' என்று தான். 'யல்' என்றாலும் ஒரு அர்த்தம் வரும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டோம்.

 

 

நன்று நிழலி...

இன்றைக்கு கடைசியாக மற்றுமொரு  திரிபதாதி

1) காதலை இப்படியாக வெளிப்படுத்தினால் கன்னியர் உள்ளம் கவரலாம்..

2) உரைநடை இலக்கியமாக கொள்வது

 அலுப்பு தட்டாமல் இருக்க பாட்டி சொல்வது  

3)தன்னைத் தானே பெருக்கிக் கொள்ள

தாவரத்தில் தனக்குள் இருக்கும் ஓர் அங்கம்

நன்று நிழலி...

இன்றைக்கு கடைசியாக மற்றுமொரு  திரிபதாதி

1) காதலை இப்படியாக வெளிப்படுத்தினால் கன்னியர் உள்ளம் கவரலாம்..

2) உரைநடை இலக்கியமாக கொள்வது

 அலுப்பு தட்டாமல் இருக்க பாட்டி சொல்வது  

3)தன்னைத் தானே பெருக்கிக் கொள்ள

தாவரத்தில் தனக்குள் இருக்கும் ஓர் அங்கம்

 

சொல்: கவிதை

 

1. கதை

2. விதை

3. கவி

  • தொடங்கியவர்

சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்

வதரிவரிதரியாமாம்.

 

இதனுள் வதரியென்பது திருப்பதி

 

மேலும் , செய்யுள்களில் உள்ள கடகபெந்தம் , அக்கரச்சுதகத்தி லோர்பேதம் ,சதுரங்கபெந்தம் , மாத்திரைப்பெருக்கம் , ஒற்றுப்பெயர்த்தல் , மாத்திரைச்சுருக்கம், போன்றவற்ரையும் பிறையானார் விபரித்தால் நன்று .

 

கோ நீங்கள் கூறுவது எல்லாம் சித்த்ரக்கவிகளின் வகைகளுக்குள் அடங்கும். நேரம் கிடைப்பின் இதுபற்றி பார்க்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட ஒன்றை முயன்று பார்த்தேன் இளம்பிறையன். விதிகளுக்குள் அடங்குகிறதா தெரியவில்லை. சிரிக்காமல் பாருங்கள்.

 

கார் என்று பேர் கொண்டது

காதினில் அது கேட்டது

அவ்விடம் விட்டகன்றது

 

கானகம்

 

 

  • தொடங்கியவர்

சரியாகச் சொன்ன தமிழினிக்கும், நிழலிக்கும் எனது வாழ்த்துக்கள். முதலில் சொன்ன தமிழினிக்கு ஒரு பச்சை.

கவிதை கதை விதை

 

என்னை விட ஒரு நிமிடத்தால் முந்தி விட்டீர்கள் தமிழினி! :)

 

கானகம்

 

செல்லாது செல்லாது... 4 எழுத்து (ஏற்கனவே நானும் பண்பாடு என்ற 4 எழுத்துச் சொல்லியிருக்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

அட இதில் போட்டி வேறு நடக்கிறதா??? அதைக் கூட வாசிக்கப் பொறுமை இல்லை எனக்கு :D

  • தொடங்கியவர்

நான் கூட ஒன்றை முயன்று பார்த்தேன் இளம்பிறையன். விதிகளுக்குள் அடங்குகிறதா தெரியவில்லை. சிரிக்காமல் பாருங்கள்.

 

கார் என்று பேர் கொண்டது

காதினில் அது கேட்டது

அவ்விடம் விட்டகன்றது

 

கானகம்

 

சுமேரியர் திரிபதாதி சொல் மூன்றெழுத்துக்குள்  இருக்க வேண்டும் என்பது முதல் விதி( "மூன்றெழுத் தொருமொழி "). கானகம் நான்கு எழுத்துக்குள் வருவதால் திரிபதாதி சொல்லுக்குள் அடங்காது .

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிறையன் இதை நீங்கள் ஒரு போட்டியாகத் தொடங்குங்கோ நன்றாக இருக்கும்.

இளம்பிறையன் இதை நீங்கள் ஒரு போட்டியாகத் தொடங்குங்கோ நன்றாக இருக்கும்.

 

நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.... போட்டியாக தொடங்கினால் நன்றாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புதிதாக அறிந்துகொண்டோம்.. :D நன்றி இளம்பிறையன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னனுக்கோர் பேராம்

வானத்து மின்விளக்காம்

உணவாகி நின்றதுவாம்

 

ஓர் பெண்ணின் பெயர் நீர் கூறும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.