Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:

Featured Replies

பிள்ளைகளுக்கு ஸ்பொன்சர் தேவையில்லை...அவர்கள் கனடிய பிரசைகளே...நான் நினைக்கிறன்...அந்த கணவனின் முன்னாள் மனைவியின் கும்பம் சமூக கொடுப்பனவில் இருக்கிறது போலிருக்கிறது...இவர்கள் சிலவேளை இரண்டாவது கல்யாணத்தை முறைப்படி பதியாமலும் இருந்திருக்கலாம்...அல்லது அந்த பெண் கனடாவுக்கு அகதியாக வந்தவுடன் தனது கணவன் அங்கு தான் உள்ளார் என்ற உண்மையை சொல்லாமலும் இருந்திருக்கலாம்...... (அப்படி பொய் சொல்லுபவர்களுடன் தான் அரசும் மிகவும் கடுமையாகவும் இருக்கும்..அதுவும் இரு பிள்ளைகளின் தாய்)

இந்த திருதாளங்கள் எல்லாம் உண்மையாக இருந்தால், தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். பிள்ளைகள் தான் பாவங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது மனைவியின் விவாகரத்து இன்னும் முடியவில்லை.அதற்குள்ளே இவர் இந்தியா சென்று விவாகரத்தை மறைத்து திருமணம் செய்து பிள்ளைக்கும் தாயாக்கி உள்ளார்(இந்தியாவிலேயெ). பின்னர் கனடாவுக்கு களவாக கூப்பிட்டுள்ளார்.(single mother) உதவிப்பணமும் எடுத்துள்ளார்.

முதலாவது விவாகரத்து இன்னும் முடியாததால் இவரினால் ஸ்பொன்சர் செய்ய முடியவில்லை என இவர்களுக்கு நெருக்கியவர் கூறினார்.

Vadivel+Reaction+with+Funny+comment.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக வாலிக்கு கிடைத்த சிறப்புத் தகவல்.

மேற்குறிப்பிட்ட நபர் முதல் மனைவியை இன்னும் விவாகரத்துச் செய்யவில்லை. அத்துடன் முதல் மனைவியும் பிள்ளையும் தற்போது கனடாவின் மார்க்கம் நகரில் வசித்து வருகின்றனர். இரண்டாவது மனைவியை இவர் சட்டபூர்வமாக பதிவுத்திருமணம் செய்திருக்கவில்லை. குறித்த பெண்மணி தனித் தாயாருக்கான கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு குறித்த நபருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மக்கள் விடும் பிழைகள், எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதை இனியாவது புரிந்து கொண்டு நடப்பார்களா...பாதிக்கபட்டு இருப்பது தந்தையும் அல்ல தாயும் அல்ல.. ஒன்றும் அறியாத குழந்தைகள்.அந்த ஆண் முன்பு திருமணம் செய்தவர் என்று  தெரிந்திருந்தால் தற்போது நாட்டை விட்டு போன பெண் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.எதோ அவரது கஸ்ர காலம் போலும்...முறையாக கேசை நகர்த்தி சென்றால் வெல்லலாம்.

 

இனி வரும் காலங்களில் ஒருவர் ஸ்பொன்சர் செய்தால் இப்போ 20 ஆண்டுகள் சமுக நல கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க முடியாது..அனைத்து செலவீனங்களையும்  ஸ்பொன்சர் செய்தவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.சட்டங்கள் மிகவும் இறுகிக்கொண்டே வருகிறது..அப்படி இருந்தும் எங்கள் மக்கள் தங்கள் திருகு தாளங்களை விடுவதாக இல்லை.

 

அண்மையில் இந்த ஆண்டுக்குக்குரிய ஸ்பொன்சர் சம்பந்தமான உரையாடல் நிகழ்வு ஒன்று தொலைக்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..அதில்  பேசப்பட்டது, ஆனாலும் நடை முறைக்கு வந்து விட்டதா என்பது தெரியவில்லை..எது எப்படி இருப்பினும்.அந்தப் குழந்தைகளோடு தாய் இணைந்து விட வேண்டும் அல்லது தாயோடு பிள்ளைகள் இணைந்து விடவேண்டும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசுக்காக கலியாணங்கள் செய்ய வெளிக்கிட்டால் உண்மைக்கலியாணங்கள் பொய்யாகிவிடும்.........கனடாவிலை இதை விட நாறல் விசயங்கள் எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன்....எங்கடை சனம் திருந்தவே மாட்டுதுகள்.

Edited by குமாரசாமி

அந்த கணவன் மூன்றாவது கல்யாணம் செய்யாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்.......

 

இந்த கட்டுரையின் தலைப்பு ஏதோ அப்பாவியான கும்பத்தை கனடிய அரசு பிரிப்பது போல் தொனியில் அழுதியிருகிறார்கள்..ஆனால் அதன் பின் எவ்வளவு விளையாட்டுகள்....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக வாலிக்கு கிடைத்த சிறப்புத் தகவல்.

மேற்குறிப்பிட்ட நபர் முதல் மனைவியை இன்னும் விவாகரத்துச் செய்யவில்லை. அத்துடன் முதல் மனைவியும் பிள்ளையும் தற்போது கனடாவின் மார்க்கம் நகரில் வசித்து வருகின்றனர். இரண்டாவது மனைவியை இவர் சட்டபூர்வமாக பதிவுத்திருமணம் செய்திருக்கவில்லை. குறித்த பெண்மணி தனித் தாயாருக்கான கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு குறித்த நபருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

 

இதே தகவல் தான் எனக்கும் கிடைத்து மேலே எழுதி உள்ளேன்.மிகுதி தகவல் நாளை கிடைத்தால் எழுதுகிறேன்.
 
இப்படி தினாவெட்டான ஆட்கள் நிறைய பேர் எம்மில் உள்ளனர். :)
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நுணா நீங்கள் இணைத்ததை நான் கவனிக்கவில்லை. ஆனால் இவரது முதல் திருமணம் இன்னும் உடையவில்லை என்பது அப்பெண்ணுக்கு தெரிந்த பின்னரே அவர் இந்தியா சென்று இப்பெண்ணை (சட்டப்படி அல்ல) திருமணம் செய்துள்ளார்.

மேலும், குறித்த பெண்ணை அவரது கணவன் 3 வருடங்களுக்குப் பின்னரும் ஸ்பான்சர் செய்வது சற்றுக் கடினமாக இருக்கும். பல திருகுதாளங்களைச் செய்திருக்கின்றமையினால் கனேடிய குடிவரவு மிகக் கடினமாகவே இவ்விடயத்தைக் கையாளும். ஏதும் தயவு கிடைத்தால் தவிர நம்பியிருக்கக்கூடிய ஒரே விடயம் பிள்ளைகள் வளர்ந்து தாயாரை ஸ்பான்சர் செய்வதே. அதற்கு ஆகக்குறைந்தது 15 வருடங்களாவது எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
 
நிச்சயமாக வாலி. இப்படி திருகுதாளங்களால் உண்மையாக ஸ்பொன்சர் செய்பவர்களையும் ஆயிரம் சந்தேக கேள்விகளை கேட்டு உயிரை வாங்குகிறார்கள். 
 
மன்னிப்பெல்லாம் எதற்கு வாலி??
  • 2 weeks later...

ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

வாசிக்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=136081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.