Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் இறந்தே போனேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறந்தே போனேன் ஆனால் ...

என் இதயம் துடி துடிக்க.

நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ...

எனக்குள் குரல் ஒலிக்க

நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ...

வெளி உலகை உள்ளூரப் பார்த்து

நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... 

கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல

நான் இறந்தே போனேன் ஆனால் ...

உயிராய் ... உயிராய் இறந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரியில் எழுத்துப் பிழையா ??? இருந்தேனா ???

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இறந்து தான் போனேன் !

 

என்னிடம் இருந்த கடைசி நம்பிக்கைத் துளியும்,

 

என்னுடனேயே மரணித்துப் போக,

 

இப்போதெல்லாம் 'உயிர்க்கூடு' மட்டும்,

 

மேலும், கீழுமாய் அசைந்து கொண்டிருக்கிறது!

 

வேலிகள் திறந்து விடப்பட்ட,

 

மிருகக் காட்சிச் சாலையொன்றின்,

 

நிரந்தரப் பிரதிநிதியாக நான்!

 

உள்ளூர் வாசிகள் மட்டுமல்ல....

 

உலகத்து அரசியல் வாதிகள்,

 

புலம் பெயர்ந்ததனால்,

 

புதிய விலாசம் பெற்றவர்கள்,

 

எல்லோரும் வந்து பார்த்துச் செல்கிறார்கள்!

 

நம்பினால் நம்புங்கள்....!

 

என்னை உயிர்ப்பித்து விடுவதாக,

 

உறுதிபடச் சொல்கிறார்கள்..!

 

நம்பிக்கை தொலைத்த நான்,

 

உண்மையில் இறந்து தான் போனேன்! :o  

 

 

 

வணக்கம், சசி !

 

உங்கள் சோகம் தோய்ந்த 'பூடகமான' கவிதை, என்னையும் கிறுக்க வைத்து விட்டது!

 

அடிக்கடி வந்து 'கவியுங்கள்'.....நன்றிகள்..! :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இறந்து தான் போனேன் !

 

என்னிடம் இருந்த கடைசி நம்பிக்கைத் துளியும்,

 

என்னுடனேயே மரணித்துப் போக,

 

இப்போதெல்லாம் 'உயிர்க்கூடு' மட்டும்,

 

மேலும், கீழுமாய் அசைந்து கொண்டிருக்கிறது!

 

வேலிகள் திறந்து விடப்பட்ட,

 

மிருகக் காட்சிச் சாலையொன்றின்,

 

நிரந்தரப் பிரதிநிதியாக நான்!

 

உள்ளூர் வாசிகள் மட்டுமல்ல....

 

உலகத்து அரசியல் வாதிகள்,

 

புலம் பெயர்ந்ததனால்,

 

புதிய விலாசம் பெற்றவர்கள்,

 

எல்லோரும் வந்து பார்த்துச் செல்கிறார்கள்!

 

நம்பினால் நம்புங்கள்....!

 

என்னை உயிர்ப்பித்து விடுவதாக,

 

உறுதிபடச் சொல்கிறார்கள்..!

 

நம்பிக்கை தொலைத்த நான்,

 

உண்மையில் இறந்து தான் போனேன்! :o  

 

 

 

வணக்கம், சசி !

 

உங்கள் சோகம் தோய்ந்த 'பூடகமான' கவிதை, என்னையும் கிறுக்க வைத்து விட்டது!

 

அடிக்கடி வந்து 'கவியுங்கள்'.....நன்றிகள்..! :D

நன்றி பூங்கை அண்ணா,

கவி உலகில் சிசுவாய் முளைத்த சசி நான்

பூங்கை அண்ணன் ... கவி பொங்கும் அண்ணன்

உண்மையாய் உணர்வாய் ஊக்கம் தர

ஒன்றல்ல ஓராயிரம் கவி பழகிப் படைக்க

நானா மாட்டேன் என்பேன் அண்ணா?

 

பூங்கை அண்ணா உங்கள் வரிகள் ;

தமிழர் சமகால வாழ்வை சொல்லும் அழகான , ஆழமான வரிகள்

 

"வேலிகள் திறந்து விடப்பட்ட,

மிருகக் காட்சிச் சாலையொன்றின்,

நிரந்தரப் பிரதிநிதியாக நான்!"

...

புலம் பெயர்ந்ததனால்,

புதிய விலாசம் பெற்றவர்கள்,

என்னை உயிர்ப்பித்து விடுவதாக,

உறுதிபடச் சொல்கிறார்கள்..!

 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் கண்விழித்ததும் யாழ்களம் புகுந்தேன். முதலில் என்னைக் கவர்ந்தது 'நான் இறந்தே போனேன்' தலையங்கம். இதுவரை நான் கண்விழிக்கும் வரை இறந்தே கிடந்தேனா.?? கனவு இன்று வரவில்லை, கண்டதும் எதுவுமில்லை. சிந்தனை சிறகடித்தது. கண்ணால் காணுகிறேன் தெரிகிறது!. உணர்வால் உணருகிறேன் புரிகிறது!. கண்ணால் கண்டு அறிய முடியாததும்! உணர்வாலும் உணர்ந்து அறிய முடியாததும்! இப்பிரபஞ்சத்தில் உண்டா?? ஆம்! இருக்கிறது!! அது நான் பிறப்பதற்கு முன்பு இருந்திருக்கலாம்! இனி.... இறந்தபின்பு திரும்பவும் வரலாம்!!

 

ஆழமாகச் சிந்திக்க முயன்றேன். நல்லகாலம், நான் சிந்தனைவாதிகள் நிறைந்த யாழ்களத்தில் நிற்கிறேன். சொந்த நாட்டில் நின்றிருந்தால்..?? அங்கொடை என்னை வரவேற்றிருக்கும்.

ஆங்கில ஆசிரியர் ஒருவருடைய மகனும், சிந்தனையின் எல்லைகாண முயன்ற அவருடைய அந்த இளைஞருக்கு.... எனது ஊரார் கொடுத்த வெகுமதி பைத்தியம்!!.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறந்தே போனேன் ஆனால் ...

என் இதயம் துடி துடிக்க.

நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ...

எனக்குள் குரல் ஒலிக்க

நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ...

வெளி உலகை உள்ளூரப் பார்த்து

நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... 

கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல

நான் இறந்தே போனேன் ஆனால் ...

உயிராய் ... உயிராய் இறந்தேன். 

கனவுகளில் தொலைதலும்

காலத்தினோடு கரைதலும்

சசியின் கவிதையின் நனைதலும்

இறப்பையும் வாழ்வையும்

இணைத்துச் சொன்ன கவி

எண்ணங்களில் பல்வகை சித்திரங்களை

எழுதிவிட்டுச் செல்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.