Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி முருகனின் வருடாந்த மஹோற்சவம்

Featured Replies

DSC_0182%282%29.JPG
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் எதிர்வரும் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார்.

மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரையான 10 நாட்களும் நடைபெறவுள்ள மஹோற்சவத்தில், மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா, தேர்த் திருவிழா (16.03.14), தீர்த்தத் திருவிழா (17.03.14) ஆகியவையும் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன.

முருகன், வள்ளி-தெய்வானை திருமண நிகழ்வாக பூங்காவனத் திருவிழா (18.03.14) நடைபெறும். இதனை சிட்னியில் பிரதேச வாரியாக வாழ்ந்து வரும் இளையோர்கள் சிறப்புற நடத்துவர்.

காலையும், மாலையும், அலங்கரிக்கப்பட்ட சிட்னி முருகன் தினமொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். அத்தோடு, அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சை செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

அவுஸ்திரேலியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் முருகன் அடியார்களுக்காக அன்னதானம், தண்ணீர்ப் பந்தல், போக்குவரத்து வசதிகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் திருவிழாக்களும் சிட்னியில் பிரதேச வாரியாக வாழ்ந்து வாழும் பக்தர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.

திருவிழாக் காலங்களில் ஆலயத்தில் மதிய நேரம் அன்னதானம் வழங்கப்படும். இரவு திருவிழாவின் போது பிரதேச வாரியான பக்தர்கள் இரவு நேர உணவை ஆலய உணவுச்சாலையில் தயாரித்து விற்பனை செய்வார்கள்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, ஆலயத் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறை அடியார்கள் அனைவரும் திரண்டு வந்து சிட்னி முருகன் மஹோற்சவத்தைக் கண்டுகளித்து முருகனின் அருளாசிகளைப் பெற்று உய்யுமாறு சிட்னி முருகன் ஆலய சைவமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
DSC05865.JPG

 

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/102358-2014-03-06-15-53-05.html

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகனுக்கு வாழ்த்துக்கள்! :D

 

ஒரு காலத்தில் என்னிடம் சின்ன வீடு இருந்தது! சிட்னி முருகனிடம், ஒரு சின்னத் தகரக்கொட்டில் இருந்தது!

 

இப்போது சிட்னி முருகனிடம், ஒரு மிகப்பெரிய கோவிலும், வர்த்தக ரீதியான ' சமையலறையும்' பல மண்டபங்களும், எட்டுக்கு மேற்பட்ட வீடுகளும் இருக்கின்றன!

 

இப்போதும் என்னிடம் ஒரு சின்ன வீடு இருக்கின்றது! அதன் மீது 'ஈடும்' இருக்கின்றது!

 

ஆனாலும் முருகன் ஒவ்வொரு வருடமும், என்னிடம் திருவிழாவுக்குப் பணம் கேட்டு வருகின்றார்!

 

நானும் முகம் கோணாமல் கொடுத்துக்கொண்டும் வருகிறேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முருகா ஒம் முருகா....நீ சுழியன்டாப்பா....என்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை ... நான் உன்னை கவனிக்கிறேன் நீ என்னை கவனித்துக்கொள் ...ராசா முருகா.....

முருகனுக்கு அரோகரா :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

முருகா ஒம் முருகா....நீ சுழியன்டாப்பா....என்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை ... நான் உன்னை கவனிக்கிறேன் நீ என்னை கவனித்துக்கொள் ...ராசா முருகா.....

எங்கட திருவிழா, சனிக்கிழமை! :D

 

முருகா, இந்த ஒரு விசயத்திலாவது, 'புத்தனை' முந்த விட்டாயே!  :lol:

 

உனக்குக் கோடி வணக்கங்கள்!

 

நான் முதலாவது கருத்தில் எழுதியதெல்லாம் பகிடிக்கு என்று உனக்கு விளங்காதா.....என்ன?  :lol:

 

நான் முதலாவது கருத்தில் எழுதியதெல்லாம் பகிடிக்கு என்று உனக்கு விளங்காதா.....என்ன?  :lol:

 

அட கடவுளே முருகனேயே இப்படி கவுத்துட்டியளே :o:lol:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உற்ச‌வ‌த்திலாவ‌து,
சுண்டலுக்கு, நல்ல வரன் அமைய...
அருள் கொடுப்பா... சிட்னி முருகா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகனுக்கு வாழ்த்துக்கள்! :D

 

ஒரு காலத்தில் என்னிடம் சின்ன வீடு இருந்தது! சிட்னி முருகனிடம், ஒரு சின்னத் தகரக்கொட்டில் இருந்தது!

 

இப்போது சிட்னி முருகனிடம், ஒரு மிகப்பெரிய கோவிலும், வர்த்தக ரீதியான ' சமையலறையும்' பல மண்டபங்களும், எட்டுக்கு மேற்பட்ட வீடுகளும் இருக்கின்றன!

 

இப்போதும் என்னிடம் ஒரு சின்ன வீடு இருக்கின்றது! அதன் மீது 'ஈடும்' இருக்கின்றது!

 

ஆனாலும் முருகன் ஒவ்வொரு வருடமும், என்னிடம் திருவிழாவுக்குப் பணம் கேட்டு வருகின்றார்!

 

நானும் முகம் கோணாமல் கொடுத்துக்கொண்டும் வருகிறேன்! :icon_idea:

 

அவர்  இரண்டோட  அடங்கிட்டார்

இப்ப  எதுக்கு தட்டித் தட்டி எழும்பிறியள்..........?? :lol:  :D  :D

இந்த‌ உற்ச‌வ‌த்திலாவ‌து,

சுண்டலுக்கு, நல்ல வரன் அமைய...

அருள் கொடுப்பா... சிட்னி முருகா.... :D

என்னப்பா   நடக்குது   இங்க.. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

------

என்னப்பா   நடக்குது   இங்க.. :lol:  :D  :D

 

வாழ்க்கையில்... நெடுகவும், சுண்டலால்.... கடலை போட முடியாது.

அவனும் பாவம் தானே... விசுகு.

அதான்... ஐரோப்பாவிலிருந்து, சிட்னி முருகனிடம்... மானசீகமாக, பிரார்த்தனை பண்ணிக் கிட்டேன்.

இந்த வருசம்... சுண்டலுக்கு, நாதஸ்வரத்துடன், கெட்டி மேளம் அடிக்கப் போகுது. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்... நெடுகவும், சுண்டலால்.... கடலை போட முடியாது.

அவனும் பாவம் தானே... விசுகு.

அதான்... ஐரோப்பாவிலிருந்து, சிட்னி முருகனிடம்... மானசீகமாக, பிரார்த்தனை பண்ணிக் கிட்டேன்.

இந்த வருசம்... சுண்டலுக்கு, நாதஸ்வரத்துடன், கெட்டி மேளம் அடிக்கப் போகுது. :D

தானாச் சீனா, விசுகர் கேட்கிறது சுண்டலுக்கு ஏன் 'வரன்' கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றீர்கள் எண்டு..!

 

வரன் எண்டால் 'மாப்பிளை' அல்லவா?

 

நம்ம சுண்டலே 'மாப்பிள்ளை' !

 

அவருக்கு ஏன் இன்னொரு மாப்பிள்ளை...! :D

 

ஒரு வேளை...! :wub:

 

 

ஒரு வேளை...! :wub:

பேந்தேன் ஒருவேளை என்று ஓர் இழுவை ....,,,,,,,,,,, :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

தானாச் சீனா, விசுகர் கேட்கிறது சுண்டலுக்கு ஏன் 'வரன்' கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றீர்கள் எண்டு..!

 

வரன் எண்டால் 'மாப்பிளை' அல்லவா?

 

நம்ம சுண்டலே 'மாப்பிள்ளை' !

 

அவருக்கு ஏன் இன்னொரு மாப்பிள்ளை...! :D

 

ஒரு வேளை...! :wub:

 

அட... அப்பிடியா?

வரன் என்றால்... பொருத்தமான சோடி என்று, இவ்வளவு நாளும் எண்ணிக் கொண்டிருந்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அட... அப்பிடியா?

வரன் என்றால்... பொருத்தமான சோடி என்று, இவ்வளவு நாளும் எண்ணிக் கொண்டிருந்தேன். :)

நான் பேச்சுவழக்கில் உள்ளதையே எழுதினேன். தமிழ் சிறி!

 

ஒரு வேளை, நீங்கள் எழுதியது சரியாகக் கூட இருக்கலாம்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.